Showing posts with label சித்தர் - வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகள் - திருநெல்வேலி. Show all posts
Showing posts with label சித்தர் - வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகள் - திருநெல்வேலி. Show all posts

சித்தர் - வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகள் - திருநெல்வேலி

சித்தர் - வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகள் - திருநெல்வேலி


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

திருநெல்வேலி நவ்வலடியில் கடல் தண்ணீரை தனது கையசைவில் விரட்டிய சித்தர், வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

வட்ட விளையில் வேலாயுத சுவாமி தங்கியிருந்த நாராயண சுவாமி கோவில்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலூகாவில் அமைந்துள்ள கடற்கரை நகரம் ‘நவ்வலடி’. கடற்கரை சாலையில் உவரிக்கும், வித்தியாபதி நகருக்கும் இடையே அமைந்துள்ள அழகான ஊர். இவ்வூரில் தான் கடல் தண்ணீரை தனது கையசைவில் விரட்டிய சித்தர், வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

திசையன்விளை அடுத்த இடையன்குடி அருகே உள்ள சிற்றூர் பொத்தகாலன் விளை. இவ்வூரில் நாடாழ்வாருக்கும் - கோசலா பிராட்டியாருக்கும் கி.பி. 1848-ம் ஆண்டு மகனாய் பிறந்தவர் வேலாயுத சுவாமிகள். சிறு வயது முதலே சிவன் மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார். அவரது வாய் எப்போதும் சிவ நாமத்தையே உச்சரித்தபடி இருக்கும்.

தானாகவே ஞானம் பெற்று வல்லமை மிக்கவராக வாழ்ந்த காரணத்தினால், ஊர்க்காரர்கள் அவரை ‘வல்லமையுள்ள வேலாயுதம்’ என்று அழைத்தனர். ஒரு கட்டத்தில் அந்த ஊரில் வேறு ஒரு மதம் பரவியது. ஊர் மக்கள் அனைவரும் பிற மதத்தை தழுவிய காரணத்தால், தனது தாயாருடன் அந்த ஊரை விட்டு வெளியேறினார் வேலாயுதம் சுவாமிகள்.

குட்டம் என்னும் ஊருக்கு வந்தார். அங்கு சில காலம் வாசம் செய்தார். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய அங்கிருந்து கிளம்பினார். இப்போது அவர் வந்தது ராதாபுரம் அருகே உயத்தனூர் என்னும் கிராமம். அவ்வூரைச் சேர்ந்த குக்கிராமம் தான் வட்ட விளை. இதன் ஆதி பெயர் பூந்தோட்டம். பெயருக்கு ஏற்றாற்போல, பூத்துக் குலுங்கும் தோட்டங்கள் நிறைந்த ஊராகவே அது விளங்கியது.

இவ்வூரில் உள்ள நாராயணசாமி கோவிலில் வடநாட்டை சேர்ந்த சுவாமி ஒருவர் தங்கி பணிவிடை செய்து வந்தார். வேலாயுத சுவாமியை கண்ட அவர், ‘வா... வா.. வேலாயுதம். உன்னைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். நீ! இங்கிருந்து மக்களுக்கு சேைவ புரிய வேண்டும்' என தனக்குதெரிந்த சில வித்தைகளை சுவாமிக்கு கற்றுக் கொடுத்தார். சிறிது காலத்திலேயே சுவாமி பல அற்புதங்களை அறிந்து கொண்டார். அதன் மூலம் மக்களுக்கு உதவ ஆரம்பித்தார். எனவே வடநாட்டு சுவாமி, வேலாயுதம் சுவாமியிடம் கோவில் பொறுப்பை கொடுத்து விட்டு தவம் செய்ய புறப்பட்டார்.

இதையடுத்து வேலாயுத சுவாமிகள், தினந்தோறும் நாராயண சுவாமியையும், பத்ரகாளியம்மனையும் வணங்கி பணிவிடை செய்து வந்தார். பத்ரகாளியின் முன்பு அமர்ந்து கடும் தவம் புரிந்தார். அதன் பயனாக அம்மையுடன் பேசும் வல்லமையை பெற்றார். அன்னை மேலும் பல சக்திகளை அவருக்கு அளித்தார். இதன் மூலம் அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் தர ஆரம்பித்தார். தன் தாயாரையும் தன்னுடன் வைத்து பேணி பாதுகாத்து வந்தார்.

வேலாயுத சுவாமிகள் சுற்றியுள்ள ஊர்களான குட்டம், பொத்தக்காலன்விளை, ஆனைக்குடி ஆகிய ஊருக்கு செல்லும் போதெல்லாம், நவ்வலடிக்கும் சென்று வருவார். நவ்வலடி அந்த சமயத்தில் சிற்றூர். இங்கு கொடிக்கால் தொழில் நடந்து கொண்டிருந்தது. சிறு சிறு தோட்டங்களும், தண்ணீர் பாய்க்கும் கிணறுகளும் கொண்ட அந்த ஊரில் ஏராளமான வெற்றிலை பயிரிடும் விவசாயிகள் வாழ்ந்து வந்தனர். இவ்வூரில் உள்ள வெற்றிலை வியாபாரிகள், தாங்கள் பயிரிட்ட வெற்றிலையை விற்பதற்காக, அவற்றை தலைசுமையாக தூக்கிக்கொண்டு ராதாபுரம் செல்வார்கள்.

அப்போது, வட்டவிளையில் வேலாயுத சுவாமியிடம் தரிசனம் ஆசி பெற்றுவிட்டு தான் வியாபாரத்தை தொடங்குவார்கள். சுவாமியின் ஆசியால், வெற்றிலை விற்பனை நல்லபடியாக நடந்தது. இதனால் அவர்களுக்கு வேலாயுத சுவாமிகளின் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது.

இதற்கிடையில் உதயத்தூரை சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு சுவாமியின் அருள் கிடைத்தது. உதயத்தூர் சாதாரண ஊர் அல்ல. ஆதிசைவம் தோன்றிய இடம் என்று கூறப்படுகிறது. இவ்வூரை பூர்வீகமாக கொண்ட எட்டுவீட்டு பிள்ளைமார்கள், புத்திக்கூர்மையானவர்கள். அவர்கள் கேரளாவுக்கு சென்று அங்குள்ள அரசவையில் அமைச்சராக பணியாற்றியவர்கள். அஷ்ட கர்ம வித்தைகள் என்னும் கேரள மலையாள மாந்திரீகத்தைப் பின்பற்றி வாழ்ந்தனர். பலருக்கும் அதைக் கற்றும் தந்தனர். இதனால் கேரளத்தில் பேரும்புகழுடன் வாழ்ந்தனர்.

இவர்களின் ஒருவர் தான் சங்கரன் பிள்ளை. மந்திரக் கலைகளில் நிகரற்று விளங்கியவர். ஆனாலும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார். மற்றவர்களுக்கு மந்திர சக்தி மூலம் நல்லது கெட்டது செய்து வந்தாலும் கூட, தன் வாழ்க்கை சாத்தியமில்லாமல் தான் இருந்தது. அவரது துணைவியார் அனந்தம்மாளுக்கு வரிசையாக ஐந்து ஆண் பிள்ளைகள் பிறந்தனர். அனைவரும் சிறிது காலத்திலேயே இறந்து விட்டனர்.

இதனால் மனமுடைந்த அனந்தம்மாள், வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகளைப் பற்றி அறிந்து அவரிடம் போய் நின்றார். அவரைப் பார்த்ததுமே அனந்தம்மாளின் கண்களில் கண்ணீர் கொட்டியது.

அதைக் கண்ட வேலாயுத சுவாமிகள், ‘ஏனம்மா அழுகிறாய்?. என்ன வேணும் சொல்லு?' எனக் கேட்டு அவரைத் தேற்றினார்.

அனந்தம்மாள் குழந்தைகள் தங்காத துயரத்தைச் சொல்லி கண்ணீர் விட்டார்.

வேலாயுத சுவாமிகள், “தாயே உன் கணவர் பாவத்தொழில் செய்து வருகிறார். அவர் செய்யும் மாந்திரீகத்தால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அவரை என்னிடம் அழைத்து வா. ‘இனிமேல் மாந்திரீகம் எதுவும் செய்யமாட்டேன்’ என்று என் பிரம்பின் மேல் உன் கணவர் சத்தியம் செய்து தரவேண்டும். மாந்திரீகம் செய்ய அவர் பயன்படுத்தும் ஏடுகளை எனது முன்னால் எரிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் உனக்கு குழந்தைகள் தங்கும்” என்றார்.

‘சரி.. சாமி..' என அனந்தம்மாள் கிளம்பினார். கேரளா சென்று தன் கணவரிடம் விவரத்தைக் கூறினார்.

முதலில் மறுத்த சங்கரன் பிள்ளை, பிறகு ‘சரி..’ என்று தலையசைத்தார். அதற்கும் காரணம் இருந்தது. ‘அந்த சாமியார் என்ன.. என்னை விட சக்தி படைத்தவரா? அதையும் தான் பார்த்து விடுவோமே’ என்ற எண்ணம் சங்கரன் பிள்ளை மனதில் இருந்தது.

மனைவியுடன் வட்டவிளை வந்த சங்கரன் பிள்ளை, நாராயண சுவாமி கோவில் முன்பு இருந்த வேலாயுத சுவாமியைப் பார்த்தவுடன் அவரது மனதில் இருந்த எண்ணம் மறைந்து போயிற்று. ஏனெனில் வேலாயுத சுவாமிகள் அவ்வளவு எளிமையாக இருந்தார். தீர்க்கமான கண்கள், யாரையும் வசீகரிக்கக் கூடிய தோற்றம், இனிமையான குரல் அனைத்து சங்கரன் பிள்ளையைக் கவர்ந்தது.

மறுநிமிடம் அவரை அறியாமலேயே சுவாமி முன்பு மண்டியிட்டார். சுவாமியின் பிரம்பின் மீது கை வைத்து, ‘இனிமேல் மாந்திரீகம் செய்ய மாட்டேன்' என சத்தியம் செய்து, மாந்திரீக ஏட்டை எரித்து சாம்பலாக்கினார்.

சங்கரன் பிள்ளைக்கு திருநாமமிட்டார் சுவாமி.

‘எப்பா.. ஐந்து பிள்ளைகள் போச்சுன்னு கவலை படாதே. உனக்கு ஆறு பிள்ளைகள் பிறப்பார்கள். பல நகர் தாண்டி தலைநகர் செல்வார்கள். கொடி கட்டி வாழ்வார்கள்’ என்று வாக்களித்தார்.

காலங்கள் கடந்தது.

சங்கரன் பிள்ளை- அனந்தம்மாள் தம்பதிகளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு நாராயணன், பிச்சையா, கருப்பசாமி, பரமசிவம், சுந்தரம், கல்யாண சுந்தரம் என பெயரிட்டு மகிழ்ந்தனர்.

குழந்தைகள் அனைவரும் வளர்ந்ததும், பிழைப்பை தேடி தலைநகர் சென்னைக்கு சென்றனர். அவர்களின் கடுமையான உழைப்பால், மிகப்பெரிய செல்வந்தர்கள் ஆனார்கள். சென்னையில் மிகவும் பிரபலமான மூன்று தியேட்டர்களின் அதிபர்களாக மாறினார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு வேலாயுத சுவாமிகளின் புகழ் பரவத் தொடங்கியது.

தினமும் நாராயண சுவாமி கோவில் முன்பு, வேலாயுத சுவாமிகள் பிரம்போடு அமர்ந்து விடுவார். அவரை தேடி வரும் மக்களுக்கு நாமம் கொடுப்பார். நோய்வாய் பட்டவர்களுக்கு குணம் அளிப்பார். வழி தவறி செல்பவர்களுக்கு ஞானம் உபதேசிப்பார்.

தனது வயதான தாயாரை கண்ணின் இமைபோல காத்து வந்தார். ஒரு காலகட்டத்தில் அன்னையார் தவறி விட்டார். அவரை வட்டவிளையில் உள்ள ஒரு விளையில் அடக்கம் செய்து, கல்லறை கட்டினார். பின் தாயாரையும் வணங்க ஆரம்பித்தார். சுவாமி வணங்கிய தாயார் கல்லறையுடன் சேர்ந்த விளை, தற்போதும் ‘சுவாமி விளை’ என அழைக்கப்படுகிறது.

வட்டவிளையைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் முன்னோர்கள் பிழைப்புக்காக மலையாள நாடு சென்றனர். அங்கு வேலை கிடைக்காமல் தவித்தனர். துன்பங்களின் காரணமாக, வேறு வழியின்றி ஒரு மந்திரவாதியிடம் பணியில் சேர்ந்தனர். அந்த மந்திரவாதி தீமைகளை மட்டுமே செய்பவன். தீய சக்திகளைப் பயன்படுத்தி, அந்தப் பகுதி மக்களை துன்புறுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

ஒரு கட்டத்தில் மந்திரவாதி செய்யும் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாத தங்கவேலின் முன்னோர்கள், அனைவரும் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். மந்திரவாதிக்கு தெரிந்தால் அழித்து விடுவான் என்பதால் இரவு வேளையில் கிளம்பி விட்டனர். இதை அறிந்து கொண்ட மந்திரவாதி, தன் ரகசியம் தெரிந்தவர்கள் உயிரோடு இருக்கக் கூடாது என்று நினைத்து, அவர்களை அழிப்பதற்காக 21 வாதைகளை (பேய்களை) அனுப்பிவைத்தான்.

மந்திரவாதியிடம் கற்ற சில வித்தைகளைக் கொண்டு, பேய்களை கட்டுப்படுத்த நினைத்தனர். ஆனாலும் அவர்களில் இருவரை பேய்கள் பலி வாங்கியது. மற்றவர்கள் வட்டவிளைக்கு தப்பி வந்தனர். அங்கு நாராயணசாமி கோவிலில் இருந்த வேலாயுத சுவாமியின் காலடியில் போய் விழுந்தனர்.

அவரிடம் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பற்றி எடுத்துரைத்தனர். அதற்குள் 21 வாதைகளும் அங்கு வந்து விட்டன. அவர்கள் மீது அவை ஆவேசமாக வந்தபோது, வேலாயுத சுவாமிகள், கையில் பிரம்புடன் வீறு கொண்டு எழுந்தார்.

அந்த வாதைகள் சுவாமியிடம் அடிபணிந்ததா?