எலும்புகளை வலுவாக்கும் பலாப்பழம்

எலும்புகளை வலுவாக்கும் பலாப்பழம்

குழந்தைகள் பலாப்பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

பலாச்சுளை பொதுவாக உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. உடல் வறட்சி, எரிச்சல், களைப்பை போக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு வலுசேர்க்கும். ரத்தக்குழாயில் இருக்கும் கொழுப்புகளை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். பலாச்சுளை சாப்பிட்டால் இதய தாக்குதல் வராது. வைட்டமின் ஏ சத்து பலாவில் அதிகம் உள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு உடனடி தீர்வு பலாச்சுளை தான்.

பலாச்சுளையின் இனிப்புக்காக அதனை அதிகம் விரும்பி உண்டால் வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் வயிற்றுக் கோளாறை நீக்க பலாக்கொட்டையை வறுத்துப் பொடி செய்து அதனுடன் உப்பு, ஓமம் ஆகியவற்றை சேர்த்து வெந்நீரில் கலக்கி சாப்பிட வேண்டும்.

பலா இலைகளை ஒன்று சேர்த்து தைத்து அதில் விரத உணவுகளை சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. பலா இலையில் உணவுகளை சாப்பிட்டால் குன்ம நோய் நீங்கும். இலைகளை அரைத்து கட்டிகள் மீது தடவ அவை உடைந்து குணமாகும். இலைக்கொழுந்தை அரைத்து சிரங்குகளுக்கு பூசலாம்.

பலாச்சுளையில் வைட்டமின் சி, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், நல்ல எனர்ஜியைத் தரும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

பலாமரத்துப் பாலை கட்டிகளின் மீது தடவினால் வீக்கம் குறையும். வேரை பாலிட்டு அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூசலாம்.

பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும். தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

குழந்தைகள் இந்த பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் Jack-fruitவைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும்.

நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுவை அளிக்கும்