Showing posts with label துஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம். Show all posts
Showing posts with label துஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம். Show all posts

துஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம்

துஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம் !!!

" ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "
துஷ்டதேவதைகள் இக்கலியில் உண்டென்று நம்பி, இப்பக்கத்தில் வரும் சுபமந்திரம் சுபயந்திரம் பதிவுகளை வாசித்து உள்வாங்கி பயனில் கொள்ளும் ஏனைய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் பற்றான இரவு வணக்கம். இதற்கு வெள்ளெருக்கன் நார். அல்லது 5 வர்ணநூல், (கருப்பு நூல் தவிர்த்து) சயார் செய்து வைத்திருக்க வேண்டும். சிறுபிள்ளைகளானாலும் சரி, பெரியவர்களானாலும் சரி, மேற்குறிப்பிட்ட தேவதைகளாலும், மற்றும் தோஷங்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று ஸ்நானஞ்செய்து, பூஜை அறையில் அமர்ந்து, படத்திலுள்ள எந்திரத்தை, தாம்பாலத் தட்டில் விபூதியைப் பரப்பி அதில் எழுதி, அதன் மீது புஷ்பம் தூவி அத்தர் தெளித்து, அதன் எதிரில் வாழைஇலை வைத்து, கனிவர்க்கங்கள் வைத்து, தாம்பூலம், வாழைபழம் வைத்து நெய்தீபமேற்றி, தேங்காயுடைத்து வைத்து கற்பூர தீபராதனை செய்து. (நூல் அல்லது நாரில்) கீழ்வரும் பைரவ ஸ்தோத்திரத்தை ஒரு முறைச் சொல்லி விட்டு, பின் கீழ் வரும் மூலமந்திரத்தை 108 முறை உச்சரித்தவாறே முடிபோட வேண்டும். மூலமந்திரத்தை ஒரு முறை உச்சரித்து நூலில் (அ) நாரில் ஒரு முடிபோட வேண்டும். இது போல் உச்சரித்து 108 முடிச்சு போட்டுப் பாதிக்கப்பட்டக் குழந்தைகள் பெரியவர்கள் கழுத்தில் கட்ட மேற்குறிப்பிட்ட துஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலகும்.
ஸ்தோத்திரம் : முதலில் இதை 1 முறை ஜபிக்கவும்
தேவராஜ ஸேவ்யமான பாவனங்கிரி பங்கஜம் வியாளயக்ஞ க்ஷேத்ரபிந்து சேகரம் க்ருபாகரம் நாரதாதியோகி ப்ருந்தவந்திதம் திகம்பரம் காசிகா புராதிநாத காலபைரவ ஸம்பஜே.
மூலமந்திரம் 108 முறை ஜபித்து முடிபோடவேண்டும்
ஓம் ஆம் பம் பம் பைரவா சர்வதோஷம் நசிமசி அம்தம் சுவாஹா