சென்னை பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

*சென்னை* இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின்  இணைவு தான். அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்

108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர் ஆகையால் *ஐம்பத்து ஒன்றாம் ஊர்* என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் *அம்பத்தூர்* என மாறியது.

Armed Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே *ஆவடி* (AVADI)

1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆங்கிலேயரால்  Chrome Leather Factory என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை தொடங்கியதால் அப்பகுதிக்கு *குரோம்பேட்டை* என்ற பெயர் உருவானது

17,18 ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், கோடா பக் (பொருள் - Garden of horses) என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே *கோடம்பாக்கம்* ஆக மாறியது.

தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது *தேனாம்பேட்டை* ஆக மாறிப்போனது.

சையத்ஷா என்ற இஸ்லாமிய முக்கிய  பிரமுகர் வைத்திருந்த நிலப்பகுதியின் அடிப்படையில், சையத்ஷாபேட்டை என்றிருந்த பெயர், *சைதாப்பேட்டை* என்றாகியது.


Ø  உருது வார்த்தையான சே பேக் (பொருள்- Six gardens) என்பதிலிருந்து உருவானது தான் *சேப்பாக்கம்*

Ø  சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே *பாண்டி பஜார்*

Ø  கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி *கே.கே. நகர்* என அழைக்கிறோம்.

Ø  சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ *மாம்பலம்* ஆகி விட்டது.

Ø  பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் *பல்லாவரம்.*

Ø  சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் *பனகல் பார்க்* என அழைக்கப்படுகிறது.

Ø  நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி *தி.நகர் (தியாகராய நகர்)* என அழைக்கபடுகிறது

Ø  கடற்கரைப்பகுதியான இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், இப்பகுதி *புரசைவாக்கம்* ஆனது.

Ø  அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் *பூவிருந்தவல்லி* என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது *பூந்தமல்லி* யாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

Ø   17 ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய *தண்டயார்பேட்டை.*

Ø  முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே *மந்தைவெளி* என்றழைக்கபடுகிறது.

Ø  மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே *மயிலாப்பூர்* என மாறிப்போனது.

Ø  பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி *போரூர்* எனப்படுகிறது.

Ø  சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே *பெரம்பூர்* எனப்படுகிறது.

Ø  திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா *திரிசூலம்* என்று அழைக்கப்படுகிறது.

Ø  பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் (கேணி) நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு
*திருவல்லிக்கேணி* யாகி, தற்போது *Triplicane* என மாற்றம் கண்டுள்ளது