பெற்றோர் குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை

பெற்றோர் குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை
Things-to-look-out-for-when-you-punish-children

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

* குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

* தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.

* தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும். உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.

* தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது, குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.

* தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான், அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.

* குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும். நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.

* குழந்தை தவறு செய்தால், தொடர்ந்து தண்டிக்க வேண்டும். ஒரு முறை தண்டிப்பதும், மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.

* குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும். தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தான் உருவாகும்.

* குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.

* தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையை விட மனரீதியான அணுகு முறையே சிறந்தது.