Showing posts with label இயற்கை உணவுத் திட்டம். Show all posts
Showing posts with label இயற்கை உணவுத் திட்டம். Show all posts

இயற்கை உணவுத் திட்டம்

இயற்கை உணவுத் திட்டம்

காலை
7 முதல் 9 மணிக்குள்

முதல் நாள்

இரண்டு நாட்டு வாழைப்பழம் ஒரு இளநீர் 50 கிராம் வேர்க்கடலை

இரண்டாம் நாள்

அரைமூடி தேங்காய் 50 கிராம் அவல் 25 கிராம் கருப்பட்டி

மூன்றாம் நாள்

கோதுமை புட்டு, கருப்பட்டி, இரண்டு நாட்டு வாழைப்பழம்

நான்காம் நாள்

கொய்யா 4 துண்டு
ஆப்பிள் 2 துண்டு
பப்பாளி 4 துண்டு
ஆரஞ்ச் 5 துண்டு
மாதுளை பாதியளவு
பாதாம் பருப்பு 10 எண்ணம்

ஐந்தாம் நாள்

முளைகட்டிய கொண்டைக் கடலை 100 கிராம்
பேரிச்சம் பழம் 50 கிராம்
வெள்ளரிக்காய் ஒன்று

ஆறாம் நாள்

அத்திப்பழம் 3
ஆரஞ்ச் 3
முந்திரிப் பருப்பு 10 எண்ணம்

ஏழாம் நாள்

முளைகட்டிய சிறுபயறு 50 கிராம்
உலர் திராட்சை 50 கிராம்
மரவள்ளிக்கிழங்கு 100 கிராம்

மேற்கூறிய உணவுகளை வாரத்தில் உள்ள ஏழுநாட்களும் ஏழு விதமான  காலை உணவாக மாற்றிமாற்றி உண்ணலாம்
இவ்வரிசையை மாற்றியோ அல்லது தேவைக்கு கூட்டியோ குறைத்த உண்ணலாம். இது போக கம்பு, வரகு சோளம்,கைக்குத்தல் அரிசியை இடித்து வைத்து தேங்காய் கருப்பட்டிப் போட்டு பிசைந்தோ காய்ச்சியோ சாப்பிடலாம்.!

மதியம் 1 முதல் 2 மணிக்குள்

கேரட் 50 கிராம்
நெல்லிக்காய் 50 கிராம்
பீட்ரூட் 50 கிராம்
பாகற்காய் 50 கிராம்
சக்கரை வள்ளிக் கிழங்கு  50 கிராம்
உருளைக் கிழங்கு 50 கிராம்
வெள்ளரி 100 கிராம்
ஊட்டி மிளகு 1
எலுமிச்சை 1
மிளகுத்தூள் சிறிது இந்துப்பு சிறிது. மேற்கண்ட காய்கறிகளில் நமக்கு பிடித்த  காய்கறிகளில் மூன்று காய்கறிகளை மட்டும் தினமும் வெட்டி துண்டுத்துண்டாக நறுக்கிப் போட்டு அதில் எலுமிச்சையை பிழிந்து மிளகு உப்புத்தூவி  கலந்து உண்ணலாம்.!

மாலை

பட்டாணி,சிறுபயறு,கொண்டைக்கடலை,
கொள்ளு, பெரும்பயறு , வேர்க்கடலை போன்ற தானியங்கள் அல்லது பாதாம் பருப்பு முந்திரி , உலர் திராட்சை போன்றவற்றுடன் வாழைத்தண்டு ஜூஸ் பப்பாளி ஜூஸ்  எலுமிச்சை, கருப்பட்டி கலந்த பானகம் போன்ற ஏதேனும் ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம்.!

இரவு

7 முதல் 8 மணிக்குள்

மாம்பழம் 2 துண்டு
அன்னாசி 2 துண்டு
சப்போட்டா 1
இதோடு சாத்துக்குடி ஆப்பிள், மாதுளை, நெல்லிக்காய், பாகற்காய் போன்ற ஏதேனும் ஒரு ஜூஸ் பனங்கற்கண்டு/ தேன் கலந்து அருந்தலாம்.!

இந்தக் குறிப்பில் உள்ள அனைத்துவகை பழம் காய்கறிகளை தவிர அந்தந்த சீசனில் கிடைக்கும் தர்பூஸ், நொங்கு,நாவல், ஸ்ட்ராபெரி போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.!
பொதுவாக காலையில் தேங்காயும் பழமும் மதியம் காய்கறிகளும் தானியமும் இரவில் பழமும் ஜூஸ் வகைகளும் சாப்பிடுவது நல்லது.!
தினமும் ஒரே வகை பழம் காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.!

மேற்கண்ட உணவுமுறையை முடிந்தவரை சரியாக பின்பற்றினால் உடல் பருமன்,நீரழிவு,சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மலச்சிக்கல், இரத்த அழுத்தம், குழந்தையின்மை போன்ற எந்த வகையான கோளாறுகளாய் இருந்தாலும் மூன்றுநாளில் கட்டுப்பட்டு 1 முதல் ஆறு மாதத்தில் குணமடையும்.!