Showing posts with label வாயு முத்திரை. Show all posts
Showing posts with label வாயு முத்திரை. Show all posts

வாயு முத்திரை

வாயு முத்திரை: (வாதநோய் குணப்படுத்தும்.)

நமது ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி காலையில் செய்வது மிகவும் நல்லது.

வாயு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
• இந்த முத்திரை வயிறு மற்றும் குடல்களில் உள்ள வாயு தொந்தரவுகளைப் போக்கும்.
• மலச்சிக்கலை நீக்கும்.
• வாதநோய், மூட்டழற்சி, கீல்வாதம், கை கால் நடுக்கம், பக்கவாதம் நோய்களை குணப்படுத்தும்.
• கழுத்து எலும்பழற்சி, முகவாதம், உட்காது கோளாறினால் கிறுகிறுப்பு, தலைசுற்றல் நோய்களை குணப்படுத்தும்.
• மன அழுத்தம், பொறுமையின்மை, பதட்டம் இவைகளை போக்கும்.

நோய் குணமானவுடன் பயிற்சியை தொடர்ந்து செய்வதை நிறுத்திவிடவேண்டும்.