Showing posts with label காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை - ஸ்ரீ குரு போகர் சித்தரின் குரு. Show all posts
Showing posts with label காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை - ஸ்ரீ குரு போகர் சித்தரின் குரு. Show all posts

காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை - ஸ்ரீ குரு போகர் சித்தரின் குரு

 காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை - ஸ்ரீ குரு போகர் சித்தரின் குரு


கஞ்ச மலை
அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்
சேலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை. கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள்
பழமையானது.
சிறப்பு:
சித்தர் கோவிலில் கிரிவலம் நடப்பது இங்குதான். திருவண்ணமலைக்கு அடுத்தபடியாக இங்குதான் கிரிவலம். இங்கு பௌர்ணமி மாலை 7.30 அடிவார கோவிலில் தொடங்கி 19km சுற்றி அடுத்தநாள் காலை 5 மணிக்கு கிரிவலம் முடிவடைகிறது.
பொது தகவல்:
கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது.
இத்திருக்கோயிலில் சித்ராபவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர்.
மலை முழுவதும் இரும்புத்தாது (Magnetite, Grunerite & Quartz) மட்டுமே உள்ளது. அதனாலேயே இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள்ளது.
ஆனால் இந்த மலையில் அரசாங்கத்தால் கனிமவள திட்டப்பணி 1சதவிகிதம் கூட நடத்த முடியவில்லை.
அடிவார கோவில்:
இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும் .
இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன.
அடிவார கோயிலுக்குள் பத்து தீர்த்தங்கள் உள்ளது. முக்கியமானவை நந்தி தீர்த்தம் மற்றும் காந்த தீர்த்தம் ,
காந்த தீர்த்தத்தை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் உப்பு, மிளகு வாங்கிப் போடுகிறார்கள் இதில்.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட "ஞானசற்குரு பால முருகன்" கோயில் உள்ளது.
எங்கும் இல்லாத நாரதர் உருவ சிலை, சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் உருவ சிலைகள் உள்ளது.
இது "அமாவாசை கோயில்” ஆகும்.
சித்தர்:
காலங்கி சித்தர் கூடுவிட்டு கூடு பாய்வது மற்றும் அஷ்டமாசித்திகளை அறிந்தவர். காற்றையே உடலாகக் கொண்டவர். இவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலை செய்த போகரின் குரு.
திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர்.
இவர் இங்குள்ள மூலிகை உண்டு முதுமையில் இருந்து இளமை தோற்றத்திற்கு திரும்பியது
இந்த மலையில் தான். அதனாலேயே இந்த மலைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு "இளம்பிள்ளை"
என்று பெயர் பெற்றது. திருமூலரின் உத்தறவின்படி இங்கேயே இருந்து அருள்பாவிக்கிறார்.
இங்கு உள்ள மூலிகைகளை வைத்து சித்தர்களால் இரும்பை தங்கம் ஆக்க முடியும்.
இப்படிபட்ட மூலிகை யார் கண்ணுக்கும் தென்படாது. மந்திரம் சொல்லியே அணுகவேண்டும்.
இங்குள்ள ஒரு பாஷாணத்தை போகர் பழனி மலை முருகன் சிலை செய்ய பயன் படுத்தி உள்ளார்.
ஒன்பது பாஷாணகளில் இதுவும் ஒன்று.
பார்க்க வேண்டிய இடங்கள் :
அடிவாரக் கோயில்:
1.கணபதி, ஞானசற்குருபாலமுருகன் கோவில்
2.முனீஸ்வரர் ஆலயம்
3.சித்தேஸ்வரர் கோவில்
4.பத்து தீர்த்தங்கள் (பெரிய நந்தி கிணறு, ராகு கேது தீர்த்தம், காந்த தீர்த்தம் …)
5.காளி அம்மன் கோவில்
6.நவகிரகம் , நாகதேவதை கோவில், மடம்
மலைக்கோயில்:
7.சித்தி விநாயகர்
8.வேட்டைக்கார சாமி
9.அன்னதான குடில் (சிவ லிங்கம்)
10.காவல் ஆஞ்சநேயர்
11.பிள்ளையார் பாறை
12.காலங்கி பாதம்
13.நாகர் புற்று
14.மேல் சித்தர் கோவில் (18 சித்தர்கள்)
15.மேல்>கிழ்>பாலமலைசித்தர் நேர் கோட்டில்
16. கிணறு, இரட்டைலிங்கம் (சிவசக்தி)
17.ஐயப்பன் கோவில்
18.கன்னிமார் கோவில்
19.பெருமாள் கோவில்
20.புலித்தோல் பாறை
21.தியான மலை (சித்தர்கள் கூடும் பாறை)
22.ஆதி சிவன் பாறை (ஆத்மா லிங்கம்)
23.கரிய பெருமாள் கோவில்
24.77அடி ஆஞ்சநேயர்
25.நாகதேவி சிலை அரியானுர் வழி
26.சுயம்பு லிங்கம்
27.சுழுமுனை ஊத்து, சுழுமுனை குகை
28.அகஸ்தியர் குகை, காலங்கி குகை
29.மணல் ஊற்று / காளி கானல் / மூங்கில்வனம்
30.ரோம விருச்சம், சந்தன மரம்
31.மதிமயக்கி வனம்
32.சிற்றாறு, பொன்னி நதி