இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இரத்த அழுத்தம் என்றால் என்ன?


✨ ஏன் ஏற்படுகிறது?

✨  எப்படி குணமாக்குவது?_


      வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

       இதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடலை நன்கு அறிந்தவர் நீங்கள்தான்.

    நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

“நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள்தான் நோயை உண்மையிலேயே குணமாக்குகின்றன”
என்றார்.

      உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஒரு பிரச்சினை உங்களுக்கு வரும்போது (அப்படி ஒரு விஷயம் வெளியே தெரியும் முன்னரே) உடலானது தன்னைத் தானே சரிசெய்யும் முயற்சியை மேற்கொள்ளும்.

      பாதிக்கப்பட்ட உறுப்புக்கோ அல்லது அந்தப் பகுதிக்கோ அதிகப்படியான சக்தி தேவைப்படுகிறது, அதனால் தேவைப்படும் அந்தச் சக்தியை அதி வேகத்துடன் இரத்தத்தின் மூலமே எடுத்துச் செல்ல வேண்டும்.

      அப்போது இரத்தத்தில் எண்ணற்ற வேதியியல் மாற்றங்கள் நடக்கும். இரத்தத்தின் அடர்த்தியும் மாற்றம் அடையும்.

      பின்னர் அந்தச் சக்திகளைச் சுமந்துகொண்டு இரத்தம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மெதுவாகவா செல்லும்?

      108 ஆம்புலென்ஸ் போல விரைவாகத்தானே செல்லும். அதற்கு இதயம் வேகமாக துடித்துத்தானே ஆகவேண்டும்.

    அதுதானே இரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தேவையை ஒட்டி அனுப்புகிறது.

        இவ்வாறு உடல் தன்னைத்தானே குணமாக்கும் நிகழ்ச்சியையே நாம் இரத்த அழுத்தம் என்று நினைத்துக்கொள்கிறோம்.

     ஏன் என்றால் படபடப்பு, தலைசுற்றல், மயக்கம் போன்றவை வருவதால்.

      உடலில் நோய் ஏற்பட்டுள்ளது அதைச் சரி செய்யவே பி.பி என்ற ஒரு விஷயம் உடலில் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

     பி.பி என்பது பின்னே நடப்பதை முன்னே சொல்லும் அறிவிப்பு மணியாகும்.

    பி.பி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் உடலில் ஏதோ பிரச்சினை அல்லது நோய் என்பதை அறிந்து, அதைக் குணமாக்கும் வழியை தேடுங்கள்.

       அந்த நோய் குணமானால் பி.பி தானாகவே காணாமல் போய்விடும்.
அதை விடுத்து பி.பி.யை மட்டும் குறைப்பது என்பது அறிவிப்பு மணியை மட்டும் கழற்றி வைப்பது போலாகும்.

      அறிவிப்பு மணியைக் கழற்றி வைத்து விட்டால் பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் போய்விடும்.

     உடலில் உருவான
நோயைக் குணமாக்காமல் அதை உணர்த்தும் பி.பி.யை மட்டும் மருந்துகள் மூலம் குறைப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

      🌱வலுக் கட்டாயமாக இதயத்தின் துடிப்பு குறைக்கப்படுகிறது.

🌱 இரத்த நாளங்கள் விரிவாக்கப்பட்டு, அவை இயற்கையாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கின்றன.

🌱அதனால் நாளாவட்டத்தில் அவை தண்ணீர்க் குழாய் போல் ஆக்கப்பட்டு, உடலின் தன்மைக்கு அல்லது நோயின் தன்மைக்குத் தகுந்தாற்போல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது.

🌱 இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக உடலில் இருந்து உப்புகளும் கனிமங்களும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுவதால் இரத்தம் நீர்த்துப்போய் விடுகிறது.

🌱இதற்குப்பின் எந்த நோய் வந்தாலும் நம்மால் உணர முடியாமல் போய்விடுகிறது.

🌱பி.பி. மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நோய்கள் தொடர்ச்சியாக வருவது இதனால்தான்.

🌱அதனால் தயவுசெய்து பி.பி எதனால் வந்தது என்பதை அறிந்து முதலில் அந்த நோயைக் குணமாக்குங்கள்.

🌱 நோய் குணமாக வேண்டுமானால் முதலில் உங்கள் ஜீரணத்தைச் சரி செய்யுங்கள்.

🌱 ஏன் எனில் உங்களின் இரத்த அழுத்தத்திற்கும், இரைப்பைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்

உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்




 
உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்
ஓர் இடத்தைச் சுத்தம் செய்ய உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது. அல்லது படிகங்கள் (Quartz crystals - கல் உப்பு ) பயன் படுத்தப்படுகின்றன. இது ஓர் இடத்தில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்தியை அகற்ற உதவுகிறது. தினமும் உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைப்பது மங்களகரமாகக் கருதப் படுகிறது. ஐந்து ஸ்பூன் சுத்தி கரிக்கப் படாத கடல் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீட்டைத் துடைக்கலாம். இது ஓர் இடத்தின் எதிர்மறைச் சக்தியையும், எதிர்மறை விளைவுகளையும் குறைக்கும்.

குளியலறை / கழிவறைகளில் உப்புக் கிண்ணம் -

 
நாம் நமது உடலின் கழிவுகளை வெளியேற்றும் இடம் குளியலறை / கழிவறையாகும்.� இக்கழிவுகளில் நச்சுக்கிருமிகள், நுண் கிருமிகள் (பாக்டீரியாக்கள்) உள்ளன.� எனவே குளியலறை / கழிவறை வீட்டின் எந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை எப்போதும் தீய சக்தியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.� கிண்ணம் நிறைய சுத்திகரிக்கப்படாத கடல் உப்பை வீட்டின் ஒவ்வொரு குளியலறை / கழிவறை ஜன்னல் தளத்தில் வைக்கவும்.� இந்த உப்பு எதிர்மறைச் சக்தியை உறிஞ்சிவிடுகிறது.� உப்பு ஈரமாகி சதுப்பாகி விட்டால் அவ்வப்போது கிண்ணத்தில் உள்ள உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.

நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்

நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்:-




1. கருப்பு கவுணி அரிசி
      மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
      நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி :
      சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி :
       நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி :
     மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. காலாநமக் அரிசி :
     புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. மூங்கில் அரிசி:
      மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும்.

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :
      பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. தங்கச்சம்பா அரிசி :
      பல், இதயம் வலுவாகும்.

11. கருங்குறுவை அரிசி :
       இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. கருடன் சம்பா அரிசி :
      இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி :
       தோல் நோய் சரியாகும்.

14. குடை வாழை அரிசி :
       குடல் சுத்தமாகும்.

15. கிச்சிலி சம்பா அரிசி :
       இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. நீலம் சம்பா அரிசி :
      இரத்த சோகை நீங்கும்.

17.சீரகச் சம்பா அரிசி :
     அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும்.

18. தூய மல்லி அரிசி :
    உள் உறுப்புகள் வலுவாகும்.

19. குழியடிச்சான் அரிசி :
     தாய்ப்பால் ஊறும்.

20.சேலம் சன்னா அரிசி :
     தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும்.

21. பிசினி அரிசி :
     மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும்.

22. சூரக்குறுவை அரிசி :
     பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. வாலான் சம்பா அரிசி :
     சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. வாடன் சம்பா அரிசி :
     அமைதியான தூக்கம் வரும்.

GST - தொடர்பான அனைத்து தகவல்களும்

GST - தொடர்பான அனைத்து தகவல்களும்

GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு  வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.




1. Second sales  என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.

2. Online    மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

3.  உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10,15,20 ஆகிய தேதிகளில் மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.

4. Aggregated turnover  என்பது taxable goods +exempted good +Zero rated goods+Export goods ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.மேலும் ஒரே PAN number ல் இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூ ட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

5. Tin number பெற்றவர்கள் VAT department கொடுக்கும் temporary id &password மூலம் GST portal ல் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். 10 ந்தேதிக்குள் பதிவு செய்து கொண்டால் அந்த மாதத்திற்குண்டா ITC claim  செய்ய முடியும்.

6. வரி விகிதங்கள் 3 தலைப்புகளாக பிரிக்கப்பட்டு ள்ளது.
 - 1)CGST -  Central goods and service tax.
 - 2)SGST -State goods and service tax.
 - 3)IGST - Integrated goods  and service tax.
இதில் IGST என்பது வேறு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது Invoice ல் குறிப்பிடவேண்டும்.  IGST தலைப்பில் வரி செலுத்த வேண்டும்.   IGST =CGST +SGST.

 IGST  என்பது IT based centrally managed automated mechanism to monitor the "Inter state sales and supply of goods and services.

7.  வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர். Input tax credit எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.

8. Invoice ல்  விலை குறிப்பிடும் போது வரி உள்ளடக்கியது என குறிப்பிடமுடியாது. வரி தணியே காண்பிக்க வேண்டும்.அப்போதுதான் அவரிடம் வாங்குபவர் ITC தன்னுடைய ரிட்டர்ன் ல்  காண்பிக்க முடியும்.   Packing charges, freight ஆகியவற்றை வரி கணக்கிடும்போது  சேர்க்க  தேவையில்லை. விற்பனை தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.

9.Invoiceகள் 3   copy இருக்க வேண்டும். நிதி ஆண்டின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தொடர் எண்கள் இருக்கவேண்டும். முறையே buyer, transporter, seller ஆகியோருக்கு 3 காப்பிகள்.உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று reference number வாங்கி supplementary invoice  போட்டு transport மூலம் சரக்குகள் அனுப்பலாம்.  Supplementary invoice ல் orginal invoice number குறிப்பிடவேண்டும்.  Original invoice ல் reference number குறிப்பிடவேண்டும்.

10. Capital goods க்கும் ITC எடுக்கலாம். ஆனால்அவை Income tax return ல் depreciation claim செய்யாமல் இருக்க வேண்டும். இது குறித்து ஆடிட்டரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.

11. வணிகர்கள் composite scheme மூலம் குறைந்த அளவு வரி செலுத்த முடியும். 50 லட்சம் ரூபாய் வரை "aggregated turnover" உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்பவர்கள் தகுதியானவர்கள்.  ஆனால் ITC எடுக்க முடியாது. சட்டம் அமலுக்கு வந்த30 நாட்களுக்கு உள்ளாக உரிய அனுமதி பெற்று செய்யலாம்.  வாங்கி விற்பவர்கள் மட்டும் தகுதியானவர்கள். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால் composite scheme மூலம் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் இருந்து வாங்கி வியாபாரம் செய்யும் அடுத்த வணிகர் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். முடிந்தவரை composite வணிகர்களிடம் consumer-ஐ தவிர மற்றவர்கள் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.

12. Casual trader என்பவர் ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர் ஆகும். உதாரணமாக பண்டிகை காலங்களில் மட்டுமே கல்யாண மண்டபம் மற்றும் வேறு இடங்களில் வியாபாரம் செய்பவர் ஆகும். அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால்    turnover limit ஏதுமின்றி எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடையாது.
13. Gst சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நமக்கு மூலப் பொருட்கள் வழங்கும் வியாபாரிகள்  composition  scheme மூலம் வியாபாரம் செய்கிறாரா அல்லது ITC  எடுத்து வியாபாரம் செய்கிறார்களா என 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளவேண்டும் Consumer- ஐ தவிர மற்றவர்கள் composition scheme மூலம் செய்யும் வியாபாரிகளை தவிர்ப்பது நல்லது. நாம் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். நமது வியாபாரம் மற்றவர்களைவிட குறைவாகவே நடக்கும்.

14. வரி விதித்துள்ள பொருட்களை ஒரு வியாபாரி தனது பில்லில் வரி குறிப்பிடாமல் கொடுத்தால் அவர் Composition scheme மூலம் வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
 அல்லது 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

15. GST ரிஜிஸ்டர் செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. 20 லட்சம் ரூபாய் வரை  job work செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள தேவை இல்லை.

16. Job work  கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில் கொடுக்கவேண்டும்.180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி அபராதம் விதிக்கப்படும்.

17. Inter state self supplies such as stock transfer will be taxable as a taxable person has to take state wise registeration.
 B2C means supplies to unregistered person. (i. e.)business to consumers.
 B2B means supplies to registered person. (i. e.)business to business men.

18. அரசுஅறிவிக்கும் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள தவறியவர்கள் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தங்களது  stock பொருட்களுக்கு Input credit கோர முடியாது. ஒரு வணிகர் ஒரு பில்லில் உள்ள ITC  யை பில் தேதிகளில் இருந்து ஒரு வருடத்திற்குள் உபயோகித்து கொள்ள வேண்டும். ஒரு   Invoice ல் bill amount ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 1%TDS  பிடித்து அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

19. வரி செலுத்தும் போது  கீழ்   கண்ட GST account code எழுத வேண்டும்.
CGST -Tax 00010001,          
IGST   -Tax-0002 0001
SGST  -Tax00030001
Interest, fees, penalty, additional tax ஆகியவற்றிற்கு தனி தனி account codeகள்உள்ளன.

20. வரியுள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் உள் மாநிலத்தில் அதற்கு வரி செலுத்த வேண்டும் அன்றிலிருந்து மாதாமாதம்  படிவம் தாக்கல் செய்ய வேண்டும் வெளி மாநில வியாபாரங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு என்பது கிடையாது.

21.Every registered taxable person whose aggregated turnover during a financial year exceeds one crore rupees shall get his account audited and he shall furnish a copy of audited annual accounts and a reconciliation statement duly certified in  FORM GSTR-9B,electronically through a common portal.

22. ஒரு பில்லில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் வரியுள்ள பொருட்களை
unregistered person க்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் டெலிவரி செய்யும் இடம், மாநிலம், மாநில எண்  ஆகியவற்றை பில்லில் குறிப்பிட வேண்டும்.

23. வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST   என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.உள்மாநில விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST    என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.

24.GST வரி செலுத்துபவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு transport வாடகை கொடுக்கும் போது transporter  கொடுக்கும் invoice  ல் உள்ள tax யை  ITC-யாக எடுத்துக்கொள்ளலாம்.

 25. வருடாந்திர ரிட்டர்ன் அடுத்து நிதியாண்டு 31 டிசம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும். Compsition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Form GSTR-4,GSTR -4  A  ஆகிய 2 படிவங்களும் GSTR-9A என ஒரு வருடாந்திர படிவமும்
 தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். வெளி மாநில purchase &sales செய்யக்கூடாது.

26. ஒரு வியாபாரி வேறு மாநில    Consumer அல்லது unregistered person க்கு விற்றால்,    அதன் மதிப்பு ரூ 2,50,000 க்கு மேல் இருந்தால்அந்த invoice details GSTR-1 ரிட்டர்னுடன் upload செய்ய வேண்டும். ரூ 2,50,000  க்கு குறைவாக  இருந்தால் மாநில வாரியாக மொத்த விற்பனை மதிப்பு மட்டும் தெரிவித்தால் போதுமானது.

27. ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ. 10,000 வரையே cash,cheque, அல்லது DD மூலம் வரி செலுத்த முடியும்.  அதற்கு மேல் எதுவும் செலுத்த வேண்டி இருந்ததால் Internet banking, credit card, debit card, RTGS  மற்றும் NEFT மூலம் செலுத்த வேண்டும். NEFT  அல்லது RTGS மூலம் செலுத்துவதாக இருந்தால் சலானுடன் இணைந்து வரும்  form உடன்  பேங்கி ல் கொடுக்க வேண்டும்.
 விற்பனையை அதிகரிக்க கொடுக்கும் இலவச பொருட்களுக்கு ம் வரி செலுத்த வேண்டும்.
28. GST slab rates are 5%,12%,18%,28%.

29. Job work  "service " என்ற தலைப்பில் வரும். Job work செய்த இடத்தில் இருந்து நம் பார்ட்டிகளுக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் அவர் Unregistered job worker ஆக  இருந்தால் அவருடைய முழு முகவரிநம் ரிஜிஸ்டரேசன் சர்டிபிகேட்டில் இடம் பெற வேண்டும்.

30. ஒரு unregistered jobworker - யிடம் jobwork கொடுக்கும் போது ஏற்படும் வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.

31. நாம்  அனுப்பிய சரக்குகளை ஏதாவது ஒரு காரணத்துக்காக நம் பார்ட்டி திருப்பி அனுப்பினோலோ அல்லது விலை வித்தியாசம் கேட்டாலோ அல்லது  அவராகவே குறிப்பிட்ட தொகையை ஒரு பில்லில் பிடித்துக்கொன்டு மீதி அனுப்பினாலோ நாம் அவருக்கு GST  சட்டத்தின்படி credit note அனுப்ப வேண்டும். அதை அந்த மாத ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.  நம் பார்ட்டியும்  அவருடைய ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.

32.Registered taxable person அட்வான்ஸ் வாங்கினால் அதை பற்றிய தகவல்களுடன் receipt voucher கொடுக்க வேண்டும்.

33. வரியானது பைசா கணக்கில் வந்தால் nearest rupee கணக்குப்படி round off செய்து கொள்ளலாம்.

34. நாம் வாங்கிய  Raw Material  (taxable goods )நமக்கு வேண்டாம் என்று வாங்கியவர்களிடம் திருப்பி கொடுப்பதாக இருந்தால் 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விட வேண்டும். ITC reverse செய்ய வேண்டும்.

35. PAN number இல்லாமல் ஒரு வியாபாரி வேறு மாநில வியாபாரிக்கு பொருட்கள் அனுப்ப முடியாது

36. ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை  turnover செய்பவர்கள் Invoice ல்  HSN code   குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து கோடி வரை  turnover  செய்பவர்கள் முதல் 2 degit  HSN code குறிப்பிட வேண்டும்.

37. வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, வண்டியில்  உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ ஐம்பதாயிரத்தை தாண்டினால் வண்டியில்  உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க  அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.

38. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரியுள்ள பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வரியற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது.

39. 50 லட்சம் ரூபாய் வரை turnover உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்யும்  உற்பத்தியாளர்கள் Composition scheme மூலம் வியாபாரம் செய்ய தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

40.GST கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருட்களை தயார் செய்யும் manufacturer மட்டுமே Composition scheme மூலம் வியாபாரம் செய்ய முடியும்.

41. அரசு சில சமயம் சில பொருட்களுக்கு "reverse charge "முறையில் வரி விதிக்கும். அப்போது வாங்குபவர்கள் தான் வரி செலுத்த வேண்டும்.

42. Aggregated turnover கணக்கிடும்போது value of supply கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  அதாவது ஒரு பில்லில் உள்ள மொத்த மதிப்பு  ஆகு‌ம். Commission,freight, packing  charges  சேர்த்து கணக்கிடபடும்.discount சேராது.

43. GST நம்பர் எடுத்திருந்தால், வரி விலக்கு பொருட்களை விற்பனை செய்தாலும் கண்டிப்பாக  nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

44. GST நம்பர்  எடுத்திருந்தாலே ஒவ்வொரு மாதமும் 3 முறை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். வியாபாரம்  இல்லை என்றாலும் nil  ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

45. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால், பொருளின் மதிப்பு ரூ 100 க்கு மேல் இருந்தால் அவர் Tax invoice க்கு  பதிலாக வேறு பில் கொடுக்கலாம்.Section 28 .3 (b).

46. பில்லில் வரியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டால் அதை சரி செய்ய Credit note /debit note கொடுத்து சரி செய்ய வேண்டும்.

47. GST நம்பர் எடுத்தவர்கள் தான் விற்கும் பொருட்களுக்கு முன்பணம் வாங்கியிருந்தால் receipt voucher கொடுக்க வேண்டும்.  அதை ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். Section 33.

48. நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில்  ஏதாவது தவறு  அல்லது  விடுபட்டிருந்தாலோ, அதை சரி செய்யும் நாள் வரை  உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

49. முதன் முதலாக நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் உள்ள input credit amount  (நம்மிடம் உள்ள stock பொருட்களுக்கு )provisional ஆக  எடுத்துச் கொள்ளப்படும்.  வித்தியாசம் இருந்தால் உரிய நடைமுறை பின்பற்றப்படும். Section 36

50. GST சட்டத்தின்படி கணக்கு புத்தகங்களை, மற்ற  ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வரும் 60  மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

51. ரூபாய் ஒன்றறை கோடி வரை  டர்ன்ஓவர் செய்யும் வியாபாரிகளில் 90 சதவீதம் மாநில அரசும் மீதி 10 சதவீதத்தை மத்திய அரசும் கண்காணிக்கும்.
52. 15 நாள் நோட்டிஸ் கொடுத்து நமது இடத்தில்  ஆவணங்களை, பொருட்களை பார்த்து ஆடிட் செய்ய  அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Section 63

53 GST வரி வசூலித்த பிறகு, அந்த வரியை  அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க  அரசுக்கு  அதிகாரம் உள்ளது.

54. ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய  அதிகாரிகளுக்கு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

55. GST சட்டத்தின்படி மற்ற  அரசு  அதிகாரிகளும் GST  அதிகாரிகளுக்கு உதவ  அதிகாரம்  அளிக்கப்பட்டுள்ளது.

56. GST சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிக பட்சம் 25000 ரூபாய் வரை  அபராதம் விதிக்கப்படும்.  Section 85

57. சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக  என்ட்ரி செய்திருந்தாலும் அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு  இருந்தால் திருத்திக்கொள்ள  அபராதம்  இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது.  Section 86

58. GST சட்டத்தின்படி முறையான  ஆவணங்கள்  இல்லாமல் பொருட்களை  கொண்டு  செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து வரி மற்றும் 100 சதவீதம்  அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் செலுத்திய பிறகு  வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். Section 89

59. Parnership வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒரு பார்ட்னர் விலகுவதாக  இருந்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

60. Cenvat படி itc எடுக்க விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 90  நாட்களுக்கு முன்பு இருந்த பில்லில் உள்ள ITC யை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்  .Section 167.

61. ஆர்டர், சம்மன் போன்றவற்றை வியாபாரியின்e-mail முகவரிக்கு அனுப்பினாலே  அது பதிவு தபாலில் அனுப்பியதற்கு சமம் என்று Section 159 ல் கூறப்பட்டுள்ளது.

62. புட்டா கட்டிங் செய்வது, துணிகளுக்கு பிராசசிங் ,கேலண்டரிங்,பிரிண்டிங் செய்வது service என்ற தலைப்பில் வரும். Schudule-2

63. "Mutatis mutandis" means "the necessary changes having been made ".
 Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில purchase செய்யலாம், வெளி மாநில sales செய்யக்கூடாது.

64. நாம் 30 ம் தேதி பொருட்களை அனுப்பி அது  அடுத்த மாதம் 16ம் தேதி நமது பார்ட்டிக்கு  கிடைத்தால் GST  சட்டத்தின்படி 30ம்தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  அடுத்த மாதம் நாம் அதற்கு வரி செலுத்த வேண்டும்.  ஆனால் 10 ம் தேதிக்குள் நமது பில்  பார்ட்டிக்கு கிடைத்தால் மட்டுமே அவர் ITC எடுக்க முடியும். நமது பில்லும் ஏற்றுக் கொள்ளப்படும்.  இல்லாவிட்டால் mismatch என  இருவருக்கும் notice வரும்.

65. வரி விகிதத்தில் மாற்றம்  ஏற்படும் போது  "time of supply "என்பது invoice தேதி அல்லது பணம் வந்த தேதி இதில் எந்த செயல்  முதலில் நடந்ததோ அது ஏற்றுக் கொள்ளப்படும்.

66. நாம் நமது பார்ட்டிகளுக்கு தாமதமாக payment செய்து அதற்கு வட்டி, அபராதம் போன்றவற்றை செலுத்தி இருந்தால் அவையும் "Aggregated turnover "கணக்கிடும்போது சேர்த்துக் கொள்வர்.

67.Partnership firm ல் partner change நடந்தால் அதை தெரியப்படுத்தி புதிய registration செய்து கொள்ள வேண்டும்.

68.Original registration certificate கிடைத்த பிறகு, அந்த நாள் வரை  ஏற்கனவே கொடுத்த  invoiceகளுக்கு பதிலாக வேறு revised invoice பார்டிகளுக்கு கொடுக்கவேண்டும். Section 28

69. நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக கமிஷனர் கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கொடுத்து தணிக்கை செய்ய கமிஷனருக்கு  அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டும்.  Section 68

70. Rawmaterial suppliers, manufacturers,(நாம் ),buyers ஆகிய மூவரும் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான படிவங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒவ்வொரு வரும் ITC CLAIM செய்ய முடியும். Section 64.

தினசரி வாழ்வில் பயன்படும் மந்திரங்கள்

தினசரி வாழ்வில் பயன்படும் மந்திரங்கள் !!!


வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி? - Share Market Training

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


1.எங்காவது வெளியில் கிளம்பும் முன் கீழ்க்கண்ட மந்திரத்தை 3 தடவை ஜெபித்து விபூதி அல்லது குங்குமம் அணிந்து செல்லவும்.குறிப்பாக இன்டர் வியூ,பெரிய மனிதர்களைக் காண செல்லும் பொழுது இதை பின்பற்றவும்.

ஹரி ஓம் திருவுள்ளமே ஆதித் திருவுள்ளமே |
செந்தாமரையில் பிறந்திடும் மருவே|
உன்முகம் என்முகமாக உன் கண் என் கண்ணாக|
கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா ||

 2.தினமும் ஓம் ஸ்ரீ ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹா என்ற மந்திரத்தை முடிந்தவரை அதிகம்  ஜெபித்து வர வாழ்வில் என்றும் வறுமை அனுகாது.

3.குளித்து முடித்த பின் குழந்தையைக்  கிழக்குப் பக்கம் நிற்க வைத்துக்  குழந்தையின் நெற்றியில் வலது கை மோதிரவிரலால் ஐம் என்று எழுதவும்.பின் தலையில் கைவைத்து ஓம் ஐம் வத வத வாக்வாதினி நமஹா என்று 3 தடவி ஜெபித்து சரஸ்வதியை வேண்டி வாழ்த்தவும்.இதனால் எந்தக்  கலையிலும் மேன்மை உண்டாகும்.

                                             வாழ்கவளமுடன்

மோர் இன்றி அமையாது உலகு...!!!

மோர் இன்றி அமையாது உலகு...!!!




கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.

குறுந்தொகையில்...

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப் பார்ப்போம்:

செரிமானப் பாதை சீராக

உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு - குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.

மருந்தாகும் மோர்

கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.

திரிதோஷ சமனி

“மோருண வளிமுதன் மூன்றையுமடக்கி” எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மோரானது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும் என்று குறிப்பிடுகிறது. உடலில் உண்டாகும் வீக்கம், ரத்தக் குறைவு, பேதி, பசியின்மை, தாகம், உடல் வெப்பம் போன்றவற்றுக்குப் பசுவின் மோர் சிறந்தது. கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து பருக, பசி அதிகரிப்பதோடு ரத்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

நீர் சுருக்கி, மோர் பெருக்கி

கிருமிகளை அழிக்க, நீரை நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்தும், மோரின் குணங்களை முழுமையாகப் பெற, மோருடன் அதிக நீர் சேர்த்து, நீர் மோராகவும் அருந்த வேண்டும் எனும் அறிவியலை `நீர்சுருக்கி மோர்பெருக்கி’ என்று அன்றே ஓலையில் செதுக்கினார் தேரையர். மோரின் புளிப்புத் தன்மை நீங்கும் அளவுக்கு நீர் சேர்த்துப் பருகுவதால், புளிப்பு சுவை அதிகரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாது என்பதே சித்தர்களின் சிந்தனை.

அனுபானம்

மோரின் சிறப்பை அறிந்தே, பல சித்த மருந்துகளைத் தயாரிக்க மோர் பயன்படுத்தப்படுகிறது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளின் அனுபானமாகவும் (Vehicle) மோர் பயன்படுகிறது. உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோரானது பத்தியத்தின்போதுகூடப் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது.

வெயில் காலங்களில்

வேனிற் காலம் எனும் ரதத்தை அழகாக இழுத்துச் செல்லும் சாரதி மோர். வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம். மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும். அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ, காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.

நஞ்சகற்றி

மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடலில் சேர்ந்த கழிவைச் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் குணம் மோருக்கு உண்டு. சில வகை உணவுப் பொருட் களுக்கு, மோரானது நஞ்சு முறிவுப் பொருளாகவும் பயன்படுகிறது.

மோருடன் வரவேற்போம்

ஆங்காங்கே `மோர்ப் பந்தல்கள்’ அமைத்து மக்களின் நலம் காத்த வரலாற்று குறிப்புகள் நம்மிடம் ஏராளம் உண்டு. பல ஆயிரம் வருடங்களாக வெயில் காலத்தை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட விருந்தோம்பல் முறை மோர்ப் பந்தல்கள். ஆனால் இன்றைக்கு மோர்ப் பந்தல்கள் குறைந்து, செயற்கை குளிர்பானங்களின் விற்பனை அதிகமாகிவிட்டது. இனிமேலும் விழித்துக்கொள்ளாவிட்டால், நம் ஆரோக்கியமும் பாரம்பரியமும் முற்றிலும் தொலைந்து போகலாம்.


Health-ஐக் கொண்டு Wealth-ஐப் பெருக்க... 6 அற்புத வழிகள்!

Health-ஐக் கொண்டு Wealth-ஐப் பெருக்க... 6 அற்புத வழிகள்!



காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு தூங்கும் வரை ஹெல்த் தொடர்பான பல விஷயங்களை தினமும் அக்கறையுடனும் ஆர்வமுடனும் செய்துவருகிறோம். ஆனால், நலம் பெற்ற வாழ்க்கை வளம் பெற, நிதி சார்ந்த விஷயங்களை எவரும் செய்வதில்லை. உடலுக்கான ஹெல்த் எவ்வளவு அவசியமோ, அதேபோல எதிர்காலத்துக்கான வெல்த்தும் அவ்வளவு அவசியம்.

ஹெல்த்தைக்கொண்டு வெல்த்தைப் பெருக்கிட இதோ அற்புதமான ஆறு வழிகள்...

1. தினமும் அதிகாலையில் எழுவதால் கோடி நன்மைகள் என்பார்கள். அதைப்போல நம் வாழ்க்கையை வளமாக்கிட ஆரம்ப காலத்திலிருந்தே முதலீட்டைத் தொடங்குங்கள். முதலீடு என்றதும் லட்சக்கணக்கில்தான் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதில்லை. குழந்தைகளுக்கு உண்டியல் ஒன்றை அளித்து அதில் பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமிக்கக் கற்றுத்தருகிறோம். இதைப்போல, ஆரம்பகாலத்திலிருந்ததே விருப்பமான நிதி சார்ந்த திட்டத்திலான முதலீட்டை சிறுகச் சிறுக மேற்கொள்ளுங்கள்.

2. ஆரோக்கியமான வாழ்வுக்குச் சீரான உணவு அவசியம். அதைப்போல, நம்முடைய சந்தோஷமான வாழ்க்கைக்கு மேற்கொள்ளப்படும் முதலீடு பன்முகத்தன்மையுடன் (Diversification) இருப்பது நல்லது. அதாவது முதலீட்டைப் பொறுத்தவரை தங்கத்தில் மட்டும் முதலீட்டை மேற்கொள்ளாமல் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, ரியல்எஸ்டேட் எனப் பல வகையான முதலீட்டுச் சார்ந்த திட்டங்களில் முதலீடு மேற்கொள்வது நல்லது.

3. கோபம், மன அழுத்தம், இதயநோய், ரத்தக்கொதிப்பு போன்று உடலில் எந்த மாதிரியான பிரச்னைகளும் வரக்கூடும் என்பதைப் பெரிய பட்டியலிடலாம். உடல்நலத்தில் மட்டுமல்ல, முதலீட்டு முறைகளிலும் கோபத்தைத் தவிர்த்து பொறுமையுடன் முதலீடு செய்வது அவசியம். முதலீட்டில் லாபம் வந்தால் சந்தோஷப்படுவதைப்போல, நஷ்டம் வந்தால் ஏன் வந்தது, எதனால் வந்தது, எப்படி வந்தது என அலசி ஆராய்ந்து பொறுமையாக முடிவெடுப்பது நல்லது.

4. எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும் தினம்தோறும்  உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், பலன் இருக்காது. உடற்பயிற்சிபோலவே தினந்தோறும் முதலீடு மேற்கொள்வது என்பது சாத்தியமில்லை. குறைந்தது உங்களுக்கு விருப்பமான முதலீட்டு சார்ந்த திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

5. `தண்ணீரை தினமும் போதுமான அளவில் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். சருமமும் வறட்சியின்றி மென்மையாக இருக்கும்' என்பார்கள். இதைப்போல, போதுமான அளவு பணத்தை கையிருப்பாக வைத்திருப்பது நல்லது. என்னதான் லட்சக்கணக்கில் பணம் இருந்தாலும் அந்தப் பணத்தை அவசரத்தேவைக்காக வைத்திருப்பது நல்லது.

6. நம்முடைய உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனே குடும்ப மருத்துவரை அணுகுவதைப்போல, நிதி சார்ந்த விஷயங்களில் சந்தேகம் அல்லது பிரச்னைகள் எனில், அது தொடர்பான ஃபைனான்ஷியல் டாக்டரை அணுகுவதே நல்லது. ஏனெனில், பணத்தைச் சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல, அதை மிச்சப்படுத்தவும் நிதி தொடர்பான நிபுணர்களின் ஆலோசனை அவசியம்.

எந்த வயது, எதில், எவ்வளவு முதலீடு செய்யலாம்?

பிசினஸில் தோல்வியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

பிசினஸில் தோல்வியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?




பொதுவாக, பொருள்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது, எத்தனை சிறப்பான விஷயங்கள் உங்கள் தயாரிப்பில் இருந்தால் எனக்கென்ன... விலையைச் சொல்லுங்கள். அதுதான் நான் வாங்குவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும் விஷயம் என்று சொல்லும் வகை.

இரண்டாவது, உங்கள் தயாரிப்பில் என்ன இருக்கிறது என்றெல்லாம் கவலையில்லை. விலையைப் பற்றியும் கவலையில்லை. ஆனால், உடனே வேண்டும் என்னும் ரகம்.

மூன்றாவது வகை... பொருள் கிடைத்தால் போதும்; சர்வீஸ், உதிரிப்பாகங்கள் பற்றிக் கவலை இல்லை என்பதே.

நான்காவது ரகம்... தரம், சர்வீஸ், ஸ்பேர்கள் கிடைத்தல், சரியான சமயத்தில் கிடைத்தல் என எல்லா விஷயங்களிலும் கறாராகப் பேசும் கூட்டம். இவர்களும் விலையைப் பற்றிக் கவலைப்படாத வர்கள்.

இப்படி நான்கு வகை வாடிக்கையாளர்கள் இருக்க, பொத்தாம்பொதுவாக ஒரு சிலரிடம் கேட்டுவிட்டு  நிறுவனம், உற்பத்தி மற்றும் விலை முடிவுகளை எடுப்பது தோல்வியையே தரும்.

இந்தத் தோல்வியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? 

கிரெடிட் கார்ட் பற்றி அறிய வேண்டிய அடிப்படை தகவல்கள் இவை!

கிரெடிட் கார்ட் பற்றி அறிய வேண்டிய அடிப்படை தகவல்கள் இவை!

ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம், அவர்களுடைய வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் அட்டையே `கிரெடிட் கார்டு'. வாடிக்கையாளர் ஒருவர், இதைப் பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் வாங்கவோ அல்லது சேவையைப் பெறவோ இயலும். ஒரு வாடிக்கையாளர் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, தான் வாங்கிய பொருள் அல்லது பெற்ற சேவைக்கான கட்டணத்தை, குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை முன் பக்கம், பின் பக்கம் என இரண்டு பக்கங்களிலும் பல தகவல்கள் உள்ளன. முன் பக்கத்தில் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்தின் பெயர், வணிகச் சின்னம், க்ளியரிங் நெட்வொர்க்கின் பெயர் (விசா அல்லது மாஸ்டர் கார்ட்), கார்டு வாங்கியவரின் பெயர், கார்டின் எண், அந்த கார்டு காலாவதியாகும் தேதி போன்ற பல தகவல்கள் இருக்கும்.

கிரெடிட் கார்டின் பின் பக்கம், கறுப்பு நிறக் காந்தப்பட்டை இருக்கும். இது மிகவும் முக்கியமானது. இந்தக் காந்தப்பட்டையில் கிரெடிட் கார்டு வாங்கியவரின் பெயர், கார்டின் எண், கார்டு செல்லுபடியாகும் காலம், கடன் எல்லையின் அளவு, கார்டு வெரிஃபிகேஷன் கோட், வங்கி குறித்த தகவல்கள்... எனப் பல விவரங்கள் இருக்கும். ஆனால், இந்தக் காந்தப்பட்டையில் `வாடிக்கையாளரின் ரகசியக் குறியீட்டு எண்' எனச் சொல்லப்படும் பின் (PIN) நம்பர் இருக்காது.

கிரெடிட் கார்டு என எடுத்துக்கொண்டாலே, அதில் 16 இலக்க எண்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதில் முதல் இலக்கம் க்ளியரிங் நெட்வொர்க்கைக் குறிக்கிறது. அதாவது, கிரெடிட்  கார்டின் முதல் இலக்க எண் `3' ஆக இருந்தால், அது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அல்லது டைனர்ஸ் க்ளப் போன்ற பயண உதவி நிறுவனங்களால் வழங்கப்பட்டது. இதுவே கிரெடிட் கார்டின் முதல் இலக்க எண், `4' ஆக இருந்தால், அது விசா நிறுவனத்தால் வழங்கப்பட்டது. `5' ஆக இருந்தால், அந்த கார்டை மாஸ்டர் கார்ட் நிறுவனம் வழங்கியது என்றும், `6' ஆக இருந்தால், டிஸ்கவர் என்ற நிறுவனம் வழங்கிய கார்டு என்றும் பொருள்கொள்ளலாம். இதுமட்டுமின்றி, மற்ற எண்கள் வங்கியின் பெயர், பிராந்தியம் மற்றும் வாடிக்கையாளர் குறித்த தகவல்களைக் குறிக்கும்.

கிரெடிட் கார்டின் பின் பக்கத்தில் உள்ள காந்தப்பட்டையின் அருகில் வாடிக்கையாளர் கையொப்பம் இடுவதற்கான பகுதி ஒன்று இருக்கிறது. இந்தக் கையொப்பம் எதற்கு என்று தெரியுமா? நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கடையில் ஏதாவது ஒரு பொருளை வாங்குகிறீர்கள் என்றால், அவர்கள் வழங்கும் பில்லில் உங்களுடைய கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே இந்தக் கையெழுத்து பயன்படுகிறது.

கிரெடிட் கார்டில் கையெழுத்திடும் இடத்தின் அருகில், மூன்று எண்கள் இடம்பெற்றிருக்கும். இந்த எண்கள் `Customer Verification Value (CVV) எண்' எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த எண், கிரெடிட் கார்டைப் பாதுகாக்கும் ஓர் அம்சமாகக் கருதப்படுகிறது. கிரெடிட் கார்டு மூலமாக இன்டர்நெட் வழியே பொருள்களை வாங்கும்போது, கிரெடிட் கார்டின் முன் பக்கத்தில் உள்ள எண்ணோடு, இந்த CVV எண்ணையும் பயன்படுத்தியே பொருள்களை வாங்க முடியும். இந்த எண் மிக மிக அவசியம்.

ஏனெனில், உங்களுடைய கிரெடிட் கார்டில், முன் பக்கம் மற்றும் பின் பக்கம் உள்ள இரண்டு எண்களையும் தெரிந்துகொண்டு, யார் வேண்டுமானாலும் உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இன்டர்நெட் மூலம் பொருள்களோ அல்லது சேவைகளையோ பெற முடியும். ஆகையால், கிரெடிட் கார்டைக் கொஞ்சம் கவனத்துடன் பயன்படுத்துவது நல்லது.

இந்த நிலையில் கிரெடிட் கார்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து தனியார் வங்கி அதிகாரி விஜயகுமாரிடம் பேசினோம்.

விஜயகுமார், கிரெடிட் கார்டு"வங்கிகளில் விசா, மாஸ்டர் கார்டு என பிரித்து தருவது எல்லாம் வங்கிகள் வேலை. வங்கிகள், வாடிக்கையாளரைப் பொறுத்து விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு என எந்த கார்டுகளை வேண்டுமானாலும் வழங்கலாம். அதேநேரம் வாடிக்கையாளர்கள், எந்த கார்டு வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்களோ, அந்த கார்டுகளைத் தாராளமாக கேட்டுப் பெறலாம். விசா, மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளில் எல்லாம் ஒரு சில வசதிகள் மாறுபடும். எல்லா கார்டுகளும் இலவசமாக வராது. கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வங்கிகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். வங்கிகள் வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் பெற வேண்டும்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகள் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம். ஆனால், உள்ளூரில், சிறு நகரங்களில் இந்த கார்டைப் பயன்படுத்த முடிவதில்லை. எல்லா கார்டும் எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது. ஆகையால் வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து வங்கிகள், ஏற்ற கிரெடிட் கார்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளில் பெரிய வித்தியாசம் என்றால் எதுவுமில்லை. எனினும் உலகம் முழுவதும் பெரும்பாலும் மாஸ்டர் கார்டு எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் வித்தியாசம் என்னவென்றால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் கொஞ்சம் மேலும், கீழும் இருக்கும், அவ்வளவுதான்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கிரெடிட் கார்டை பெயர் தெரியாத, சிறிய நிறுவனங்களில் எல்லாம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதுபோன்ற ஒரு சில நிறுவனங்கள் மோசடி நிறுவனங்களாக இருப்பதால் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டில் Expiry Date, CVV போன்ற விவரங்களைக் கண்ட இடங்களில் எழுதிவைக்காமலும், யாரிடம் சொல்லாமலும் இருப்பது நல்லது.

கிரெடிட் கார்ட் பரிவர்த்தனையின் போது மொபைல் எண்ணில் கிடைக்கப் பெறும் OTP எண்ணைப் பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது. 

ஒரு போட்டோகிராபரின் வெற்றிக் கதை! பாண்டியராஜன்.

‘‘வித்தியாசமான அணுமுறைதான் என்னைத் தொழிலில் ஜெயிக்க வைத்தது!’’

ஒரு போட்டோகிராபரின் வெற்றிக் கதை! பாண்டியராஜன்.


இளம் வயதில் வருகிற உண்மைக் காதல், சிலருக்கு நல்ல வெற்றிப் பாதைகளை வகுத்து தரும் என்பதற்கு நல்லதொரு உதாரணமாக இருக்கிறார் க.பாண்டியராஜன். சாத்தூரில் துருவன் மாடலிங் ஸ்டுடியோ வைத்திருக்கும் அவரைச் சந்தித்தோம். ஓர் திருமண புகைப்படத்தை கணினியில் எடிட் (Edit) செய்து கொண்டே நம்முடன் பேசினார் அவர்.

“எனக்கு சொந்த ஊர் சாத்தூர் அருகிலுள்ள சத்திரப்பட்டி எனும் கிராமம். என் அப்பா ஒரு டிரைவர். என் ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் என் அம்மா இறந்துவிட்டார். பின் வறுமையின் காரணமாக ஊரில் கோயில் மணி தயாரிக்கும் ஒரு கம்பெனியில் சிறிது காலம் வேலை பார்த்தேன். பின் கேரளாவுக்கு கடலை மிட்டாய் கம்பெனிக்கு சென்றுவிட்டேன். அங்கு காலை ஐந்து  மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை இருக்கும். பல கஷ்டங்களை நான் அப்போது அனுபவித்தேன்.

என் 16 வயதில் தந்தைக்கும் எனக்குமான கருத்து வேறுபாட்டில் தனி வீடு பிடித்து சென்றுவிட்டேன். பின்பு, பணம்தான் வாழ்க்கை போல என நினைத்து பல வேலைகளை செய்தேன். காலை ஐந்து மணிக்கு எழுந்து சாப்பாடு செய்து, ஆறு மணிக்கு முறுக்கு கம்பெனிக்கு சென்றுவிடுவேன். அங்கு காலை முறுக்கு உற்பத்தி செய்வோம். மதியம் 2.30 மணியிலிருந்து கடைக்கு விநியோகிக்க சென்றுவிடுவேன். இரவு 7.30 மணிக்கு தீப்பெட்டி ஆபிஸுக்குச் சென்று இரவு 12 மணி வரை வேலை பார்ப்பேன்.

எனக்கென்று எந்த சொந்தபந்தமும் இல்லை. என் மீது பாசம் காட்ட யாருமில்லாதபோது என் மீது தோழமை காட்டினார்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள். அங்குதான் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்.

பின்பு, பிரியா ஸ்டுடியோவுடன் எனக்குத் தொடர்பு கிடைத்தது. அங்கு கார்த்தி அண்ணன்தான் என்னைப் புரிந்துகொண்டு, என் ஸ்டுடியோ வாழ்க்கைக்கான அடிதளத்தை அமைத்துக் கொடுத்தார். எனக்குப் புகைப்படம் எடுப்பதற்கும், நல்ல உடை அணிவதற்கும் கற்றுக் கொடுத்து என் வாழ்வை மாற்றிய மறக்க முடியாத நபர்.

சின்னச் சின்னதாக நான் செய்த வேலைகள் போக மீதமுள்ள நேரத்தில் வாலிபர் சங்கத்துக்காக செலவழித்தேன். அப்போது, வாலிபர் சங்கத்தின் பெண் தோழியராக இருந்த பாண்டிசெல்வியின் நட்பு எனக்குக் கிடைத்தது. பின்பு அது காதலாக மாறியது. அதுவரை எனக்கென்று யாருமில்லை. இனி என் காதலிக்காக சொந்தத் தொழில் தொடங்கி சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

2009-ல் என் சொந்த பணம் ரூ.1500 மற்றும் தோழர் கருணாமூர்த்தியிடம் ரூ.25,000 கடன் பெற்று, கேமிரா வாங்க நினைத்தேன். என் நண்பர் ஆண்டனிதான் எனக்கு கேமரா வாங்கித் தர உதவினார். நிக்கான் கேமிராவின் விலை ரூ.32,000 என்றார்கள். அவ்வளவு என்னிடம் இல்லை என்றதுடம், நண்பர் ஆண்டனி, மீதப் பணத்தை தந்து கேமிராவை வாங்கித் தந்தார்.

2010-ல் தனியாக ஒரு அறை எடுத்து, நிறைய நண்பர்களின் உதவியுடன் கல்யாண ஆர்டர்கள் எடுத்து அதை சரியாக செய்து கொடுத்தேன். இந்த சமயத்தில் என் காதலி பாண்டிசெல்வி, மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்கச் சேர்ந்தாள். ஃபோட்டோ பிரிண்ட் போடுவதாகச் சொல்லி அவளைப் பார்க்க அடிக்கடி செல்வேன்.

நான் எடுத்த போட்டோக்களை குளோ (GLO) மற்றும் தினேஷ் (Dhinesh) கலர் லேப் சென்று பிரிண்ட் போடச் செல்வேன். அங்குதான் பல வகையான ஃபோட்டோக்களை பார்த்து என் புகைப்படம் எடுக்கும் முறையினைக் கற்றுக்கொண்டேன்.

2011-ல் தனி ஸ்டுடியோ சாத்தூரில் ஆரம்பித்தேன். அங்கிருந்த தொழில் போட்டி என்னை மேலும் வளர்ச்சி அடைய செய்தது. என் காதலி கல்லூரிப் படிப்பு முடித்தபின், இனி அவளைப் பார்க்க முடியாதோ என்று நினைத்தேன். உடனே, சிவகாசியில் 2015-ன் ஆரம்பத்தில் தனி ஸ்டுடியோ ஆரம்பித்தேன்.

சிவகாசியில் ஸ்டூடியோ ஆரம்பித்தபிறகுதான் எனக்குப் பெரிய ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. இதன்பிறகுதான் என் ஸ்டூடியோ நியூ ஜெனரேஷன் ஃபோட்டோகிராபியாக (New generation photography) மாற்றம் அடைந்தது. எனக்கு வரும் திருமண போட்டோக்களை வித்தியாசமாக எடுத்துத் தந்தேன். வித்தியாசமான அணுகுமுறைதான் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். இன்று பலரும் என்னைத் தேடி வருகிற அளவுக்கு என்னை நான் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறேன். என்னை ஜெயிக்க வைத்தது என் காதல்தான்’’ என்று முடிக்கிறார் பாண்டியராஜன்.

செய்யும் தொழிலை வித்தியாசமாக,  ரசித்து செய்தால் நிச்சயம் வெற்றிதான் என்று சொல்லும் இவர் இன்னும் புதிய உயரத்தை எட்டட்டும்! 

கோவில்பட்டியில் ஜெ.பி.ஸ்டிக்கர் என்கிற பெயரில் ஸ்டிக்கர் கடை நடத்திவரும் அ.மணிபாரதி.

‘‘ஆர்வமாகச் செய்தேன், தொழிலில் ஜெயித்தேன்!’’

கோவில்பட்டியில் ஜெ.பி.ஸ்டிக்கர் என்கிற பெயரில் ஸ்டிக்கர் கடை நடத்திவரும்  அ.மணிபாரதி.




படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவில்லை என பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்பார்கள். ஆனால், எந்தவொரு தொழிலையும் ஆர்வத்துடன் செய்தால், அந்தத் தொழிலை சொந்தமாகத் தொடங்கி, அதில் நிச்சயம் ஜெயிக்கவும் செய்யலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம், கோவில்பட்டியில் ஜெ.பி.ஸ்டிக்கர் என்கிற பெயரில் ஸ்டிக்கர் கடை நடத்திவரும்  அ.மணிபாரதி.

இந்தத் தொழில் அவர் ஜெயித்தது எப்படி என்பதை அவரே சொன்னார்.

எனக்கு சொந்த ஊர் கோவில்பட்டி. என் அப்பா அமல்ராஜ் ஓவியர். நான் பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் படித்தேன். நான் படித்த படிப்பு சம்பந்தமான தொழிலில் செய்ய வேண்டும் என்று நினைத்து, இசி-டெக் (EC-TECH) எனும் எடை கருவி தயாரிக்கும் கடையில் மாதம் ரூ.5,000-த்துக்கு வேலைக்குச் சேர்ந்தன். அந்த வேலை எனக்கு ஒத்துவரவில்லை என இரண்டு மாதங்களில் அந்த வேலையை விட்டுவிட்டேன்.

பின்பு வங்கித் தேர்வுகளுக்குப் படிக்க ஆரம்பித்தேன். நன்றாகப் படித்தால், தேர்விலும் வெற்றி பெற்றேன். ஆனால், எனக்கு வேலை கிடைக்கவில்லை.

பின்பு, என் தந்தை சொந்தத் தொழில் தொடங்கலாம் என அறிவுரை கூறினார். எனக்கு பைக் என்றால் ரொம்பப் பிரியம். எனவே, வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் தொடங்கலாம் என கலந்து ஆலோசித்தோம். எனினும் எனக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி எதுவும் தெரியாது. எனவே, ஸ்டிக்கர் தயாரிப்பது எப்படி என்று என் தந்தை இரண்டு நாள் சொல்லித் தந்தார். அதனுடன் அவரது நண்பர் சங்கர் என்பவரிடம் ரூ.2,00,000 கடன் வாங்கிக் கடையை ஆரம்பித்தேன்.

பின்பு, நானாக ஒவ்வொரு விஷயத்தையும் சொந்தமாகக் கற்றுக்கொண்டேன். அழகாக ஸ்டிக்கர் ஒட்டி கஷ்டமர்களைக் (Customer) கவர்ந்தேன். என் வித்தியாசமான ஸ்டிக்கர்களைப் பார்த்து, என்னைத் தேடி நிறைய பேர் வர ஆரம்பித்தனர். அதே நேரத்தில் புதிய மாறுதல்களை என்னிடம் கேட்டனர். அதன்படி பைக் உருமாற்றம் (bike modification) செய்து தர ஆரம்பித்தேன்.

பின், 2015-ல் கார்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்ட ஆரம்பித்ததேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாள் முழுக்கவே இந்த வேலை பிசியாக இருக்கும். ஒரு நாளைக்கு ஸ்டிக்கர் பொருட்களுக்கான செலவுகள் போக ரூ.2,000 வரை எனக்கு வருமானம் கிடைக்கும்.

இதனால், 2015-ல் இன்னொரு கடையையும் ஆரம்பித்தேன். குறைந்தது 1000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நான் ஸ்டிக்கர் செய்து தந்திருக்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் பல கிளைகளை தொடங்க வேண்டும் என்கிற லட்சத்துடன் உழைத்து வருகிறேன்’’ என்றார்.

வித்தியாசமாக செய்தால், வாடிக்கையாளர்கள் கவனம் நிச்சயம் கிடைக்கும். அதன் மூலம் தொழிலில் ஜெய்க்க முடியும் என்பதை தனது பிசினஸ் சீக்ரெட்டாகக் கொண்டு செயல்படும் மணிபாரதி இன்னும் புதிய உயரங்களை எட்டட்டும்.

அங்கீகாரமற்ற வீட்டு மனை வரைமுறை - தமிழக அரசு புதிய விதிமுறைகள்

அங்கீகாரமற்ற வீட்டு மனை வரைமுறை - தமிழக அரசு புதிய விதிமுறைகள்



தமிழக அரசு இன்று (மே 5, 2017) அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டது. அது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பிறப்பித்துள்ள அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்குமுறை விதிமுறை -2017 உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளின்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், டவுன் பஞ்சாயத்தில், செயல் அதிகாரியும், கிராம பஞ்சாயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் இந்த நிலங்களை வரையறை செய்யும் தகுதியான அதிகாரிகள் ஆவார்கள்.

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களும், நிலத்தின் உரிமையாளர்களும் இந்த அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து, தங்களது நிலத்தை வரையறை செய்து கொள்ளலாம்.

இந்த நிலங்கள் கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளாக இருக்க வேண்டும். இந்த நிலங்களை வரையறை செய்வதற்காக உரிய கட்டணத்தை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும்.

அதன்படி, மாநகராட்சி பகுதிகளில், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 வீதமும், நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 60 என்றும் கிராம பஞ்சாயத்துக்களில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 30 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத இந்த வீட்டு மனைகளில் மேம்படுத்துவதற்கு என்று தனி கட்டணமும் செலுத்த வேண்டும். மேம்பாட்டு கட்டணமாக, மாநகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 600, சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 350, முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 250, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.150, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 100 என்றும் செலுத்த வேண்டும்.

MRF - ரூ.500-லிருந்து ரூ.68,000-த்துக்கு... வயிற்றெச்சலைக் கிளப்பும் பங்கு!

MRF - ரூ.500-லிருந்து ரூ.68,000-த்துக்கு... வயிற்றெச்சலைக் கிளப்பும் பங்கு!



சில பங்குகளின் விலையைப் பார்த்தால், ‘அடடா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அந்தப் பங்கை வாங்கித் தொலைச்சிருக்கலாமே!’ என்று நினைத்து, புலம்பித் தீர்ப்போம். அப்படி பலரையும் புலம்ப வைத்த ஒரு பங்கு என்றால், அது எம்.ஆர்.எஃப். டயர் பங்கைச் சொல்லலாம். வெறும் 500 ரூபாயில் வர்த்தகத் தொடங்கிய இந்தப் பங்கின் இன்றைய விலை ரூ.68,000.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியாவில் டயர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி லிமிடெட் (எம்ஆர்எஃப்) செயல்பட்டு வருகிறது. டயர், டியூப் மற்றும் கன்வேயர் பெல்டுகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்திய டயர் நிறுவனங்களில் முக்கியமானது எம்ஆர்எஃப். இரு சக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்து வகையான வாகனங்களிலும் நல்ல வளர்ச்சி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக டயர்களின் தேவை அதிகரித்து வருவதும், டயர் தயாரிப்புக்கான மூலப்பொருளின் விலை குறைவாக இருப்பதும் இந்த நிறுவனத்துக்கு நல்ல லாபத்தை சம்பாதித்துத் தந்தது. இதனால் இந்தப் பங்கின் விலை கிடுகிடுவென உயர்ந்து, அனைவரையும் நோகடித்தது.

இப்போதைக்கு இந்திய பங்குச்சந்தையில் அதிக விலை உயர்ந்த பங்கு என்றால் அது எம்ஆர்எஃப் நிறுவனத்தின் பங்குதான். 2000-ம் ஆண்டில் எம்ஆர்எஃப் பங்கின் விலை கிட்டத்தட்ட 2,300 ரூபாய்.  2001 ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் பங்கின் விலை குறைந்து வெறும் ரூ.455-க்கு வர்த்தகமானது. ஆகக் குறைந்த அந்த விலையைத் தொட்டபின், இந்தப் பங்கின் விலை ஜிவ்வென்று உயர ஆரம்பித்தது.


2004-ல் ரூ.2,500-யைத் தொட்டது. 2008-ல் ரூ.8,000-ஆக உயர்ந்தது. 2010-ல் ரூ.6,000-ஆகக் குறைந்தது. 2013-ல் ரூ.13,000-ஆக உயர்ந்தது. 2015-ல் ரூ.38,000 ஆனது. தற்போது, 68,000 என்கிற விலையில் வர்த்தகமாகி வருகிறது. 2020-ல் எம்ஆர்எஃப் பங்கு ஒன்றின் விலை ரூ.1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனாலும் ஆகலாம்.

ஆரம்பத்தில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் பங்கின் விலை 500 ரூபாய் என்று இருக்கும் போது, குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்கு முதலீடு செய்து இருந்தால் இன்றைய நிலவரப்படி அதன் மதிப்பு 6,84,000 ரூபாய் எனப் பல லட்சம் ரூபாயாகப் பெருகியிருக்கும்.

எம்ஆர்எஃப் நிறுவனம் மட்டுமில்லை, இதனைத் தவிர ஐஷர் மோட்டார்ஸ் (ரூ.25,840), போஷ் (ரூ.23,203) உள்ளிட்ட சில நிறுவனத்தின் பங்குகளும் அதிக விலையில் வர்த்தகமாகி வருகின்றன. பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவதே முக்கியம். பங்கின் விலை 10 ரூபாய், 100 ரூபாய் 1,000 ரூபாய் என எப்படி இருந்தாலும் எத்தனைச் சதவிகிதம் லாபம் என்பதுதான் முக்கியம்.

நல்ல பங்கில் முதலீடு செய்து, அதை நீண்ட காலத்துக்கு வைத்திருந்தால், அபரிமிதமான லாபம் கிடைக்கும் என்பதற்கு எம்.ஆர்.எஃப். பங்கு ஒரு நல்ல உதாரணம்!

சம்பள உயர்வுக்கு 10 வழிகள்!

சம்பள உயர்வுக்கு 10 வழிகள்!

இந்த நிதி ஆண்டில் எவ்வளவு சம்பள உயர்வு இருக்கும் என்பதை இப்போது யோசிக்கத் தொடங்கி இருப்போம். சம்பள உயர்வை எந்த வகையில் உயர்த்துவது என்று யோசிப்பவர்கள் பின்வரும் பத்து விஷயங்களைப் பின்பற்றலாமே...

1 ஆவணப்படுத்துங்கள்: அலுவலகம் தொடர்பான உங்கள் வேலைகள்  அனைத்தையும் ஆவணங்களாக வைத்திருங்கள்: நீங்கள் என்னென்ன வேலைகளைப் பார்த்தீர்கள், என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறீர்கள் என்பதைக் கையில் கோப்புகளாகவும், ஆவணங்களாகவும் வைத்திருந்தால், சம்பள உயர்வு பற்றி ரெவியூ செய்யப்படும் போது அவற்றைக் கொடுத்து அசத்தலாம். சம்பள உயர்வு  கிடைக்க இது பேருதவியாக இருக்கும். இந்த ஆவணங்களை எல்லாம் பார்த்தபின் உங்கள் உயர் அதிகாரிகள், நீங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று நிச்சயமாகச் சொல்ல மாட்டார்கள். இந்தப் பதவியிலேயே இவ்வளவு பக்காவாக இருக்கும் உங்களுக்கு ஏன் பதவி உயர்வு தரக்கூடாது என்று நினைப்பார்கள்.

2 சுயமதிப்பீடு: தன்னம்பிக்கையுடன் உங்களைப் பற்றி நீங்களே சுயமதிப்பீடு செய்யுங்கள். அது நீங்கள் உங்கள் நிறுவனத்தில், உங்களுடைய குழுவில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதையும், உங்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு தரலாம் என்பதையும் உணர வைக்கும். இதன் மூலம், உங்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக நீங்கள் யாரையும் குற்றம்சாட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

3 உங்கள் தலைமையுடன் இணக்கம்: ஒருவேளை, நீங்கள் உங்களுடைய தலைமையுடன் முரண்பட்டு இருந்தால், உங்களது  விடாமுயற்சி யும், உங்களுடைய கடின உழைப்பும் விழலுக்கு இறைத்த நீர் போலாகிவிடும். அவர்தான் இறுதியில் சம்பள உயர்வைத் தீர்மானிப்பவராக இருப்பார்.

4 அணியில் முக்கியமான ஒருவராக இருங்கள்: உங்கள்  அணியில் உள்ளவர்களுடன் இணைந்தும், அவர்களுக்கு உதவி செய்வதையும், வழிகாட்டுவதையும் முக்கிய பழக்கமாக வைத்திருங்கள். இது முக்கியமான தருணத்தில் சராசரி சம்பளத்தைவிட அதிகமான சம்பளத்தைப் பெற்றுத் தரும்.

5 உங்களுடைய எதிர்கால இலக்கை நிர்ணயுங்கள்: உங்களுடைய அடுத்த வருட இலக்கை, உங்களுடைய தலைமை அதிகாரியுடன் உட்கார்ந்து விவாதியுங்கள். இது உங்களுக்கு நிறுவனத்தின் மீதுள்ள விசுவாசத்தையும், அர்ப்பணிப்பையும் உணர வைக்கும். இது உங்களுக்கு நல்ல மதிப்பையும், சம்பள உயர்வையும் பெற்றுத் தரும்.

6 முக்கிய நடவடிக்கையில் பங்கு பேறுங்கள்: உங்கள் வேலை களில் நீங்கள் வளைந்துகொடுக்கும் போது உங்கள் மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்துவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் பல்வேறு பணிகளைச் செய்பவராகவும், நம்பகமானவராகவும் இருந்தால், உங்களுடைய மதிப்பு உயர்ந்து, தானாகவே சம்பளம் உயரும்.

7 உங்கள் வேலையைப் பற்றி, தலைமைக்கு தொடர்ந்து தெரிவியுங்கள்: நீங்கள் சரியான திசையில் பயணித்து வருவதையும், ஏதேனும் தடைகள் இருந்தால், அதில் இருந்து விடுபட்டு வெளியே வருவதற்கும் தொழில் முறையில் பணியை மதிப்பீடு செய்வது அவசியமாகிறது. இந்த மதிப்பீட்டுப் பயிற்சியின் மூலம் உங்கள் தலைமைக்கு நீங்கள் செய்யும் பணிகளைத் தெரிவிப்பதோடு, அவர்களுடைய மனதில் உங்களுக்குச் சம்பள உயர்வை வழங்கவேண்டும் என்கிற எண்ணத்தையும் உருவாக்குவீர்கள்.

8 திறமையை மேம்படுத்துங்கள்: சமீபத்திய  முன்னேற்றங் களுக்குத் தகுந்தாற்போல் தொடர்ந்து உங்கள் திறமையை யும் மேம்படுத்திக்கொள்ள  வேண்டும். இதன் மூலம் மற்றவர்களைவிட நீங்கள் முன்நிற்கவும், நிறுவனம் உங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் இருக்கும்.

9 தீர்வு காண்பவராக இருங்கள்: நிறுவனத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வினைக் கண்டறிந்து சொல்பவராக இருங்கள். அப்போது நிறுவனத்தில் உங்கள் மீது மதிப்புக் கூடும். மேலும், உங்களை நிறுவனத்தின் தலைமை, நட்புடன் வைத்திருக்கும். ஊதிய உயர்வும் உங்களுக்குச் சாதகமாகும்.

10 வேலையில் அர்ப்பணிப்பு: வேலையில் பொறுப்புமிக்கவராக வும், சரியான நேரத்தில் அலுவல கத்துக்கு வருபவராகவும் இருங்கள். காலக்கெடுவுக்கு முன்பே அனைத்துப் பணிகளையும் முடித்துத் தருபவராக இருங்கள். நேரம் தவறாமை உங்களைக் கடமை உணர்வு கொண்டவராகவும், வேலையில் பொறுப்பு மிக்கவராகவும் காண்பிக்கும்.

இந்த 10 விஷயங்களையும் பின்பற்றினால், சம்பள உயர்வு  உங்களைத் தேடி தானே வரும்.