மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்

மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்
Mahalakshmi-staying-place


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிதேவியானவள், 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது.

மகாலட்சுமி
இறைவனை சிந்தித்து வாழும் மக்கள் அனைவரும் விரும்புவது, லட்சுமி கடாட்சத்தைத் தான். லட்சுமியின் அருள் கிடைத்து விட்டால், அனைத்து செல்வங்களும் வந்து சேர்ந்து விடும் என்பது ஐதீகம். விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிதேவியானவள், 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த 108 இடங்கள் எவை என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம். வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரி சங்கு. மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம். கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக்சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை. கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, ஆல விழுது. தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை. திருநீற்று பச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல்,

விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு. நெற்கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை. கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண். நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானை கொம்பு மண், ஆல அடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை. கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல் இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல். படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, வாசல் நிலை, நெற்றி.

Lakshmi | லட்சுமி

ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்குமா?

ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்குமா?
Do-nutrients-increase-childrens-height


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

ஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணயத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயரத்தை இது போன்ற புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது.

ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்குமா?
பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர்.

பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர். ஒருவரின் வளர்ச்சி, அவர் கருவாக தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது ஆரம்பிப்பது. பொதுவாக கருவில் குழந்தை 17 முதல் 20 இன்ச் வரை வளரலாம்.


மரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியை தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன். இந்தச் சுரப்பி, மூளையின் மத்தியில் மூக்குக்கு பின்புறமாக இருக்கும். நிலக்கடலை அளவில் இருக்கும் இது, மிக முக்கியமான ஒரு சுரப்பி. உடலின் பல்வேறு சுரப்பிகளின் செயல்பாட்டை இது கட்டுப்படுத்துகிறது. இது சுரக்கும் ஹார்மோன்தான் ஒருவரை வளரச் செய்கிறது. உடலில் உள்ள திசுக்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு குறைவதற்கும், கூடுவதற்கும் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், கிருமி தாக்குதல், வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு காரணங்கள் ஆகலாம்.

முதற்கட்ட வளர்ச்சி, குழந்தை பிறந்ததில் இருந்து 12 வயது வரை நிகழும். இந்தப் பருவத்தில் பல் விழுந்து முளைப்பது, எலும்புகள் கூடுவது என சீரான வளர்ச்சி நடைபெறும். இரண்டாம் கட்ட வளர்ச்சி, ஆணுக்கும் பெண்ணுக்கும் 13 வயதில் ஆரம்பித்து 18 வயதுவரை இருக்கும் (சிலருக்கு அதிகபட்சமாக 23 வயது வரை வளர்ச்சி இருக்கலாம்).

இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி ஹார்மோன்கள் அபரிமிதமாக இருக்கும். இந்த இளம் வயதில்தான் உறுப்புகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் அதிகமுள்ள முட்டை, சோயா, பருப்புகள், பயறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக கொடுக்கலாம்.

ஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணயத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயரத்தை இது போன்ற புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மரபும், 12 வயதிலிருந்து 18 வயதுவரை கொடுக்கக்கூடிய புரதம் அதிகம் உள்ள உணவுகளுமே குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும். வளர்ச்சி ஹார்மோன்களில் எந்த பாதிப்பும் இல்லாதபட்சத்தில், அவர்களின் வளர்ச்சி முழுமையடையும்.

சில குழந்தைகளுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்சினையால் ட்வார்பிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ட்வார்பிசம் என்பது குள்ளமாக இருப்பது. 3 அடிக்கு மேல் அந்த குழந்தையால் வளர முடியாது; அதை குணப்படுத்தவும் முடியாது என்பதே உண்மை. அரசு, ட்வார்பிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அறிவித்து, சலுகைகள் வழங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உயரம் குறைந்த குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். அவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும் அவசியம். தேவைப்படும் சூழலில் அவர்களை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம்.

உயரத்தால் சமூக வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை பெற்றோர்கள், குழந்தைகளிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். உயரம் குறித்து கவலைப்படாமல் சாதித்த தன்னம்பிக்கை மனிதர்களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டலாம். குழந்தைகளிடம், அவர்கள் தங்களை பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதை தவிர்க்கச் சொல்லி தம்மை தாமே உயர்வாக நினைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 

கூந்தல் விஷயத்தில் அறியாமல் செய்யும் தவறுகள்

கூந்தல் விஷயத்தில் அறியாமல் செய்யும் தவறுகள்
Unconscious-Mistakes-in-the-Hair.

                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

தலைமுடி விஷயத்தில் ஒவ்வொன்றையும் நாம் பார்த்து பார்த்து செய்தாலும், ஒரு சில தவறுகள் நம்மை அறியாமல் செய்வதால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கூந்தல் பிரச்சனை
தலைமுடியை நீரில் அலசுவதில் மிகுந்த கவனம் தேவை. அதிக அளவில் அலசினால், முடியின் தன்மை சுத்தமாக மாறிவிடும். அதாவது முடி உடையக்கூடியதாக மாறிவிடும். அதேபோல் குறைந்த அளவு அலசும்போது, அழுக்குகள் வெளியேறாமல் மேலும் அழுக்குகளை உள்வாங்கி எண்ணெயுடன் மாறுகிறது. எனவே, வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை Shampoo-வை உபயோகித்து தலைமுடியை அலசலாம்.

தலைக்கு குளிக்கும்போது அதிக வெப்ப நிலையில் உள்ள தண்ணீரைக் கொண்டு முடியை அலசுவது தவறு. ஏனெனில் உங்கள் முடி அதிகம் சேதமடையும். அத்துடன் முடிகளில் வெட்டுகளையும் ஏற்படுத்தும். எனவே மிதமான சூட்டில் உள்ள நீரை பயன்படுத்த வேண்டும்.

conditioner பயன்படுத்தும்போது, முடியின் நடுப்பகுதியில் இருந்து கீழ்பகுதி வரை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், அடிப்பகுதியில் உள்ள முடிகள் வெகு நாட்களுக்கு முன்பே வளர்ந்த ஒன்றாகும். எனவே அவற்றை மட்டும் நீங்கள் conditioner செய்தால் போதுமானது. மேலும் உங்கள் முடிக்கு தேவையான அளவு மட்டும் conditioner உபயோகிப்பது சிறந்தது.

ஈரமான கூந்தல் கனமானதுடன் மிகவும் மென்மையானது. எனவே, அப்போது நீங்கள் கூந்தலை வாரும் போது உடைந்து விடும். ஆகையால், நீங்கள் குளித்து முடித்து கூந்தல் உலர்ந்த பிறகு வார வேண்டும். அல்லது குளிக்க செல்லும் முன்பு வாரலாம்.

உங்கள் உடலுக்கு ஒரு துண்டையும், தலைமுடிக்கு ஒரு துண்டையும் பயன்படுத்துங்கள். உங்கள் முடியை தலைகீழாக அல்லது வலதுபுறமாக போட்டு துவட்டுவது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் முடியில் உள்ள ஈரம் விரைவில் வெளியேறிவிடும்.

ஈரமான தலைமுடியை பின்னல் போடக் கூடாது. சிறிது சீரம் பயன்படுத்திவிட்டு, சற்று காய்ந்த பிறகு ஒரு தளர்வான பின்னல் பின்னிக் கொள்ளலாம்.

குறைந்தது மூன்று அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் முடியின் அடிப்பகுதியை வெட்டுவது அவசியம். இது பூச்சிவெட்டுகளை அகற்ற உதவும். ஆனால், மற்ற முடி வெட்டும் முறைகளை கையாள்வது தவிர்க்க வேண்டும். குறிப்பாக வீட்டில் அதனை செய்வது தவறு.

Hair Problem | Hair Care | கூந்தல் பிரச்சனை | கூந்தல் | 

சிவப்பு அரிசி - Red Rice Benefits

சிவப்பு அரிசி - Red Rice Benefits
செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும் சிவப்பு அரிசி


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

சிவப்பு அரிசியில் அதிகம் காணப்படும் நார்ச்சத்தானது, உண்ணும் உணவை சுலபமாக செரிமானப்படுத்த உதவுகிறது. இதனால் இவை செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

சிவப்பு அரிசி
மேற்கத்திய உணவுகள் மீதான தாக்கம் அதிகரித்த பிறகு அரிசி உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கொஞ்சம் குறைந்துவிட்டது என்றே கூறலாம். நம் நாட்டில் ஏராளமான அரிசி வகை இருந்தன. அதிலும் பெரும்பாலான வகை தமிழ்நாட்டில் மட்டுமே, கிடைத்ததாக வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 200 வகையான அரிசி சேமிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நன்மைகள் மிகுந்திருப்பவை.

இத்தனை அருமை மிக்க அரிசி இருந்தாலும், பொதுவாக நம் வீடுகளில் பயன்படுத்துவது வெள்ளை ரக பொன்னி அரிசிதான். இதன் உணவு எளிதாக செரிமானம் அடைந்துவிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஆனால், பாரம்பரிய அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் அடைய தாமதமடைந்து, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவினை சீராக பராமரித்து ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. மேலும், அரிசியை பாலிஷ் செய்யும் போது அதில் உள்ள அனைத்து விதமான சத்துக்களும் நீக்கப்பட்டு விடுவதால், மீதமுள்ள மாவுச்சத்து உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.


இப்படி வெள்ளை அரிசிக்கும் பாரம்பரிய அரிசிக்கும் மருத்துவ குணத்தில் நிறைய மாறுபாடுகள் இருக்கின்றன. வெள்ளை அரிசியின் விலை குறைவு, அதே நேரத்தில் பாரம்பரிய அரிசியின் விலை அதிகம் என்ற பரவலான எண்ணம் நம்மிடையே நிலவுகிறது. ஆனால், பாருங்கள் அரிசியை மலிவாக வாங்கிவிட்டு மருத்துவத்திற்காக அதிகம் செலவழிக்கிறோம். முழு தானியங்களை நாளொன்றுக்கு மூன்று முறை உட்கொள்ளலாம்.

இப்போது பழுப்பு அரிசி என்று கடைகளில் விற்கப்படும் கைக்குத்தல் அரிசியானது குறைவான தோல் நீக்கப்பட்டது. இவ்வகை அரிசி வெகுவாகத் தீட்டப்படாததால் மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். இந்த அரிசிச்சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் தாதுச்சத்தான பாஸ்பரஸ், மாங்கனீசு, பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் மிகுதியாக உள்ளன.

மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. புற்றுநோயைத் தடுக்கலாம். கொழுப்பை குறைக்க உதவும். சிவப்பு அரிசி இதை புட்டு அரிசி என்று கடைகளில் விற்கிறார்கள். சிவப்பு அரிசியில் அதிகம் காணப்படும் நார்ச்சத்தானது, உண்ணும் உணவை சுலபமாக செரிமானப்படுத்த உதவுகிறது. இதனால் இவை செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

பால், பருப்பு, முட்டை, இறைச்சி இவற்றிற்கு அடுத்தபடியாக சிவப்பு அரிசியில் புரதச்சத்து நிறைந்துள்ளது. தினமும் சிவப்பு அரிசியால் செய்த பதார்த்தங்களை காலை உணவாக எடுத்துக் கொண்டால் நாள்முழுவதும் நல்ல உடல் நன்மையைத் தரும். இவை குழந்தைகள் நல்ல உடல் மற்றும் மனவளர்ச்சி பெற உதவுகிறது. சிவப்பு அரிசியால் செய்யப்படும் சிவப்பரிசி கஞ்சி, இட்லி, இடியாப்பம், புட்டு போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் உடல் ஆற்றல் பெறுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

தக்காளி பன்னீர் சாண்ட்விச் - Tomato Paneer Sandwich

தக்காளி பன்னீர் சாண்ட்விச் - Tomato Paneer Sandwich

சாண்ட்விச் விருப்பத்திற்கேற்ப விருப்பமான காய்கறிகள், பழங்களை வைத்து செய்யலாம். இன்று தக்காளி, பன்னீரை வைத்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

தக்காளி பன்னீர் சாண்ட்விச்
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் - 6 துண்டுகள்

 வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பன்னீர் - 1/2 கப்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தக்காளி பன்னீர் சாண்ட்விச்

செய்முறை :

தக்காளி, வெங்காயம், பன்னீர், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிரெட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்து குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கி விட வேண்டும்.

பின்பு அந்த தக்காளி, பன்னீர் கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.

இப்போது சூப்பரான தக்காளி பன்னீர் சாண்ட்விச் ரெடி!!!

Sandwich | Healthy Recipes | Recipes | wheat Recipes | Veg Recipes | Paneer Recipes | Bread Recipes | capsicum Recipes | சாண்ட்விச் | குடைமிளகாய் சமையல் | பிரெட் சமையல் | கோதுமை சமையல் | பன்னீர் சமையல் | டிபன் | ஆரோக்கிய சமையல் | சைவம் | 

கேல் கீரை சூப் - kale -soup

கேல் கீரை  சூப் - kale -soup
நார்ச்சத்து நிறைந்த கேல் கீரை சூப்


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

கேல் கீரையில் அதிகளவு நார்ச்சத்து, ஜீரணக்கோளாறு மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கேல் சூப்
தேவையான பொருட்கள் :

கேல் கீரை - 200 கிராம்

 பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 துண்டு
செலரி தண்டுகள் - 2
கேரட் -  1
சிக்கன் ஸ்டாக் (அது வேண்டாம் என்றால் வெஜிடபிள் ஸ்டாக்) - 8 கப்
ஒரெகானோ - 1 தேக்கரண்டி
தேவைக்கேற்ப - உப்பு, மிளகு
சிவப்பு மிளகாய் ஃபிளேக்ஸ் - தேவையான அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கேல் கீரை

செய்முறை :

கேல் கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயம், செலரி, பூண்டு, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வெங்காயம், பூண்டு, செலரியைப் போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் கேரட் சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும்.

அடுத்து அதில் சிக்கன் ஸ்டாக் (அது வேண்டாம் என்றால் வெஜிடபிள் ஸ்டாக்), ஒரெகானோ கலந்து கொதிக்க விடவும்.

கடைசியாக கேல் கீரையை சேர்த்து, மூடி ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.

சத்தான கேல் சூப் ரெடி

இந்த சூப்பை சாதம், பிரெட்டுடன் பரிமாறலாம்.

Soup | Healthy Recipes | Recipes | சூப் | சைவம் | ஆரோக்கிய சமையல் | 

காஞ்சிபுரம் இட்லி - Kanchipuram-Idli.

காஞ்சிபுரம் இட்லி - Kanchipuram-Idli.

வீட்டிலேயே செய்யலாம் சுவையான காஞ்சிபுரம் இட்லி - Kanchipuram-Idli.

                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

வீட்டிலேயே எளிய முறையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

காஞ்சிபுரம் இட்லி
தேவையான பொருட்கள்:

இட்லி (புழுங்கல்) அரிசி - 2 கப்

 உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய் (பொடி பல்லு பல்லாக நறுக்கியது) - 1/2 கப்
முந்திரி பருப்பு (சிறு சிறு துண்டுகளாக ஒடித்தது) - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - தேவைக்கேற்றவாறு

காஞ்சிபுரம் இட்லி

செய்முறை :

அரிசியையும், உளுத்தம் பருப்பையும் நன்றாக கழுவி தனித்தனியாக 4 மணிநேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் மிருதுவாக அரைத்து, உப்பு போட்டு கலந்து, இரவு முழுவதும் புளிக்க விடவும்.

மறுநாள், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு அதில் முந்திரி பருப்பு, சுக்குப் பொடி (சுக்குப்பொடி இல்லையென்றால், சிறு இஞ்சித் துண்டைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்) இரண்டையும் போட்டு, முந்திரி சிவக்கும் வரை வறுத்து மாவில் கொட்டவும்.

அதே வாணலியில் நல்லெண்ணையை விட்டு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை முழுதாகவும், மற்றொரு டீஸ்பூன் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகவும் பொடித்தும் சேர்க்கவும்.

இத்துடன் பெருங்காயத்தூளையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து இதையும் மாவில் கொட்டவும்.

தேங்காய் துண்டுகளையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

இட்லி குக்கர் அல்லது இட்லி பானையை அடுப்பிலேற்றி, தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். 

ஒரே அளவுள்ள டம்ளர்களை எடுத்து எண்ணெய் தடவி அதில் 3/4 அளவிற்கு மாவை ஊற்றவும்.

இதை இட்லி குக்கர்/பானை உள்ளே வைத்து மூடி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.

இப்போது சுவையான காஞ்சிபுரம் இட்லி ரெடி.

குக்கர் பாத்திரம் அல்லது வாயகன்ற பேசின் போன்ற பாத்திரத்தில் மாவை ஊற்றி வேக வைத்து, துண்டுகளாகவும் வெட்டி பரிமாறலாம். அல்லது சாதரண இட்லி போல், இட்லி தட்டில் ஊற்றியும் வேக வைக்கலாம்..

Idli | Healthy Recipes | Recipes | இட்லி | டிபன் | சைவம் | ஆரோக்கிய சமையல்

பால் வெஜிடபிள் சூப் - Milk Vegetable Soup

பால் வெஜிடபிள் சூப் - Milk Vegetable Soup
milk-vegetable-soup
சத்து நிறைந்த பால் வெஜிடபிள் சூப்


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

பால் சேர்த்து செய்யும் வெஜிடபிள் சூப் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பால் வெஜிடபிள் சூப்
தேவையான பொருட்கள்

பால் - 2 கப்,

 கேரட் - 1,
பீன்ஸ் - 5,
பச்சைப் பட்டாணி - 1 டேபிள்ஸ்பூன்,
மிக பொடியாக நறுக்கிய கோஸ், காலிஃப்ளவர், நூல்கோல் - 1/4 கப்,
வெங்காயம் - 1,
இஞ்சிபூண்டு விழுது - சிறிது,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,
எண்ணெய் - சிறிது,
வெண்ணெய் - 4 டீஸ்பூன்.

பால் வெஜிடபிள் சூப்

செய்முறை

காய்கறிகள், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் காய்கறிகள், உப்பு, தேவையான தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பின்பு வெந்த காய்கறி கலவையை சேர்த்து, பால் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.

கடைசியாக கொத்தமல்லி, மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும்.

சூப்பரான சத்தான பால் வெஜிடபிள் சூப் ரெடி.

Milk Vegetable Soup | Soup | Healthy Recipes | Recipes | Veg Recipes | சூப் | சைவம் | ஆரோக்கிய சமையல் | 

பீட்ரூட் அல்வா - BeetRoot Halwa.

பீட்ரூட் அல்வா - BeetRoot Halwa.
தித்திப்பான பீட்ரூட் அல்வா
beetroot-halwa.

                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

அல்வாவில் பல வெரைட்டிகள் உள்ளது. அதில் ஒன்று தான் பீட்ரூட் அல்வா. இந்த இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பீட்ரூட் அல்வா
தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 4

 பால் - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - சிறிது
உலர் திராட்சை - சிறிது
பாதாம் - சிறிது
கண்டென்ஸ்டு மில்க் - தேவையான அளவு (விருப்பமிருந்தால்)

பீட்ரூட் அல்வா

செய்முறை :

முதலில் பீட்ரூட்டை கழுவி, தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பாதாம் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வறுத்து, பின் அதனை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்கி, பின் அதில் பால் சேர்த்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட்டு, பின் தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கலவை கெட்டியாகும் வரை நன்கு பிரட்டி இறக்கவும்.

பின்னர் அதில் முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை தூவி பரிமாறினால், பீட்ரூட் அல்வா ரெடி.

Halwa | Sweets | Recipes | அல்வா | இனிப்பு | ஸ்நாக்ஸ் | 

நாட்டு கோழி குருமா - Country Chicken Kurma

நாட்டு கோழி குருமா - Country Chicken Kurma
country-chicken-kurma
சன்டே ஸ்பெஷல்: நாட்டு கோழி குருமா


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753


வாய்க்கு ருசியாக நாட்டு கோழியில் தயாரிக்கப்படும் நாட்டு கோழி குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

நாட்டு கோழி குருமா
தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி - ஒரு கிலோ

 சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
கசகசா - ஒரு ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

நாட்டு கோழி குருமா

செய்முறை :

நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுத்தால் சுவையான நாட்டு கோழி குருமா ரெடி.

kurma | Recipes | குருமா | சிக்கன் சமையல் | அசைவம் | குழம்பு |

பட்டாணி முட்டை கீமா - Egg-Keema

பட்டாணி முட்டை கீமா - Egg-Keema
சூப்பரான பட்டாணி முட்டை கீமா - Egg-Keema



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

பட்டாணி, முட்டை சேர்த்து செய்யும் இந்த கீமா சப்பாத்தி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

பட்டாணி முட்டை கீமா
தேவையான பொருள்கள் :

முட்டை - 4

 ப்ரெஷ் பட்டாணி - 1/2 கப்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது

தாளிக்க :

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 1
பெரிய வெங்காயம் - 1

பட்டாணி முட்டை கீமா

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முட்டையை வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும்.

தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும்.

பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.

பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா வாடை போனதும் அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும்.

இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான பட்டாணி முட்டை கீமா ரெடி.

Recipes | Side Dish | Egg Recipes | Non Veg | முட்டை சமையல் | அசைவம் | சைடிஷ் | 

மீல் மேக்கர் வடை - Meal Maker Vadai.

மீல் மேக்கர் வடை - Meal Maker Vadai.
Meal-maker-vadai.
சூப்பரான மீல் மேக்கர் வடை


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

இந்த மீல் மேக்கர் வடையை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மீல் மேக்கர் வடை
தேவையான பொருட்கள்

மீல் மேக்கர் - 100 கிராம்

 பொட்டுக்கடாலை - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
கறிமசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

மீல் மேக்கர் வடை

செய்முறை :

கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மீல் மேக்கரை வெந்நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து நன்றாக ஆறியதும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு சீரகத்துள், கறிமசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய மீல் மேக்கரை சேர்த்து வடை பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடை போல் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இப்போது சூப்பரான மீல் மேக்கர் வடை ரெடி.

Vadai | Snacks | Veg Recipes | Fry Recipes | Recipes | வடை | பிரை | சைவம் | ஸ்நாக்ஸ் |

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..
Dont-given-this-foods-to-children-until-one-year-of.



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு வயதுவரை குழந்தைக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கக்கூடாது என்று அறிந்து கொள்ளலாம்.

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..
குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். அதன்பிறகு குழந்தைக்கு திட உணவு கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இருப்பினும் குழந்தைக்கு திட உணவு கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

எனவே குழந்தைக்கு எந்த உணவு ஆரோக்கியம் அளிக்குமோ அந்த உணவை மட்டும் குழந்தைக்கு உணவாக கொடுக்க வேண்டும். இவற்றில் ஒரு வயதுவரை குழந்தைக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தையின் ஒரு வயதுவரை அந்த உணவுகள் கொடுக்காதீர்கள்.


* ஒரு வயது குழந்தை உணவு முறையில் பசும்பால் மற்றும் சோயா பால் போன்றவற்றை குழந்தைக்கு கொடுக்க கூடாது. ஏன் என்றால் குழந்தைக்கு இந்த பாலை கொடுப்பதன் மூலமாக குழந்தைக்கு செரிமானம் அடைவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். மேலும் இந்த பாலில் இருக்கும் புரோட்டின் மற்றும் மினரல்கள் குழந்தையின் சிறுநீரகத்தை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இதை தவிர குழந்தைக்கு வயிற்று போக்கையும் ஏற்படுத்தும்.எனவே குழந்தையின் ஒரு வயது வரை பசும்பால் மற்றும் சோயா பால் கொடுக்க கூடாது. இதற்கு பதிலாக தாய்ப்பால் கொடுக்கலாம்.

* ஒரு வயது குழந்தை உணவு முறையில் ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இவை குழந்தைக்கு எளிதில் செரிமானமாகாது. திராட்சை மற்றும் ஆரஞ்ச் போன்ற பழங்களில் அதிகமாக அமில தன்மை உள்ளது. இது குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது வயிற்று உபாதைகளை கொடுக்கும்.

* ஒரு வயது குழந்தை உணவு முறையில் நிலக்கடலையில் இருந்து பெறப்படும். இந்த பினட் பட்டரும் கூட குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்க கூடியதாக இருக்கிறது. எனவே இதை எல்லாம் நீங்கள் குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்கு பிறகு கொடுப்பது நல்லதாகும்.

* ஒரு வயது குழந்தை உணவு முறையில் கீரைகள், பீட்ரூட் போன்றவற்றில் லேக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. இது ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான உணவாகும். இதில் இருக்கும் சத்துக்களை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் உடலில் ஆசிட் சுரப்பது இல்லை. எனவே நீங்கள் இது போன்ற காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

* ஒரு வயது குழந்தை உணவு முறையில் உணவுகள் பாதம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை குழந்தைக்கு மொத்தமாக கொடுக்க கூடாது. ஏன்னென்றால் இவை குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் குழந்தைக்கு இவை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியவை. எனவே குழந்தைக்கு எந்த ஒரு காரணத்திற்க்காகவும் இந்த நட்ஸ் வகைகளை ஒரு வயதுவரை கொடுக்கக்கூடாது.

* ஒரு வயது குழந்தை உணவு முறையில் உணவுகள் எல்லா குழந்தைகளுக்கும் மிகமிக பிடித்த ஒன்று எதுவென்றால் அதுதான் சாக்லேட். இவை குழந்தை அதிகம் சாப்பிட்டால் சாக்லேட்டில் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

* ஒரு வயது குழந்தை உணவு முறையில்பாப்கார்ன் ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான தினியாகும் இருப்பினும் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தைக்கு ஒரு வயது முடியும் வரை கண்டிப்பாக குழந்தைக்கு பாப்கார்ன் கொடுக்கக்கூடாது.

* ஒரு வயது குழந்தை உணவு முறையில் முட்டையின் வெள்ளைக்கருவானது குழந்தைக்கு அலர்ஜுயை கொடுக்க கூடியதாக உள்ளது. உங்களது குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும் என்றால் முழுமையாக முட்டையின் வெள்ளைக் கருவை நீங்கிவிட்டு, மஞ்சள் கருவை மட்டும் சமைத்து கொடுக்கலாம்.

சருமத்திற்கு கொய்யாப்பழ தோல் - Guava Skin Face Pack.

சருமத்திற்கு கொய்யாப்பழ தோல் - Guava Skin Face Pack.
சருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்
Guava-skin-face-pack.

கொய்யாய் பழத்தின் தோலை பயன்படுத்தி நம் வீட்டிலேயே பேஸ் பேக் தயார் செய்து, சருமத்தில் பூசி கொள்வதினால், சருமத்திற்கு புது பொலிவு கிடைக்கும். மேலும் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும்.

                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

சருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்
கொய்யாய் ஒரு மருத்துவம் குணம் வாய்ந்த பழமாகும். ஆனால் கொய்யாய் அழகை அதிகரிக்கவும், சருமத்தை பளபளப்பாகவும் மாற்றக்கூடிய திறன் கொண்டது. கொய்யாய் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி மற்றும் சி நம் உடலில் கொல்லேஜன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால், சூரியனின் கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது. ஒளிரும் சருமம் கொய்யாவின் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும். சருமத்தை தளர்த்தி மென்மையாக்கும். கொய்யாய் பழம் தோலை பயன்படுத்தி சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படி ஃபேஸ்பேக் தயாரித்து வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும்.


தேவையானவை:

தேன் - 1 தேக்கரண்டி
கொய்யா பழத்தின் தோல் - தேவையான அளவு

செய்முறை

முதலில் கொய்யாப்பழத்தின் தோலை சீவிக்கொள்ள வேண்டும். சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும். கொய்யாவிலுள்ள நீர்ச்சத்து உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, தோலுக்கு மிருதுவான, ஆரோக்கியமான தோற்றத்தையும் அளிக்கிறது.

கீழே தரப்பட்டுள்ள முறைப்படி ஃபேஸ்பேக் செய்து, வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 மேசைக்கரண்டி
முட்டை மஞ்சள் கரு - 1
தேன் - 1 மேசைக்கரண்டி
கொய்யா - ½ பழம்

செய்முறை:

முதலில் கொய்யாவை சீவிக்கொள்ள வேண்டும். 1 மேசைக்கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி தேன், சீவப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும்.

20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மெதுவாக ஒத்தி உலர விடவும்.கொய்யாவிலுள்ள வைட்டமின்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு அளித்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கும். சோகையான தோற்றத்தை மாற்றி, பொலிவான தோற்றத்தை அளிக்கும்.

சுகப்பிரசவத்துக்கு யோகா பயிற்சி - Pregnancy Yoga.

சுகப்பிரசவத்துக்கு  யோகா பயிற்சி - Pregnancy Yoga.

சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி

கர்ப்பிணி பெண்களின் மனம் அமைதியாக இருந்தால், அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். அந்த வகையில் யோகா பயிற்சி கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்துக்கு மிகவும் இன்றியமையாதது.

                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி

விரல் நுனியில் உலகம் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கும் இந்த நவீன காலத்தில் உடல் உழைப்பு என்பது கணிசமாக குறைந்துவிட்டது. சோம்பல் காரணமாக அன்றாட உணவுகளை கூட இணையதளம் மூலமாக ‘ஆர்டர்’ செய்து, சாப்பிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த வாழ்க்கை முறை சூழலால் நோய்களுக்கும் பஞ்சம் இல்லை. எண்ணில் அடங்காத நோய்கள் மனிதனை ஆட்டிப்படைத்து வருகின்றன.


 பெண்களிடையே உடல் இயக்கம் குறைந்து வருவதால் சுகப்பிரசவமும் குறைந்து வருகிறது. எந்திரமயமான இந்த காலக்கட்டத்தில் சுகப்பிரசவம் என்பது அரிதான ஒன்றாகவே மாறிவிட்டது. இதுபோன்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுகப்பிரசவத்துக்கு வழிவகை ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை சிகிச்சை முறையை தமிழக அரசின் சுகாதாரத்துறை தொடங்கி இருக்கிறது. இந்த சிகிச்சை முறைக்கு கர்ப்பிணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மருத்துவமனைக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 தாய்மார்கள் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அவர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை துறையின் டாக்டர் திவ்யா யோகா பயிற்சி அளித்து வருகிறார். தாடாசனம், உட்கட்டாசனம், மர்ஜரி ஆசனம், சேது பந்தாசனம், அஸ்வினி முத்திரை, தியானம் உள்பட 12 வகையான கர்ப்பகால யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

கர்ப்பம் தரித்த 3 மாதங்களில் இருந்து குழந்தை பிரசவிக்கும் வரை பெண்களுக்கு இந்த கர்ப்பகால யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் எந்த மாதிரியான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும், எந்த உடற்பயிற்சிகளை செய்யவேண்டும்? என்பது பற்றி மகப்பேறு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஷோபா நேரிலும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

தாய்க்கு மன அழுத்தம் இருந்தால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். இந்த மன அழுத்தத்தை போக்குவதன் மூலமாக ஆரோக்கியமான குழந்தையை பிறக்க வைக்க முடியும். டாக்டர்களின் ஆலோசனையின்படி முறையான உடற்பயிற்சிகளையும் கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டும். யோகா பயிற்சியின் மூலமாக தான் சுகப்பிரசவங்கள் அதிகரிக்கும்.

யோகா செய்வதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் கிடைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தாய், சேய் உடலில் ஆக்சிஜன் சுழற்சி நல்ல முறையில் இருக்கும். இதனால் கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியும் மேம்படும். பிரசவமும் வலி இல்லாமல் விரைவாக நடக்கும். கர்ப்பிணி பெண்களின் மனம் அமைதியாக இருந்தால், அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். அந்த வகையில் யோகா பயிற்சி கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்துக்கு மிகவும் இன்றியமையாதது.

Yoga | Asana | Pregnancy | childbirth | Postpartum psychosis | கர்ப்பம் |

கொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம் - Lipoma Treatment

கொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம் - Lipoma Treatment
கொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்
lipoma-treatment-natural-remedies

சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும். இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது.


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

கொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்
சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள், கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள் அல்ல மற்றும் இது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இந்த கொழுப்பு கட்டிகள் கழுத்து, அக்குள், தொடை, மேற்புற கைகள் போன்ற இடங்களில் தோன்றும்.

சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.


மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.

இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி  அறிந்து கொள்ளலாம்.

கொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்

ஆரஞ்சு பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளது, மேலும் இவற்றில் உள்ள அமிலத்தன்மை, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பயன்படுகின்றது. எனவே கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் ஆரஞ்சு பழத்தை அதிகளவு உட்கொள்ளவும். குறிப்பாக விதை உள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.

ஒரு பருத்தி துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் அந்த முடிப்பை தோய்த்து, ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்து வர வேண்டும்.

கொடிவேலி என்பது ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகும். இந்த மூலிகையால் செய்யப்பட்ட தைலம் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை வாங்கி நம் உடலில் கொழுப்பு கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வர அக்கட்டிகள் மறையும்.

கொழுப்பு கட்டி கரைய  வாரம் ஒரு வேளை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பதால் உடலில் உள்ள ரத்தம் மற்றும் திசுக்களில் கொழுப்பு சேராமல் தவிர்த்து, இது போன்ற கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.