நாக தோஷம் உள்ளவர்களுக்கு போகர் கூறிய பரிகாரம்

நாக தோஷம் உள்ளவர்களுக்கு போகர் கூறிய  பரிகாரம்
naga-dosha-pariharam

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார்.

நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாக சதுர்த்தி திதி”

‘நாக சதுர்த்தி திதி” அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர். 

திருப்பாம்புரத்தில் - ராகு- கேது நாக தோஷ பரிகாரம்

திருப்பாம்புரத்தில் -  ராகு- கேது நாக தோஷ பரிகாரம்
மது பழக்கத்தை மாற்றும் பரிகார தலம்
thirupampuram-temple-pariharam.


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மதுபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பாம்புரம் தலத்தில் வழிபட முழுமையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒருவரது மது குடிக்கும் பழக்கம் அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரையும் அனைத்து வகையிலும் பாதிக்க செய்து விடும். தொடர்ந்து மது குடிப்பவர்கள் கடைசியில் அதற்கு அடிமையாகி உடல் நலம், மன நலம், வாழ்க்கை வளம் எல்லாவற்றையும் தொலைத்து நிர்க்கதியாக நிற்க வைத்து விடுகிறது.

ராகு- கேது போன்ற சர்ப்ப கிரகங்கள் ஜாதகத்தில் சரியான இடத்தில் இல்லாமல் தோஷம் இருந்தால் இப்படி மதுவுக்கு அடிமையாகி அவர்கள் மனநிலையில் ஒரு தெளிவில்லாமல் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு நாக தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்பது சிலரின் கூற்றாக உள்ளது.

ராகு,கேது திருநாகேஸ்வரம், பெரும்பள்ளம் போன்ற தலங்களில் தனித்தனியாக இருக்கிறார்கள். காளகஸ்தி போன்ற புகழ்பெற்ற திருக்கோவில்களில், சிவபெருமானே ராகு-கேதுக்களாக வீற்றிருந்து பக்தர்களின் தோஷம் நீக்கி அருள்பாலிக்கிறார்.

திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றத் தலமாக விளங்கும் திருப்பாம்புரத்தில், ராகுவும்- கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது.

மேற்கு பார்த்த சன்னிதியில் இருந்து இறைவனை நெஞ்சில் நிறுத்தி வணங்கிய நிலையில் ராகு-கேது உள்ளனர். இருவரும் ஒருவராய் வீற்றிருப்பதால், மற்ற நாக பரிகார தலங்களைக் காட்டிலும், இந்தத் தலம் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.

எனவே மதுபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்தில் வழிபட முழுமையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிறப்பு பரிகாரம் இந்த ஆலயத்தில் செய்யப்படுகிறது. மது பாதிப்பு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சேஷ தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தனை செய்து விட்டு, ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் பலர் மது மயக்கத்தில் இருந்து மாறுதல் அடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு நம்பிக்கைதான் முக்கியம் என்றும் சொல்கிறார்கள்.

தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு முறை இந்தத் திருத்தலத்திற்கு சென்று வரலாமே. நம்பிக்கையோடு சென்று வாருங்கள். நல்லதே நடக்கும்.

மாசி மகம் -( Maasi Magam )அம்பாள் அவதரித்த நாள்

மாசி மகம் -( Maasi Magam )அம்பாள் அவதரித்த நாள்
masi-magam-worship.

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

அன்னை அவதரித்த அந்த தினம் ‘மாசி மகம்’ ஆகும். அன்னை அவதரித்த திருக்கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

திருக்கயிலாயத்தில் சிவபெருமானுடன், பார்வதி தேவி இருந்தாள். அப்போது பார்வதி ஈசனிடம், “சுவாமி! உங்களுடைய உண்மை நிலையை எனக்கு உரைக்க வேண்டும்” என்றாள்.

அதற்கு இறைவன், “உயிர்கள் நலம் பெற ஐந்தொழில் செய்வேன். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பேன். எனக்கென ஒரு உருவமும் இல்லை. அருளே எனது உருவமாகும்” என்றார்.

அதற்கு பார்வதி, “அருள் தான் உங்களுடைய உருவம் என்றால், அந்த அருள் நான்தானே” என்று சற்று கர்வத்தோடு கேட்டாள்.

அப்போது இறைவனின் கண்ணசைவில் உலகத்தின் அசைவுகள் அனைத்தும் நின்றுபோனது. இதனால் பதறிப்போன பார்வதி, “இறைவா! உண்மையை உணர்ந்து கொண்டேன். உங்களுக்கு சில நொடி என்பது, உயிர்கள் பல யுகங்கள் ஆகும். எனவே இந்த அசைவற்ற நிலையை மாற்றுங்கள்” என்று வேண்டினாள். இதையடுத்து இறைவன் உலகை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

தான் செய்த பாவத்திற்காக பூமியில் பிறந்து சிவபூஜை செய்ய பார்வதி எண்ணினாள். அந்த நேரத்தில் தக்கனும் தனது மகளாக பார்வதி பிறக்க வேண்டும் என்று சிவனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தான். அம்பிகை காளிந்தி நதியில், ஒரு தாமரைப் பூவில் வலம்புரி சங்கு வடிவமாக தோன்றினாள். மாசி மகத்தில் தக்கன், தன் மனைவி வேதவல்லியோடு அந்த நதியில் நீராட வந்தான். அப்போது அங்கிருந்த வலம்புரி சங்கை கையில் எடுத்தான். அது அழகிய பெண் குழந்தையாக வடிவம் கொண்டது. அன்னை அவதரித்த அந்த தினம் ‘மாசி மகம்’ ஆகும்.

சிவனின் முகமும், ஐந்து கங்கையும்(Lord Shiva's five face)

சிவனின் முகமும், ஐந்து கங்கையும்(Lord Shiva's five face)


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. இந்த ஐந்து முகங்களில், ஒவ்வொன்றில் இருந்தும் கங்கை உற்பத்தியானதாக புராணங்கள் சொல்கின்றன.

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. நான்கு திசைகளை நோக்கி நான்கு முகங்களும், ஐந்தாவது முகம் நடுவில் மேல் நோக்கியும் அமைந்திருக்கும். தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், ஈசானம் ஆகியவையே அந்த ஐந்து முகங்களாகும்.

இந்த ஐந்து முகங்களில், ஒவ்வொன்றில் இருந்தும் கங்கை உற்பத்தியானதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி உற்பத்தியான ஐந்து கங்கைகளுக்கும் ஒவ்வொரு பெயர்கள் இருப்பதாக சிவபுராணம் சொல்கிறது. இந்த கங்கைகளை மொத்தமாக ‘சிவ அமுதசாகரம்’ என்பார்கள்.


 சிவபெருமானின் கிழக்கு முகத்தில் இருந்து ரத்தின கங்கையும், மேற்கு முகத்தில் இருந்து தேவ கங்கையும், வடக்கு முகத்தில் இருந்து கயிலாய கங்கையும், தெற்கு முகத்தில் இருந்து உக்கிர கங்கையும், மேல் நோக்கிய முகத்தில் இருந்து பிரம்ம கங்கையும் தோன்றியதாக சிவபுராணம் கூறுகிறது.

சிவபெருமானின் காதணிகள் - lord shiva's Ear Ring

சிவபெருமானின் காதணிகள் - lord shiva's Ear Ring
lord-shiva-earring

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவாரப் பாடல்களில் சிவபெருமானின் காதில் மட்டும் ஏழு வகையான காதணிகள் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சிவபெருமான் புலித் தோல் ஆடை உடுத்தி, திருநீறு அணிந்து அருள்பாலிப்பவர். அவர் பொன் நகைகளால் அலங்காரம் செய்யப்படாதவர். இருப்பினும் அவர் தன்னுடைய உடலில் நிறைய அணிகலன்களை அணிந்திருக்கிறார் என்று, அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

அவற்றில் சிவபெருமானின் காதில் மட்டும் ஏழு வகையான காதணிகள் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.


குழை, குண்டலம், தோடு, சுருள், கோளரவம், பொற்றோடு, ஓலை ஆகிய 7 அணிகலன்களை சிவபெருமான் அணிந்திருப்பதாக தேவாரப் பாடல்கள் சொல்கின்றன.

நோய் நீக்கி நலம் அருளும் தேவி துதி

நோய் நீக்கி நலம் அருளும் தேவி துதி
lord-devi-slokas.

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு அனைத்து தேவியரையும் துதிக்கும் இந்தக் கவசத்தைப் பாராயணம் செய்யலாம் என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ரியான மருத்துவம், சரியான சிகிச்சை, அதனால் நல்ல உடல்நலம் என்ற மேன்மையை அடைய நாம் தெய்வத்தின் அருளை நாடுகிறோம். அந்த வகையில், இந்தக் கோடை காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு அனைத்து தேவியரையும் துதிக்கும் இந்தக் கவசத்தைப் பாராயணம் செய்யலாம் என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அப்படிச் செய்தால் தீராத நோய்களும் தீர சரியான வழிமுறை தெரியவரும் என்பதே நம் நம்பிக்கை.

சிவனார் மனைவி என் சிரசினைக் காக்க

 நாரணன் தங்கை என் நெற்றியைக் காக்க
கன்னிதுர்க்கை என் கண்களைக் காக்க
கண்மூன்றுடையாள் என் கன்னங்கள் காக்க
மூகாம்பிகையாள் என் மூக்கினைக் காக்க
கூஷ்மாண்டினியாள் கூந்தலைக் காக்க
இமயத்தரசி என் இருசெவி காக்க
வாணித்தாயார் என் வாயினைக் காக்க
லட்சுமித் தாயார் உடல் இலட்சணம் காக்க
முகமதன் அழகை முக்கண்ணி காக்க

பகவதி தேவி பற்களைக் காக்க
உமையாம்பிகையாள் என் உதடுகள் காக்க
நான்முகன் மனைவி என் நாவினிலிருக்க
நவதுர்க்கை தேவியர் நல்லோசை தருக
கருமாரி தேவி என் கழுத்தினைக் காக்க
கொற்றவை என்தன் குரல்வளை காக்க
சரஸ்வதி என்தன் சப்தத்தைக் காக்க
புவனேஸ்வரியாள் என் புஜங்களைக் காக்க
முன்கை முழங்கை முண்டினி காக்க
ஸ்ரீ சிவதுர்க்கை என் சிந்தையைக் காக்க

விஷ்ணு துர்க்கை என் விரல்களைக் காக்க
மஞ்சள் மாதா மார்பினைக் காத்து
மாதருக்கெல்லாம் மார்பழகருளி
பிள்ளைக்கு ஊட்டிட பால்வள மருளி
மக்களைக் காத்திட மாதா வருக
காஞ்சி காமாட்சி கைகால் காக்க
வனதுர்க்கைத் தாயார் வயிற்றினைக் காக்க
முக்கோணத்தி என் முதுகினைக் காக்க
துலுக்காணத்தீஸ்வரி தொடைகளைக் காக்க
கோட்டைமாரி இருபாற் குறிகளைக் காக்க

முழங்கால் கணைக்கால் முத்துமாரி காக்க
இருடிகேசி இடுப்பினைக் காக்க
பிரம்மராம்பிகை என் பிட்டங்கள் காக்க
பார்வதிதேவி பாதங்கள் காக்க
விந்தியவாசினி விதியை வெல்க
காசி விசாலாட்சி காலமெல்லாம் காக்க
ஜகம் புகழ் வாழ்வை ஜாதவேதோ தருக
ஜ்வலத் துர்க்கை என் ஜாகையைக் காக்க
சாந்தி துர்க்கை சாந்தம் காக்க

சபரீ துர்க்கை சபரியாத்ரை அருள்க
லவண துர்க்கை லட்சங்கள் தருக
தீயில் ஆபத்தை தீப துர்க்கை தடுத்து
நீரில் ஆபத்தை நீலாம்பிகை நீக்கி
காற்றில் ஆபத்தை காயத்ரி காத்து
நவகிரகங்களும் நல்லன செய்தற்கு
நஞ்சுண்டன் மனைவி நல்லாணை இடுவாள்
ஆஸுரி துர்க்கை ஆலயம் அமைக்க
ஜெயத்தினைத் தருவாள் ஜெயதுர்க்கா தேவி
திருஷ்டி துர்க்கா கண்திருஷ்டி நீக்கி
வினவிடும் வரங்கள் வனதுர்க்கை தருக

ராஜயோக வாழ்வருள் ராஜராஜேஸ்வரியும்
கோமகள் அருளால் திருக்கோயில் கட்டி
திருமகள் அருளால் திருப்பணி நிறைந்து
துர்க்கைத்தாயார் நடுக்கொலு விருப்பாள்
அங்காளீஸ்வரி அங்கங்கள் காத்து
உடலின் அசைவுகள் உமையவள் காக்க
ஓட்டமும் வழிநடை ஓங்காரி காக்க
வாகன விபத்தின்றி வாராகி காக்க
மூச்சுக்குழலை மூகாம்பிகை காக்க
ஜாமத்தில் பயமின்றி ஜகன்மாதா காக்க

நாடியின் துடிப்பை நான்முகி காக்க
சந்தர்ப்ப சமயத்தில் சமயபுரத்தாள் காக்க
சந்தோஷிமாதா சந்தோஷம் தருக
ரேகைகள் அமைப்பை ரேணுகை காக்க
அன்னபூரணி ஆண்டாள் நாச்சியார்
உண்ணாமுலையாள் உணவென்றும் தருக
வடிவுடை நாயகி வடிவழகு காக்க
ஞானாம்பிகையாள் ஞானப்பால் அருள்க
அஷ்டலட்சுமி அங்கலட்சணங்கள் காக்க
கௌமாரி கௌரி கவுரவம் காக்க

கருவில் உயிரை கருமாரி காக்க
கன்யாகுமரி கண்ணொளி காக்க
கன்னிப் பெண்டிர் கடிமணம் நிறைவுற
கங்காதேவி தீர்த்தம் தெளித்தருள்வாள்
ஜாதகக் குறையை ஜெகன்மாதா நீக்கி
தெசையில் புத்தியில் திரிபுரை காக்க
ஊத்துக்காட்டம்மை ஊடல்கள் நீக்கி
ஆதிபராசக்தி அனுதினம் காக்க
கற்கும் வேதங்கள் காயத்ரி காக்க
ஐயப்பன் மாதா ஐஸ்வர்யம் தருக

கொடிய விஷங்களும் கொள்ளை நோய்களும்
குருதியைக் குடிக்கும் குறளைப் பேய்களும்
கோட்டை மாரியைக் கருத்தில் கொண்டிட
கதிகலங்கி மறைந்திட கடைக்கண் பார்க்க
வாதம் பித்தம் வாந்தி பேதி சீதம்
வயிற்று நோய்களும் (உடலை) வாட்டிடும் நோய்களும்
தேகத்தை மெலிவிக்கும் தொற்று நோய்களும்
புற்றும் குட்டமும் புத்திக் குழப்பமும்
விஷத்தால் ஜுரமும் உடல்வலி நோய்களும்
தொண்டைப் புண்ணும் தோல்வகை நோய்களும்

எவ்வித நோயும் எனை அணுகாமல்
நின்று நீ காப்பாய் நீலி திரிசூலி
நல்லோர் உறவை நாளும் அருள்வாய்
காமம் குரோதம் லோபம் மோஹம்
மதமாச்சர்ய மெனும் ஐம்பெரும் பூதம்
என்றுமே என்னுள் நுழைந்து விடாமல்
ஆதிபராசக்தி போதனை தருக
சூது பொறாமை சோம்பலில்லாமல்
சோரம் லோபம் துன்மார்க்க மில்லாமல்
வேத நெறிகளில் வழி பிசகாமல்

கிரகங்கள் ஒன்பதின் உறுதுணை நட்புடன்
பரமனின் பத்தினி வரமெனக் கருள்வாய்
மூப்பின் நோயும் வறுமையும் பசியும்
வந்தெனை வாட்டி வதை செய்யாமல்
அன்னபூரணி அணைத் தெனைக் காக்க
கொண்ட நோய்களைக் கொன்று குவித்திட
கோட்டை மாரியின் குங்குமக் கவசம்
இருவினை களைந்தே எமைக் கரையேற்ற
இமயத்தரசி இன்றே வருக
கன்னி துர்க்கையை எண்ணியே துதிக்க
பண்ணிய பாபங்கள் பறந்தோடிப் போகும்

அன்னை துர்க்கை அபயம் என்றிட
ஐம்பூதங்களும் அடிப்பணிந்தேத்தும்
வனத்தின் துர்க்கையை வணங்கிப் பணிந்து
நினைக்கின்ற நொடியில் நிச்சயம் வருவாள்
ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி
மூங்கில் போல் சுற்றிலும் முசிந்து பெருகி
நின் திருக்கூட்டம் நித்தமும் பெருகட்டும்
நின் வழிபாடு வளர்ந்தே ஓங்குக
லோகம் யாவும் மோகம் கொண்டிட

லலிதாம்பிகை யொரு வழியினைக் காட்டி
வழிபடும் குழுவின் வளர்ச்சியைக் காக்க
கனி விளக்கொளியும் இனிதே பெருகி
துர்க்கையின் வழிபாடு துளிர்விட்டுத் தழைக்கும்
சர்வ ஜனங்களை என்வச மாக்கும்
சர்வேஸ்வரியாளின் வசிய மந்திரத்தை
சந்தோஷி மாதா வந்தோதியுரைக்க
உள்ளன்புடனே உன் திருநாமம்
ஓதியுரைத்தால் ஓம் என்றொலிக்கும்
நித்தமும் நான்சொல்லும் சிவசக்தி நாமம்
சித்தத்தில் சேர்த்திடும் சித்திகள் கவசம்அதை
சத்தமாய்ச் சொல்ல சதாசிவம் சேரும்.

ஓம் ஓம் அன்னையின் அருளே போற்றி
ஓம் ஓம் ஜெய ஜெய துர்க்கா போற்றி
சித்தி புத்தி சிறந்தே போற்றி
வள்ளி தெய்வானை வளமுடன் போற்றி
பூரணை புஷ்கலை தேவியர் போற்றி
அனுமனின் அன்னை அஞ்சனை போற்றி
வெக்காளி மாகாளி ஜெயகாளி போற்றி
இச்சாசக்தி கிரியாசக்தி ஞானசக்தி போற்றி
ராஜகாளி தில்லைக்காளி நவகாளி போற்றி
வடபத்ரகாளி கல்கத்தா காளியும் போற்றி

கிருஷ்ண ருக்மணி பாமா போற்றி
ராஜ, வீர்ய, விஜயலெக்ஷ்மி போற்றி
திரௌபதை தேவி, துளஸியும் போற்றி
திருவரங்கப் பெருமான் தேவியரே நமோ நம
திருப்பதி மலையான் தேவியே நமோ நம
நான் முகப்பிரமன் தேவியே நமோ நம!

திரி லிங்க தேசம் - Thiri linga desam

திரி லிங்க தேசம் - Thiri linga desam
shiva-lingam

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஆந்திர மாநிலம் முன்னொரு காலத்தில் ‘திரிலிங்க தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்து மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களே காரணமாகும்.

ஆந்திர மாநிலம் தற்போது தெலுங்கு தேசம் என்று அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் அது ‘திரிலிங்க தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்து மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களே காரணமாகும்.

அதாவது ஆந்திரத்தில் தெற்கு பகுதியில் ஸ்ரீகாளகஸ்தி என்ற புகழ்பெற்ற திருத்தலமும், மேற்குப் பகுதியில் ஸ்ரீசைலம் என்ற சிறப்புமிக்க ஆலயமும், வடக்கு பகுதியில் ஸ்ரீத்ராட்சராமம் என்ற மகத்துவம் வாய்ந்த திருத்தலமும் அமைந்திருந்தன.

இதனால் ஆந்திரம் ‘திரிலிங்க தேசம்’ என்று பெயர் பெற்று விளங்கியது. அதோடு இன்னும் சிலர் அந்தப் பகுதியை ‘மகாலிங்க சேத்திரம்’ என்றும் அழைத்தனர்.

பஞ்சகோதர தலங்கள்

பஞ்சகோதர தலங்கள்
Shiva-Temples.

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இமயமலைப் பகுதியில் உள்ள தலங்களில் மிகவும் விசேஷம் மிக்க கேதார்நாத் ஆலயத்தோடு சேர்ந்த இன்னும் 4 ஆலயங்களும் இருக்கின்றன. இவை ஐந்தும் சேர்ந்து ‘பஞ்சகோதர தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இமயமலைப் பகுதியில் உள்ள தலங்களில் மிகவும் விசேஷம் மிக்கது கேதார்நாத் திருத்தலம். இந்த ஆலயத்தோடு சேர்ந்த இன்னும் 4 ஆலயங்களும் இருக்கின்றன. இவை ஐந்தும் சேர்ந்து ‘பஞ்சகோதர தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

அவற்றை சிவபெருமானின் உடலில் உள்ள ஐந்து பாகங்களாக குறிப்பிடுவது வழக்கம். அதன்படி சிவபெருமானின் இடுப்பு தான் கேதார்நாத் என்று சொல்லப்படுகிறது.


துங்கநாத் என்ற திருத்தலம் சிவபெருமானின் தோள் பகுதி என்றும், ருத்ரநாத் ஈசனின் முகம் என்றும், மத் மகேஸ்வரர் கோவில் சிவனின் நாபி (தொப்புள்) எனவும், கல்பேஸ்வரர் ஆலயம் சிவ பெருமானின் திருமுடியாக அமைந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

பெண்களை அதிகம் பாதிக்கும்(Hernias)குடலிறக்கம்

பெண்களை அதிகம் பாதிக்கும்(Hernias)குடலிறக்கம்
Hernias-affecting-women

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்கான காரணங்களையும், தீர்வையை அறிந்து கொள்ளலாம்.

ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.


பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, `சிசேரியன்’ எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

அடுத்ததாக, பெண்களுக்கு வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கையான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆகஆக அவளது வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவிழக்கச் செய்கிறது.

இப்படித்தான் பெண்களுக்கு பெரும்பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு குடலிறக்கம் ஏற்பட சில பொதுவான காரணங்களும் உள்ளன.

இயற்கை கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும் அதன் காரணமாகவும் ஒருவருக்கு குடலிறக்கம் ஏற்படும்.

ஒருவர் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இருமினாலும் கூட குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருமல் ஏற்படும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதுதான் அதற்கு காரணம்.

தடுப்பு முறைகள்

பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்படும்போது இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்காக சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த வலை திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்த பகுதிக்கு வலுவூட்டுகிறது.

இயற்கைக் கடன்களை கழிக்கும்போது தேவையில்லாமல் சிரமப்படுவதை (முக்குவது) தவிர்த்தாலும் குடலிறக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
Related Tags :

பெண்களை அதிகம் பாதிக்கும் ஞாபகமறதி

பெண்களை அதிகம் பாதிக்கும் ஞாபகமறதி
women-affect-memory-loss

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஞாபகமறதி நோய் என்று எல்லோராலும் அறியப்படுகிற அல்ஸைமர் நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இந்த நோய் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

ஞாபகமறதி நோய் என்று எல்லோராலும் அறியப்படுகிற அல்ஸைமர் நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இந்நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நோய் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பொதுவாக பெண்களை பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால், சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்ஸைமரே பெண்களை அதிகம் பாதிக்கிறது.


அல்ஸைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் வயது ஏற ஏற இந்நோய் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்ஸைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

பெண்களிடையே காணப்படும் மன அழுத்தப் பிரச்சனையும் அல்ஸைமருக்கு வழி வகுக்கிறது. பிரசவ கால சிக்கல்கள், மாதவிடாயை அறுவை சிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்ஸைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள் மற்றும் காரணிகளும் இந்நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்ஸைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்கிறார் ஆரோக்கிய உடற்கூறியியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர்.

பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்ஸைமர் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டதுடன், பாலின அடிப்படையில் இந்நோய்க்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அல்ஸைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் உள்ள மனரீதியான வெளிப்பாடுகள் மற்றும் அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுவதாக இந்த ஆலோசனைக்குழு தெரிவித்திருக்கிறது. இவற்றைக் கொண்டு அல்ஸைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.

மூளையில் சேர்ந்துள்ள இருவகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்ஸைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை.

ஆனால், அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வந்துள்ளது. ஆண்களைவிட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது.  

கர்ப்பகாலத்தில் பயணம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

கர்ப்பகாலத்தில் பயணம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
When-traveling-in-the-course-of-pregnancy


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கர்ப்பமான காலத்தில் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும் என ஆசைகள் இருப்பது இயல்பானது.. அவ்வாறு பயணம் செய்யும் காலத்தில் எந்த வகையில் உங்களை பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.

கர்ப்பமான காலத்திலிருந்து செய்ய கூடிய ஒவ்வொரு வேலையையும், அணுகுமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும் என ஆசைகள் இருப்பது அனைத்து பெண்களுக்கும் இயல்பாக தோன்றகூடியது.. அவ்வாறு பயணம் செய்யும் காலத்தில் எந்த வகையில் உங்களை பாதுகாக்கலாம். இதோ உங்களுக்கான சில டிப்ஸ்

கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய பாதுகாப்பான மாதம் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதங்கள் வரை மட்டுமே பயணம் செய்துக் கொள்ளலாம்.. இந்த கால இடைவெளியில் உள்ள பெண்கள் காலை நேரத்தில் அதிக சுறுசுறுப்புடனும் மிகுந்த ஆற்றலுடன் செயல்படுதால் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது அனைத்து சூழ்நிலைகளையும் அவர்களால் எதிர்க்கொள்ளக்கூடிய ஆற்றல் இரண்டாவது முதல் ஆறாவது மாதம் உள்ள கர்ப்பிணிகளுக்கு இருக்கும்.


கர்ப்பமான ஆரம்பக்காலத்தில் அதிக தூரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அக்காலக்கட்டத்தில் தான் கரு வளர்ச்சி அடைகிறது. மேலும் நீங்கள் பயணம் செய்யும் போது குழந்தை அழிவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது உங்கள் உடல் நலமும் பாதிப்பிற்குள்ளாகும்.

நீங்கள் கருவுற்ற காலத்தில் பயணம் செய்யும் போது சுவாதினம் இல்லாத குழந்தை பிறக்க நேரிடலாம், கரு தவறுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது.. ஒரு வேளை உங்களுக்கு இரட்டை குழந்தையாக இருப்பின் இரு குழந்தைகளும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொண்டு பயணம் செய்ய முடிவெடுக்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம் அல்லது புணர்புழை இரத்த ஒழுக்கு, கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், போன்றவை பயணம் ஒத்தி வைக்க பிற காரணங்களாக உள்ளன. நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பின் உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது அவசியம்.

பயணம் பற்றி யோசிக்கும் போது ஏற்படக்கூடிய விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சில கர்ப்பிணிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்வதால் கால்வீக்கம், பசியின்மை, தளர்வு ஏற்படும். மேலும் தேவையான மருந்துக்களை எடுத்து கொண்டு பயணம் செய்யலாம். பயணம் செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொண்டு பயணியுங்கள்..

கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்

கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்
Causes-of-bleeding-during-pregnancy.


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும் கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் அறிந்து கொள்ளலாம்.

முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும். "கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும்.

இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும். அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.

இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.

பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும்.

எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.

மூன்றாம் மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் இதுவாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும்.

இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.

எலும்புகளை(Bones)உறுதியாகும் உடற்பயிற்சி

எலும்புகளை(Bones)உறுதியாகும் உடற்பயிற்சி
Exercise-for-bones-stronger.

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

உடற்பயிற்சி செய்தால்தான் உடலின் எலும்புகள் உறுதியாகும். சாதாரண வாக்கிங், ஜாக்கிங் போன்றவையே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் போதுமானவை.

ஆரோக்கியமான வாழ்க்கையின் அஸ்திவாரம் உடற்பயிற்சி. விளையாட்டுத்துறையிலோ, நடிப்புத்துறையிலோ இருப்பவர்களுக்கு மட்டும்தான் உடற்பயிற்சி அவசியம் என்றும், அதிக பருமன் கொண்டவர்கள்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் பலருக்குள்ளும் தவறான எண்ணம் பதிந்திருக்கிறது. அப்படியில்லை. வாழ்நாளை நீட்டிக்க நினைக்கிற ஒவ்வொருவருக்கும் தினசரி உடற்பயிற்சிகள் என்பவை முக்கியம்.

தினமும் பல் துலக்குவது, காலைக்கடன்களைக் கழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது போன்றவற்றைப் போல உடற்பயிற்சியும் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றப்பட வேண்டும். உடற்பயிற்சிகள் செய்வதால் கிடைக்கிற பலன்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம். அவற்றில் முக்கியமானது நோயற்ற வாழ்வும், என்றும் இளமையும். இந்த இரண்டைத் தாண்டி ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?


உடற்பயிற்சி செய்தால்தான் உடலின் எலும்புகள் உறுதியாகும். எலும்புகள்தானே நம் உடலைத் தாங்கும் ஆதாரம்? அந்த ஆதாரம் ஆரோக்கிமாக இருந்தால்தானே நம் உருவமும் உடலும் சீராக இருக்கும்? தினமும் உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு மனம் அமைதியாக இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எலும்புகளுக்குக் குறிப்பிட்ட அளவு சுமை அவசியம். அப்போதுதான் அவற்றின் தன்மை மாறாமலிருக்கும். அதற்குத் தான் உடற்பயிற்சி வலியுறுத்தப்படுகிறது. உடற்பயிற்சி என்றதும் எடை தூக்க வேண்டும், உடல் வலிக்கவலிக்க உடற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்றெல்லாம் அர்த்தமில்லை. சாதாரண வாக்கிங், ஜாக்கிங் போன்றவையே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் போதுமானவை. நம் அசைவுகளுக்கு அவசியமான சைனோவியல் திரவமானது கொஞ்சமாவது உடற்பயிற்சி இருந்தால்தான் சுரக்கும்.

உடற்பயிற்சி செய்யும்போது நம் இதயத்துடிப்பு அதிகமாகும்.நிறைய ரத்தம் பம்ப் செய்யப்படும். ரத்தத்தில் ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சாதாரண பாக்டீரியா, வைரஸ் தொற்றிலிருந்து புற்றுநோய் அபாயம் வரை தவிர்க்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்கிறபோது நம் மூளையிலிருந்து எண்டார்பின் என்கிற ரசாயனம் சுரக்கப்படும். அது நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும்.

வெஸ்டன் டாய்லெட்(Western Toilet) பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

வெஸ்டன் டாய்லெட்(Western Toilet) பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
western-toilet-using-method.

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இப்போது வெஸ்டன் டாய்லெட் கலாசாரம் அதிகரித்திருக்கும் வேளையில், அதனை முறையாகப் பயன்படுத்துவது பற்றிய புரிதல் நம்மிடம் இன்னும் போதுமான அளவு இல்லை.

பொது இடத்தில் மலம் கழிக்காமல் கழிவறையைப் பயன்படுத்துவது அவசியம் என்பதைப் போலவே, கழிவறையைப் பயன்படுத்திய பிறகு அதனை முறையாக சுத்தம் செய்வதும் அவசியம். இப்போது வெஸ்டன் டாய்லெட் கலாசாரம் அதிகரித்திருக்கும் வேளையில், அதனை முறையாகப் பயன்படுத்துவது பற்றிய புரிதல் நம்மிடம் இன்னும் போதுமான அளவு இல்லை. அந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார ஆர்வலர்கள் முக்கியமான ஒரு விஷயத்தை முன் வைக்கிறார்கள்.

வெஸ்டன் டாய்லெட்டைப் பயன்படுத்திய பிறகு, அதனை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு, சில நிமிட இடைவெளிகளில் டாய்லெட் சீட்டினை மூடி வைத்து அதன் பிறகு ஃப்ளஷ் செய்ய வேண்டும். தண்ணீரை ஃப்ளஷ் செய்யும்போதும் மூடிவைக்காவிட்டால், அதிலிருந்து வெளியேறும் கிருமிகளும், மலம் கலந்த அசுத்த நீரும் கழிவறையின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. இந்த நுண்கிருமிகள் கழிவறையிலுள்ள தரை விரிப்புகள், திரைச்சீலைகள் மற்றும் அங்கு நாம் வைத்திருக்கக்கூடிய டூத் ப்ரஷ்கள், துண்டு போன்ற பிற பொருட்களின் மீதும் படிகிறது.


இப்படி அசுத்த நிலையில் உள்ள கழிவறையையும், அங்குள்ள மற்ற பொருட்களையும் பயன்படுத்திவிட்டு வெளியேறும்போது நமது கைகள், கால்கள் போன்ற உடல் உறுப்புகளின் மூலமும் கழிவறையிலுள்ள கிருமிகள் ஒட்டிக் கொள்கிறது.

இதனால் வீட்டிலுள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ள நபர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, வெஸ்டன் டாய்லெட்டின் மீதுள்ள மூடியை சரியான முறையில் மூடி வைப்பதன் மூலமும், மூடிவைத்த பிறகு ஃப்ளஷ் செய்வதன் மூலமும் இதுபோன்ற கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

பனங்கிழங்கு புட்டு -(Panang Kizhangu Puttu)

பனங்கிழங்கு புட்டு -(Panang Kizhangu Puttu)
சுவையான சத்தான பனங்கிழங்கு புட்டு

பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இன்று பனங்கிழங்கில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

பனங்கிழங்கு - 3,

 சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 3,
பூண்டு - 2 பல்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்சியில் சீரகம், தேங்காய் துருவலை போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

பூண்டு, மஞ்சள்தூள் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மஞ்சள் விழுதை தோல் சீவிய பனங்கிழங்கில் தடவி வேகவிடவும்.

வெந்தவுடன் நாரை உரித்துவிட்டு மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அடுத்து உதிர்த்த கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

இறக்குவதற்கு முன்… தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்… சுவையான, சத்தான பனங்கிழங்கு புட்டு ரெடி!

கேழ்வரகு - கேரட் ஊத்தப்பம் ( Ragi Carrot Uttapam)

கேழ்வரகு - கேரட் ஊத்தப்பம் ( Ragi Carrot Uttapam)
ragi-carrot-uttapam.
சத்தான டிபன் கேழ்வரகு - கேரட் ஊத்தப்பம்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கேழ்வரகில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - தேவையான அளவு,

 கேரட் - 3,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு உப்பு சேர்த்து கலந்து தோசை மாவை விட சற்று திக்காக கரைத்து புளிக்க விடவும்.

மற்றொரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, துருவிய கேரட் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானதும், மாவை கல்லில் ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

ஊத்தப்பத்தின் மீது, கலந்து வைத்துள்ள கேரட், வெங்காய, மிளகாய் கலவையை தேவையான அளவு தூவி, நன்கு வேக விடவும்.

தோசை ஒரு பக்கம் வெந்ததும், அதை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவைக்கவும்.

இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

சத்தான கேழ்வரகு - கேரட் ஊத்தப்பம் ரெடி!

கேழ்வரகு - கேரட் ஊத்தப்பத்தை தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகளுடன் பரிமாறவும்.

அரிசி பாலக் பொங்கல் - Samai Rice Palak Pongal.

அரிசி பாலக் பொங்கல் - Samai Rice Palak Pongal.
சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி - 1 கப்

 பாசிப்பருப்பு - 1/3 கப்
பாலக் கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
உப்பு - 1/3 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
உளுந்து - அரை  டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
முந்திரி - 10



செய்முறை :

வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு 7 விசில் வரும்வரை வேகவிடவும்.

வெந்ததும் இறக்கி மசித்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் உளுந்து, சீரகம், மிளகு முந்திரி போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல் ரெடி.

செஸ்வான் சிக்கன் - Schezwan Chicken.

செஸ்வான் சிக்கன் - Schezwan Chicken.
குழந்தைகளுக்கு விருப்பமான செஸ்வான் சிக்கன்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான செஸ்வான் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 250 கிராம்,

 மைதா - 3 டீஸ்பூன்,
கார்ன் பிளவர் - 2 டீஸ்பூன்,
முட்டை - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 50 கிராம்,
வெங்காயம் -1,
குடைமிளகாய் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 1,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு,
தக்காளி சாஸ் - சிறிது.



செய்முறை :

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு அதனுடன் மைதா, உப்பு, கார்ன் பிளவர், முட்டை (பாதி) சற்று நீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும்.

அடுத்து வெங்காயம், தக்காளி, கேப்சிகம் போன்றவற்றை போட்டு வதக்கவும்.

பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் அரைத்த காய்ந்த மிளகாய், தக்காளி சாஸ் சேர்க்கவும்.

கொஞ்சமாக கார்ன் பிளவர் கரைத்து வாணலியில் ஊற்றவும்.

கடைசியாக பொரித்த சிக்கன் துண்டுகளை அதில் போட்டு வறுத்து எடுக்கவும்.

சூப்பரான செஸ்வான் சிக்கன் ரெடி.