Showing posts with label ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம். Show all posts
Showing posts with label ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம். Show all posts

ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்

ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்


பெண்களை மிக அதிகமாகத் தாக்கும் ரத்தசோகையை நூற்றுக்கு நூறு உணவுப் பழக்கத்தின் மூலமே விரட்டி அடித்துவிடக் கூடிய ஒன்றுதான்” என்று நம்பிக்கையோடு பேசும் ‘டயட்டீஷியன்’ கிருஷ்ணமூர்த்தி,
”இந்திய அளவில் 60 முதல் 70 சதவிகிதத்தினர் ரத்தசோகையால் பாதிப்புக்குள்ளாகின்றனர். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது, ரத்தசோகை ஏற்படுகிறது. உடம்பில் இரும்புச்சத்து குறைந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும். குழந்தைகள், பெண்கள், கருவுற்ற தாய்மார்கள்’தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முதல் காரணமே… சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாததுதான். மருந்து, மாத்திரைகளை அதிக அளவு உட்கொள்பவர்களுக்கும் ரத்தசோகை வரலாம். மரபு வழியி’லும் இந்தப் பிரச்னை வரலாம்.
உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உற்பத்தி செய்ய புரதம், இரும்புச்சத்து மிகவும் அவசியம். புரதச்சத்து உணவு’களான பால், பருப்பு, பயறு வகைகள், பழங்கள், பேரீச்சம்பழம், கீரை வகைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது, அந்தச் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள, வைட்ட’மின்-சி, தாது உப்புகள், பி-12, அமிலத்தன்மை, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவு’களையும் கூடவே சேர்த்துக் கொள்ள’வேண்டும். முட்டை’யின் மஞ்சள் கருவில் இரும்பு, புரதம், ஃபோலிக் ஆசிட், பி.12 போன்ற எல்லாச்’சத்துக்களும் அடங்கியிருக்”கின்றன. சிக்கன், மீன், முட்டை, ஈரல் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்’களுக்கு ரத்தசோகை வருவதற்’கான வாய்ப்புகள் குறைவு” என்று சொன்ன டயட்டீஷி’யன்,
“மூச்சுத் திணறல், அசதி, நடக்கவே முடி’யா’மல் போதல், முகம், கண், விரல், கைகள் வெளுத்துப் போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது ரத்தசோகையாக இருக்’கலாம். உடனடி’யாக உணவு விஷயத்’தில் கவனத்தை செலுத்துங்’கள்” என்று அட்வைஸ் கொடுத்தார்.
இதைக் கேட்டதுமே… ”உணவுதான் உற்சாக’மாக வாழ்வதற்கு ஒரே மருந்து. சத்துள்ள உணவுகளை சரிவி’கிதத்தில் சாப்பிட்டால் போதும். ‘ரத்த சோகையா? அப்படினா என்ன..?’னு கேட்பீர்கள். இதோ, ரத்தசோகையை விரட்டியடிக்கவும்… வரவிடா’மல் தடுக்கவும் கூடிய உணவுகள்” என்றபடியே ரெசிபிகளை அள்ளி வழங்கினார் செஃப் ஜேக்கப்…
பூசணி விதை பாயசம்!
தேவையானவை: பூசணி விதை – 150 கிராம், பால் – 250 மில்லி, சர்க்கரை – 75 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி -‘ 10 கிராம், திராட்சை – 5 கிராம், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை: பூசணி விதையை, சிறிதளவு பாலில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சவும். அதில் அரை டம்ளர் பாலை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள பாலில் அரைத்த விழுதைப் போட்டு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போட்டு இறக்கவும். தனியாக உள்ள அரை டம்ளர் பாலை குளிர வைத்து, பாயசத்துடன் கலந்து, ஏலக்காய்தூள் தூவி, ‘ஜில்’லென்று பரிமாறவும்.
காலை சாப்பாட்டுக்கு முன்பு ‘சூப்’ போல் இந்தப் பாயசத்தை பருகலாம்.
பருப்பு-பீன்ஸ் கூட்டு!
தேவையானவை: பீன்ஸ் – 100 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 50 கிராம், பூண்டு – 2 பல், சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பு, துவரம்பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு, சீரகம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பீன்ஸ், உப்பு போட்டு வேக விடவும். இதனுடன், வெந்த பருப்பை சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். பொடித்த எள்ளை மேலாகத் தூவி பரிமாறவும்.
இதை சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
”சபாஷ்… சரியான ரெசிபிகள்!”
ரெசிபிகளை கையில் எடுத்த ‘டயட்டீஷி’யன்’ கிருஷ்ணமூர்த்தி, ”பூசணி விதையில் அதிக அளவு இரும்புச் சத்து இருக்கிறது. கண்ணுக்குத் தேவையான பீட்டா கரோட்டின், நல்ல கொழுப்பு, தாது உப்புக்களும் இதன்’மூலம் கிடைக்கின்றன. ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய புரதச்சத்தில் மூன்றில் ஒரு பங்கு, இந்த பாயசத்திலேயே கிடைத்துவிடுகிறது. எண்ணெய் பசை அதிகம் இருப்பதால் சருமத்தையும் பாதுகாக்கும்.
கூட்டில் சேர்த்துள்ள பீன்ஸ் மற்றும் எள் ஆகியவற்’றில் இரும்புச்சத்தும், பருப்பில் புரதமும் இருப்பதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணி பெண்கள், தினமும் 300 மைக்ரோ கிராம் அளவுக்கு ஃபோலிக் ஆசிட் இருக்கும் உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தக் கூட்டில் 170 மைக்ரோ கிராம் அளவுக்கு ஃபோலிக் ஆசிட் கிடைத்து விடுகிறது. உடம்புக்குத் தேவையான கார்போஹைட்ரேட், அதிக அளவு புரதம், எனர்ஜி ஆகியவையும் கிடைத்துவிடுவதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.
மொத்தத்தில் இந்த ரெசிபிகளில், ரத்தசோகை வராமல் தடுக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் அடங்கி’இருக்கின்றன. சபாஷ்… சரியான ரெசிபி!’ என்றார்.