Showing posts with label வேலூர் வாத்துக்கறி குழம்பு. Show all posts
Showing posts with label வேலூர் வாத்துக்கறி குழம்பு. Show all posts

வேலூர் வாத்துக்கறி குழம்பு

வேலூர் வாத்துக்கறி குழம்பு

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வாத்துக்கறி குழம்பு சூப்பராக இருக்கும். இன்று வாத்துக்கறி குழப்பை வேலூர் ஸ்டைலில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வாத்துக்கறி - 1 கிலோ
சின்ன வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - 4
தேங்காய் துருவல் - 1 கப்
இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 4
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

தவாவில் சிறிது எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கி ஆற வைத்து, பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

துருவிய தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது, பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் சுத்தம் செய்த வாத்துக்கறி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, மஞ்சள் தூளைச் சேர்க்கவும்.

வாத்துக்கறியிலிருந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு நீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி எட்டு முதல் பத்து விசில் வரை விட்டு இறக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூடான, டேஸ்டான வேலு}ர் வாத்துக்கறி குழம்பு ரெடி.