Showing posts with label ஆரோக்கிய வாழ்விற்க்கு சில அன்றாட பழக்கங்கள் !!!. Show all posts
Showing posts with label ஆரோக்கிய வாழ்விற்க்கு சில அன்றாட பழக்கங்கள் !!!. Show all posts

ஆரோக்கிய வாழ்விற்க்கு சில அன்றாட பழக்கங்கள் !!!

ஆரோக்கிய வாழ்விற்க்கு சில அன்றாட பழக்கங்கள் !!!

1.காலை எழுந்தவுடன் நிதானமாக 1லி தண்ணீர் பருகுங்கள் இதற்காக 30-40 நிமிடங்கள் ஆனாலும் பரவாயில்லை.
இதனால் மலச்சிக்கல் ஏற்படா வண்ணம்.வரண்டுபோன திசுக்கள் புத்துணர்வு பெறுகின்றன.திசு இழப்பு குறைகிறது.
2. காலை பல்துலக்கும் போதும்,குளிக்கும்போதும் தொண்டைக்குழியை சுத்தம் செய்யுங்கள். அப்போது நாசியும் சேர்ந்து சுத்தமாகும்.
இதனால் தொண்டை, நாசியிலுள்ள சளி,தலையிலுள்ள நீர் இறங்கி சுவாசம் சீராகும்.தலைவலி,ஜலதோஷ தொல்லை எழா.
3.காலையில் மனதிற்க்கு பயிற்ச்சியும் மாலையில் உடலுக்கு பயிற்ச்சியும் கொடுங்கள்.
காலை உடலை வருத்தாமல் தியானம், மூச்சுப்பயிற்ச்சி, யோகா செய்வதால் மனம் அமைதியடைந்து படபடப்பு (டென்ஷன்) இரத்த அழுத்தம்(BP) ஏற்படுவதில்லை.வீண்
சத்து இழப்பு(CALORIE LOSS) இல்லாமையால் பணிகளை செவ்வனே செய்ய முடிகிறது. மாலையில் உடலுக்கு பயிற்சியால் உணவு செரித்து,கொழுப்புகள் போன்றவை
கரைந்து விடுகின்றன.
4.உணவு உண்டபின் அரைமணி நேரம் கழித்து தண்ணீர் அதிகம் பருகுங்கள்.
தண்ணீர் அதிகம் பருகுவதால் உணவு கரைந்து எளிதாக குடலுக்குள் செல்வதால் குடல்வாயு கலைகிறது. அதனால் அஜீரனம்,முதுகுவலி,மூட்டுவலி ஏற்படுவதில்லை
5.இரவு எளிய உணவுகளை முன்னிரவில் (8மணிக்குமுன்) எடுத்துக்கொள்ளுங்கள்.அதற்குப்பின் என்றால் பழமும் பாலும் மட்டும் சாப்பிடுங்கள்.
6.இரவு அதிகம் கண் விழிக்காதீர்கள்.கணிணி,
தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவற்றை தவிருங்கள்.
பறவைகள்,விலங்குகள் கூட மாலையில் தம் இருப்பிடம் திரும்பி ஓய்வெடுக்கும்போது, நாம்மட்டும் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் இரவு விழித்து ஆரோக்கியம் கெடுப்பது ஏன் ? தண்ணீரில் உண்டான உடலுக்கு, பின்னர் தண்ணீர்காட்ட மறுப்பது ஏன்?