Drinking lemon water


Drinking lemon water

Drinking lemon water
https://kkrhealthcare.blogspot.com/
K KARTHIK RAJA'S HEALTH COLLECTIONS
Telegram - subscribe : t.me/kkarthikrajahealthnews
https://kkarthikrajawomenshealthcare.blogspot.com/
https://kkarthikrajaparentalguide.blogspot.com/
https://kkarthikrajahealthcollections.blogspot.com/
#kkarthikrajahealthcollections #healthtips
#kkarthikraja #healthcare

எந்த காரணங்களுக்காக தலைவலி வரும் - Reason for Migraine Headache

எந்த காரணங்களுக்காக தலைவலி வரும் - Reason for Migraine Headache

பெற்றோரில் ஒருவருக்கு தலைவலி (மைக்ரேன்) இருந்தால், குழந்தைக்கு வரும் வாய்ப்பு 50 சதவீதம், இருவருக்கும் இருந்தால் வரும் வாய்ப்பு 75 சதவீதம் உள்ளது.

     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753




தலைவலி
ஒற்றை தலைவலி (மைக்ரேன்) என்பது பரம்பரையாக வரக்கூடும். பெற்றோரில் ஒருவருக்கு தலைவலி (மைக்ரேன்) இருந்தால், குழந்தைக்கு வரும் வாய்ப்பு 50 சதவீதம், இருவருக்கும் இருந்தால் வரும் வாய்ப்பு 75 சதவீதம் உள்ளது.

மைக்ரேன் தலைவலியானது முன்னெச்சரிக்கை அல்லது சமிக்ஞையுடனோ அல்லது அவை இன்றியோ வரக்கூடும். சமிக்ஞைகள், திடீரென்று தோன்றி மறையும் பார்வைக் கோளாறுகள், தோலில் தொடு உணர்ச்சி, நல்ல மணம் அல்லது துர்நாற்றம், காதில் இரைச்சல், இசை, பேசும் குரல்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக, ஒற்றை தலைவலி வருவதற்கு முன்பாக நோயாளியால் அறியப்படும்.


ஒற்றை தலைவலியை தூண்டக்கூடிய சில காரணிகள் உள்ளன. அவற்றை அறிந்து, தவிர்க்க முடிந்தால், ஓரளவுக்கு இதனை கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, ‘டைரமின்’ என்னும் வேதிப்பொருள் அதிகமாக உள்ள கெட்டுப்போன வாழைப்பழங்கள், சாக்லேட், மது வகை போன்றவை ஒற்றை தலைவலியை தூண்டக்கூடும். அதிக நெடியுள்ள வாசனைப் பொருட்கள், மாதவிடாய் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், சோர்வு, மினுக்கும் வெளிச்சம், அதிகத் தூக்கம் அல்லது தூக்கமின்மை, அதிக காபி, சில கொழுப்பு உணவு வகை, நீண்ட நேரம் கணினியைப் பார்த்தல், தட்பவெப்பநிலை மாற்றங்கள் போன்றவையும் ஒற்றை தலைவலியை தூண்டவல்லவை என்பதால், அவற்றை பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

அறிகுறி தோன்றும் நிலையிலேயே அல்லது வலி மிதமாக இருக்கும் நிலையிலேயே மருந்துகள் உட்கொண்டால் ஓரளவுக்கு கட்டுப்படும். மிகத் தீவிரமான வலி, வாந்தி ஆகியவை தோன்றிய பிறகு, மருந்துகள் வேலை செய்யாமல் போகலாம். ஒற்றை தலைவலியை தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பது அவசியம். அது நல்ல நோய்த் தடுப்பு முறை.

30 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு டென்ஷன் தலைவலி அதிக அளவில் வருகின்றன. 90 சதவீதம் மகளிருக்கும், 70 சதவீதம் ஆண்களுக்கும் டென்ஷன் தலைவலி வருவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மிகக் குறைந்த அளவு மருந்துகள், அளவான ஓய்வு, நல்ல பழக்கவழக்கங்கள் போன்றவை மனதையும் உடலையும் தளர்த்தி, டென்ஷன் தலைவலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடியவை. ஐஸ் ஒத்தடம், இளஞ்சூடான நீரில் குளித்தல், சரியான நேர நிர்வாகம், அக்குபஞ்சர், சுவாசப் பயிற்சி, மனோ நிலை, நடத்தை முறையை மாற்றும் பயிற்சிகள், மசாஜ், ரிலாக்சேஷன் பயிற்சிகள் போன்றவையும் உதவும்.

திட்டமிட்ட, அமைதியான, ஆரோக்கியமான மன, உடல் நிலையுடன் கூடிய வாழ்க்கை போன்றவை நம்மிடம் டென்ஷன் தலைவலிகளை நெருங்கவிடாது.

கிளஸ்டர் தலைவலி அல்லது ‘கொத்துத்’ தலைவலி என்பது ஒற்றை தலைவலியை போலவே வரக்கூடியவை. ஆனால் தினமும், பல முறை கொஞ்ச நேரமே இருக்கக்கூடிய தலைவலி இது. சில நாட்கள் அல்லது சில மாதங்கள் இருந்து, பிறகு ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை காணாமல் போய்விடக் கூடியவை.

புகை பிடித்தல், மதுப் பழக்கம் உள்ள ஆண்களுக்கு அதிகமாக வரக் கூடியது. இந்த வலியின் கொடுமை தாங்காமல், சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சிப்பார்கள் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் இதற்கு ‘தற்கொலை தலைவலி’ என்ற பெயரும் உண்டு. இந்த தலைவலி வந்தால் உடனடி மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் செய்துகொள்வது அவசியம்.

எமன் காயத்ரி மந்திரம் - Yama-Dharmaraja-Gayatri-Mantra

எமன் காயத்ரி மந்திரம் - Yama-Dharmaraja-Gayatri-Mantra
மரண பயம் போக்கும் எமன் காயத்ரி மந்திரம்

இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், தெற்கு திசை நோக்கி நின்று எமதர்மராஜனை மனதில் நினைத்து 9 முறை கூறவும்.


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

எமன்
எமன் காயத்ரி மந்திரம் :

“ஓம் சூரிய புத்ராய வித்மஹே
 மகா காலாய தீமஹி
தந்நோ யம ப்ரசோதயாத்”

பொதுவான பொருள் : “சூரிய பகவானின் புத்திரரும், காலத்தின் அம்சமான எம தர்மரின் அருள் எனக்கு கிடைக்க, அவர் பாதம் பணிகிறேன்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், தெற்கு திசை நோக்கி நின்று யமதர்மராஜனை மனதில் நினைத்து 9 முறை கூறவும். மேலும் அதே சனிக்கிழமையில் சிவன் கோவிலுக்கு சென்று, நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனிபகவானின் சகோதரனான யமதர்மனுக்குரிய இம்மந்திரத்தை கூறி வழிபட, இந்த இரு தேவர்களின் அருளால் உங்களுக்கு ஆயுள் விருத்தியாகும். மரணத்தை குறித்த தேவையற்ற பயங்கள் நீங்கும்.

ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம் - Shiva-Panchakshara-Stotram

 ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம் - Shiva-Panchakshara-Stotram

வாழ்வில் சந்தோஷம் தரும் ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

வாழ்வில் சகல சந்தோஷங்களும் கிடைக்க நாம் தினமும் வழிபாடு செய்யும் போது சிவபெருமானை நினைத்து சொல்ல வேண்டிய ஸ்லோகம் இதுவாகும்.

சிவன்
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய


தஸ்மை நகாராய நம:சிவாய
மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய
மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை மகாராய நம:சிவாய

சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த
ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நம:சிவாய

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க்க வைச்வாநர லோச்சனாய
தஸ்மை வகாராய நம:சிவாய

யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை யகாராய நம:சிவாய

பஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ
சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

பொதுப்பொருள்: ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில்  பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

சிக்கன் ஃபார்சா - Chicken-Farcha

சிக்கன் ஃபார்சா - Chicken-Farcha

குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த சிக்கன் ஸ்டார்டரை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

சிக்கன் ஃபார்சா
தேவையான பொருட்கள்

தோல் நீக்கிய எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்


மசாலா தயாரிக்க:

எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
இஞ்சி விழுது - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

கோட்டிங் செய்ய:

பிரெட் தூள் - 1/2 கப்
முட்டை - 2
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு


சிக்கன் ஃபார்சா

செய்முறை

சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும்.

ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, பூண்டு விழுது, இஞ்சி விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு போட்டு அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.

இந்த மசாலா கலவையை சிக்கனில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

அதேநேரம் மற்றொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய சிக்கனை எடுத்து முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும்.

பின் இதனை எண்ணெய் சூடானவுடன் போட்டு பொரித்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

சூப்பரான சிக்கன் ஃபார்சா ரெடி.

கருட பகவானை எந்தெந்த நாட்களில் தரிசனம் செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் Garuda Worship

கருட பகவானை எந்தெந்த நாட்களில் தரிசனம் செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும்   Garuda Worship


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

கருட தரிசனமும்- தீரும் பிரச்சனைகளும்

கருட பகவானை எந்தெந்த நாட்களில் தரிசனம்(வழிபாடு) செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கருடன்
கருட பகவானை எந்தெந்த நாட்களில் தரிசனம்(வழிபாடு) செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஞாயிறு - பிணி விலகும்


திங்கள் - குடும்ப நலம் சிறக்கும்

செவ்வாய் - துணிவு பிறக்கும்

புதன் - பகைவர் பலம் குறையும்

வியாழன் - நீண்ட ஆயுள் கிடைக்கும்

வெள்ளி - செல்வம் பெருகும்

சனி - முக்தி கிடைக்கும்

பஞ்சோபசாரம் என்றால் என்ன? - Pancha Upachar

பஞ்சோபசாரம் என்றால் என்ன? - Pancha Upachar

மனித வாழ்விற்கு அடிப்படையாக விளங்கும், பஞ்ச பூதங்களையும் வழங்கிய இறைவனுக்கு, நன்றி செலுத்தும் வகையில் பக்தர்கள் ஐந்து விதமான செயல்களை செய்வார்கள். அதற்கு ‘பஞ்சோபசாரம்’ என்று பெயர்.


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753


இறைவழிபாடு
மனித வாழ்விற்கு அடிப்படையாக விளங்கும், ‘நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் வழங்கிய இறைவனுக்கு, நன்றி செலுத்தும் வகையில் பக்தர்கள் ஐந்து விதமான செயல்களை செய்வார்கள். அதற்கு ‘பஞ்சோபசாரம்’ என்று பெயர்.

பிருத்வி தத்துவம் (நிலம்) - சுவாமி சிலை அல்லது படத்துக்கு சந்தனம் இடுதல்


ஆகாய தத்துவம் - பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது, அழகுபடுத்துவது.

வாயு தத்துவம் - குங்குலியம் (சாம்பிராணி), ஊதுபத்தி போன்றவற்றைக் கொண்டு தூபம் போடுவது.

அக்னி தத்துவம் - கற்பூரம் கொண்டு தீபம் ஏற்றி ஆராதனை செய்வது.

நீர் தத்துவம் - இறைவனுக்கு உகந்த உணவு (நைவேத்தியம்) படைத்தல்

ஸ்ரீ ராகவேந்திர மந்திரம் - Raghavendra Swamy Mantra.

ஸ்ரீ ராகவேந்திர மந்திரம் - Raghavendra Swamy Mantra.

விருப்பங்கள் நிறைவேற ஸ்ரீ ராகவேந்திர மந்திரம்



     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம்.

ஸ்ரீராகவேந்திரர்
ஓம் வெங்கட நாதாய வித்மஹே
ஸச் சித்தானந்தாய தீமஹி
தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்


ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம். காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர்.

வாசல் படியில் ஏன் உட்காரக் கூடாது - Dont Sitting in Home Steps

வாசல் படியில் ஏன் உட்காரக் கூடாது - Dont Sitting in Home Steps

வாயிற்படியில் உட்கார்ந்து பேசலாமா? - Dont Sitting in Home Steps


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

வீட்டின் வாசல் படி, அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் போன்றவற்றில் உட்கார்ந்து பேசக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

வாயிற்படியில் உட்கார்ந்து பேசலாமா?
வீட்டின் வாசல் படி, அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் போன்றவற்றில் உட்கார்ந்து பேசக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம். அதே போல் வெற்றிலை மற்றும் வாழை இலைகளை வாடவிடக்கூடாது.

குழந்தைகளை குரங்கே, சனியனே என்றெல்லாம் திட்டக் கூடாது. உப்பைத் தரையில் சிந்தக்கூடாது. துணி மணிகளை உடலில் அணிந்த படியே தைக்கக்கூடாது என்பார்கள். சரி வாசல் படியில் ஏன் உட்காரக் கூடாது என்கிறார்கள் தெரியுமா?

 வாசல் படியில் வைத்துதான், இரண்யகசிபுவை நரசிம்ம பெருமாள் வதம் செய்தார். அதனால் அப்படிச் சொல்கிறார்கள். வாசல்படியில் வைத்து பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கவும் கூடாது.

ஆன்மிகமும் அறிவியலும் இணைந்த மார்கழி - margazhi-month-worship

ஆன்மிகமும் அறிவியலும் இணைந்த மார்கழி - margazhi-month-worship


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753


மார்கழியின் மகிமையை இந்து ஆன்மிகம் மேலும் பல வழிகளிலும் வெளிப்படுத்தி இருக்கிறது. மனிதர்களின் ஒரு வருடம், தேவர்களுக்கு ஒரு நாள் என்று இந்து ஆன்மிகம் கூறுகிறது.

ஆன்மிகமும் அறிவியலும் இணைந்த மார்கழி
ஆன்மிகமும், அறிவியலும் வெவ்வேறு துருவங்கள் என்பது போன்ற தோற்றத்தை அளித்தாலும், பல விஷயங்களில் இரண்டும் ஒரே கருத்தைக் கொண்டு, ரெயில் தண்டவாளக் கம்பிகள் போல இணைந்து பயணிப்பது அவ்வப்போது நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்தகைய சிறப்பைக் கொண்டு இருப்பவற்றில், மார்கழி மாதமும் ஒன்று.

மாதங்களில் சிறப்பான மாதம் என்று ஆன்மிகத்தால் கொண்டாடப்படும் மார்கழி மாதம், 17-ம் தேதி பிறந்தது. ஒரு சிலர் இந்த மாதத்தைப் ‘பீடை மாதம்’ என்றும், திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளுக்கு இது உகந்த மாதம் அல்ல என்றும் கூறுவது உண்டு.


ஆனால் பகவத் கீதை 10-வது அத்தியாயத்தில், கிருஷ்ணர் “மாதங்களில் நான் மார்கழி” என்று பெருமையோடு சிறப்பித்துக் கூறுவதை ஆன்மிகவாதிகள் சுட்டிக் காட்டத் தவறுவது இல்லை.

மார்கழியின் மகிமையை இந்து ஆன்மிகம் மேலும் பல வழிகளிலும் வெளிப்படுத்தி இருக்கிறது. மனிதர்களின் ஒரு வருடம், தேவர்களுக்கு ஒரு நாள் என்று இந்து ஆன்மிகம் கூறுகிறது. எனவே, தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலம், தேவர்களுக்கு பகல் பொழுது என்றும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தேவர்களுக்கு இரவுப் பொழுது என்றும் கணக்கிடு கிறார்கள். இரவு காலம் முடிந்து பகல் விடியும் அதிகாலை நேரமாக மார்கழி மாதம் கருதப்படுவதால், அந்த மாதம் சிறப்பானது என்று போற்றப்படுகிறது.

சூரியன் வட திசையில் இருந்து தென் திசை நோக்கிப் பயணம் செய்யும் 6 மாத காலம் ‘தட்சிணாயனம்’ என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் 6 மாத காலம் ‘உத்தராயனம்’ என்றும் கூறப்படுகிறது. புனிதமானதாகக் கருதப்படும் உத்தராயன காலம், மார்கழி மாதத்தில் தான் (ஜனவரி 14, 15 தேதிகளில்) தொடங்குகிறது.

சாகா வரம் கொடுக்கும் அமிர்தத்தை எடுப்பதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது முதலில் கடலுக்குள் இருந்து வெளிவந்த, மிகக் கொடிய ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு, மக்களைப் பேரழிவில் இருந்து காப்பாற்றினார். இது நிகழ்ந்தது ஒரு மார்கழி மாதத்தில் தான் என்பது புராணம் தரும் தகவல்.

இந்திரன், கோகுலத்தில் இடி- மின்னலுடன் கூடிய பெரும் மழையை உண்டாக்கினான். அப்போது பகவான் கிருஷ்ணர், கோவர்த்தன மலையை குடையாகத் தூக்கிப் பிடித்து அங்கு வாழ்ந்த மக்களைக் காத்தார். இது நடந்ததும் ஒரு மார்கழி மாதத்தில் என்று மகாபாரதம் சொல்கிறது.

திருமாலை அடைவதற்காக ஆண்டாள் நோன்பு இருந்து திருப்பாவை அருளியது மார்கழி மாதத்தில் தான்.

அனுமன் ஜெயந்தி (டிசம்பர் 2-ந் தேதி), வைகுண்ட ஏகாதசி (ஜனவரி 6-ந் தேதி), ஆருத்ரா தரிசனம் (ஜனவரி 10-ந் தேதி), போகி மற்றும் பொங்கல் பண்டிகை (ஜனவரி 14 மற்றும் 15-ந் தேதிகளில்) போன்ற விழாக்கள் மார்கழி மாதத்தில் தான் கொண்டாடப்படுகின்றன.

இது போன்ற காரணங்களால், மார்கழி என்பது தேவர் களுக்கும், அவர்களது வழிபாட்டுக்கும் உரிய காலம் என்பதால், பக்தியில் அதிக கவனம் செலுத்துவதற்காக இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

மார்கழி மாதத்தின்போது அதிக சக்தி கொண்ட பிராண வாயு அடுக்கு, பூமிக்கு அருகே வரும் என்பதால், அதன் பயனைப் பெறுவதற்காக இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவது, கோவில்களுக்குச் செல்வது, வீதியில் பஜனைப் பாடல் களைப் பாடிச் செல்வது ஆகியவை ஏற்படுத்தப்பட்டன என்றும் கூறப்படுவது உண்டு.

மார்கழி மாதம் குறித்து ஆன்மிக வாதிகள் தெரிவிப்பதில் இறுதியான இந்த அம்சம், அறிவியலுடன் தொடர்பு உள்ளது என்பதால், அது குறித்து அறிவியல் தரும் தகவலைப் பார்க்கலாம்.

சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக பூமியைத் தாக்கினால், பூமியில் உள்ள சகல ஜீவராசிகளும் பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.

அந்தக் கதிர்வீச்சில் இருந்து பூமியைக் காப்பது, பூமியின் வான் மண்டலத்தில் உள்ள ஓசோன் அடுக்கு என்பது 1913-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு இயற்பியல் விஞ்ஞானிகள் சார்லஸ் பாப்ரி, ஹென்றி பியூஸ்ஸன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

சூரியனில் இருந்து வரும் வெப்பக் கதிர்கள், வான் வெளியில் உள்ள பிராண வாயு மூலக் கூறுகளைத் தாக்கும்போது, பிராணவாயு (ஓ2) வில் உள்ள அணுக்கள் பிளந்து, அவற்றில் ஓர் அணு, மற்ற பிராண வாயு (ஓ2) அணுக்களுடன் இணைந்து ‘ஓ3’ என்ற கூடுதல் சக்தி கொண்ட பிராண வாயுவாக மாறுகிறது. இதுதான் ‘ஓசோன்’ எனப்படுகிறது.

வான வெளியில் சுமார் ஒரு கோடி காற்று மூலக் கூறுகளில், 3 மூலக்கூறு மட்டுமே ஓசோன் ஆக மாறுகிறது என்றும், பூமியின் வெப்ப மண்டலத்தில் உருவாகும் ஓசோன், துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். பூமியைக் காக்கும் ஓசோன் படலம், பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் உயரம் வரை வியாபித்து இருக்கும்.

பிராண வாயுவின் 3 அணுக்களைக் கொண்ட ஓசோன், நிறமற்றது; வாசனையற்றது. ஓசோன் அடுக்கு, பூமத்திய ரேகைப் பகுதியில் மெல்லிசானதாகவும், துருவப் பகுதியில் தடிமனாகவும் காணப்படுகிறது.

பூமியைப் பாதுகாக்கும் கவசம் போன்ற ஓசோன் அடுக்கில், சில ஆண்டுகளுக்கு முன்பு துளை ஏற்பட்டதால், அந்தத் துளை வழியாக வரும் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சால் பூமியில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதும், ஓசோன் படலத்தில் துளை உருவாகுவதற்குக் காரணம் ‘குளோரோ புளோரோ கார்பன்’ என்ற நச்சு வாயு என்பதும் 1976-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குளோரின் அணு, ஒரு லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கவல்லது என்பதும் கண்டறியப்பட்டது.

எனவே, 1981-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச உடன்படிக்கைப்படி (மான்ட்ரீல் புரோட்டகால்) குளோரோ புளோரோ கார்பன் வாயுவை வெளியிடும் தொழிற்சாலைகளையும், கருவிகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ந் தேதியை, ஓசோன் பாதுகாப்பு சர்வதேச தினமாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்று ஐ.நா.சபை அறிவித்தது.

பொதுவாக ஓசோன் படலத்தில் ஏற்படும் துளை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகமாக இருக்கிறது என்பதும், டிசம்பர் இறுதியில், அதாவது மார்கழி மாதத்தில் அந்தத் துளை ஏறக்குறைய மறைந்து விடுகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

மார்கழி மாதத்தில் வரும் ஜனவரி 3 அல்லது 4-ந்தேதி அன்று சூரியன் பூமிக்கு மிக அருகே வருகிறது என்பதும், அந்தக் காலகட்டத்தில் தான் அதிக அளவு ஓசோன் உற்பத்தி ஆகிறது என்பதும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அறிவியல் அதிசயத்தை நமது முன்னோர்கள் ஏற்கனவே அறிந்து இருந்த காரணத்தால் தான் மார்கழி மாதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றும் ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள்.

கருவுறாமையைக் கண்டறிய பரிசோதனைகள் - Tests-for-Women-Infertility

கருவுறாமையைக் கண்டறிய பரிசோதனைகள் - Tests-for-Women-Infertility

பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

கருவுறாமையைக் கண்டறிய எந்தவகை பரிசோதனைகள்
பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தைராய்டு சுரபியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.

   
மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப்படுகிறது.
 
லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.
 
எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.
 
ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது.
 
அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பை மற்றும் கரு முட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது.

இவை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனை முறைகள் இன்று மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எளிதாகவும், இன்னும் சிறப்பாகவும் உங்கள் உடலில் இருக்கும் பிரச்சனையைக் கண்டறிந்து உங்கள் உடலில் இருக்கும் கருவுறாமைக்கான சிக்கல்களைச் சரி செய்ய முடிகிறது.

அக்குபிரஷர் ரோலர்ஹர் - Acupressure-Roller.

அக்குபிரஷர் ரோலர்ஹர் - Acupressure-Roller.

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் அக்குபிரஷர் ரோலர்ஹர்


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

அக்குபிரஷர் ரோலரில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி செய்து வருவதால் உடல் மற்றும் மனம் புத்துணர்வு பெறும். இது ஒரு நோய் தடுக்கும் கருவி என்று கூட மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அக்குபிரஷர் ரோலர்ஹர்
சமீபத்தில் அதிகம் பேசப்படும் பொருளாக ‘அக்குபிரஷர் ரோலர்’

பார்க்கவே வித்தியாசமாக காட்சி தரும் இதன் பயன்பாடு என்னவென்று பார்ப்போம்.


’அக்குபிரஷர் ரோலர்’ என்பது ஒரு சிறிய கருவி. இது நம் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. நாற்காலியில் அமர்ந்துகொண்டு நம் பாதங்களுக்கு அடியில் இதை வைத்து அழுத்தம் கொடுத்து உருட்டும்போது நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இவ்வகையான செயலால் நம் உடல் மற்றும் மனம் புத்துணர்வு பெறும். நம் உடலில் உள்ள உள்ளுறுப்புகளில் சக்தி ஓட்டப்பாதை நம் பாதங்களில் அமைந்துள்ளது. அதில் தேக்கம் ஏற்படும்போது உடல் பலவீனமாகிறது. அப்போது அந்த உறுப்புகளை மீண்டும் இயக்க இந்த கருவி கொண்டு அழுத்தம் கொடுக்கும்போது தேக்கம் கலைந்து சக்தி ஓட்டம் சீராக நடைபெறுகிறது.

அக்குபிரஷர் முறை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழக்கத்தில் இருந்திருக்கிறது. திபெத்திய லாமாக்கள்தான் இந்த முறையை பயன்படுத்தி இருப்பதாக வரலாறு கூறுகிறது. அந்த காலத்தில் ஆதி மனிதர்கள் கால்களுக்கு செருப்பு அணியாமல் வெற்று கால்களுடன்தான் நடந்தனர். அவர்கள் காடு, மேடு, பள்ளம், முள், புதர், புல் என பலவற்றையும் கடந்தனர். அவர்களின் பாதங்களில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் அவர்களை அறியாமலேயே கற்கள், முள், மண், கட்டை, பாறை போன்றவற்றில் அழுத்தமுற்றன. இதன் பயனாக அவர்களின் வலிகள் மறைந்திருக்கலாம். உள் உறுப்புகள் சக்தி பெற்றிருக்கலாம்.

ஆதிமனிதர்கள் இப்படியாகத்தான் தங்கள் வலிகளை நீக்கி இருக்கின்றனர். எனவே, இக்கால மக்கள் உடல் மற்றும் மன பிரச்சினைக்கு இந்த ரோலரை பயன்படுத்தலாம். அதிக நேரம் நிற்பவர்கள், அதிக தூரம் நடப்பவர்கள், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பவர்கள் இந்த கட்டையை பாதத்தில் வைத்து உருட்டி தங்கள் அசதியை போக்கலாம்.

நோய் வரும் வாய்ப்பையும் தவிர்க்கலாம். உணவு உண்டவுடன் இப்படி பாதத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. உண்ட பின்பு அரை மணிநேரம் கழித்து இம்முறையை பின்பற்றலாம். சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், தூக்கம் வராதவர்கள், முதியோர்கள் மற்றும் அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம். பாதங்கள் சிலருக்கு மிகவும் மென்மையாக இருக்கும். அவர்கள் கால்களுக்கு சாக்ஸ் அல்லது மெல்லிய துணி போர்த்தி இந்த அக்குபிரஷர் ரோலரை பயன்படுத்தலாம்.

ஆரோக்கியமாக இருப்பவர்களும் இதை பயன்படுத்தி எதிர்கால உடல் பிரச்சினைகளை தடுக்கலாம். கைகளில் வைத்து உருட்டுவதற்கும் இதைப்போல் சிறிய கருவி கிடைக்கிறது. இதுவும் மேற்சொன்ன பலனை தரும். இதை கால்கன், கைகளால் உருட்டுவதால் எந்த பக்க விளைவுகளும் வருவதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த பயிற்சி செய்து வருவதால் உடல் மற்றும் மனம் புத்துணர்வு பெறும். இது ஒரு நோய் தடுக்கும் கருவி என்று கூட மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

ஹெர்பல் ஹேர் டை - Home Made Herbal Hair Dye.

ஹெர்பல் ஹேர் டை  - Home Made Herbal Hair Dye.

வீட்டிலேயே ஹெர்பல் ஹேர் டை தயாரிப்பது எப்படி?


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

வீட்டிலே ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

ஹேர் டை
இளநரை வருவது என்பது பொதுவான விஷயம் என்றாலும், அதை மறைக்க பலரும் மிகவும் சிரமப்படுகின்றனர். வீட்டிலே ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

ஹோம்மேட் ஹென்னா ஹேர் டை


தேவையான பொருட்கள்

மருதாணி பவுடர் - 1 கப்
அவுரி இலை பவுடர் - 1 கப்

செய்முறை

முதல்நாள் இரவே மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து பேஸ்டாக கலக்கி வைக்கவும். மறுநாள், எண்ணெய் இல்லாத முடியில் மருதாணி பேஸ்டை பூசி கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். முடியை நன்கு உலர்த்திய பிறகு, அவுரி இலை பொடியை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து, அதை உடனே தலை முடியில் பூசி விடுங்கள்.

மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர், முடியை வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். இந்த முறையில் முடிக்கோ மண்டைக்கோ எந்த பாதிப்பும் கிடையாது. 100% இயற்கையானது. ஒரு மாதம் வரை முடி கருப்பாக இருக்கும். பிறகு மீண்டும் வெள்ளையானால் மீண்டும் இதேபோல செய்து தலை முடியில் பூசிக்கொள்ளுங்கள்

மூவர்ண சாலட் - Tricolor Salad

மூவர்ண சாலட் - Tricolor Salad

இது ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சாலட். இனிப்பு, புளிப்பு கலந்த இந்த சாலட்டை நிச்சயமாக விரும்புவீர்கள். இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம்.


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

மூவர்ண சாலட்
தேவையான பொருட்கள்

ட்ரெஸ்ஸிக்


வினிகர் - 1/3 கப்
தேன்/சர்க்கரை - 3 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 2
மிளகாய் - 2

சாலட்டிற்கு

பச்சை பப்பாளி - 1 நடுத்தரமாக
பெரிய கேரட் - 1
வெள்ளரிக்காய் - 2,
புதினா - 1/3 கப்
வறுத்த நிலக்கடலை - 4 மேஜைக்கரண்டி

மூவர்ண சாலட்

செய்முறை:

பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட், வெள்ளரிக்காய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ட்ரெஸ்ஸிங்க்கு தேவையான பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

பச்சை பப்பாளியின் தோலை சீவி நூல் போன்று நீளநீளமாக வெட்டிக் கொள்ளவும்.

பெரிய பவுலில் நறுக்கிய பச்சை பப்பாளி, கேரட். வெள்ளரி, புதினா மற்றும் நிலக்கடலையை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

இந்த சாட்டின் மேல் தயார் செய்து வைத்த ட்ரெஸ்ஸிங்கை ஊற்றி நன்றாக கலந்து உடனடியாக பரிமாறிலாம்.

சூப்பரான மூவர்ண சாலட் தயார்.

சீஸ் பிஸ்கெட் - Cheese Biscuit.

சீஸ் பிஸ்கெட் - Cheese Biscuit.

வீட்டில் சீஸ் பிஸ்கெட் செய்வது எப்படி?
homemade-cheese-biscuit.


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

குழந்தைகளுக்கு பிஸ்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சீஸ் பிஸ்கெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சீஸ் பிஸ்கெட்
தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்,

 பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
துருவிய சீஸ் - 1/4 கப்,
வனஸ்பதி (அ) வெண்ணெய் - 1/4 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
பால் - 1½ டேபிள் ஸ்பூன்.

சீஸ் பிஸ்கெட்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு  அதனுடன் பேக்கிங் பவுடர், துருவிய சீஸ், வனஸ்பதி (அ) வெண்ணெய், சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து அதில் பாலை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை உள்ளங்கையால் 1/4 இன்ச் தனத்திற்கு தட்டி பிஸ்கெட் கட்டரால் வெட்டி வைக்கவும்.

கடைசியாக வெண்ணெய் தடவிய செய்து வைத்த பிஸ்கெட்டை ட்ரேயில் அடுக்கி 1800C சூட்டில் ஓவனில் 10 நிமிடம் பேக் செய்து எடுத்து பரிமாறவும்.

சுவையான சீஸ் பிஸ்கெட் ரெடி.

Reason for being angry

Reason for being Angry

Sleeping with Socks

Sleeping with Socks


குழந்தைகளை தடுப்பூசி - தயார்ப்படுத்துவது எப்படி? - How-to-prepare-children-for-vaccination

குழந்தைகளை தடுப்பூசி - தயார்ப்படுத்துவது எப்படி?  - How-to-prepare-children-for-vaccination

How-to-prepare-children-for-vaccination


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் போது தயார்ப்படுத்துவது எப்படி என்று பலருக்கும் தெரிவதில்லை. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகளை தடுப்பூசி போட தயார்ப்படுத்துவது எப்படி?
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறோம். அதன் பிறகு குழந்தைகளுக்கான பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும் எனப் பலருக்கும் தெரிவதில்லை. தடுப்பூசி போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது… இதைப் பற்றி முழுமையாக இங்குப் பார்க்கலாம்.

சின்ன குழந்தைகளை தடுப்பூசிக்கு தயார்ப்படுத்துதல்…


எளிதில் கழற்றகூடிய லேசான ஆடைகளைக் குழந்தைக்கு அணிவிப்பது நல்லது. அரை கை சட்டை உள்ள ஆடைகள் நல்லது. 12 மாதத்துக்கு கீழ் உள்ள குழந்தைக்கு தொடையில் ஊசி போடுவது நல்லது. 1 வயது + குழந்தைகளுக்கு, மருத்துவர் பரிந்துரைப்பின்படி இடுப்பிலோ கையிலோ ஊசி போடலாம். ஊசி போடும்போது குழந்தையை நன்கு அரவணைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புங்கள்.

குழந்தையை கட்டி அணைப்பது, பாடுவது, இதமாகப் பேசுவது போன்றவற்றை செய்யலாம். குழந்தையின் கண் பார்த்துப் பேசுங்கள். குழந்தையை பார்த்து புன்னகை செய்யுங்கள். குழந்தை பாதுகாப்பாக உணரும்படி அரவணைத்துக் கொள்ளுங்கள் கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளையாட்டு காண்பிக்கலாம். குழந்தையை துணியால் போர்த்தி அரவணைக்கலாம். குழந்தையை, தடுப்பூசி போடும்போது உங்களது மடியில் வைத்திருங்கள்.

பெரிய குழந்தைகளை தடுப்பூசிக்கு தயார்ப்படுத்துதல்…

வலியில் இருந்து மீள ஆழ்ந்த மூச்சு விடும்படி சொல்லி கொடுங்கள் பொய் சொல்லி ஏமாற்ற வேண்டாம். உண்மையை சொல்லி குழந்தையை தயார்படுத்துங்கள். அறையில் உள்ள பொருட்களைக் காண்பித்து குழந்தையின் கவனத்தை மாற்றுங்கள். அழும் குழந்தையை சமாதானம் செய்யுங்கள் குழந்தை பயப்படுகிறது எனத் திட்ட வேண்டாம். கேலி, கிண்டல் செய்ய வேண்டாம்.

மருத்துவரிடம் இதன் பிறகான பராமரிப்புகளைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஈரமான துணியை ஊசி போட்ட இடத்தில் வைத்து லேசாகத் தொட்டு தொட்டு எடுக்கவும். காய்ச்சல் வந்தால், தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்கவும். தடுப்பூசி போட்ட இக்காலத்தில் குழந்தைகள் குறைவாகவே சாப்பிடுவார்கள். இதற்காக பயம் வேண்டாம். அது நார்மல்தான். கொஞ்சம் அதிக கவனத்தை குழந்தைகள் மேல் வையுங்கள்.

நகங்களைப் பாதுகாக்கும் வழி - Nail-Care-Tips

நகங்களைப் பாதுகாக்கும்  வழி - Nail-Care-Tips

நகங்களை சரியான முறையில் பராமரிக்காவிட்டால் Nail-Care-Tips


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

வழக்கமாக நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள், நகங்களைச் சரியான முறையில் பராமரிக்காமல் விட்டால், பல பிரச்னைகள் ஏற்படும்.

நகங்களை சரியான முறையில் பராமரிக்காவிட்டால்...
வழக்கமாக நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள், நகங்களைச் சரியான முறையில் பராமரிக்காமல் விட்டால், பல பிரச்னைகள் ஏற்படும். இங்கு நகங்களைப் பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

"முன்பெல்லாம், தண்ணீரை அடிப்படையாகக்கொண்டு நெயில் பாலிஷ் தயார் செய்யப்பட்டது. அதனால், நகங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான நெயில் பாலிஷ்கள், ஆயில் அல்லது லேக்கர் (Lacquer) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகின்றன. நீண்ட நாள்கள் அழியாமல் இருப்பதற்காக இவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கிறார்கள். மேலும், பெரும்பாலான நெயில் பாலிஷ்கள் டார்க் ஷேடுகளில்தான் கிடைக்கின்றன. அவை நிச்சயம் நகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.


இந்த ரசாயன நெயில் பாலிஷ்களைப் பயன்படுத்தும்போது, அதன் பாதிப்புகளை ஈடுகட்ட நகங்களுக்கு முறையான பராமரிப்பு கொடுக்கப்படவில்லை என்றால், நிச்சயம் நகங்களின் வேர் வலுவிழந்துவிடும்; நகத்தின் நிறம் மஞ்சளாக மாறும் வாய்ப்பிருக்கிறது. எனவே, தொடர்ந்து நெயில் பாலிஷ் உபயோகிப்பவர்கள், வாரத்திற்கு ஒருமுறையாவது நகங்களைச் சுத்தம்செய்து, ஒரு நாள் முழுவதும் எந்த பாலிஷும் இல்லாமல் காற்றோட்டமாக நகத்தை விட்டிருப்பது நல்லது.

எப்போதும் தரமான நெயில் பாலிஷையே உபயோகிக்கவும். நெயில் பாலிஷை நேரடியாக நகத்தில் அப்ளை செய்வதற்கு முன், 'பேஸ் கோட்', அதாவது நிறமற்ற ட்ரான்ஸ்பரென்ட் பாலிஷை அப்ளை செய்யவும். நெயில் பாலிஷ் போட்டபிறகும் இந்த நெயில் பேஸை அப்ளை செய்யலாம்.

வாரத்திற்கு ஒரு முறை நெயில் பாலிஷை முற்றிலும் அகற்றிவிட்டு, சோப் கலந்த குளிர்ந்த நீரில் விரல்களை ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, சாதாரண தண்ணீரில் நன்கு கழுவி, விரல்கள் நன்கு உலர்ந்தவுடன், ஒரு சொட்டு ஆலிவ் எண்ணெய் அல்லது க்யூடிகிள் க்ரீமை விரல்களில் அப்ளை செய்யவும். வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இப்படிச் செய்வதால், நகங்கள் நன்கு சுவாசிப்பதுடன் க்யூட்டிகிள்களும் மென்மையாக மாறும். நகங்கள் உடையாமல் வலுவாக இருப்பதற்கும் இந்த மசாஜ் உதவும்.

அடிக்கடி நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள், மசாஜ் மட்டுமல்லாமல், பேக் போட்டு பராமரிப்பதும் நல்லது. இதற்கு, இரண்டு டீஸ்பூன் முல்தானி மட்டி, 1/4 டீஸ்பூன் கடல் பாசியுடன் ரோஸ் வாட்டர் கலந்து, நகங்களின் மேல் அப்ளை செய்யவும். அரை மணி நேரம் கழித்து சுத்தமாகக் கழுவவும். இப்படிச் செய்வதால் நகங்கள் மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள சருமப் பகுதியும் ஆரோக்கியமாக இருக்கும்.

வெயிட் லாஸ் சாலட் - Weight Loss Salad

வெயிட் லாஸ் சாலட்  - Weight Loss Salad

இந்த சாலட்டில் நார்ச்சத்து, விட்டமின், தாதுக்கள், பொட்டாசியம் நிறைந்துள்ளன. இந்த சாலட் சாப்பிட்டால் உடல் பலவீனமாகாது. அதுபோல் உடல் எடையும் குறையும்.


     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

வெயிட் லாஸ் சாலட்
தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் - ½ கப்

 வெள்ளரி - 1
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 2
குடைமிளகாய் சிறியது - 1
முந்திரி - 15
இந்துப்பு - சிறிதளவு
மிளகுத் தூள் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு - 2

வெயிட் லாஸ் சாலட்

செய்முறை :

முட்டைகோஸ், வெள்ளரி, கேரட், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

15 முந்திரியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, அதில் 2 பூண்டு, சிறிது இந்துப்பு சேர்த்து நீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் விரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை போட்டு அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து, அதில் இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடைசியாக அரைத்த முந்திரி பேஷ்டை சாலட் மேல் டாப்பிங்காக ஊற்றிக் பரிமாறவும்.

அவ்வளவுதான் சுவையான வெயிட் லாஸ் சாலட் தயார்.