பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீர் பாதை தொற்று- Urinary-problem-Ladies

 பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீர் பாதை தொற்று- Urinary-problem-Ladies

பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீர் பாதை தொற்று- Urinary-problem-Ladies
 பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீர் பாதை தொற்று- Urinary-problem-Ladies

சிறிநீர்ப்பாதை தொற்று என்பது பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தை முதல் நூறு வயதானவர் வரை எல்லோருக்கும் வரும பொதுவான நோய். ஆனால் அதில் பெண்களே அதிகம் பாதிப்புள்ளாகிறார்கள்.

சிறுநீரகத்தொற்று அதிக எரிச்சலை தருவதுடன் பல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அதை சரியான முறையில் கண்டறிந்தால் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்கிறார் திருவண்ணாமலை மாவட்டம் மேல் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் ரூபியாபானு அவர் இது பற்றி கூறும் போது

சிறிநீர்ப்பாதை தொற்று என்பது பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தை முதல் நூறு வயதானவர் வரை எல்லோருக்கும் வரும பொதுவான நோய். ஆனால் அதில் பெண்களே அதிகம் பாதிப்புள்ளாகிறார்கள்.

சிறுநீரகத்தொற்று அதிக எரிச்சலை தருவதுடன் பல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அதை சரியான முறையில் கண்டறிந்தால் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்கிறார் திருவண்ணாமலை மாவட்டம் மேல் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் ரூபியாபானு அவர் இது பற்றி கூறும் போது

சிறிநீர்ப்பாதை தொற்று என்பது பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தை முதல் நூறு வயதானவர் வரை எல்லோருக்கும் வரும பொதுவான நோய். ஆனால் அதில் பெண்களே அதிகம் பாதிப்புள்ளாகிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் பெண் உறுப்பின் அமைப்பு. பெண்களின் சிறுநீர் வழி மிகவும் சிறிதாக இருப்பதால் நுண்ணுயிரிகள் சிறுநீர் பாதைக்குள் மிக எளிமையான சென்று விடும். இதனாலேயே சிறுநீர்த்தொற்று பெண்களை மிக எளிதாக தாக்குகிறது. ஈ-கோலை எனும் பாக்டீரியா தான் சிறுநீர் தொற்றை ஏற்படுத்துகிறது.

யாருக்கெல்லாம் ஏற்படும்?

* புதிதாக திருமணமாகி இல்லறத்தில் ஈடுபடும் பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை ஹனி சிஸ்டைட்டிஸ் என்பார்கள். கர்ப்பிணிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம்.

*நோய் எதிர்பு சக்தி குறையும் போது பாதிப்பு வரலாம்

* நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு சிறுநீர்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

*சுகாதாரமில்லாத பொது கழிப்பிடத்டித பயன்படுத்தும் போதும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

எப்படி தவிர்ப்பது?

நாம் பயன்படுத்தும் கழிப்பிடத்தையும் உடலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். சுகாதாரம் இல்லாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணியாக உள்ளது. இது தவிர பிறப்பிலேயே சிறுநீர்ப்பிரச்சனைகள், சிறுநீரக அடைப்பு போன்ற பாதிப்பு இருக்கும் பட்சத்தில் இந்த தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் சிறுநீர் வரியில் பாதிப்பு ஏற்பட்டு தொற்று ஏற்படலாம்.

அறிகுறிகள்

* சிறுநீர் கழிக்கும் பது எரிச்சல் அதிகமாக இருக்கும்

*சூடான சிறுநீர் செல்லும்

* சிறுநீர் குறைவாக அடிக்கடி கழிப்பது

* பெண்களுக்கு அடி வயிற்றில் வலி இருக்கும்.

*காய்ச்சல், குளிர் ஏற்படும்.

* சிறுநீர் கழிக்கு போது ரத்தம் வரலாம்.

எப்படி உறுதி செய்வது?

சிறுநீர் பரிசோதனை, யூரின் கல்ச்சர் போன்ற சோதனைகளின் மூலம் சிறுநீர் தொற்று இருப்பதை உறுதி செய்யலாம். இதை குணப்படுத்துவதற்கு மருத்துவரின் சரியான ஆலோசனையுடன் மருந்துகள் உட்கொண்டால் போதும். முறையில்லாமல் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு நேரும். கர்ப்பிணிக்பெண்களுக்கு எடை குறைவான குழந்தை பிறப்பு, குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

செய்ய வேண்டியவை..

* தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

*சிறுநீர் பாதையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

* பொது கழிப்பிடங்களை பயன்படுத்த நேர்ந்தால் சுகாதராத்தில் கவனம் தேவை.

* நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது கூடாது

* சுகாதாரமான பழக்க வழக்கங்களுடம் மேற்சொன்ன விஷயங்களை கடைபிடித்து வந்தால் சிறுநீர் தொற்றிலிருந்து நம்மை காத்து கொள்ளலாம்

#Urinaryinfection #Urinaryproblem #Kidney #WomenHealth #சிறுநீர் பிரச்சனை  #சிறுநீரகம்  #பெண்கள் உடல்நலம்

ஸ்ரீ பைரவர் 108 போற்றி - Bhairava-108-Potri

ஸ்ரீ பைரவர் 108 போற்றி - Bhairava-108-Potri



ஸ்ரீ பைரவர் 108 போற்றி - Bhairava-108-Potriஸ்ரீ பைரவர் 108 போற்றி - Bhairava-108-Potri
ஸ்ரீ பைரவர் 108 போற்றி - Bhairava-108-Potri


ஓம் பைரவனே போற்றி

ஓம் பயநாசகனே போற்றி

ஓம் அஷ்டரூபனே போற்றி

ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி

ஓம் அயன் குருவே போற்றி

ஓம் அறக்காவலனே போற்றி

ஓம் அகந்தையழிப்பவனே போற்றி

ஓம் அடங்காரின் அழிவே போற்றி

ஓம் அற்புதனே போற்றி

ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

ஓம் ஆனந்த பைரவனே போற்றி

ஓம் ஆலயக் காவலனே போற்றி

ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி

ஓம் உக்ரபைரவனே போற்றி

ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி

ஓம் உதிரங்குடித்தவனே போற்றி

ஓம் உன்மத்த பைரவனே போற்றி

ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி

ஓம் ஊழத்தருள்வோனே போற்றி

ஓம் எல்லைத்தேவனே போற்றி

ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி

ஓம் கபாலதாரியே போற்றி

ஓம் கங்காளமூர்த்தியே போற்றி

ஓம் கர்வபங்கனே போற்றி

ஓம் கல்பாந்த பைரவனே போற்றி

ஓம் கதாயுதனே போற்றி

ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி

ஓம் கருமேக நிறத்தனே போற்றி

ஓம் கட்வாங்கதாரியே போற்றி

ஓம் கனவைக்குலைப்போனே போற்றி

ஓம் கருணாமூர்த்தியே போற்றி

ஓம் கால பைரவனே போற்றி

ஓம் காபாலிகர்தேவனே போற்றி

ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

ஓம் காளாஷ்டமி நாதனே போற்றி

ஓம் காசிநாதனே போற்றி

ஓம் காவல் தெய்வமே போற்றி

ஓம் குரோத பைரவனே போற்றி

ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

ஓம் சண்டபைரவனே போற்றி

ஓம் சட்டைநாதனே போற்றி

ஓம் சம்ஹார பைரவனே போற்றி

ஓம் சம்ஹாரகால பைரவனே போற்றி

ஓம் சிவத்தோன்றலே போற்றி

ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி

ஓம் சிக்ஷகனே போற்றி

ஓம் சீகாழித்தேவனே போற்றி

ஓம் சுடர்சடையனே போற்றி

ஓம் சுதந்திர பைரவனே போற்றி

ஓம் சிவ அம்சனே போற்றி

ஓம் சுவேச்சா பைரவனே போற்றி

ஓம் சூலதாரியே போற்றி

ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி

ஓம் செம்மேனியனே போற்றி

ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி

ஓம் தனிச்சந்நிதியுளானே போற்றி

ஓம் தலங்களின் காவலனே போற்றி

ஓம் தீதழிப்பவனே போற்றி

ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி

ஓம் தெற்கு நோக்கனே போற்றி

ஓம் தைரியமளிப்பவனே போற்றி

ஓம் நவரஸரூபனே போற்றி

ஓம் நரசிம்மசாந்தனே போற்றி

ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

ஓம் நரகம் நீக்குபவனே போற்றி

ஓம் நாய் வாகனனே போற்றி

ஓம் நாடியருள்வோனே போற்றி

ஓம் நிமலனே போற்றி

ஓம் நிர்வாணனே போற்றி

ஓம் நிறைவளிப்பவனே போற்றி

ஓம் நின்றருள்வோனே போற்றி

ஓம் பயங்கர ஆயுதனே போற்றி

ஓம் பகையழிப்பவனே போற்றி

ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி

ஓம் பாபசக்ஷ்யனே போற்றி

ஓம் பாசக்குலைப்போனே போற்றி

ஓம் பால பைரவனே போற்றி

ஓம் பாம்பணியனே போற்றி

ஓம் பிரளயகாலனே போற்றி

ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி

ஓம் பூஷண பைரவனே போற்றி

ஓம் பூதப்ரேத நாதனே போற்றி

ஓம் பெரியவனே போற்றி

ஓம் பைராகியர் நாதனே போற்றி

ஓம் மல நாசகனே போற்றி

ஓம் மஹா பைரவனே போற்றி

ஓம் மணி ஞானனே போற்றி

ஓம் மகர குண்டலனே போற்றி

ஓம் மகோதரனே போற்றி

ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி

ஓம் முக்கண்ணனே போற்றி

ஓம் முக்தியருள்வோனே போற்றி

ஓம் முனீஸ்வரனே போற்றி

ஓம் மூலமூர்த்தியே போற்றி

ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி

ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி

ஓம் ருத்ரனே போற்றி

ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி

ஓம் வடுக பைரவனே போற்றி

ஓம் வடுகூர் நாதனே போற்றி

ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி

ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி

ஓம் வாரணாசி வேந்தே போற்றி

ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி

ஓம் விபீஷண பைரவனே போற்றி

ஓம் வீழாமல் காப்பவனே போற்றி


#108Potri | #Slokas | #bhairava | #108போற்றி |#பைரவர் | #ஸ்லோகம்