கற்பக விருட்சம் பனையின் மருத்துவ பயன்கள்

 கற்பக விருட்சம் பனையின் மருத்துவ பயன்கள்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


★ பனம்பூவை உலர்த்தி கொளுத்தி சாம்பலாக்கி சலித்து அரைகிராம் அளவு நீரில் கலந்து காலைமாலை குடித்துவர வாதகுன்மம்,நீரெரிச்சல் குணமாகும்.

★ கிழங்கை உலர்த்தி பொடித்து தேங்காய்பால் சிறிதளவு உப்பு சேர்த்து பிட்டவியல் செய்து தினமும் உண்டு வர உடல் வலிமை பெறும்.

★ கிழங்கை அவித்து தோல் நரம்பு நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி உலர்த்தி பொடித்து பாலில் கலந்து பருகிவர மேகம், கரப்பான், குருதிக்கழிச்சல்,சீதக்கழிச்சல் ஆகியவை நீங்கும்.

★ வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வேர்க்குரு நீங்குவதற்கு நொங்கை உடல் முழுவதும் தேய்த்து அரைமணி விட்டு குளிக்க பூரணகுணம் பெறும்.

★ நான்கைந்து இளம் நொங்கை தோலுடன் மூன்று நாள் சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கி உடல் குளிர்ச்சியுண்டாகும்.

★ இனிப்புள்ள பனங்கள்ளை அதிகாலையில் 250 மில்லி தினமும் குடித்துவர பித்தவெட்டை,அழலை,வெள்ளை,சொறி,சிரங்கு,எய்ட்ஸ், கேன்சர், சொரியாசிஸ் முதலியவை நீங்கும், உடல்பொலிவும் யானையைப்போல் பலமும் உண்டாகும். சாகும்வரை வியாதி வராது.

★இனிப்பு தேவைப்படும்போது பனைவெல்லத்தை மட்டுமே பயன்படுத்தி வர உடல் வெப்பம் அடங்கும், பித்தம் தணியும்,  உடல் நலம் பெறும்.

★ பனங்கொட்டையிலுள்ள சீம்பு அமிர்தத்திற்கு ஒப்பானது, இதை உண்டுவர உடல் காயகல்பமாகும்.

★ பனங்கிழங்கு அடிக்கடி உண்டுவர போகசக்தியுண்டாகும், விந்து கட்டும்.

★ பனம்பழம் சாப்பிட்டு வந்தால் கண்களிலுள்ள அனைத்து நோய்களும் நீங்கி கருட பார்வையுண்டாகும்.

★ பனைத்தெளிவுநீர் மிகுதாகத்தை போக்கி உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.உடலுக்கு குளிர்ச்சி தரும்.

★ பனையோலையை கருக்கி தேங்காயெண்ணை விட்டு கலந்து ஆறாத புண்களுக்கு போட ஆறிவிடும்.

★ பனங்குருத்தை தட்டி கண்ணில் பிழிய கண்குருடு நீங்கும்.

★ புதுச்சட்டியில் 10 கிராம் மிளகை சாம்பல் நிறமாக வெளுக்க வறுத்து அதில் 3 கிராம் சீரகத்தை போட்டு பொரிந்த சமயம் அரைலிட்டர் நீர்விட்டு 125 மில்லியாய் சுண்ட காய்ச்சி வடிகட்டி தேவைக்கு பசுப்பால் சேர்த்து பனங்கற்கண்டு கலந்து குடித்துவர நீர்க்கடுப்பு, நீரெரிச்சல், சொட்டுமூத்திரம்,மருந்துவிசம் ஆகியன நீங்கும்.

இவ்வளவு மருத்துவ தன்மை வாய்ந்த பனைமரத்தை காப்பாற்றுங்கள்,பனைமரம் வெட்டுவதை தடுங்கள்.தவிருங்கள்.(ஒரு பனைமரத்தை வெட்டுவதற்கு ஒருநிமிடம் போதும் ஆனால் அது வளர்ந்து பலன் தர அறுபது வருடமாகும் ,சிந்தியுங்கள் மக்களே)
நன்றி