Showing posts with label கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை. Show all posts
Showing posts with label கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை. Show all posts

கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை

கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை !!!

• கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.
• கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.
• வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
• கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணியக் கூடாது.
• சோம்பல் முறித்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
• பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்லவதை தவிர்க்கலாம்.
• போகின்ற போக்கில் ஒரு கையால் வணங்கி விட்டு செல்லக் கூடாது.
• மேலே துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.
• நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
• கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
• கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.
• பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
• அஷ்டமி, நவமி, அமாவசை, பௌர்ணமி, மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
• ஆலயத்தில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கலாம்.
• தெய்வ வழிபாடு ஈர துணி உடுத்தக் கூடாது.
• கோவிலுக்குள் குளிக்காமல் செல்லக் கூடாது.
• சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
• கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கால்களை கழுவ வேண்டும்
• கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
• கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
• ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக் கூடாது.
• கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
• நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்யும் படி இருக்கக் கூடாது