மசாலா சப்பாத்தி ரோல்

மசாலா சப்பாத்தி ரோல்
Potato-masala-chapathi-roll.
உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல்


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைகளுக்கு மதியம் பள்ளிக்கு கொடுத்தனுப்ப சுவையான வித்தியாசமான உணவு செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2

 சீரகம் - கால் டீஸ்பூன்
கோதுமை மாவு - 2 கப்
மஞ்சள் தூள் -  கால் சிட்டிகை,
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
கேரட் - 1
குடைமிளகாய் - 1
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
உருளைக்கிழங்கு - 2

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

கோதுமை மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இப்போது மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்க வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் போட்டு நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.

இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.

சுவையான உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் தயார்.

கோதுமை பக்கோடா

கோதுமை பக்கோடா
wheat-pakoda.
சத்தான ஸ்நாக்ஸ் கோதுமை பக்கோடா

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பல்வேறு வகையான பக்கோடா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்,

 கடலை மாவு - ஒரு கப்,
அரிசி மாவு - அரை கப்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 6,
இஞ்சி - சிறு துண்டு,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் சீவி, துருவிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு போட்டு நன்றாக கலந்த அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

சூப்பரான கோதுமை கோதுமை பக்கோடா ரெடி.

இரத்தம் கொடுப்பதும் - எடுப்பதும் எளிதல்ல

இரத்தம் கொடுப்பதும் - எடுப்பதும் எளிதல்ல
Blood-donation-is-not-easy.

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இரத்த தானம் செய்வீர். உயிர் காப்பீர் என்ற வாசகம் சந்து பொந்துகள் வரை பளிச்சிடுகிறது. இதில் சிறு கவனக்குறைவு ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இரத்தத்தை உறைய வைக்கும் இரத்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. இரத்த தானம் செய்வீர். உயிர் காப்பீர் என்ற வாசகம் சந்து பொந்துகள் வரை பளிச்சிடுகிறது. சிறு கவனகுறைவு ஏற்பட்டால் கூட அந்த இரத்தம் உயிரையும் எடுக்கும் என்பதற்கு எச்.ஐ.வி. தொற்று இரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்திய விவகாரம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது வயற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாக்க மருத்துவ உலகம் போராடுகிறது. இரத்ததானம் செய்த வாலிபரோ ஏற்கனவே 2016-லும் இரத்ததானம் செய்து இருக்கிறார். அப்போதே அவரது இரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்கி இருப்பதை கண்டறிந்து இருக்கிறார்கள். இதுபற்றி அவருக்கு ஆலோசனைகள் வழங்க ஊழியர்கள் தொடர்பு கொண்டதாகவும், அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.


நோய் தொற்று இருப்பது தெரியாமல் தற்போது அவரது அண்ணிக்கு இரத்தம் கொடுக்க வந்த போதும் அவரது இரத்தத்தை எடுத்து இருக்கிறார்கள். எச்.ஐ.வி. கிருமி இருப்பது தெரியாமலே அந்த இரத்தத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செலுத்தி இருக்கிறார்கள். இரத்தத்தை ஆய்வு செய்வதில் கவனக்குறைவு ஒரு பக்கம் இருந்தாலும், எச்.ஐ.வி. தாக்கியவர் என்று ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவரிடம் இரத்தம் எடுத்தது எப்படி?

சம்பந்தப்பட்ட வாலிபர் தனக்கு எச்.ஐ.வி. இருப்பதை அறிந்து நேரடியாக வந்து விபரத்தை சொல்லி தனது இரத்தத்தை யாருக்கும் செலுத்தி விடாதீர்கள் என்று சொல்லி இருக்காவிட்டால்...? இரத்தம் கொடுப்பதும், ஏற்றுவதும் வண்டிக்கு பெட்ரோல் போடுவதுபோல் ஒருவரது உடலில் இருந்து அப்படியே மற்றொருவர் உடலுக்கு செலுத்திவிட முடியாது.

உயிர்காக்கும் இரத்தம் எடுப்பது, சேமிப்பது, பகுப்பாய்வு செய்வது எல்லாம் அவ்வளவு சுலபமானதா என்று கேட்டால் இல்லவே இல்லை என்று அடித்து சொல்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறையினர். அரசோ, தனியாரோ இரத்த பரிசோதனை நிலையம், இரத்த வங்கி தொடங்க அனுமதி பெறுவது கூட சாதாரண விஷயமல்ல. அதற்கு பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன.

தகுதி பெற்ற மருத்துவர், செவிலியர், லேப் டெக்னிஷியன், நவீன ஆய்வு கருவிகள், பரிசோதனை கூடம், குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல வசதிகள் இருக்க வேண்டும். இந்த வசதிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவே முடியும். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் நேரடியாக ஆய்வு செய்து திருப்தி ஏற்பட்டால் மருந்து கட்டுப்பாட்டு கழகத்துக்கு பரிந்துரைப்பார்கள்.

இதையடுத்து மருந்து கட்டுப்பாட்டு கழகம் சோதனையை தொடங்கும். அவர்களும் முழு திருப்தி அடைந்தால் மத்திய அரசுக்கு அனுப்புவார்கள். இதையடுத்து மத்திய அரசு துறையும் ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகே லைசென்சு வழங்கப்படும். அறையின் அளவு குறைந்தாலோ அல்லது ஏ.சி.யின் அளவு குறைந்தால்கூட அனுமதி கொடுக்க மாட்டார்கள். அந்த அளவு நுணுக்கமாகவும், கண்டிப்பாகவும் விதிமுறைகள் பின்பற்றப்படும்.

சரி, ஆய்வகம், இரத்த வங்கி தொடங்கியாச்சு. இஷ்டம் போல் இரத்தம் எடுத்துவிட முடியுமா? அதற்கும் கட்டுப்பாடுகள் அதிகம்! இரத்தம் கொடுப்பதால் எந்த ஆபத்தும் வராது. அப்படியிருந்தும் இரத்தம் கொடுக்க பலர் முன்வருவதில்லை. எனவே இரத்த தானம் செய்ய வருபவர்களை வரவேற்று எல்லோரிடமும் 350 மி.லி. இரத்தம் எடுத்து விடுவார்கள். இரத்தம் எடுக்கும் போது இரத்தத்தின் எச்.பி. அளவு மற்றும் இரத்ததானம் செய்பவரின் உடல் எடையை மட்டும் பார்த்து எடுப்பார்கள்.

பின்னர் அந்த இரத்தத்தின் மாதிரிகள் ஆய்வு கூடத்திற்கு கொண்டு சென்று அதில் எச்.ஐ.வி., மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய், எச்.பி.வி. ஆகிய 5 நோய் தொற்றுக்கான அறிகுறி இருக்கிறதா? என்பது பகுப்பாய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகு மருத்துவரின் ஒப்புதல் பெறவேண்டும். அதன் பிறகு தான் அந்த இரத்தபை இரத்த வங்கியில் சேமிப்பு செய்யப்படும். இப்படித்தான் ஒவ்வொரு பை இரத்தமும் தீவிர பரிசோதனைக்கு பிறகே ஸ்டோரேஜ் செய்ய வேண்டும்.



இந்த பரிசோதனையின் போது ஏதாவது இரத்தத்தில் எச்.ஐ.வி. நோய் தொற்று இருப்பது தெரிய வந்தால் உடனே அந்த இரத்தம் அழிக்கப்படும். அதோடு அந்த இரத்தத்தை கொடுத்தவர் பற்றிய விபரம் நம்பிக்கை மையத்துக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் அந்த நபரை உடனே அணுக வேண்டும். அவரை வரவழைத்து நம்பிக்கை மையத்தினர் அவரிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்வார்கள். அது மிகவும் துல்லியமான பரிசோதனை. அந்த பரிசோதனையில் தான் எச்.ஐ.வி. இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்.

உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு கவுன்சிலிங், விழிப்புணர்வு, கூட்டு மருந்து சிகிச்சை ஆகியவை வழங்கப்படுவதோடு அவர் நம்பிக்கை மையத்தின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சில நேரங்களில் நம்பிக்கை மையத்தின் பரிசோதனையில் எச்.ஐ.வி. இல்லை என்றும் வருவதுண்டு. பொதுவாக சேமிக்கப்படும் இரத்தத்தை விட அழிக்கப்படும் இரத்தம் அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.

100 பேரிடம் இரத்தம் எடுத்தால் குறைந்தது 10 பேருக்காவது எச்.ஐ.வி. இருப்பதற்கான அறிகுறி தென்படுவதுண்டு. ஆனால் நம்பிக்கை மையத்தின் துல்லிய ஆய்வில் அதில் பலருக்கு இல்லாமல் கூட இருக்கும் என்கிறார்கள். இரத்தம் 36 நாட்கள் வரை மட்டுமே கெடாமல் இருக்கும். அதற்குள் வரிசைப்படி இரத்தத்தை பயன்படுத்துவார்கள்.

இரத்த வங்கியில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதற்காக இரத்தம் தேவைப்படுவோருக்கு உடனே செலுத்திவிட முடியாது. இரத்தம் தேவைப்படுபவரின் இரத்தமும் செலுத்த வேண்டிய இரத்தமும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இரு இரத்தமும் ஒரே பிரிவு இரத்தம் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானால் மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இரத்த சோதனை மற்றும் இரத்த வங்கிகள் கண்காணிப்புக்காக நோடல் அதிகாரியாக ஒரு மருத்துவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வளவும் இருந்தும் தான் இப்படி....! எப்படி இருக்கு?

அடையாளம் காணவேண்டும்

ஒருவருக்கு இரத்தத்தில் எச்.ஐ.வி. இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நம்பிக்கை மையத்தினர் தொடர்பு கொண்டு அழைக்கிறார்கள். அதில் சிலர் சிகிச்சை பெறாமல் எங்காவது சென்று விடுவதுண்டு. அப்படிப்பட்டவர்களை கண்டு பிடிப்பதும், அவர்களால் எய்ட்ஸ் பரவுவதை தடுக்கவும் வழியில்லை என்பது பலரது கருத்து.

இதை தடுக்க குருதி கொடையாளர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவது பற்றியும் பரிசீலித்து வருகிறார்கள். இந்த முறையை அமல்படுத்தினால் அவர்கள் இரத்ததானம் செய்வதையாவது தடுக்கலாம் என்கிறார்கள்.

கணவன் - மனைவி உறவுக்கு உலை வைக்கும் ஈகோ

கணவன் - மனைவி உறவுக்கு உலை வைக்கும் ஈகோ
Ego-affect-husband-and-wife-relationship.

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.

பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர்களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.

எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் - மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.

 மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் - மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.

கடந்த தலைமுறையில் மனைவியைவிடக் கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற்றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்பதால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக்கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடையே ஈகோ எடுபடுவதில்லை.

கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.

பரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.

தெப்பக்குள மாரியம்மன்

தெப்பக்குள மாரியம்மன்
theppa-kulam-mariamman

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மதுரையில் திருமலைநாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட தெப்பக்குளத்தின் அருகில் வீற்றிருக்கும் மாரியம்மன் தான் ‘தெப்பக்குள மாரியம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.

மதுரையில் திருமலைநாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தெப்பக்குளம் பிரசித்தி பெற்றது. இந்த குளத்தைத் தோண்டும் போது கிடைத்த விநாயகர் சிலைதான், முக்குறுணி விநாயகர் என்ற பெயரில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த தெப்பக்குளத்தின் அருகில் வீற்றிருக்கும் மாரியம்மன் தான் ‘தெப்பக்குள மாரியம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.

இந்த அம்மன் சிரித்த முகத்துடன், கையில்பாசம், அங்குசம் ஏந்தி, இடது காலை தொடங்க விட்டு, வலது காலை மடக்கி அமர்ந்திருந்துள்ளாள். தவறு செய்து விட்டு, ‘தெரியாமல் செய்து விட்டேன் மன்னித்து விடு’ என்று கேட்டால், இந்த அன்னை மன்னிப்பது இல்லையாம். செய்த தவறுக்கு இந்த அம்மனிடம் கட்டாயம் தண்டனை உண்டு என்கிறார்கள்.

மாரியம்மன் வழிபாடு

மாரியம்மன் வழிபாடு

சிறப்பு வாய்ந்த மாரியம்மன் வழிபாடு


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தமிழகத்தில் அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிறப்பு வாய்ந்த சில மாரியம்மன் கோவில்களை அறிந்து கொள்ளலாம்.

மலேசியா மாரியம்மன்

மலேசியாவில் சிரம்பான் நகரில் புத்திதிம்போ என்ற இடத்தில் 127 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் காலையில் தரிசனம் செய்யும் போது, மகா சக்தியாக அருள்காட்சி தரும் மாரியம்மன், மதிய வேளையில் கலைவாணியாகவும், இரவு பூஜையின் போது திருமகள் எனப்படும் லட்சுமி தேவியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.


கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல்லில் பிரசித்திப் பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் இருக்கிறது. இத்தலத்தில் உள்ள மாரியம்மன், மற்ற தெய்வங்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக தரிசனம் தருகிறாள். மாரியம்மன் சிலையின் அடிப்பகுதி பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதையுண்டு இருக்கிறது. இங்குள்ள பழமையான கோட்டை, இந்த மாரியம்மனுக்கு வேலியாக அமைந்திருப்பதால், ‘கோட்டை மாரியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

ராஜ மாரியம்மன்

கோயம்புத்தூர் ஒள்ளிப்பாளையம் என்ற பகுதியில் ராஜ மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் முகப்பில் தலை வெட்டப்பட்ட விநாயகர் தரிசனம் தருகிறார். முன்காலத்தில் இந்தப் பகுதியில் இருந்த திருடர்களின் அட்டூழியம் குறித்து தன் தாய் மகாமாரியிடம், விநாயகர் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் கொண்ட திருடர்கள், அவரது தலையை வெட்டி வீழ்த்தினர். விநாயகரின் தலை வெட்டப்பட்டதால் கோபம் கொண்ட மாரியம்மன், திருடர்களை சபித்து கல்லாக மாற்றியதாக ஆலய வரலாறு சொல்கிறது.

சக்தி மந்திரம் - துன்பம் போக்கும்

 சக்தி மந்திரம் - துன்பம் போக்கும்
shakti-mantra.
துன்பம் போக்கும் சக்தி மந்திரம்


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சக்தி தேவிக்கு உகந்த இந்த மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் துன்பம் நீங்கும். வறுமை ஒழியும்.

அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி
மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி
நிரந்தரி நீலி கால பைரவி

 திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி
சரணம் சரணம் சரணம் தேவி
எனைக் காத்தருள்வாய மஹாசக்தி

இம்மந்திரம் ஐந்து முறை படிக்க வேண்டும்! அதன் பின்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் படிக்க வேண்டும்!

காரணமும் தனுவு  நினைக்கெனத் தந்தேன்
காளி நீ காத்தருள் செய்யே!

மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்;
மாரவெம் பேசயினை அஞ்சேன்;
இரணமும் சுகமும் பழியு நற்புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்!

சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்!
தாயெனைக் காத்தருள் கடனே!

தவத்தினை எளிதாப் புரிந்தனள்; யோகத்
தனி நிலை ஒளியெனப் புரிந்தாள்;

சிவத்தினை எளிதாப் புரிந்தனள்; மூட்ச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்;

பவத்தினை வெறுப்ப அருளினாள்; நாளும்
பான்மைகொ ளவள்மயம் புரிந்தாள்;

அவத்தினைக் களைந்தாள்; அறிவென விளைந்தாள்;
அருந்தவமா வாழ்கவிங் கவளே!

ஓம்  ஓம்  ஓம்!

24 ஏகாதசிகளின் விரத பலன்கள்

24 ஏகாதசிகளின் விரத பலன்கள்
24-ekadasi-vratham-benefits

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஏகாதசிகள் ஒவ்வொன்றின் சிறப்பையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் இரண்டு ஏகாதசிகளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

ஏகாதசிகள் ஒவ்வொன்றின் சிறப்பையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் வரும். கமலா என்ற ஏகாதசி அதிகமாக வரும். இதையும் சேர்த்து மொத்தம் இருபத்தைந்தாகும்.

சித்திரை மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘பாப மோசனிகா’ என்று பெயர் கொண்டது. இதில் விரதம் இருப்பவர்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள். இதே மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்குக் ‘காமதா’ என்று பெயராகும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் கணவனின் பாவங்கள் நீங்கப் பெறுவார்கள்.

 வைகாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘வரூதிதீ’ என்று பெயராகும். இந்த நாளில் விரதம் இருந்தால் எந்த விதமான குறையுமின்றி வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்புடன் வாழலாம்.

கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘மோகினி’ என்று பெயரைக் கொண்டது. இந்த ஏகாதசி விரதம் மோகத்தை அகற்றி முக்தியைத் தருவதாகும்.
ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘அபரா’ என்ற பெயரைக் கொண்டது. இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் பாவங்கள் அனைத்தும் விலகும்.

சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘நிர்ஜலா’ என்பது பெயராகும். துன்பங்கள் அனைத்தையும் போக்கிவிடும் ஆற்றல் கொண்டது. ஆடி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘யோகிநீ’ என்ற பெயரைக் கொண்டது. இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் தொழுநோய் போன்ற கொடிய நோய்கள் குணமாகும்.
இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘சயிநீ’ என்பது பெயராகும். அகங்காஇரத்தையும், ஆணவத்தையும் அழித்து ஆனந்தத்தை அளிப்பதாகும்.
ஆவணி கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘காமிகா’ என்று பெயர். இந்த நாளில் துளசித்தளத்தால் இறைவனை அர்ச்சனை செய்து வந்தால் மோட்சம் கிடைக்கும்.

இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘புத்ரதா’ என்று பெயர். புத்திர பாக்கியத்தை விரும்புபவர்கள் இந்த நாளில் விரதம் மேற்கொள்ள வேண்டும்.
புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘அஜா’ என்று பெயர். உயர்ந்த செல்வ வளத்தையும், சிறப்பையும் தரும். இதே மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘பத்மநாபா’ என்ற பெயரைக் கொண்டதாகும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் செல்வச் செழிப்பும், நாட்டு வளமும் பெருகும்.

ஐப்பசி கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘இந்திரா’ அன்று விரதம் இருந்து வந்தால் அவர்களின் முன்னோர் நற்கதியை அடைவார்கள். இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘பாபாங்குசா’ என்ற பெயரைக் கொண்டது. எல்லா நன்மைகளும்-செல்வ வளம் கல்வி வளம் அனைத்தும் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘ரமா’ என்று பெயராகும். இந்த ஏகாதசியன்று முறைப்படி விரதம் இருப்பவர்கள் நிலையான இன்பங் களை பெறுவார்கள்.

கார்த்திகை மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘ப்ரபோதினி’ என்ற பெயரைக் கொண்டதாகும். இந்த ஏகாதசி விரதம் மேற் கொள்பவர்கள் மேலு லகத்தில் நற்கதியை அடைவார்கள்.

மார்கழி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘உற்பத்தி ஏகாதசி’ என்று பெயராகும். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் விண் ணுலகில் நற்கதியை அடைவார்கள்.

இதே மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர். மோட்சம் அடைவதற்கு இந்த வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருக்க வேண்டும். இந்த நாளில் தான் எல்லாரும் விரதமிருந்து வருகிறார்கள். வைகுண்ட ஏகாதசி எல்லா வைணவ ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. சிறப்பாக, ஸ்ரீரங்கம், திருப்பதி மற்றும் சென்னை பார்த்தசாரதி ஆலயங்களில் வெகு நன்றாக கொண்டாடுவதுண்டு. ஏராளமான பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்ய ஆவலுடன் திரண்டு வருகிறார்கள்.

தை மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை ‘பைலா’ என்று அழைப்பார்கள். முறைப்படி விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் வடுதலை பெறுவார்கள்.

இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘புத்ரதா’ என்பது பெயராகும். இந்த ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். இதுவேதான் ‘பீஷ்ம ஏகாதசி’ என்று கூறப்படுவது. அதாவது பாரத யுத்தத்தில் ‘சரசயனத்தில்’ படுத்திருக்கும் பீஷ்ம பிதாமகர் சுக்பை ஏகாதசி அன்று தன் உயிரை உடலை விட்டு வேர்பட்ட ஏகாதசியாகும்.

மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘ஷட்திலா’ என்று பெயரைக் கொண்டதாகும். இந்த விரதத்தை பெரும்பாலும் அனேகர் மேற்கொள்வார்கள். வறுமையற்ற நிலையைத் தருவதற்கு இந்த ஷட்திலா என்ற ஏகாதசி உதவுகிறது. எனவே, இதைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

இதே மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர் ‘ஜயா’ என்பதாகும். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெறுவதற்கும் எதிரிகளை முறியடிப்பதற்கும் இந்த ஏகாதசி விரதம் துணை செய்யும்.

பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘விஜயா’ என்ற பெயராகும். துன்பம் எவ்வளவு தான் ஏற்பட்டாலும் அவைகளை முறியடித்து வாழ்வில் வெற்றி பெறுவதற்கு இந்த விரதத்தைக் கொள்ள வேண்டும்.

சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘ஆமலகீ’ என்ற பெயரைக் கொண்டது. இந்த விரதம் மேற்கொள்பவர்கள் பெரிய பெரிய புண்ணியங்களைப் பெறுவார்கள்.

வக்கிரகாளியின் தனி சிறப்பு

வக்கிரகாளியின் தனி சிறப்பு
Thiruvakkarai-Vakrakaliamman.


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


பொதுவாக காளிகோவில் ஊரின் எல்லையில் தான் இருக்கும். ஆனால் திருவக்கரை வக்கிரகாளி ஊரின் நடுவே ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே வடக்கு நோக்கி அமைந்துள்ளது.

பொதுவாக காளிகோவில் ஊரின் எல்லையில் தான் இருக்கும். ஆனால் திருவக்கரை வக்கிரகாளி ஊரின் நடுவே ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே வடக்கு நோக்கி அமைந்துள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கத்தக்கது. உலகை காத்து ரட்சிக்கும் தாய் இங்கு தீ ஜுவாலையை பின்னணியாகக் கொண்டு, மண்டை ஒட்டு கிரீடத்துடன் தலையை சற்று இடதுபுறமாக சாய்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்புரிகின்றாள். வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம் காணப்படுகிறது. கோரைப் பற்களுடன் சினம் கக்கும் பெரிய உருண்டை விழிகளால் பூமியை நோக்குகின்றாள்.

அம்மன் வலது காலைச் சற்றே தூக்கி மடித்து அமர்ந்துள்ள பீடத்தில் ஊன்றிய படியும், இடது காலை தரையில் ஊன்றியபடியும் உடலை சற்று வலப்புறம் திருப்பிய நிலையில் அமர்ந் துள்ள காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத கண் கொள்ளாக் காட்சி ஆகும். அன்னையின் இடது பாதத்திற்கு கீழே ஆதி சங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். அன்னையின் மார்பிற்கு குறுக்கே மண்டை ஓட்டு மாலை காணப்படுகிறது. தர்மத்திற்கு எதிராக அக்கிரமம் செய்பவர்களை அழித்து அவர்களது மண்டை ஓடுகளை சேர்த்து மாலையாக அணிந்துள்ளாள். அக்கிரமங்களை அழித்து தர்மத்தின் வழி நடப்பவர் களைக் காப்பவள் அன்னை என்று இதன் மூலம் புலனாகின்றது.


காளியம்மனின் வலப்புறம் உள்ள நான்கு திருக்கரங்களிலும் மேலிருந்து முறையே பாசம், சக்கரம், வாள் மற்றும் கட்டாரி ஆகியவற்றை ஏந்தி காட்சித் தருகின்றாள். அதேபோல இடப்புறத்தில் மேலிருந்து முறையே உடுக்கை வைத்திருக்கும் பாவனையுடன் ஒரு திருக்கரம், அடுத்து கேடயம் மற்றும் கபாலம் ஏந்தியிருக்கும் இரு திருக்கரங்கள் மற்றும் இறுதியாக இடதுகாலை ஒட்டிக் கை விரல்களை லாவகமாக மடக்கி ஆள்காட்டி விரலால் அம்மன் தனது இடது பாதத்தைச் சுட்டிக்காட்டும் பாவனையில் அமைந்த திருக்கரம் என நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகின்றாள்.

வக்கிரகாளியம்மனின் இடது திருக்கரத்தின் ஆட்காட்டி விரல் அவளது இடது திருவடியை சுட்டிக்காட்டுவதுப் போல அமைந்ததிருக்கோலம் நமக்கு ‘சரணாகதி’ தத்துவத்தை உணர்த்துகிறது. அவளது திருவடியே கதி என்று சரணடைந்த வர்கள் வீடுபேறு அடைவது நிச்சயம் என்ற தத்துவத்தையே இது உணர்த்துகிறது. ஆகவே அம்மனின் முகதரிசனம் கண்ட பிறகு இப்பாத தரிசனம் செய்வது விசேஷமாக கூறப்படுகின்றது.

அருள்மிகு வக்கிரகாளியம்மன் இத்தனை ஆயுதங்களை ஏந்தியிருந்தாலும், கோரைப்பற்கள் கொண்டு, உருண்டை விழிகளுடன் மண்டை ஓட்டு மாலை அணிந்து வித்தியாசமான நிலையில் வக்கிரமாக அமர்ந்திருந்தாலும், நம் கண்களுக்கு சாந்த சொரூபியாகவே காட்சியளிக்கின்றாள். இன்னும் சந்தன காப்பு அலங்காரத்தில் அன்னை நம் கண்களுக்கு குளிர்ச்சியாக காட்சி கொடுத்து அருள்பாலிக்கின்றாள்.

தஞ்சை நிசும்பசூதனி, திருநல்லூர்காளி, ஆலம்பாக்கத்து அம்மன், பட்டீஸ்வரம் துர்க்கை, தில்லைகாளி, திண்டிவனம் கிடங்கல் கோட்டை கொற்றவை போன்ற திருவக்கரை காளியும், பக்தர்களுக்கு அருள் வழங்குவதில் தனக்கென்று தனிசிறப்பு பெற்று விளங்குகின்றாள். இச்சன்னதியில் சப்தமார்கள் உள்ளனர். அவர்கள் வராகி, இந்திராணி, கவுமாரி, வைஷ்ணவி, பிராமணி, துன்முகி, சாமுண்டி முதலானோர் ஆவர்.

இவர்களில் சாமுண்டிக்குப் பதிலாக அன்னை ஆதிபராசக்தியே காளியாக உருவெடுத்து பக்தர்களுக்கு இங்கு அருள்பாலிக்கின்றாள். இச்சிற்பங்கள் பல்லவர் காலக் கலைத்திறனைப் பிரதிபலிக்கின்றன. காளி சன்னதி வலதுபுறம் யோகேஸ்வர லிங்கமும், இடதுபுறம் வலம்புரி கணபதியும் இவற்றில் வலம்புரி கணபதி அபூர்வமானதாகும். ஏனென்றால் 108 சிவத்தலங்களுக்கு ஒன்று என்ற முறையில் தான் வலம்புரி கணபதியை பிரதிஷ்டை செய்வது மரபு. அதன்படி இக் கோவிலில் உள்ள வலம்புரி கணபதியை தரிசித்தால் 108 சிவத்தலங்களில் உள்ள விநாயகரையும் தரிசித்த பேறு நமக்குக் கிட்டும். காளிக்கோவில் முன்புறம் பக்கத்துக்கு இரண்டாக நான்கு துவார பாலிகைகள் சிலை உள்ளன. இவர்களின் வரலாறு நமக்கு காளியின் கருணையை எடுத்துக் காட்டுகிறது.

இந்த துவாரபாலிகைகள் நால்வரும் இடையர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது குலத்தொழிலான பால், தயிர் விற்பனை செய்து வந்தனர். அவ்வாறு விற்பனை செய்யும்போது பாலில் அதிக அளவு நீர் ஊற்றி மக்களை ஏமாற்றி வந்தனர். இதனை அறிந்த மன்னன் அந்த நால்வரையும் சிகை நீக்கி சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டான்.

அதன்படி அவர்களுக்கு மொட்டை அடித்து சிரச்சேதம் செய்யும் தருவாயில், அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து காளியை நோக்கி கதறி அழுதனர். அம்பாள் அவர்கள் முன் பிரசன்னமாகி அவர்களை மன்னித்து அருள் வழங்கித் தன்னிடமே துவாரபாலிகைகளாக வைத்துக் கொண்டாள் என்பது வரலாறு. தன் தவறை மனதால் உணர்ந்து, வருந்தி அவளிடம் தஞ்சம் அடைந்தவர்களுக்கு அவளது அருளும், கருணையும் நிச்சயம் உண்டு என்பதற்கு இந்த துவாரபாலிகைகளின் வரலாறே ஒரு பெரிய சான்றாகும்.

இந்த அண்டசராசரத்தில் சுழன்று கொண்டு இருக்கிற ஒன்பது கிரகங்களுக்கும், ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகு, கேது, இரண்டிற்கும் அதிதேவதை காளி. எனவே இக்கோவிலை வலம் வர நினைப்பவர்கள் வலது பக்கமாக ஐந்து முறையும், இடதுபக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.

காளி முன்பு பொய் சொல்ல முடியாது

இந்த காளியின் சன்னதியின் முன் ஊர் மக்கள் தங்களுக்குள் ஏதாவது வழக்கு மூண்டால் கூடிப்பேசி தீர்த்துக் கொள்வார்கள். காளி திருஉருவத்தின் முன் பொய் கூற யாருக்கும் தைரியம் வராது என்பது பார்த்தால் தெரியும்.

K Karthik Raja Share Market Training - How to Choose a stock

K Karthik Raja Share Market Training - How to Choose a stock

                தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                         Click Here : Register for Free Training

K KARTHIK RAJA 


K Karthik Raja  - How to Choose a stock
             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555


தமிழ்நாட்டில் சிறப்பு மிகுந்த சிவாலயங்கள்

தமிழ்நாட்டில் சிறப்பு மிகுந்த சிவாலயங்கள்



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் அவற்றில் பாடல்பெற்ற சிவஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. அவற்றுள் சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில் பாடல்பெற்ற சிவஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு லிங்கங்களை மூலவராக கொண்டது என்பது சிறப்புக்குரியது. சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்

காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் முதல் தலமான இந்த ஆலயத்தில் காமாட்சி அம்மன் பூசித்த மணல், லிங்கமே மூலவராக இருக்கிறது. அன்னையின் தவத்தை சோதிக்க விரும்பிய இறைவன், மணல் லிங்கம் செய்து வழிபட்டு வந்த இடத்தில் வெள்ளத்தை உருவாக்கினார். வெள்ளத்தில் லிங்கம் அடித்துச் சென்று விடாமல் இருக்க அம்மன், லிங்கத்தை இரு கைகளாலும் தழுவிக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இப்போதும் இந்த லிங்கத்தில் அன்னை இறுக தழுவிய கைத் தடம் இருப்பதைக் காணலாம். இங்குள்ள ஒற்றை மாமரம் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தில் இருந்து நான்கு வகையாக (வேதங்கள்) சுவை கொண்ட கனிகள் கிடைக்கின்றன.

பாஸ்கரேஸ்வரர் கோவில்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருக்கிறது பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில். சிவபெருமானின் சன்னிதிக்கு எதிரில் நின்று சூரிய பகவான் தரிசனம் செய்யும் கோலத்தை, இந்த ஆலயத்தைத் தவிர வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள். இந்த ஆலயம் பிதுர் தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்கள், சிம்ம லக்னம், சிம்ம ராசி, சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள், வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இங்குள்ள சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் நீண்டநாள் நோய் நீங்குமாம். இந்த ஆலயத்தில் சஷ்டி பூர்த்தி செய்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

புஷ்பவனேஸ்வரர் ஆலயம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது, புஷ்பவனேஸ்வரர் கோவில். இத்தல இறைவன் புஷ்பவனேஸ்வரர், புவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசி நகரை விடவும், 16 மடங்கு புண்ணியம் தரும் தலமாக இது போற்றப்படுகிறது. இங்குள்ள வைகை ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து, மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவருக்கு எதிராக உள்ள நந்தி சற்று விலகியிருப்பது தனிச் சிறப்பாகும். திருமணத் தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, இத்தல இறைவனை வழிபடலாம். சரியாக பேச்சு வராதவர்களுக்காகவும், கலைகளில் சிறந்து விளங்கவும், ஆயுள் விருத்திக்காகவும் இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

சதுரகிரி மலைக்கோவில்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோவில் தான், சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில் இருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. பழனி மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும், நவபாஷண முருகனின் சிலையை, சதுரகிரி மலையில் தங்கியிருந்த காலத்தில் தான் போகர் சித்தர் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இந்த மலை சித்தர்கள் பலரும் உலவும் புண்ணிய பூமியாக திகழ்கிறது. இங்குள்ள மலை அருவி நீரும், மூலிகைகளும் நோய்களை தீர்க்கவல்ல அருமருந்துகள்.

கும்பேஸ்வரர் திருத்தலம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது கும்பேஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், கீழே பருத்தும், மேல செல்லச் செல்ல ஊசி போன்ற வடிவிலும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் கல் நாதஸ்வரம் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா இங்கு நடைபெறும் விழாக்களில் பிரசித்திப் பெற்றதாகும். புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், குபேர வாழ்வு வேண்டுபவர்கள், இத்தலத்தில் அருள்பாலிக்கும் மங்களநாயகி அம்மனுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும்.

சோசமேஸ்வரர் திருக்கோவில்

கும்பகோணத்தில் இருந்து உடையாளூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் கீழ்ப்பழையறை என்ற ஊர் இருக்கிறது. இங்கு சோமகலாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோழ மன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய திருத்தலம் இதுவாகும். வடதளியில் மற்றொரு மதத்தவரால் மறைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், உண்ணா நோன்பிருந்து மீட்ட சிறப்புக்குரிய திருத்தலம். மங்கையர்கரசியார், அமர்நீதி நாயனார் ஆகியோர் சிவனடியார்களுக்கு அருள்பணி புரிந்த தலம் இது. இந்த ஆலய இறைவனை, சோமன் என்று அழைக்கப்படும் சந்திரனும், குரு பகவானும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.

திருமேனிநாதர் ஆலயம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ளது திருமேனிநாதர் திருக்கோவில். இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்வதால், இந்த ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொள்வது சிறப்புக்குரிய விஷயமாகும். மேலும் திருமண வரம் கிடைக்கவும் இத்தல இறைவனை வழிபடலாம். பிரளய காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தை தடுத்த இடம். இங்கு சிவபெருமானே, ‘கயிலாயத்தை விட சிறந்த இடம் இது’ என்று கருதி அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவராத்திரி அன்று வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட்டால், அனைத்து தலங்களிலும் உள்ள சிவபெருமானை ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்

நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் காசிக்கு நிகரான தலங்கள் ஆறு இருப்பதாகவும், அதில் ஒன்று இந்த ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் 1008 நடனங்களையும் ஆடிய திருத்தலம் இது என்பதால், ‘ஆதி சிதம்பரம்’ என்றும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. சிவபெருமானின் 64 வடிவங்களில் 43-வது வடிவம் அகோரமூர்த்தியாகும். இந்த ஆலயத்தின் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. 21 தலைமுறைக்கான சாபத்தை நீக்கும் வல்லமை இத்தல இறைவனுக்கு உண்டு. இங்குள்ள புதன் பகவானை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும்.

ஓட்ஸ் பால் - உடல் எடையை குறைக்கும்

ஓட்ஸ் பால் - உடல் எடையை குறைக்கும்
Body-weight-reduces-Oats-milk.


             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை உணவுடன் ஓட்ஸ் பால் பருகி வரலாம்.

வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். ஒரு கப் ஓட்ஸ் பாலில் 35 சதவீதம் கால்சியம், 25 சதவீதம் வைட்டமின் டி சத்து நிறைந்திருக்கிறது. பசும் பாலை விட இதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.

கலோரியும் குறைவான அளவில்தான் உள்ளது. பசும் பாலை விட இதில் கால்சியமும் அதிகம் கலந்திருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை உணவுடன் ஓட்ஸ் பால் பருகி வரலாம். மற்ற பாலை விட இதில் நார்ச்சத்தும் அதிகம் நிறைந்திருக்கிறது. பசியை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.


ஓட்ஸ் பால் தயாரிப்பதும் எளிமையானது. ஒரு கப் ஓட்ஸை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் மூன்று கப் தண்ணீர், கல் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். ஓட்ஸ், தண்ணீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இறுதியில் துணியில் வடிகட்டி பருகலாம். இந்த ஓட்ஸ் பாலை 5 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஓட்ஸ் பாலுடன் தேன் கலந்தும் பருகலாம்.

ருத்ர முத்திரை(Rudra-Mudra)-கழுத்து - முதுகு - இடுப்பு - மார்பக வலியை குறைக்கும்

ருத்ர முத்திரை(Rudra-Mudra)-கழுத்து - முதுகு - இடுப்பு - மார்பக வலியை குறைக்கும்
Rudra-Mudra
கழுத்து, முதுகு, இடுப்பு, மார்பக வலியை குறைக்கும் ருத்ர முத்திரை



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

யோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை. வயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம்.

செய்முறை :


கட்டை விரல், ஆள்காட்டி விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.

நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள் :

சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும்.

தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும். மாணவர்களை அவசியம் செய்யச் சொல்லலாம்.

பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும். ரத்த அழுத்தப் பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகளைச் சீர்செய்யும்.

உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் ஒன்றான, மணிப்பூரகச் சக்கரத்தைத் தூண்டுகிறது. இதனால், உடலில் ஏற்பட்ட சமநிலையின்மை குணமாகும்.

சிலர், ஒரு பக்கமாக சாய்ந்து நடப்பர், வலது பக்கம் மட்டும் நன்றாகக் கை வரும், இடது பக்கம் வராது. இதுபோன்ற  சமநிலைத் தன்மை இல்லாதவர்களுக்கு, இந்த முத்திரை நல்ல பலனைத் தரும்.

மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.

ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

காலில் உள்ள ரத்த நாளங்கள் சுருண்டுகொள்ளும் வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கும். ஆண்களுக்கு விதைப்பையிலும், விரையிலும்  உள்ள வெரிகோஸிட்டி பிரச்னை சரியாகும்.

வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம் (Parkinson), அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற்றம் காணலாம்.

கருப்பு சருமம் - அழகானது - ஆரோக்கியமானது.

கருப்பு சருமம் - அழகானது - ஆரோக்கியமானது.
Black-skin-is-beauty-and-healthy.



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கருப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கருப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.

இன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். கருப்பாக இருந்தாலும், "களை’யாக இருப்பவர்கள் பலர் உண்டு. விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கருப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.

* பொதுவாக கருப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகப்பருவால் அவதிப்படுவதை, கண்கூடாக பார்க்கலாம்.


* கருப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கும், உடல்வாகிற்கும் பொருத்தமான ஆடை, அலங்காரம் செய்து கொண்டால், அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

* வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் கருப்பானவர்களை, மேலும் அழகாகக் காட்டும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் சிவப்பானவர்களை விட, கருப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.

* சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. வாரத்தில் ஒரு நாளாவது, சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி, ஊற விட்டு, கழுவி வந்தால் இயற்கை மற்றும் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.

* கருப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை. நீங்கள் கருப்பான தேகம் கொண்டவர் என்றால், அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு இருந்தால், இன்றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு! 

முளைக்கீரை சப்பாத்தி

முளைக்கீரை சப்பாத்தி
Mulai-keerai-chapathi.
ஆரோக்கிய சமையல் முளைக்கீரை சப்பாத்தி



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கீரைகளில் பெரும் பகுதி நீர்ச்சத்து இருக்கும். இன்று முளைக்கீரையை சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முளைக்கீரை  - 1 கட்டு

 இஞ்சி - 1/4 அங்குலம்
எள், ஓமம் - தலா அரை டீஸ்பூன்
கோதுமை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முளைக்கீரையை சுத்தம் செய்து மண் போக அலம்பி பொடியாக நறுக்கவும்.

பச்சை மிளகாய், இஞ்சியை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

கோதுமை மாவில் நறுக்கிய கீரை, அரைத்த விழுது, உப்பு, எள், ஒமம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிரைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை ஈரத்துணியில் சுற்றி 1/2 மணி நேரம் வைக்கவும்.

பின்பு எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி தோசை தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.

இதற்குப் புதினா சட்னி, தேங்காய்ச் சட்னி, தால், குருமா பொருத்தமாக இருக்கும்.

முளைக்கீரை சப்பாத்தி ரெடி.

குழந்தைகள் தனியறையில் படுப்பது மன வளர்ச்சிக்கு நல்லதா?

குழந்தைகள் தனியறையில் படுப்பது மன வளர்ச்சிக்கு நல்லதா?
children-Bedroom-Culture


             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைகள் தனியறையில் படுப்பது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் தனியறையில் தூங்குவதை `பெட்ரூம் கல்ச்சர்’ என்று அவர்கள் அழைக்கிறார்கள். மேலைநாடுகளில் மட்டுமல்ல, நம் ஊரிலும்கூட இப்போது இந்தக் கலாசாரம் வேகமாகப் பரவிவருகிறது. இங்கேயும்கூட வயது வந்த பிள்ளைகளில் பலர் அவர்களுக்கான தனி அறையில்தான் தூங்குகிறார்கள்.
இப்படி குழந்தைகள் தனியறையில் தூங்குகின்ற இந்த பெட்ரூம் கல்ச்சர் நம் ஊரிலிருக்கும் குழந்தைகளுக்கு சரிவருமா… குழந்தைகள் தனியறையில் படுப்பது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

 குழந்தைகள் தனியறையில் இருப்பது கெட்டது என்றோ, பெற்றோருடன் சேர்ந்திருப்பது நல்லது என்றோ எதுவும் கிடையாது. ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்து இதை இரண்டுவிதங்களாகப் பார்க்கலாம். குழந்தை அதிகச் சிரமமில்லாமல் வளர வேண்டும் என்பதற்காகத் தனியறை ஒதுக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். குடும்பக் கஷ்டம் தெரிந்து வளர வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை தங்களுடன் ஒரே அறையில் படுக்கவைத்துக்கொள்ளும் பெற்றோரும் இருக்கிறார்கள். இது அந்தந்தக் குடும்பத்தின் சூழ்நிலை சார்ந்த அணுகுமுறை.

குழந்தைகள் தனியாகப் படுத்தால் நல்லதல்ல, தனியறையில் இருப்பதால் அவர்கள் தனித்துவிடப்படுவார்கள் என்கிற கூற்றும் உண்மையல்ல. ஒரே அறையில் எல்லோரும் ஒன்றாகப் படுத்துக்கொண்டு குழந்தைகளைத் தனித்துவிடுவதுதான் பிரச்னை. குழந்தைகளுடன் பெற்றோர் நிறைய பேச வேண்டும், அன்பு செலுத்த வேண்டும். அவர்களுடன் நல்ல தொடர்பிலிருக்க வேண்டும். 

தொலைதூரத்தில் படிக்கச் செல்லும் சில குழந்தைகள் பெற்றோர் நினைவுடனேயே இருப்பார்கள். பெற்றோருடன் வசிக்கும் சில குழந்தைகள் அவர்களை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே, தூரம் ஒரு பொருட்டில்லை. தனி அறை ஒரு விஷயமே அல்ல. எவ்வளவு தள்ளி இருந்தாலும் பெற்றோர்-பிள்ளை உறவு அன்பானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும், ஒளிவு மறைவு இல்லாததாகவும்,  `கம்போர்ட் ஸோன்’ (Comfort Zone) ஆகவும் இருக்க வேண்டும்.

இப்படியாக அவர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தால், தன் பெற்றோர் சார்ந்த நல்ல நினைவுகள் குழந்தைகளை நல்லமுறையில் வழிநடத்தும்.
பதின்பருவக் குழந்தைகளுக்கு காலையில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வு குறித்த பயம், குழப்பம், சந்தேகம், நிம்மதியற்ற உறக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிலும் தனியாகத் தூங்கும்போது இந்த உணர்வுகள் அவர்களை அதிகமாக அலைக்கழிக்கும் சூழல்கூட ஏற்படலாம். அப்படியொரு சூழல் ஏற்பட்டால், அதைக் கண்டு பெற்றோர் பதற்றப்படத் தேவையில்லை. குழந்தை தன்  பிரச்னை குறித்து உங்களிடம் பேசுமளவுக்கு அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்குப் பிரச்னை இருந்தால், அந்தக் குழந்தை ஒரே அறையில் பெற்றோருடன் படுத்திருந்தால்கூட பயம், தனிமை உணர்வுடன்தான் இருக்கும் என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சிறந்ததொரு வழிகாட்டியாக நம்மால் இருக்க முடியும். பதின்பருவ வயதில் குழந்தைகள் சில நேரம் சறுக்கத்தான் செய்வார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முயற்சி செய்யுங்கள். மற்றபடி தனியறைக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சிக்கலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.