Showing posts with label பியூட்டி பார்லர்” போகாமலேயே முகம் பொலிவு. Show all posts
Showing posts with label பியூட்டி பார்லர்” போகாமலேயே முகம் பொலிவு. Show all posts

பியூட்டி பார்லர்” போகாமலேயே முகம் பொலிவு

பியூட்டி பார்லர்” போகாமலேயே முகம் பொலிவு பெற இயற்கை மருத்துவம் !

* தயிருடன், கடலை மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ் வாறு செய்வதால், முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து, சோப்பு போட்டு கழுவ வேண்டும். தின மும் இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால், முடி வளர்ச்சி குறைந்து, முகம் அழகு பெறும்.
* மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம், புதுப் பொலிவடையும்.
* வீட்டிலிருக்கும் போது, பால் ஏடுகளை முகத்தில் தேய்த்து வரவும்.
* புதினா இலைகளை அரைத்து சாறெடுத்து முகத்தில் தடவி வர, உலர்ந்த தன்மை நீங்கும். முகப்பருக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
* முல்தானிமெட்டியை தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவி வர, முகம் மலர்ச்சியடையும்.
* முகத்திற்கு அடிக்கடி க்ரீம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது முகத் தசைகளின் மென்மையை போக்கி விடும். அதுபோல், பரு இருப்பவர்கள், பேஷியல் செய்வதை தவிர்ப்பது நல்லது