70 வினாவிடையில் சைவசித்தாந்த சுருக்கம்

 70 வினாவிடையில் சைவசித்தாந்த சுருக்கம்


சைவம்


1. சமயம் என்றால் என்ன?

மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.


2. சைவம் என்றால் என்ன?

சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.


3. சைவ சமயம் எப்போது தோன்றியது?

சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.


4. யார் சைவர்?

சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.


5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?

பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.


6. சமயக் குரவர்கள் யாவர்?

1. திருஞான சம்பந்த நாயனார்

2. திருநாவுக்கரசு நாயனார்

3. சுந்தரமூர்த்தி நாயனார்

4. மாணிக்கவாசகர்


7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?

1. திருநந்தி தேவர்

2. சனற் குமாரமுனிவர்

3. சத்திய ஞான தரிசினிகள்

4. பரஞ்சோதி முனிகள்


8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?

1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்

2. அருள்நந்தி சிவாச்சாரியார்

3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்

4. உமாபதி சிவாச்சாரியார்


9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?

திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.

சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.


10. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?

முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.

இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.


11. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?

பன்னிரு திருமுறையில் முதல் பாடல் 'தோடு' என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.


12. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?

திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.

இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.


13. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?

திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.


14. பஞ்சபுராணம் குறிப்பு தருக.

மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.


15. அகத்தியர் தேவாரத் திரட்டு - குறிப்பு தருக

அகத்திய முனிவர் 'அடங்கள் முறை' முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.

1. குருவருள்

2. பரையின் வடிவம்

3. அஞ்செழுத்து

4. கோயில் திறம்

5. சிவன் உருவம்

6. திருவடிகள் பெருமை

7. அருச்சனைச் சிறப்பு

8. அடிமைத் திறம்


16. தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.

மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.


17. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?

18,497 பாடல்கள்.


18. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?

மொத்தம் பாடியவை கிடைத்தவை

திருஞான சம்பந்த சுவாமிகள் 16,000 383

திருநாவுக்கரசு சுவாமிகள் 49,000 312

சுந்தரமூர்த்தி சுவாமிகள் 38,000 100=மொத்தம் 1,03,000 795


19. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?

திருஞான சம்பந்த சுவாமிகள் - சீர்காழி

திருநாவுக்கரசு சுவாமிகள் - திருவாமூர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநாவலூர்

மாணிக்கவாசகர் - திருவாதவூர்


20. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?

திருஞான சம்பந்த சுவாமிகள் - 16 ஆண்டுகள்

திருநாவுக்கரசு சுவாமிகள் - 81 ஆண்டுகள்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 18 ஆண்டுகள்

மாணிக்கவாசகர் - 32 ஆண்டுகள்


21. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?

சுந்தரமூர்த்தி சுவாமிகள்.


22. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?

அறுபத்து மூவர்.


23. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் ் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?

சாத்திரத்தில் தோத்திரம் - போற்றிப் ப·றொடை

தோத்திரத்தில் சாத்திரம் - திருமந்திரம்


24. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?

பரஞ்சோதி முனிகள்


25. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?

49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். 'துகளறுபோதம்' என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.


26. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?

திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.


27. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?

1. சிவஞான சித்தியார்

2. இருபா இருப·து


28. சித்தாந்த அட்டகம் - விளக்குக

பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.

1. சிவப்பிரகாசம்

2. திருவருட்பயன்

3. உண்மை நெறி விளக்கம்

4. போற்றிப் ப·றொடை

5. கொடிக்கவி

6. வினா வெண்பா

7. சங்கற்பநிராகரணம்

8. நெஞ்சு விடுதூது

என்பவையே அந்த எட்டு நூல்கள்.


29. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

வாகீச முனிவர்


30. வேதங்கள் - குறிப்பு தருக.

வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.


31. ஆகமங்கள் - குறிப்பு தருக.

ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.


32. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.

அகச்சமயம் அகப்புறச்சமயம்

1. பாடாணவாத சைவம் 1. பாசுபதம்

2. பேதவாத சைவம் 2. மாவிரதம்

3. சிவசமவாத சைவம் 3. காபாலம்

4. சிவசங்கிராந்தவாத சைவம் 4. வாமம்

5. ஈசுவர அவிகாரவாத சைவம் 5. பைரவம்

6. சிவாத்துவித சைவம் 6. ஐக்கியவாத சைவம்

புறச்சமயம் புறப்புறச்சமயம்

1. நியாயம் 1. உலகாயதர்

2. சாங்கியம் 2. சமணர்

3. யோகம் 3. செளத்திராந்திகர்

4. மீமாஞ்சை 4. யோகசாரர்

5. வேதாந்தம் 5. மாத்யமிகர்

6. பாஞ்சராத்திரம் 6. வைபாடிகர்


33. சைவசித்தாந்தம் - ஒரு வார்த்தையில் விளக்கம் தருக.

முடிந்த முடிபு.


34. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?

திருமந்திரம்

"கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்

முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே

சொற்பதங் கடந்து துரிசற்று மேலான

தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே"


35. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?

1. தர்க்க ரீதியானது (Logic)

2. அறிவியற் பூர்வமானது (Scientific)

3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)

4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)

5. உலகளாவியது (Universal)

6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)

இன்னும் பல.


36. சற்காரிய வாதம் - சிறுகுறிப்பு தருக.

'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.


37. அளவை - குறிப்பு தருக.

நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.

1. காட்சி அளவை - (பிரத்தியட்சப் பிராமணம்)

2. கருதல் அளவை - (அனுமானப் பிராமணம்)

3. உரை அளவை - (ஆகமப் பிராமணம்)

மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.


38. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?

1. இறைவன் - பதி

2. உயிர் - பசு

3. மலம் - பாசம்

இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.

"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு, பாசம் அநாதி

பதியினைச் சென்று அணுகா பசு பாசம்

பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே"


39. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?

இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.

உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.

மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.


40. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?

பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.

பொது இயல்பு

ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.

(எ.கா) நீரில் வெம்மை

சிறப்பு இயல்பு

ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.

(எ.கா) நீரின் குளிர்ச்சி


41. இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.


42. மும்மூர்த்திகள் யாவர்?

படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்

காத்தல் தொழிலைச் செய்யும் - திருமால்

அழித்தல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்

இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள


43. இறைவனின் எண்குணங்கள் யாவை?

1. தன் வயம் உடைமை.

2. தூய உடம்பு உடைமை.

3. இயற்கை உணர்வு உடைமை.

4. முற்றுணர்வு உடைமை.

5. இயல்பாகவே பாசமின்மை.

6. பேரருள் உடைமை.

7. முடிவில் ஆற்றல் உடைமை.

8. வரம்பில் இன்பம் உடைமை.


44. உயிர்களைத் தோற்றுவித்தவர் யார்?

உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.


45. உயிர்கள் எத்தனை வகைப்படும்?

ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞான கலர், ஆணவம் மற்றும் கன்ம மலம் உடைய பிரளயா கலர், ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்ற மூன்று மலங்களும் உடைய சகலர் என உயிர்கள் மூவகைப்படும்.


46. கேவலம், சகலம், சுத்தம் - குறிப்பு தருக.

கேவலம்:

உயிர்கள் தம்மையும் அறியாமல், தமக்கு மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அறியாமல், தன்னை ஆணவம் என்ற மலம் முழுமையாக மறைத்திருக்கின்றது என்பதை அறியாத உயிரின் நிலை.

சகலம்:

கேவலநிலையில் இருந்த உயிர்களுக்கு மாயை மற்றும் கன்மத் தொடர்பினால் அறியாமை சிறிது குறைந்த நிலை.

சுத்தம்:

உயிர்கள், பாச நீக்கம் பெற்று இறைவனின் திருவடிகளை அடைந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலை.


47. உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?

1. நனவு - சாக்ரம்

2. கனவு - சொப்னம்

3. உறக்கம் - கழுத்தி

4. பேருறக்கம் - துரியம்

5. உயிர்ப்பு அடங்கல் - துரியாதீதம்


48. மலங்கள் எத்தனை வகை? அவை யாவை?

ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.


49. ஆணவ மலத்தின் வேறு பெயர்கள் யாவை?

இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில் 'இருள்' என்ற சொல்லால் பேசப்படும்.


50. கன்ம மலத்தின் காரியங்கள் யாவை?

சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என மூன்றாகும்.

சஞ்சிதம்: (பழவினை)

பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல்

பிரார்த்தம்: (நுகர்வினை)

இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள் (நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி)

ஆகாமியம்: (வருவினை)

இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்.


51. வினை என்றால் என்ன?

நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும்.


52. இன்ப துன்பத்திற்கான காரணம் என்ன?

முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.


53. வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?

வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.


54. நாம் வாழும் இவ்வுலகைத் தோற்றுவித்தவர் யார்?

மாயை என்னும் மலத்திலிருந்து உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு இறைவன் உலகத்தைப் படைத்தார்.


55. மாயை - குறிப்பு தருக.

மாயை என்பது மும்மலங்களில் ஒன்று. இம்மாயையின் காரியங்கள் 36 தத்துவங்களாக் விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.


56. சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணிமுடி நூலாக விளங்குவது எது?

சிவஞான போதம், சிவஞான சித்தியார் இதனுடைய வழிநூல் எனவும், சிவப்பிரகாசம் இதனுடைய சார்பு நூல் எனவும் போற்றப்படும்.


57. கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு சைவ நூல்களில் எவ்வாறு சொல்லப்படுகிறது?

'அத்துவிதம்' என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.


58. சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் யாது?

இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் - அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.

உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய் கூடி நிற்கின்றான்.


59. சைவ சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் யாவை?

குரு, லிங்க, சங்கம, வழிபாடு.

குரு வழிபாடு: நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கும் ஞான ஆசிரியரையே சிவமாகவே கருதி வழிபடுவதாகும்.

லிங்க வழிபாடு: திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை லிங்க திருமேனியில் வழிபடுதல்.

சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவமாகவே கருதி வழிபடுவது.


60. சரியை, கிரியை, யோகம், ஞானம் - விளக்குக

சரியை: உடலால் வழிபடுவது.

கிரியை: உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது.

யோகம்: உள்ளத்தால் வழிபடுவது.

ஞானம்: எங்கும் எதிலும் இறையருளையே காண்பது.


61. திருவைந்தெழுத்து விளக்கம் தருக.

திருவைந்தெழுத்து என்பது சிவாயநம என்னும் மந்திரமாகும்.

சி-சிவன்

வ-சக்தி(அருள்)

ய-உயிர்

ந-மறைப் பாற்றல்

ம-ஆணவ மலம்

என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்கிறது.

திருவைந்தெழுத்து மூவகைப்படும். நமசிவாய, சிவாய நம, சிவயசிவ என்பவை. இம்மந்திரமே பஞ்சாட்சர மந்திரம் என்று கூறப்படும்.


62. தீக்கை என்றால் என்ன?

தீக்கை என்பது தீட்சை என்னும் வடமொழி சொல்லின் திரிபு ஆகும்.

தீ-கெடுத்தல் ஷை-கொடுத்தல்

பாசப்பற்றைக் கெடுத்து மோட்சத்தை கொடுப்பது தீட்சை எனப்படும்.

இது மூன்று வகைப்படும் அவை

1. சமயம் 2. விசேடம் 3. நிருவாணம்


63. இருவினை ஒப்பு என்றால் என்ன?

நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது. அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்றுபோல் கருதி அவற்றின்மேல் பற்று இல்லாமல் நிற்கும் நிலையே இருவினை ஒப்பு எனப்படும்.


64. மலபரிபாகம் என்றால் என்ன?

கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர் அறிவை தடைப்படுத்தியும் திரிபுபடுத்தியும் செயல்படுவதால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலை செய்யமாட்டாத நிலையை அடையும். உயிர் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலை அடையும். இந்நிலையே மலபரிபாகம் எனப்படும்.


65. சத்திநிபாதம் என்றால் என்ன?

மலரிபாகம் சிறிது, சிறிதாக நிகழ, நிகழ அதற்கு ஏற்ப இதுகாறும் உயிரில் மறைத்து இருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சக்தியும் சிறிது, சிறிதாக தன் தன்மை மாறி அருள் சக்தியாக உயிரின் கண் விளங்கித் தோன்றும். அந்நிகழ்ச்சியே சத்திநிபாதம் எனப்படும்.


66. சத்திநிபாதத்தின் வகைகள் யாவை?

மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.


67. முத்தி என்றால் என்ன?

ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.


68. சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி யாது?

உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.


69. சீவன் முக்தர் - குறிப்பு தருக.

முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.


70. தசகாரியம் என்றால் என்ன?

ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.

தத்துவரூபம்

தத்துவ தரிசனம்

தத்துவ சுத்தி

ஆன்ம ரூபம்

ஆன்ம தரிசனம்

ஆன்ம சுத்தி

சிவ ரூபம்

‌ சிவ தரிசனம்

சிவயோகம்

சிவபோகம்


🙏🙏🙏🙏🙏 

ஓம் நமசிவாய

வாராகி காயத்ரி மந்திரம் - Varahi-Amman-slokas

 வாராகி காயத்ரி மந்திரம் - Varahi-Amman-slokas

எதையும் சாதிக்கும் வல்லமை தரும் வாராகி காயத்ரி மந்திரம்

 வாராகி காயத்ரி மந்திரம் - Varahi-Amman-slokas
 வாராகி காயத்ரி மந்திரம் - Varahi-Amman-slokas

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.

வாராகி அம்மன்

ஓம் ச்யாமளாயை விக்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வராஹி ப்ரசோதயாத்


இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும். பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராகி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராகி அம்மனை வழிபடுவது சிறந்தது.

குரு பகவானின் வியாழக்கிழமை விரதம் - Guru-Bhagavan-viratham

குரு பகவானின் வியாழக்கிழமை விரதம் - Guru-Bhagavan-viratham

குரு பகவானின் பூரண அருளை பெற உதவும் வியாழக்கிழமை விரதம்

குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் “வியாழக்கிழமை விரதம்”. இந்த விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.


குரு பகவானின் வியாழக்கிழமை விரதம் - Guru-Bhagavan-viratham
குரு பகவானின் வியாழக்கிழமை விரதம் - Guru-Bhagavan-viratham
குரு பகவானின் வியாழக்கிழமை விரதம் - Guru-Bhagavan-viratham 

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

குரு பகவான்

வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை வறிய நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகி, சிறந்த வாழ்க்கை உண்டாகும்.

சிவபெருமானின் சில அவதாரங்கள் - sivaperuman-avatharam

 சிவபெருமானின் சில அவதாரங்கள் - sivaperuman-avatharam


சிவபெருமானைப் பொறுத்தவரை, அவரது 64 வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக வணங்கப்படுகின்றன. அதோடு சிவபெருமானும் கூட, மகாவிஷ்ணுவைப் போல சில அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.


 சிவபெருமானின் சில அவதாரங்கள் - sivaperuman-avatharam
சிவபெருமானின் சில அவதாரங்கள் - sivaperuman-avatharam
 சிவபெருமானின் சில அவதாரங்கள் - sivaperuman-avatharam

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

சிவன்

உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, இறைவன் பூமியில் தோன்றுவதை ‘அவதாரம்’ என்கிறோம். அந்த வகையில் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவற்றுள் 10 அவதாரங்கள் பெருமைமிக்கதாக போற்றப்படுகிறது. சிவபெருமானைப் பொறுத்தவரை, அவரது 64 வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக வணங்கப்படுகின்றன. அதோடு சிவபெருமானும் கூட, மகாவிஷ்ணுவைப் போல சில அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

நந்தியம்பெருமான்

நந்தியானவர், சிவபெருமானின் வாசல் காப்பாளன். அவரது அனுமதியின்றி எவரும் ஈசனைக் காண இயலாது என்று புராணங்கள் சொல்கின்றன. அதோடு அந்த நந்தியும் கூட, சிவபெருமானின் ஒரு அவதாரமே என்றும் சில புராணங்கள் சொல்கின்றன. பெரிய காளையின் தோற்றத்தில் இருக்கும் நந்திக்கு, சிவாலயங்கள் அனைத்திலும் வழிபாடுகள் இருப்பதை நாம் காண முடியும். பிரதோஷத்தின் போது, இந்த நந்தியே வழிபாடுகளில் முக்கியமானவராக இருப்பார். மந்தைகளின் பாதுகாவலனாக, சிவபெருமானின் இந்த நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது.

ரிஷபம்

அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தனர். இந்த நிகழ்வுக்குப்பிறகு, பாதாள உலகத்திற்குச் சென்று சில காலம் தங்கினார், மகாவிஷ்ணு. அப்போது அங்கிருந்த ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அவர்களுக்கு பல பிள்ளைகள் பிறந்தன. ஆனால் அவர்கள் அனைவருமே அரக்கத்தன்மை கொண்டவர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் தொல்லைகளை அளித்து வந்தனர். இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டி நின்றனர். சிவபெருமானும் ‘தருமம்’ என்னும் ரிஷப வடிவம் கொண்டு, விஷ்ணுவின் பிள்ளைகள் அனைவரையும் அழித்தார். தன் மகன்களை அழித்த, காளையுடன் சண்டையிட வந்தார் விஷ்ணு. ஆனால் அது சிவபெருமானின் அவதாரம் என்பதை அறிந்ததும், அவர் தன் இருப்பிடத்திற்கு திரும்பினார்.

வீரபத்திரர்

தட்சன் நடத்திய யாக சாலையில், தன்னையே மாய்த்துக் கொண்டார் பார்வதி. இதனால் தட்சன் மீது சிவபெருமானுக்கு கடும் கோபம் உண்டானது. அப்போது அவரது உடலில் ஏற்பட்ட உஷ்ணத்தால் வியர்வைத் துளி உண்டானது. அந்த வியர்வையில் இருந்து தோன்றியவர்தான் வீரபத்திரர். இவரும் சிவபெருமான் அவதாரத்தில் ஒருவராகவே கருதப்படுகிறார். சிவபெருமானின் கடுமையான அவதாரமாக, வீரபத்திரர் அவதாரம் பார்க்கப்படுகிறது. மூன்று கடுஞ்சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருப்பவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் தட்சனின் வெட்டுண்ட தலையை கரத்தில் தாங்கியபடி இருக்கும்.

அஸ்வத்தாமன்

அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் வெளிவந்தது ஆலகாலம் என்னும் கொடிய விஷம்தான். அந்த விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார். அது அவர் உடல் முழுவதும் பரவாமல் இருக்க பார்வதி தேவி, ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார். அதனால் விஷம் தொண்டையிலேயே நின்று விட்டது. கழுத்தில் நின்ற விஷத்தால் ஈசனுக்கு எரிச்சல் உண்டானது. அந்த எரியும் தன்மை ஒரு உருவம் பெற்று வெளிப்பட்டது. அந்த உருவத்திற்கு ஒரு வரமும் கொடுத்தார் ஈசன். ‘பூமியில் துரோணனின் மகனாகப் பிறந்து அனைத்து சத்திரியர்களையும் கொல்வான்’ என்பதே அந்த வரம். அந்த உருவ அவதாரமே ‘அஸ்வத்தாமன்’ என்கிறார்கள்.

பைரவர்

ஆதி காலத்தில் சிவபெருமானைப் போலவே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் பிரம்மன், தன்னையும் ஈசனுக்கு நிகரானவராக எண்ணி ஆணவம் கொண்டார். இதை அறிந்த சிவபெருமான் எடுத்த அவதாரமே ‘பைரவர்’ அவதாரம். இப்படி பைரவராக தோன்றிய சிவபெருமான், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை தனது கைகளால் கொய்தார். வேதங்களைக் கற்றறிந்த பிரம்மனின் தலையைக் கொய்ததால், பைரவருக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. இதனால் பிரம்மனின் தலையானது, மண்டை ஓடாக பைரவரின் கைகளைப் பற்றிக்கொண்டது. இதையடுத்து அந்த மண்டை ஓட்டில் பிச்சைஎடுத்து நிரம்பும் வேளை வரை, 12 ஆண்டுகள் பிட்சாடனராக திரிய வேண்டிய நிலை பைரவருக்கு ஏற்பட்டது. பைரவர் வடிவத்தில்தான், அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வருவதாக நம்பப்படுகிறது.

வேட்டைக்காரன்

ஒரு முறை வனத்திற்குச் சென்ற அர்ச்சுனன், அங்கு கடுமையான தவத்தை மேற்கொண்டான். அந்த நேரத்தில் அவனைக் கொல்வதற்காக, ‘மூக்கா’ என்ற அசுரனை துரியோதனன் வனத்திற்கு அனுப்பினான். காட்டுப்பன்றி உருவமெடுத்த அந்த அசுரன், அர்ச்சுனனைக் கொல்ல விரைந்து வந்தான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ச்சுனனுக்கு, காட்டுப்பன்றியின் சத்தம் கவனச் சிதறலை உண்டாக்கியது. இதையடுத்து கண்களைத் திறந்து பார்த்த அர்ச்சுனன், தன்னை நோக்கி வரும் காட்டுப்பன்றியை வீழ்த்த அம்பு எய்தினான். அப்போது எங்கிருந்தோ வந்த மற்றொரு அம்பும் அந்தக் காட்டுப்பன்றியின் உடலை துளைத்தது. மற்றொரு அம்பு வந்த திசையை அர்ச்சுனன் நோக்கியபோது, அங்கு ஒரு வேடுவன் வந்து கொண்டிருந்தான். இப்போது ‘யார் முதலில் காட்டுப்பன்றியை வீழ்த்தியது’ என்ற சச்சரவு அவர்களுக்குள் எழுந்தது. ஒரு கட்டத்தில் வேடுவனாக இருந்த சிவபெருமான், தான் யார் என்பதை அர்ச்சுனனுக்கு காட்டினார். அர்ச்சுனன், சிவபெருமானை வணங்கி நின்றான். இதையடுத்து அவனுக்கு பாசுபத அஸ்திரத்தை ஈசன் வழங்கினார்.

யாதிநாத்

ஆகூக் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவனும், அவனது மனைவியும் தீவிரமான சிவ பக்தர்கள். அவர்கள் பக்தியின்பால் ஈர்ப்பு கொண்ட சிவபெருமான், யாதிநாத் என்ற பெயரில் ஒரு அதிதி போல, ஆகூக் குடிசைக்கு சென்றார். அந்த குடிசையில் இருவர் மட்டுமே தங்க முடியும். அதனால் அன்றிரவு கணவனும் மனைவியும் வெளியில் படுத்துக் கொண்டு, அதிதியாக வந்தவரை, வீட்டிற்குள் தங்கியிருக்க அனுமதித்தனர். அன்று இரவு கொடிய வன விலங்கு ஒன்றால் ஆகூக் கொல்லப்பட்டான். இதையடுத்து அவனது மனைவியும் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முன்வந்தாள். அப்போது அவர்கள் இருவருக்கும் முக்தியை அளித்த சிவபெருமான், அவர்களை பின்னாளில் நளன், தமயந்தியாக பிறக்கும்படி வரமளித்தார்.

இளநீர்- சியா ஜூஸ் - Chia-Seed-Coconut-Water-With-Lemon

 இளநீர்- சியா ஜூஸ் - Chia-Seed-Coconut-Water-With-Lemon

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இளநீர்- சியா ஜூஸ்

உடலுக்கு புத்துணர்ச்சியும், உடல் சூட்டை குறைக்கவும் உதவும் இளநீருடன் சியா விதை, லெமன் சேர்த்து சத்தான பானம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

 இளநீர்- சியா ஜூஸ் - Chia-Seed-Coconut-Water-With-Lemon
இளநீர்- சியா ஜூஸ் - Chia-Seed-Coconut-Water-With-Lemon
 இளநீர்- சியா ஜூஸ் - Chia-Seed-Coconut-Water-With-Lemon

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

இளநீர்- சியா ஜூஸ்

தேவையான பொருட்கள்

இளநீர் - 1 கப்

சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - சிறிதளவு

செய்முறை


இளநீரில் சியா விதைகளைப் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இளநீர்- சியா பானம் ரெடி.


பச்சை மிளகு ஊறுகாய் - Raw-Black-Pepper-Pickle

 பச்சை மிளகு ஊறுகாய் - Raw-Black-Pepper-Pickle

பல்வேறு வகையான ஊறுகாய்களை பார்த்து இருப்பீங்க. இன்று பச்சை மிளகு வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 பச்சை மிளகு ஊறுகாய் - Raw-Black-Pepper-Pickle
பச்சை மிளகு ஊறுகாய் - Raw-Black-Pepper-Pickle
 பச்சை மிளகு ஊறுகாய் - Raw-Black-Pepper-Pickle

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

மிளகு ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகு - 200 கிராம்,

 எலுமிச்சைப்பழம் - 6,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பச்சை மிளகு கொத்து கொத்தாக இருக்கும். இதில் முற்றிய மிளகு உள்ளதாகப் பார்த்து வாங்கவும்.

இந்த மிளகை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, எலுமிச்சைச்சாறு, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

நன்றாக ஊறியதும் பச்சை நிறம் மாறி, மஞ்சள் நிறமாக ஆகும். அப்போது ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் கெட்டுப் போகாமல் இருக்கும். நீண்ட நாள்கள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.

சிறப்பு: மிளகு, உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி ரத்தத்தை சுத்திகரிக்கும்.

கிருத்திகை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள் - karthigai-viratham

கிருத்திகை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள் - karthigai-viratham

ஆவணி கிருத்திகை தினமான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதால் கிடைக்கும் மிகச் சிறப்பான பலன்களை தெரிந்து கொள்ளலாம்.


கிருத்திகை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள் - karthigai-viratham
கிருத்திகை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள் - karthigai-viratham

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

முருகன்

முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பான ஒரு தினமாக ஆவணி கிருத்திகை தினம் இருக்கிறது. இந்த ஆவணி கிருத்திகை பெரும்பாலும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் வருகின்றது. எனினும் இந்த மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது நன்மை தரும்.

முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.


வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்ககளில் ஏதாவது ஒரு வகையினை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படியான முறைகளில் முருகனை ஆவணி மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு உங்கள் வீட்டின் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேசரி, பஞ்சாமிர்தம் போன்றவற்றை இந்த தினத்தில் பிரசாதமாக வழங்கி நீங்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த ஆவணி மாத கிருத்திகை வழிபாடு மற்றும் விரதம் மேற்கொள்வதால் உங்களுக்கு ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள்,காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.

உருளைக் கிழங்கு பேஸ் பேக்

உருளைக் கிழங்கு பேஸ் பேக்

முக அழகினைக் கூட்டும் வகையில் பலவகையான மாஸ்க்குகளை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முக அழகினைக் கூட்டும் வகையிலான உருளைக் கிழங்கு பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


உருளைக் கிழங்கு பேஸ் பேக் - Potato-Face-Pack
உருளைக் கிழங்கு பேஸ் பேக் - Potato-Face-Pack

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு- 3

பால்- 2 ஸ்பூன்

ஓட்ஸ்- 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

செய்முறை :

1. உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். ஓட்ஸினை பொடித்துக் கொள்ளவும்.

2. அடுத்து இதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.

3. 30 நிமிடங்கள் இதனை ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.

இந்த மாஸ்க்கினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும். அதன்பின்னர் முகத்தினை குளிர்ந்தநீரால் கழுவவும். முக அழகானது கூடும்.

சுரைக்காய் அல்வா - Bottle-Gourd-Halwa

சுரைக்காய் அல்வா - Bottle-Gourd-Halwa


சுரைக்காய் அல்வா - Bottle-Gourd-Halwa
சுரைக்காய் அல்வா - Bottle-Gourd-Halwa
சுரைக்காய் அல்வா - Bottle-Gourd-Halwa

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753


நாம் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு போன்றவற்றில் அல்வா செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இன்று சுவை மிகுந்த சுரைக்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுரைக்காய் அல்வா

தேவையான பொருட்கள்

சுரைக்காய் - 3 கப்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

பால் - 3 கப்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

சர்க்கரை - 3/4 கப்

பாதாம் - 7

சுரைக்காய் அல்வா

செய்முறை

முதலில் சுரைக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் நெய் ஊற்றி சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் பால் ஊற்றி, வேக விட்டு ஏலக்காய் சேர்த்து வேகவிடவும்.

சுரைக்காய் வெந்ததும் இறுதியாக சர்க்கரை மற்றும் பாதாம் சேர்த்து இறக்கினால், சுரைக்காய் அல்வா ரெடி!!!