Showing posts with label கங்கை வழிபட்ட விஸ்வநாதர். Show all posts
Showing posts with label கங்கை வழிபட்ட விஸ்வநாதர். Show all posts

கங்கை வழிபட்ட விஸ்வநாதர்

கங்கை வழிபட்ட விஸ்வநாதர் !!!


மயிலாடுதுறையில் காவிரியின் வடக்கே அமைந்துள்ளது விஸ்வநாதர் ஆலயம். சுமார் 2000 ஆண்டுகள் பழைமையானது இக்கோயில். சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படும் ஏழு மகரிஷிகளில் முதன்மையானவர் கன்வமகரிஷி.

“மக்கள் அனைவரும் காசியில், கங்கை நதியான என்னில் நீராடி பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர். அந்தப் பாவங்கள் என் மீது அமர்ந்து விடுகின்றன. அவை தீர என்ன வழி?” என்று கன்வமகரிஷியிடம் வருந்தினாள் கங்கை. அவளிடம் துலா மாதமாகிய ஐப்பசி மாதத்தில் மாயூரம் சென்று காவிரியில் நீராடினால் உன் பாவம் தீரும் என்றார் கன்வமகரிஷி. அதன்படி மயிலாடுதுறை வந்து காவிரியில் நீராடினாள் கங்கை. காசியில் இருந்து கன்வரிஷி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த விஸ்வநாதரையும் வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றாள்.

இக்கோயிலில் வேறு எங்கும் காணமுடியாத ஸ்ரீநடராஜர் ரகசிய யந்திரம் பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் விசாலாட்சியை வழிபடுவோர்க்கு திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.