அரிசி கடலைப்பருப்பு உருண்டை

அரிசி கடலைப்பருப்பு உருண்டை

சத்து நிறைந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை
Uppu-Urundai

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

காலையில் டிபனாகவும், மாலையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட சத்தான உணவு இந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை. இன்று இந்த உருண்டை செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - ஒரு கப்,
துருவிய இஞ்சி, மாங்காய் - சிறிதளவு,
ஊற வைத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது - சிறிதளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

பச்சரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கைவிடாமல் கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

பின்னர் இந்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.