Showing posts with label ஆடாதோடா - மருத்துவ குணங்கள். Show all posts
Showing posts with label ஆடாதோடா - மருத்துவ குணங்கள். Show all posts

ஆடாதோடா - மருத்துவ குணங்கள்

ஆடாதோடா - மருத்துவ குணங்கள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


கிராமப்புரங்களில் சாதாரனமாக சாலையோரங்களில் இருக்கும் பல செடிகளின் மருத்துவ குணங்கள் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

நம் முன்னோர்கள் அனைத்தையும் அறிந்து பயன்படுத்தி வந்ததால் அவர்கள் நீண்ட காலம் நோய் நொடியில்லாமல் இருந்து வந்தனர். ஆனால், இப்போது உள்ளவர்கள் அவற்றை மூலிகையாக பார்க்காமல் செடியாக பார்ப்பதால் பல்வேறு நோய்கள் தாக்குகிறது.

அந்த வகையில் ஆடாதோடாவை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால், எதற்கு எப்படி பயன்படுத்துவது என்று பலருக்கு தெரியாது. இப்போது அதன் மருத்துவ குணங்களையும், எப்படி பயன்படுத்துவது என்பதையும் பார்க்கலாம்.

ஆடாதோடா செடியானது மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை தடுக்கக்கூடியது. மார்பு சளியை கரைத்து வெளியேற்றும். இருமலை தடுக்கும், காய்ச்சலை குணமாக்கும்.

காய்ச்சலை குணமாக்கக்கூடிய மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள் : ஆடாதோடா இலை, மஞ்சள் மற்றும் தேன்.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் விட்டு, கால் டீஸ்பூன் மஞ்சள், 2 டீஸ்பூன் ஆடாதோடா இலையின் சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த கசாயத்தை வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்தக்கூடிய மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள் : ஆடாதோடா இலை, மஞ்சள் மற்றும் தேன்.

செய்முறை: 2 டீஸ்பூன் ஆடாதோடா இலையின் சாறுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து குடித்துவந்தால் மஞ்சள் காமாலை கட்டுக்குள் வரும்.

இருமல் சளி போன்றவற்றிருக்கான மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள் : ஆடாதோடா இலை, மிளகு தூள், இஞ்சி மற்றும் தேன்.

செய்முறை : பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு டீஸ்பூன் ஆடாதோடா இலை சாறு சேர்த்து, அத்துடன் மிளகுப் பொடி, இஞ்சி நறுக்கியது சிறிதளவு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால், சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

வயிற்று வலிக்கான மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்: ஆடாதோடா இலை, பனங்கற்கண்டு மற்றும் ஏலக்காய் தூள்.

செய்முறை : இரண்டு முழு ஆடாதோடா இலையை சிறு சிறு துண்டாக நறுக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு பனங்கற்கண்டு, ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி  குடித்து வந்தால், வயிற்று வலி போன் பிரச்னைகள் குணமாகும்.

பிடித்திருந்தால் பக்கத்தை share & Like செய்யுங்கள்.. மட்றவர்களுக்கு பயனுறும்...!