Showing posts with label பெண்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை. Show all posts
Showing posts with label பெண்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை. Show all posts

பெண்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

பெண்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
ladies-driving-safety


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, மெஷின்கள் மற்றும் வாகனங்களைக் கையாளும்போது, பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தலைமுடி மற்றும் ஆடை மீது கண் இருக்கட்டும்.

திரைப்படங்களில் தேவதையைப்போல வண்டி ஓட்டிவரும் நாயகியின் சுடிதார் துப்பட்டா பறந்துபோய், நாயகன் முகத்தை மூடுவதும், அப்போது தென்றல் வீசுவதும் நடக்கும். படத்துக்கு அது ஓகே. நிஜத்தில் அப்படி நடந்தால், வாழ்க்கையில் புயல்தான் வீசும். அதனால், சுடிதார் துப்பட்டாவின் இரண்டு நுனிகளையும் சேர்த்து முடிச்சுப்போட்டு வண்டி ஓட்டுவதுதான், பெண்களுக்கும் பாதுகாப்பு.

புடவை முந்தானை அல்லது துப்பட்டா மட்டுமின்றி, தரையில் புரள்வது போன்ற நீளமான ஆடைகளும் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு. இதுபோன்ற ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, வண்டிகளில் 'சாரி கார்டு' இருப்பதுதான் முதல் பாதுகாப்பு வழி. உங்கள் ஆடை வண்டிச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டால், அப்படியே சாலையில் விழும் நிலை உண்டாகும். எலும்பு முறிவு, ஹெல்மெட் போடவில்லையென்றால் தலையில் அடிபடுவது, பின்னால் வேகமாக வரும் வண்டியினால் ஏற்படும் விளைவு என ஆபத்தின் நீளம் பெரியது.

கழுத்தைச் சுற்றி துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு வண்டி ஓட்டும்போது, துப்பட்டா சக்கரத்தில் மாட்டி இழுபட்டால், கழுத்து எலும்பும் முறிந்துவிடும். உயிருக்கும் பெரும் ஆபத்தாக மாறலாம். திக்கானத் துணியில் துப்பட்டா போட்டுக்கொண்டிருந்தால், அது வண்டி சக்கரத்தில் மாட்டும்போது, காத்தாடி நூல் எப்படி கழுத்தை அறுக்குமோ அதுபோன்று நிகழ்ந்துவிடும். புடவை முந்தானை வண்டிச் சக்கரத்தில் சிக்கினால், அது என்ன மாதிரியான சங்கடங்களை ஏற்படுத்தும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இதுதவிர, லிஃப்டில் ஏறும்போதும், காரில் ஏறும்போதும்கூட துப்பட்டா அல்லது முந்தானை கதவில் சிக்கியுள்ளதா என்பதைக் கவனியுங்கள்''

'ஓரளவுக்கு நீளமான தலைமுடி இருக்கும் பெண்கள், பெடஸ்டல் ஃபேனில் முடியைக் காயவைக்கும்போதும், ஃபேன் அருகில் முடியை விரித்துப்போட்டு வேறு வேலையாக நின்றிருக்கும்போதும் கவனமாக இருக்கவும். கண்மூடித் திறக்கும் நேரத்தில் காற்றின் இழுவிசை வேகத்தில், தலைமுடி ஃபேனுக்குள் சிக்கிக்கொள்ளலாம். இதுபோன்ற ஃபேனுக்குள் இருக்கும் பிளேடுகள் பெரும்பாலும், தடிமனான இரும்பால் செய்யப்பட்டிருக்கும். ஃபேனும் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால், தலைமுடியானது ஸ்கால்ப்புடன் பிய்ந்துவிடும்.