பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் - women-focus-on-bone-health

 பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தில்  கவனம் வேண்டும் - women-focus-on-bone-health


அன்றாடம் சாப்பிடும் உணவு கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யாது. கால்சியம் நிறைந்த பொருட்களுடன் வைட்டமின் டி சத்து கொண்ட ஏதாவது ஒரு பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?


எலும்பு சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே அதனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உடலமைப்பை கட்டமைத்தல், உறுப்புகளை பாதுகாத்தல், தசைகளை வலுப்படுத்துதல், கால்சியத்தை சேமித்தல் என உடல் நலத்தில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தை பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் வலுவான, ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவது முக்கியம்.

இருப்பினும் இளமை பருவத்தில் எலும்புகளை பாதுகாப்பாக பராமரிப்பது அவசியம். பெண்களை பொறுத்தவரை, 30 வயதுக்கு பிறகு எலும்பில் இருக்கும் கால்சியம் குறையத் தொடங்கும். உலக அளவில் இந்திய பெண்கள்தான் எலும்பு ஆரோக்கிய பிரச்சினையால் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பெண்களுடன் ஒப்பிடும்போது இந்திய பெண்களுக்கு எலும்பு எடை அல்லது எலும்பு வலிமை குறைவாக இருக்கிறது. சிறிய அல்லது மெல்லிய எலும்புகள் கொண்ட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் தொடர்பான எலும்பு எடை ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்பாடு காரணமாக ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறுகிறது. இந்த ஹார்மோன்தான் எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. அதேவேளையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறையும்போது மெனோபாஸ் நெருங்கும். மேற்கத்திய பெண்களுடன் ஒப்பிடும்போது இந்திய பெண்கள் முன்கூட்டியே மெனோபாஸ் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். இது விரைவாகவே எலும்பு வலிமை குறைவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

பொதுவாகவே எலும்புகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவுகளை இந்திய பெண்கள் குறைவாகவே உட்கொள்கிறார்கள். ஆண்களுடன் ஒப்பிடும்போது,​கால்சியம் நிறைந்த உணவுகளான பால் மற்றும் தயிர் போன்றவற்றை பெண்கள் உட்கொள்ளும் அளவு குறைவு. அதுபோல் இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவற்றை தவிர்ப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். இந்திய பெண் களிடையே எலும்பு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லை என்பதையே ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. உடற்பயிற்சி, உணவு பழக்கவழக்கம், கால்சியம், வைட்டமின் டி கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல், மது, புகை பழக்கத்தை தவிர்த்தல் போன்றவை எலும்பு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்க அல்லது குறைக்க உதவும்.

அன்றாடம் சாப்பிடும் உணவு கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யாது. கால்சியம் நிறைந்த பொருட்களுடன் வைட்டமின் டி சத்து கொண்ட ஏதாவது ஒரு பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

உடலில் கால்சியம் சத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு மருத்துவர்கள் கால்சியம் மாத்திரைகளை பரிந்துரைப்பதுண்டு. அவற்றை விழுங்குவதற்கு சிரமமாக இருப்பதாக சிலர் புகார் கூறுகிறார்கள். தற்போது மென்று சாப்பிடக் கூடிய வகையில் மாத்திரைகள் வந்திருக்கின்றன. அவற்றை சுவைப்பதற்கும் நன்றாக இருக்கும். அதனால் சிரமப்பட தேவையில்லை. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதனை சாப்பிடக்கூடாது.

Women Health | பெண்கள் உடல்நலம்

27 நட்சத்திரக்குரிய பைரவ தலங்கள் - Nakshtra-Bhairava-temples

 27 நட்சத்திரக்குரிய பைரவ தலங்கள் - Nakshtra-Bhairava-temples


வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்... மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் “பைரவா... காப்பாற்று’’ என்று அழைத்துப் பாருங்கள், ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.

27 நட்சத்திரக்குரிய பைரவ தலங்கள் - Nakshtra-Bhairava-temples
27 நட்சத்திரக்குரிய பைரவ தலங்கள் - Nakshtra-Bhairava-temples

பைரவர்

27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர்களும், தலங்களும் வருமாறு:-

1.அஸ்வினி: ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைவருக்கு நாய் வாகனம் இல்லை.

2.பரணி: ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.

3.கார்த்திகை: ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.

4.ரோகிணி: ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.

5.மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)

6.திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)

7.புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமிகள் மடாலயம்.

8.பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.

9.ஆயில்யம்: ஸ்ரீ பாதாள பைரவர்-காளஹஸ்தி.

10.மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.

11.பூரம்: ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.

12.உத்திரம்: ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்-சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.

13.அஸ்தம்: ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.

14.சித்திரை: ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி-மல்லிகார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.

15.சுவாதி: ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.

16.விசாகம்: ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.

17.அனுஷம்: ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.

18.கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர்-சூரக்குடி-சொக்கநாதர் கோவில்.

19.மூலம்: ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.

20.பூராடம்: ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.

21.உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்-  கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.

22.திருவோணம்:திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்-வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.

23.அவிட்டம்:  சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி.

24.சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.

25.பூரட்டாதி: கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.

26.உத்திரட்டாதி: ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்-சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.

27.ரேவதி: ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்-தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.

Temples | Bhairava | Nakshtra | கோவில் | பைரவர் | நட்சத்திரம் | 

அஷ்ட பைரவர்கள் காயத்ரி மந்திரங்கள் - Ashta-bhairava-Gayatri-mantra

 அஷ்ட பைரவர்கள் காயத்ரி மந்திரங்கள் - Ashta-bhairava-Gayatri-mantra

அஷ்ட பைரவர்கள் காயத்ரி மந்திரங்கள் 

Ashta-bhairava-Gayatri-mantra

திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான காயத்ரி மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.

அஷ்ட பைரவர்கள் காயத்ரி மந்திரங்கள் - Ashta-bhairava-Gayatri-mantra
அஷ்ட பைரவர்கள் காயத்ரி மந்திரங்கள் - Ashta-bhairava-Gayatri-mantra

அஷ்ட பைரவர்கள்

மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.

திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ( சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

01. அசிதாங்க பைரவர்‬: அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ‪‎குருவின்‬ கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

“ஓம் ஞான தேவாய வித்மஹே

வித்யா ராஜாய தீமஹி

தந்நோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்.”


“ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே

கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி

தந்நோ பிராம்ஹி ப்ரசோதயாத்.”

02. ‪‎ருரு பைரவர்‬: ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். #ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ‪‎#சுக்கிரனின்‬ கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.

“ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே

டங்கேஷாய தீமஹி

தந்நோ ருருபைரவ ப்ரசோதயாத்.”


“ஓம் வருஷத் வஜாய வித்மஹே

ம்ருக ஹஸ்தாயை தீமஹி

தந்நோ ரவுத்ரி ப்ரசோதயாத்.”

03. சண்ட பைரவர்: சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

“ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே

மஹாவீராய தீமஹி

தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்”


“ஓம் சிகித்வஜாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ கவுமாரி ப்ரசோதயாத்.”

04. குரோதன பைரவர்: குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

“ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே

லட்சுமி தராய தீமஹி

தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்”


“ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.”

05. உன்மத்த பைரவர்: உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராஹி விளங்குகிறாள்.

“ஓம் மஹா மந்த்ராய வித்மஹே

வராஹி மனோகராய தீமஹி

தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்.”


“ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே

தண்ட ஹஸ்தாயை தீமஹி

தந்நோ வராஹி ப்ரசோதயாத்.”

06. கபால பைரவர்: கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

“ஓம் கால தண்டாய வித்மஹே

வஜ்ர வீராய தீமஹி

தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத்.”


“ஒம் கஜத்வஜாய வித்மஹே

வஜ்ர ஹஸ்தாய தீமஹி

தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்.”

07. பீக்ஷன பைரவர்: பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

“ஓம் சூலஹஸ்தாய வித்மஹே

ஸர்வானுக்ராய தீமஹி

தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்”


“ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தந்நோ காளி ப்ரசோதயாத்.”

08. சம்ஹார பைரவர்: சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். -நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

“ஓம் மங்களேஷாய வித்மஹே

சண்டிகாப்ரியாய தீமஹி

தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்”


ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே

மஹாதேவி ச தீமஹி

தந்நோ சண்டி ப்ரசோதயாத்.”


“ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தன்னோ பைரவ ப்ரசோதயாத்.”


“ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே

ஸ்வாந வாஹாய தீமஹி

தந்நோ பைரவ ப்ரசோதயாத்.”


“ஓம் திகம்பராய வித்மஹே

தீர்கதிஷணாய தீமஹி

தந்நோ பைரவ ப்ரசோதயாத்.”


தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி! போற்றி!


Gayatri mantra | bhairava | காயத்ரி மந்திரம் | பைரவர்