பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள்

பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள்
Mental-disorders-for-mothers-after-delivery


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கருவுறும்போது பெண்கள் எப்படி உடல், மனரீதியிலான மாற்றங்களைச் சந்திக்கிறார்களோ, அதேபோல் இந்த பிரசவத்திற்கு பிறகான காலத்திலும் பல மாற்றங்களைச் சந்திக்கிறார்கள்.

எல்லா தாய்மார்களுக்கும், குழந்தை பிறந்தவுடனேயே தங்கள் குழந்தையின் மீது பிணைப்பு வந்துவிடும் என்று சொல்ல முடியாது. பல தாய்மார்களுக்கு இந்தப் பிணைப்பு உடனடியாக வராது. கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை பிரசவவலியை அனுபவித்த பிறகுதான், ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

இதன் காரணமாக அவள் மிகவும் சோர்வாகயிருப்பாள். சிசேரியன் என்றால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாய்க்கு அது சார்ந்த வலி, சோர்வு இரண்டுமே இருக்கும். அலுத்துக் களைத்திருக்கும் தாயின் மனம் ஓய்வை நாடும். இதற்கிடையே, அந்த நேரத்தில் பிறந்த பிஞ்சுக்குழந்தை அழுதுகொண்டே இருக்கும். நேரம் பார்த்து, தாய் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒருபக்கம் உடல் அவஸ்தைகள், மறுபக்கம் குழந்தைப் பராமரிப்பு என்று அழுத்த, அந்தத் தாய்க்கு தூக்கம் சரியாகயிருக்காது.


 பல தாய்மார்களுக்கு பிரசவித்த உடனேயே தங்கள் குழந்தை மேல் பிணைப்பு வந்துவிடுவதில்லை. அதற்கு அவர்களுக்குக் குறைந்தது இரண்டு வாரங்களாவது தேவைப்படலாம். இன்னும் சிலருக்கு மூன்று மாதங்கள்கூட பிடிக்கலாம். ஏனென்றால், குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்கள்வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது, சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது என்றிருக்கத்தான் தாய்க்கு நேரம் சரியாக இருக்கும்.

மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் குழந்தை, தாயின் செய்கைகளுக்குப் பதில் கொடுக்க ஆரம்பிக்கும். தாய் சிரித்தால் குழந்தையும் சிரிக்கும். கொஞ்சி அழைத்தால், திரும்பிப் பார்க்கும். தாயுடன் விளையாட ஆரம்பிக்கும். இப்படித்தான் ஒரு தாய்க்குத் தன் குழந்தை மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பிணைப்பு வர ஆரம்பிக்கும். அதனால் போஸ்ட்பார்ட்டம் காலகட்டத்தில், ‘என்னடா நமக்கு நம் குழந்தையின் மேல் பிணைப்பே வரவில்லை’ என்று தாய் வருந்தவேண்டிய அவசியம் இல்லை.



கருவுற்ற காலத்தில் மனஅழுத்தத்தைச் சந்தித்த பெண்கள், குழந்தைப் பேற்றுக்குப் பிறகு மறுபடியும் அதே பிரச்னையைச் சந்திக்க அதிகளவில்  வாய்ப்பிருக்கிறது. சரியாகச் சாப்பிடாமல், போராடி குழந்தை பெற்று, குழந்தை பிறந்த பிறகு சரியாகத் தூங்காமல் நாள்களை நகர்த்தவேண்டிய சூழ்நிலை ஒரு தாய்க்கு ஏற்படுகிறது. குறிப்பாக முதல் குழந்தையின் தாய் என்றால், அந்தத் தாய்க்கு குழந்தை வளர்ப்பு குறித்த பயமும், சந்தேகங்களும், குழப்பங்களும் நிறைய இருக்கும். ‘நான் ஒரு சிறந்த அம்மாவாக இருக்க முடியுமா… என் குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியுமா?’ என்று அவர்கள் அதிகம் கவலைப்பட ஆரம்பிப்பார்கள்.

‘இதெல்லாம் ஒண்ணுமே இல்லை, நாங்க உன்கூட இருக்கோம்… கவலைப்படாதே’ என்று ஆற்றவும் தேற்றவும் வீட்டில் பெரியவர்கள் இருக்கும்பட்சத்தில் இந்த நிலையிலிருந்து ஒரு பெண்ணால் சுலபமாக வெளியே வந்துவிட முடியும். அப்படி உதவிக்கு யாரும் இல்லாமல் வீடு, குழந்தை வளர்ப்பு என்று சகலத்தையும் தான் ஒருவர் மட்டுமே பார்த்தாக வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருக்கும் பெண்கள் அதிகளவில் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். கோபம், அழுகை, இயலாமை, சோர்வு இவையெல்லாம் அவர்களை ஆட்கொண்டுவிடுகின்றன.

இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு துணை தேவைப்படுகிறது. அதனால் அந்தப் பெண்ணின் தாய் அல்லது மாமியார் அவருடன் இருப்பது நலம். இவை எல்லாவற்றையும்விட, போஸ்ட்பார்ட்டம் நிலையை ஒரு பெண் இயல்பாகக் கடக்க அந்தப் பெண்ணின் கணவர் அவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

பாலூட்டுதல் தவிர்த்து, ஒரு தந்தை, தாய்க்கு இணையாகக் குழந்தையை எல்லாவிதத்திலும் பார்த்துக்கொள்ள முடியும். பிரசவத்துக்காக மாமியார் வீட்டிலிருக்கும் மனைவியையும் குழந்தையையும் வார இறுதி நாள்களில் வெறுமனே பார்த்துவிட்டுப்  போவதை மட்டும் செய்யாமல், குழந்தையைத் தூங்கவைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்து மனைவிக்குச் சற்று ஓய்வு கொடுக்கலாம். அன்பாக, ஆதரவாக மனைவியிடம் பேசலாம். கணவரின் இது போன்ற சின்னச் சின்ன உதவிகள், மெனக்கெடல்கள் பிரசவித்த பெண் தன்னை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் மீட்டெடுக்கக் கைகொடுக்கும்.’’

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் தக்காளி சாறு

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் தக்காளி சாறு
Tomato-juice-removing-dead-cells-on-the-face.


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தக்காளி சாறு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும். தக்காளியை எதனுடன் சேர்த்து மசாஜ் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.

* தக்காளி சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.


* தக்காளியை துண்டை தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

* பருக்களால் ஏற்படும் தோல் சிவத்தலை குறைக்கிறது.

* தக்காளியை மசித்து அதனுடன் கிளிசரின் கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.

* முகச்சருமத்தில் இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.

* கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது.

* ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது.

* தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது.


குழந்தைகளுக்கு வாங்கித்தரக்கூடாத பொருட்கள்

குழந்தைகளுக்கு வாங்கித்தரக்கூடாத பொருட்கள்
can-not-buy-this-toys-for-children

            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

விளையாட்டுப் பொருட்கள் குழந்தைப் பருவத்தின் மிகப்பெரிய புதையல். அது பாதுகாப்பற்றதாக இருந்தால் உடல்நலத்துக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

விளையாட்டுப் பொருட்கள் என்பது விளையாட்டுக்கானது மட்டும் அல்ல… குழந்தையின் புத்திக்கூர்மை, இணைந்து செயல்படும் இயல்பு, அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புஉணர்வு என்று பலவகைகளிலும் குழந்தையின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவை விளையாட்டுப் பொருட்கள்.

அந்தக் காலத்தில், செப்பு சாமான், மரப்பாச்சி பொம்மை, பல்லாங்குழி, தாயக்கட்டை போன்ற விளையாட்டுப் பொருட்கள் தரத்திலும் பயன்பாட்டிலும் சிறந்ததாக இருந்தது. ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு வாங்கித்தரும் விளையாட்டுப் பொருட்களில் காரீயம் உள்ளிட்ட ரசாயனங்கள் ஒளிந்திருக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு டாய்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றி தெரிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் அவசியம்.


சீன ப்ளாஸ்டிக் பொம்மைகள், ஃபர், செயற்கை நாரிழை கேசம் கொண்ட பொம்மைகள், பெயின்ட், தரம் குறைந்த கலர் க்ரயான்ஸ், சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள், விலை குறைந்த, தரமற்ற பொம்மைகளில் பாலிவினைல் க்ளோரைட் (polyvinyl chloride (PVC)) உள்ளிட்ட மோசமான ரசாயனங்கள் கலந்திருக்கும். அவற்றை, குழந்தை வாயில் வைத்தால், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுபோக்கு, நுரையீரல் பாதிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படலாம்.

கூர்மையான முனைகள் கொண்ட பொம்மை, சிறு பொம்மைகள், சின்னச்சின்ன பாகங்கள் கொண்ட விளையாட்டுப் பொருட்கள் ஆபத்தானவை. ஏனெனில் குழந்தைகள் அவற்றை விழுங்கி விடலாம்.

மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பவுன்ஸர் (ரப்பர்) பந்தை வாங்கிக்கொடுத்தால் அதை பிடிக்கப்போய் விழவோ, சுவரில் மோதிக்கொள்ளவோ நேரிடும் என்பதால் அதிகம் மேலெழும்பாத சாஃப்ட் பந்து வாங்கிக்கொடுப்பது பாதுகாப்பானது.

குழந்தைகள் பேட்டரியை நக்குவது, கடிப்பது, வாயில் போட்டுக்கொள்வது போன்ற செயல்களைச் செய்யும்போது அதில் உள்ள கரிப்பொருள் அவர்கள் வயிற்றுக்குள் சென்றால் விஷமாகிவிடும். எனவே, பேட்டரியில் இயங்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

சிந்தடிக் ஆடைகள் வியர்வையை உறிஞ்சாது என்பதால் தளர்வான காட்டன் உடைகளை வாங்கி தரலாம்.

ஸ்டடி டேபிள், பேபி சார் என அவர்களுக்கான பொருட்கள் ஃபேன்ஸியாக இருப்பதைவிட, உறுதியானதாக இருக்கட்டும்.

விளையாட்டுப் பொருளின் பேக்கிங்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைகளை கவனமாகப் படித்து, வயதுக்கு ஏற்ற பொம்மைகளை தேர்ந்தெடுக்கலாம்.

எடை இல்லாத விளையாட்டுப் பொருட்கள், முனை மழுங்கலான பொருட்கள், மரத்தாலான பொம்மைகள், இயற்கை சார்ந்த பொருட்கள் என குழந்தைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களாக வாங்கிக்கொடுக்கவும்.

திரிகடுகம் பால்(thirikadugam-milk)

 திரிகடுகம் பால்(thirikadugam-milk)
கபம் - இருமலை குணப்படுத்தும் திரிகடுகம் பால்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய 3 பொருட்களும் சித்தர் இலக்கியத்துள் திரிகடுகம் எனப்படுகிறது. உடலில் அதிக கபம் உள்ளவர்கள் திப்பிலி அடங்கிய திரிகடுகம் பால் தயாரித்து குடித்தால் கபம் நீங்கும்.

தேவையான பொருட்கள் :

பால் - ½ லிட்டர்

 தண்ணீர் - ½ லிட்டர்
முந்திரி பருப்பு - 20 கிராம்
பாதாம் பருப்பு - 20 கிராம்
சுக்குப்பொடி - ½ தேக்கரண்டி
மிளகுப்பொடி - ½ தேக்கரண்டி
திப்பிலிபொடி - சிறிதளவு (ஒரு சிட்டிகை)
மஞ்சள் பொடி - ¼ தேக்கரண்டி
ஜாதிக்காய்த்தூள் - 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - ½ தேக்கரண்டி
பனங்கல்கண்டு - தேவையானது அல்லது காய்ச்சி வடித்த வெல்லப்பாகு.

செய்முறை :

முந்திரிப் பருப்பு, பாதாம்பருப்பை ஊறவைத்து(ஒரு மணி நேரம்) அம்மியில் அல்லது மிக்சியில் மை போல் அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர், அரை லிட்டர் பால் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.

பொங்கி வரும்போது தீயைக் குறைத்துக் கொண்டு அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.

அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள எல்லா பொடிகளையும் ஒவ்வொன்றாக சேர்த்து கரண்டியில் கலக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

கமகமவென்று வாசம் வரும்போது இறக்கி விடவும். சற்று ஆறவிடவும்.

குடிக்கிற பக்குவத்தில் சூடாக இருக்கும்போது இனிப்பு கலந்து குடிக்கவும். இது சளி, இருமலுக்கு சாப்பிட நல்லது. கபத்தை கரைத்து, சுறுசுறுப்பு அளிக்கும்.

உளுந்து களி( Ulundhu-Kali)

உளுந்து களி( Ulundhu-Kali)
சத்து நிறைந்த உளுந்து களி


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வாரம் இருமுறை உளுந்து களி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று எளிய முறையில் உளுந்து களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்

 உளுந்து - அரை கப்
சுக்கு தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
கருப்பட்டி - அரை கப்

செய்முறை :

அரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீரில் ஊற வைத்து அதனுடன் சுக்கு தூளை சேர்த்து அரைத்துகொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கருப்பட்டியை கொட்டி நன்றாக கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.

அதனுடன் அரைத்த மாவு கலவையை கொட்டி கிளறி விடவும்.

களி பதத்துக்கு வெந்ததும் தேங்காய் துருவலை தூவி இறக்கி ஆறவைத்து சுவைக்கலாம்.

சூப்பரான உளுந்து களி ரெடி.

வெந்தய டீ ( Fenugreek-Tea)

வெந்தய டீ ( Fenugreek-Tea)
கொழுப்பை கரைக்கும் வெந்தய டீ


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தினமும் வெந்தய டீ குடித்தால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும். இன்று வெந்தய டீ போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெந்தயம் - 2 டீஸ்பூன்

 தண்ணீர் - 3 கப்
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வெந்தயத்தை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

வெந்தயத்தின் சாறு தண்ணீரில் இறங்கியவுடன் அதில் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

நாட்டு சர்க்கரை நன்றாக கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகவும்.

சத்தான வெந்தய டீ ரெடி.

பன்னீர் குடைமிளகாய் சப்ஜி

பன்னீர் குடைமிளகாய் சப்ஜி
paneer-capsicum-sabzi.
அருமையான பன்னீர் குடைமிளகாய் சப்ஜி


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பன்னீர் குடைமிளகாய் சப்ஜி ரெசிபியை வீட்டிலேயே எளிதாக விரைவிலேயே செய்ய முடியும். சப்ஜி கிரேவியுடன் அல்லது கிரேவி இல்லாமலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

குடைமிளகாய் - 1

 வெங்காயம் - 1
தக்காளி - 3
தண்ணீர் - 11/2 கப்
பூண்டு (தோலுரித்து) - 4 பல்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பன்னீர் துண்டுகள் - 1 கப்
கஸ்தூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

குடைமிளகாயை 2 அங்குலம் அளவிற்கு நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

பெரிய வெங்காயத்தை நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பிரஷ்ஷர் குக்கரில் தக்காளியை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வேக விடவும்.

வேக வைத்த தக்காளியை ஆறவைத்து தோல் நீக்கி மிக்சியில் போட்டு அதனுடன் பூண்டையும் சேர்த்து நன்றாக வழுவழுவென அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

இப்பொழுது பன்னீர் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

அடுத்து கஸ்தூரி மெத்தி சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வரை வேக விடவும்.

கடைசியாக அதன் மேல் கஸ்தூரி மெத்தியை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான பன்னீர் குடைமிளகாய் சப்ஜி ரெடி.

கொத்தமல்லி சிக்கன்

கொத்தமல்லி சிக்கன்
coriander-chicken
சாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சிக்கன் குழம்பு வகைகளில் தனியா (கொத்தமல்லி) சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. இதை சப்பாத்தி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் துண்டுகள் - 1 கிலோ

 கொத்தமல்லி இலை - 2 கட்டு
புதினா இலை - 1 கட்டு
வெங்காயம் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தயிர் - 250 மில்லி லிட்டர்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கொத்தமல்லி இலை, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு, இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் அதில் பச்சைமிளகாய், சீரகத்தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.

சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

மீதமுள்ள மிளகாய் தூள், தயிரை சேர்க்கவும்.

அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும்.

அடுத்து மூடி போட்டு சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும்.

வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.

பன்னீர் புர்ஜி

பன்னீர் புர்ஜி
Paneer-Bhurji.
சப்பாத்திக்கு அருமையான பன்னீர் புர்ஜி


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பன்னீர் புர்ஜியை சப்பாத்தியுடன் அல்லது தோசைக்கு நடுவில் வைத்து பன்னீர் தோசை செய்தும் சாப்பிடலாம். இன்று இந்த பன்னீர் புர்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 200 கிராம்

 பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி இலை - சிறிதளவு


செய்முறை :

தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பன்னீரை கைகளால் சிறிது சிறிதாக உதிர்த்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து கிளறவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதங்கவும்.

தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

2 நிமிடம் கழித்து பிசறி வைத்துள்ள பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து மசாலா கலவை பன்னீரில் கலக்கும் வரை கிளறவும். 3 நிமிடத்திற்கு மேல் கிளற தேவையில்லை.

இறுதியாக கொத்தமல்லியிலை தூவி இறக்கி பரிமாறவும்.

சுவையான பன்னீர் புர்ஜி தயார் !

குறிப்பு : பன்னீரை அதிகநேரம் சமைத்தால் ரப்பர் போல ஆகிவிடும். எனவே கவனம் தேவை.

நவகிரக தோஷத்தை போக்கும் நவதானியங்கள்

நவகிரக தோஷத்தை போக்கும் நவதானியங்கள்


        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஜாதகத்தில் நவகிரக தோஷம் இருப்பவர்கள் சில எளிய தானிய பரிகாரங்களை செய்வதன் மூலம் நிரந்தர தீர்வை காண முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சூரியன்: சூரிய பகவானுக்கு உரியது கோதுமை. கோதுமையால் தயாரித்த சுண்டலோ அல்லது உணவையோ படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

சந்திரன்: சந்திர பகவானுக்கு உரியது நெல். அதனால், அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கும். வாழ்நாள் முழுவதும் இன்னல்கள் ஏற்படாது.

செவ்வாய்: செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை. இதனை படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். திருமண தடை நீங்கும். சொத்து சேரும்.

புதன்: புதனுக்குரியது பச்சை பயிறு. இத்தானியத்தை வைத்து வணங்கினால், கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும். வணிகத்தில் வெற்றி பெறலாம். ஜோதிட கலையில் புகழ் பெறலாம்.

குரு: குரு பகவானுக்கு உரியது கடலை. கடலையை படைத்து வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக நடக்கும். மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

சுக்கிரன்: சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை படைத்து வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம்.

சனி: சனி பகவானுக்குரியது எள். எள்ளை படைத்து வணங்கினால், எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும். கஷ்டங்கள் நீங்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நோய் தீரும். ஆயுள் அதிகமாகும்.

இராகு: இராகு பகவானுக்கு உரியது உளுந்து. உளுந்து படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும். திடீர் பணக்காரனாக்கும் தன்மை இராகு பகவானுக்கு உண்டு.

கேது: கேது பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து வணங்கினால், வாட்டி வதைத்த நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில் உற்சாகமும், தெம்பும் கிடைக்கும். விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும்.

முன்னோர்களின் சாபம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

முன்னோர்களின் சாபம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்களை இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை வைத்து முன்னோர்களுக்கு பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும்.

நமது பெற்றோர்கள் உயிரேடு இருக்கும் போதே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிக் பார்க்க வேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ அல்லது தவறோ செய்து அதற்குள் அவர்கள் அமராகி விட்டால் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பித்ரு கடன்களை வருடா வருடம் நாம் தவறாமல் செய்ய வேண்டியது நமது தலையாக கடமையாகும்.

நமக்கு 365 நாள்கள் என்பது நமது பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவளிக்க வேண்டும்.


அதாவது நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்களை இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை அழைத்துமுறைப்பிடி செய்து நம் முன்னோர்களுக்கு பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும்.

அப்படி செய்ய தவறிவிட்டால் நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினருக்கு ஏற்பட்டு விடுகிறது. நமக்கு பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் மூலமாக பித்ரு தோஷம் இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள் இதோ...

அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால் அன்றைய தினம் சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்ல் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனொனில் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

மேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு பித்ரு பூஜை செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்று தெரிவித்தார்.

கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டம் தீரும்

கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டம் தீரும்
problem-control-deepam-worship


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


கார்த்திகை மாதம் முழுவதும் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

* திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம்.
* கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம்.
* கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

* கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.
* கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.
* கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.

* கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.
* கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.
* கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

* கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
* கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.
* கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
* தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

யோகம் தரும் திருவண்ணாமலை லிங்க தரிசனம்

யோகம் தரும் திருவண்ணாமலை லிங்க தரிசனம்
tiruvannamalai-arunachala-temple-girivalam

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

அண்ணாமலையார் கோவிலை சுற்றிலும் கிரிவலப் பாதையில் 8 லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை தரிசிப்பதன் மூலம் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை இங்கே காணலாம்.

அண்ணாமலையார் கோவிலை சுற்றிலும் கிரிவலப் பாதையில் 8 லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை தரிசிப்பதன் மூலம் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை இங்கே காணலாம்.

லிங்கங்கள்    பார்வை - இருப்பு - கிரக பார்வை - யோக பலன்

 1. இந்திர லிங்கம் - கிழக்கு - சூரியன், சுக்கிரன் - நீண்ட ஆயுளும், புகழும் கிடைக்கும்
2. அக்னி லிங்கம் - தென்கிழக்கு - சந்திரன் - நோய்கள் அகலும், பயம் போகும்
3. எமலிங்கம் - தெற்கு - செவ்வாய் - விபத்தில்லாத வாழ்க்கை அமையும். நீண்ட ஆயுள் கிட்டும்
4. நிருதி லிங்கம் - தென்மேற்கு - ராகு - உடல் ஆரோக்கியமாகும். குழந்தை பாக்யம் உண்டாகும்.
5. வருண லிங்கம் - மேற்கு - சனி - நோய்கள் குணமாகும். குறிப்பாக தண்ணிர் தொடர்பான கண்டம் விலகும்
6. வாயு லிங்கம் - வடமேற்கு - கேது - இருதயநோய், வயிற்று பிரச்சினைகள் அகலும்
7. குபேர லிங்கம் - வடக்கு - குரு - பணம் குவியும், வாழ்க்கைத்தரம் உயரும்
8. ஈசான்ய லிங்கம் - வடகிழக்கு - புதன் - மன அமைதி ஏற்படும். தெய்வீக அம்சம் ஏற்படும்.

கார்த்திகை மாதத்தில் ஜோதி மகத்துவம்

கார்த்திகை மாதத்தில் ஜோதி மகத்துவம்
karthigai-month-deepam-at-home.

        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.


வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை

விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை
Dont-do-this-after-Deepam.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குள் சூரிய தேவதை ஆவாஹனமாகி விடுவாள். விளக்கேற்றிய பிறகு சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

* விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
* விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.
* விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
* விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.

* விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.
* விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.

* விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
* விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.
* வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது

சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர் கோவில்

சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர் கோவில்
bhairava-temple

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான். இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி ஏனைய பிற இறை வடிவங்களையும் படைத்தவரும் அவரே. அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம், சிவபெருமான் தனது அம்சமாகவும், வலிமைமிக்க ஞானமூர்த்தியாகவும் பைரவரை உருவாக்கினார் என்றும், எட்டுதிசைகளிலும் அவரை குடிகொள்ளச் செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அளித்து, அதன் மூலம் அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்றும் பைரவர் தோற்றத்தைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன.

‘பைரவர்’ என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’, ‘பாபத்தையும் இன்னல்களையும் நீக்குபவர்’ என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் ஒடுக்குதல் ஆகிய முத்தொழில்களின் மூலமாக, பல கோடி உயிர்களை காப்பதற்காக படைக்கப்பட்ட பைரவருக்கு, சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலமே ஆயுதமாக வழங்கப்பட்டிருக்கிறது.


படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். பைரவரை, பூஜை செய்தால் மட்டுமே ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் என்றில்லை. இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே போதும். நம்மை துன்பங்களில் இருந்து உடனடியாக காப்பார்.

பைரவர் தோற்றம் :

பைரவர் தோன்றியது பற்றி இருவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன. பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதிய தானகாசுரன் என்னும் அசுரன், ‘பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றான்.

அந்த வரத்தின் காரணமாக, பிரம்மதேவன் முதலான தேவர்களை அவன் துன்புறுத்தினான். அவனது கொடுமையில் இருந்து விடுபட, தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து, தானகாசுரனை அழிக்க கட்டளையிட்டார். அதன்படியே அசுரனை அழித்த காளி, அதன் பிறகும் கோபத் தீயுடன் உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளது கோபத் தீயினால், உலக உயிர்கள் அனைத்தும் துன்பமடைந்தன.

இதையடுத்து மாயையை, ஒரு பாலகன் உருவில் இடுகாட்டில் கிடந்து அழும்படி செய்தார் ஈசன். அங்கு வந்த காளி, குழந்தையை தூக்கி அணைத்து பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த அந்தக் குழந்தை, பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்து பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்து, உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

காளியின் கோபத்தைத் தணித்த குழந்தை ‘ஷேத்திரபாலர்’ என்று அழைக்கப்பட்டது. ‘ஷேத்திரம்’ என்றால் ‘மண்’ என்று பொருள். மண்ணில் கிடந்த பாலகன் என்பதால், ‘ஷேத்திரபாலர்’ அதாவது ‘மண்ணின் மைந்தர்’ என்று அழைக்கப்பட்டார். நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அந்த ஷேத்திரபாலரே, பைரவர் திருவடிவம் என்று லிங்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தகாசுரன் என்னும் அசுரன், சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அதன் வாயிலாக சிவபெருமானிடம் இருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றான். பின்னர் தேவர்களை வென்றான். தோல்வியுற்ற தேவர்களை, பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு தனக்கு சேவகம் செய்யும்படி கூறி அவமதித்தான்.

அசுரனின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சந்தித்து, தங்கள் இன்னல்களை அகற்றும்படி வேண்டினர். அவர்களின் துயரம் கேட்டு சிவபெருமான் கோபம் கொண்டார். அவர் அடைந்த உக்கிரத்தால் உடல் வெப்பமாகி, நெற்றியில் வியர்வை உருவானது. அந்த வியர்வையில் இருந்து மகா பைரவர், அதிஉக்கிரத்துடன் தோன்றினார். அந்தகாசுரன் மீது போர் தொடுத்து, தனது சூலாயுதத்தில் அவனை குத்தித் தூக்கியவாறு, மூன்று உலகங்களிலும் வலம் வந்தார் என்பது மற்றொரு வரலாறு.



இதுபோல் அநேக அசுரர்கள் தோன்றும் போதெல்லாம், சிவ பெருமான் அநேக பைரவர்களைத் தோற்றுவித்து அவர்களை அழித்தார். பொதுவாக சிவாலயங்களில் பைரவரின் திருவுருவம் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இடம்பெற்றிருக்கும். தவிர அஷ்ட பைரவர்கள் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பல ஆலயங்களில் இடம்பிடித்திருப்பார்கள். இருப்பினும் சிவபெருமானால் முதன்முதலாக உருவாக்கப்பட்டவரும், அஷ்ட பைரவர்களை உருவாக்கியவருமான ஆதி மகாபைரவ மூர்த்திக்கான ஆலயம் சோழவரம் என்ற ஊரில் இருக்கிறது.

இவ்வாலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாகவும், மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

மூலவரின் திருநாமம் மகா பைரவேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் மகா பைரவேஸ்வரி. உற்சவர்களின் திரு நாமம் கல்யாண பைரவர், கல்யாண பைரவி. எட்டு அல்லது அதற்கு மேலான எண்ணிக்கை கொண்ட இலைகள் கொண்ட வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. ஆலய தீர்த்தம் ‘பைரவ அமிர்த தீர்த்தம்’ ஆகும். திராவிட கட்டிடக் கலையம்சத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

அகத்திய மகரிஷி இந்த ஆலய மகா பைரவரை வணங்கி வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இவ்வாலய இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர். இந்தத் திருத்தலம் உள்ள சில பகுதிகளை தாங்கியும், புறவெளி சுத்திகரிப்பு பணியையும் அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்ட வசுக்களும் செய்து வருகின்றனர். எனவே இத்தலம் வாஸ்து சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. வாராந்தி வாஸ்து நாளான செவ்வாய்க்கிழமைகளிலும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள் அதுபோன்ற நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

ஆலய அமைப்பு :

கிழக்கு நோக்கிய இந்த ஆலயம், தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட பீடத்தில் விமானம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளி ஆகும். செப்புக்காப்பு செய்யப்பட்ட படிக்கட்டு வழியே மேலேச் சென்றால், மகாநந்தி, உச்சிஷ்ட கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். இவர்களுக்குப் பின்புறம் சிவலிங்க ரூபத்தில் மகா பைரவர் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு இடதுபுறத்தில் மகா பைரவி தென்திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

பிரகார சுற்றில் தெற்கில் விநாயகர், பிரளய காலமூர்த்தி, நடராஜர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, காலபைரவர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை, கங்காவிஜர்ணமூர்த்தி ஆகியோரது திருவுருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, இவ்வாலயத்தில் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ அஷ்டமியாக கொண்டாடப்படுகின்றது. அன்றையதினம் எட்டுவிதமான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாணமும், வீதியுலாவும் நடத்தப்பெறுகிறது.

அமைவிடம் :

விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தெற்காகவும், கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் வடக்காகவும் உள்ளது சோழவரம். இந்த ஊரின் சாலையோரத்திலேயே ஆலயம் இருக்கிறது. சென்னை, கும்பகோணம், வடலூர், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்தின் அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்பகோணம் ஆகும். 

பைரவரின் உடலில் அங்கங்களாக உள்ள 12 ராசிகள்

பைரவரின் உடலில் அங்கங்களாக உள்ள 12 ராசிகள்
Bhairava-12-rasi.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக உள்ளன. எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.

பிருஹத்ஜாதகம் என்ற நூலில் பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும், அவை

மேஷம்-சிரசு,

 ரிஷபம்-வாய்,
மிதுனம்-இரு கைகள்,
கடகம்-மார்பு,
சிம்மம்-வயிறு,
கன்னி-இடை,
துலாம்-புட்டங்கள்,
விருச்சிகம்-மர்ம ஸ்தானங்கள்,
தனுசு-தொடை,
மகரம்-முழங்கால்கள்,
கும்பம்-காலின் கீழ்பகுதி,
மீனம்-கால்களின் அடிப்பாகம் என பனிரெண்டு ராசிகளும் நிறைந்துள்ளன.

மேலும் பைரவரின் சேவர்களாக நவக்கோள்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய அன்பர். எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.

பைரவர் வழிபாடும் - தீரும் பிரச்சனைகளும்

பைரவர் வழிபாடும் - தீரும் பிரச்சனைகளும்
Bhairava-worship

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஜாதகத்தில் பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அந்தந்த பிரச்சனைகளுக்கு உகந்த பரிகாரங்களை பைரவருக்கு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்

நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்க

பைரவருக்கு தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கி, நெய்தீபம் ஏற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.


குழந்தைப் பேறு கிடைக்க

தேய்பிறை அஷ்டமி திதியில் நெய் தீபம் ஏற்றி பைரவருக்கு சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.

வறுமை நீங்க

நெய்தீபம் ஏற்றி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு வில்வம், அரளி பூவினால் அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கும்.

திருமணம் நடக்கும்

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக் கிழமைகளில் 6 எண்ணை தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைபட்ட திருமணம் கை கூடும்.

பைரவருக்கு உகந்த வழிபாட்டு குறிப்புகள்

பைரவருக்கு உகந்த வழிபாட்டு குறிப்புகள்
Bhairava-worship-tips

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பைரவரை வழிபட வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகக் கருதப்பட்டாலும், கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்கள் அதிக விசேஷமானவையாகக் கருதப்படுகின்றன.

பைரவரை வழிபட வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகக் கருதப்பட்டாலும், கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்கள் அதிக விசேஷமானவையாகக் கருதப்படுகின்றன.

சந்தன காப்பு அபிஷேகம்


பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷம்.

எப்போது வழிபட வேண்டும்?

பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் மரணமில்லாப்பெருவாழ்வும் கூடகிட்டும்.

பைரவ தீபம்

பைரவப் பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக்கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றிவழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப்பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

பிடித்த மாலைகள்

பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வமாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலைஅணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக்கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

பிடித்த உணவுப்பொருட்கள்

பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.