சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு அருகில் செய்ய சொல்வதற்கான காரணம்

 சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு அருகில் செய்ய சொல்வதற்கான காரணம் 

sashtanga-namaskaram-at-temple-kodimaram


 சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு அருகில் செய்ய சொல்வதற்கான காரணம் 

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753


சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு அருகில் செய்ய சொல்வதற்கான காரணம்

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இரண்டு காரணங்களை சொல்வது வழக்கம்.

ஒன்று நாம் காலை பின்புறமாக நீட்டி நமஸ்காரம் செய்யும் போது, கால்பக்கம் தெய்வ சந்நிதிகள் எதுவும் இருக்க கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் வேறு சந்நிதிகள் இருக்காது என்பதால் அந்த இடத்தில் நமஸ்காரம் செய்கிறோம்.

மற்றொன்று கொடி மரத்தின் அருகில் பலிபீடம் இருக்கும். நம் மனதிலுள்ள ஆணவம், பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை நமஸ்காரம் செய்யும் போது பலியிடுவதாக அதாவது அகற்றிக் கொள்வதாக நமஸ்காரம் செய்கிறோம். இதனால் சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடிமரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும்.

பாம்பே சட்னி - Bombay-Chutney

 பாம்பே சட்னி - Bombay-Chutney

பத்தே நிமிடத்தில் செய்யலாம் பாம்பே சட்னி - Bombay-Chutney.


 பாம்பே சட்னி - Bombay-Chutney
பாம்பே சட்னி - Bombay-Chutney
 பாம்பே சட்னி - Bombay-Chutney

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753


பத்தே நிமிடத்தில் இந்த சட்னியை செய்யலாம். இந்த சட்னி ஆரோக்கியமானதும் கூட. இட்லி, தோசைக்கு, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

பாம்பே சட்னி

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2

 தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 5 பற்கள்

கடலை மாவு - 1 டீஸ்பூன

வெல்லம் - 3/4 டீஸ்பூன

தண்ணீர் - 1 1/2 கப்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன

தாளிக்க :

எண்ணெய் - 2 டீஸ்பூன

கடுகு - 1 டீஸ்பூன

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன

வெந்தையம் - 1/4 டீஸ்பூன

சீரகம் - 1 டீஸ்பூன

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

பாம்பே சட்னி

செய்முறை :

கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கடலை மாவை 1 -1/2 கப் தண்ணீரில் கட்டியாகாமல் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தையம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி , பூண்டு, வெங்காயம் சேர்த்து வதங்கியதும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வதங்கியதும் கரைத்த கடலை மாவை ஊற்றி கலக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் நன்குக் கலக்கிவிட்டு சிறு தீயில் 4- 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் கடலை மாவு சட்னி தயார்.


ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விரத பூஜை

ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விரத பூஜை 

Bhairava-viratham.

அவணி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.



 ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விரத பூஜை 
ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விரத பூஜை
ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விரத பூஜை 


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753



பைரவர்

பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். இன்றைய தினம் காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள வைரவர் கோயிலுக்கு அல்லது சந்நிதிக்கு சென்று பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்பதும்,வணங்குவது சிறப்பாகும்.

மேற்சொன்ன முறைப்படி இன்று பைரவப்பெருமானை வணங்குபவர்களுக்கு நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பணவரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும். உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். சோம்பல் தன்மை நீங்கி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.

நெத்திலி மீன் தொக்கு - Nethili-Fish-Thokku

 நெத்திலி மீன் தொக்கு - Nethili-Fish-Thokku

சூப்பரான நெத்திலி மீன் தொக்கு

Nethili-Fish-Thokku

 நெத்திலி மீன் தொக்கு - Nethili-Fish-Thokku
நெத்திலி மீன் தொக்கு - Nethili-Fish-Thokku
 நெத்திலி மீன் தொக்கு - Nethili-Fish-Thokku

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான நெத்திலி மீன் தொக்கு

தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன் - கால் கிலோ

சாம்பார் வெங்காயம் - 10

தக்காளி - 4

மிளகாய் - 4

மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்

பூண்டு - 4 பல்

கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம், வெந்தயம் - கால் டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கு

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் பால் - கால் கப்

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

நெத்திலி மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

புளியை நீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்.

கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

பிறகு வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் உப்பு தூவி கிளறவும்.

பின்னர் கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.

கொதிக்க தொடங்கியதும் நெத்திலி மீன், தேங்காய் பால் சேர்க்கவும்.

கெட்டியாகி தொக்கு பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

காளான் கிரீம் சூப் - Mushroom-Cream-Soup

காளான் கிரீம் சூப் - Mushroom-Cream-Soup

 நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் காளான் கிரீம் சூப்

Mushroom-Cream-Soup

பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகள் பருகலாம். இன்று காளான் கிரீம் சூப் செய்முறையை பார்க்கலாம்.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

காளான் கிரீம் சூப் - Mushroom-Cream-Soup
காளான் கிரீம் சூப் - Mushroom-Cream-Soup
காளான் கிரீம் சூப் - Mushroom-Cream-Soup

காளான் கிரீம் சூப்

தேவையான பொருட்கள் :

காளான் - 200 கிராம்

 பெ.வெங்காயம் - 1

பூண்டு - 10 பல்

பிரிஞ்சி இலை - சிறிதளவு

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு, வெண்ணெய் - தேவைக்கு

மைதா - 4 டீஸ்பூன்

பால் - கால் லிட்டர்

எண்ணெய் - சிறிதளவு


செய்முறை:

காளான், பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு வெண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் மைதா மாவை கொட்டி வறுக்கவும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறிவிட்டு கொதிக்க விடவும்.

அது கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து கிரீம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.

அது வதங்கியதும் பிரிஞ்சி இலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு காளானை சேர்த்து கிளறவும்.

அது வெந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க தொடங்கியதும் கிரீம், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.

அடுத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.

ஆவிபிடித்தல் - Steaming

ஆவிபிடித்தல்  - Steaming 

ஆவிபிடித்தல் இந்த நோய்கள் சரியாகும்

steaming-cure-these-diseases


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

ஆவிபிடித்தல்  - Steaming 
ஆவிபிடித்தல்  - Steaming 

பல விதமான நோய்த்தொற்றுகளையும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்தே தடுக்க முடியும்.

ஆவிபிடித்தல்

பல விதமான நோய்த்தொற்றுகளையும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்தே தடுக்க முடியும்.

ஆவிபிடித்தல் சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. தீவிரமான சளி மற்றும் இருமல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள் 100 மிலி தண்ணீரில் நான்கு பல் தோல் உரித்த அல்லது உரிக்காத, பூண்டைச் சேர்த்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றைக் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஆவிபிடிக்கவும். இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை நீங்கி சுவாசப்பாதை சீராகும்.

பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கொண்டு தயாராகும் நீரை ஆவிபிடிக்கும்போது நுரையீரலில் உள்ள நோய்த்தொற்றுகள் அழிக்கப்படும். இதை நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை எனச் சில நாள்கள் தொடர்ந்து ஆவிபிடிப்பது சிறந்தது. கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக நுரையீரல் கருதப்படும் நிலையில், இந்த முறையில் ஆவிபிடிப்பது நல்ல பயனளிக்கும்.

பைரவர் வகைகள்

பைரவர் வகைகள்

சிற்ப நூல்களும் சிவஆகமங்களும் பைரவ மூர்த்தத்தை விவரிக்கும் போது அறுபத்து நான்கு பைரவர்களை அறிமுகப்படுத்துகின்றன. இன்னும் சில சிற்ப நூல்களில் இவை நூற்றி எட்டு வடிவங்களாகவும் குறிக்கப்படுகின்றன.

 பைரவர் வகைகள்
 பைரவர் வகைகள்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

அஷ்ட பைரவர்

சிற்ப நூல்களும் சிவஆகமங்களும் பைரவ மூர்த்தத்தை விவரிக்கும் போது அறுபத்து நான்கு பைரவர்களை அறிமுகப்படுத்துகின்றன. இன்னும் சில சிற்ப நூல்களில் இவை நூற்றி எட்டு வடிவங்களாகவும் குறிக்கப்படுகின்றன. இந்த எல்லா வடிவங்களிலும் சிறப்பான எட்டு வடிவங்கள் ‘அஷ்ட பைரவர்’ என்று அழைக்கப்படுகின்றன.

1. அசிதாங்க பைரவர், 2. குரு பைரவர், 3.சண்ட பைரவர், 4. குரோத பைரவர், 5.கபால பைரவர், 6.உன்மத்த பைரவர், 7.பீஷ்ண பைரவர், 8.சம்ஹார பைரவர்.

அஷ்ட பைரவர் ஒவ்வொருவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவைகள் மாறுபட்டுக் காணப்படும்.

சிவபெருமானானவர் வலிமைமிக்க ஞானமூர்த்தியாக ஸ்ரீபைரவரை உற்பத்தி செய்து அவரிடம் உலகினைக் காக்கும் பொறுப்பினை அளித்தார். அவர் உயிர்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாவலாக இருப்பதுடன் எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவராக நின்று அவற்றையும் பாதுகாத்து வருகின்றார். அசுரர்களால் இந்த உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை தோற்றுவித்து அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்று பைரவர் உற்பத்தியை புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிவமூர்த்தங்களுள் ஒருவராக பைரவரைக் குறிப்பிட்டிருந்தாலும் இவர் வீற்றிருப்பது ‘பைரவ புவனம்’ என்று கூறப்படுகிறது. சிவலோகத்திலுள்ள சோதி மயமான இந்த கோட்டையில் எட்டு வாசல்களிலும் மகா பைரவர், உக்கிரபைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர், சாகர பைரவர் என்பவர்கள் காவல் செய்து கொண்டிருப்பதாக அபிதான சிந்தாமணி கூறுகிறது.

ஸ்ரீபைரவருக்கு சேத்திரபாலக மூர்த்தி என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. சேத்திரம் என்றால் பூமி. பாலகர் என்றால் காப்பவர். சேத்திரமாகிய உலகிற்கு ஊழிக்காலத்தில் நேர்ந்த துயரத்தை நீக்கி காத்தருளினமையால் சிவனுக்கு சேத்திரபாலக மூர்த்தி என்னும் பெயர் விளங்குவதாயிற்று என்று புராண வரலாறு தெரிவிக்கிறது.

சேத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். சேத்திரமாகிய கோவிலைக் காப்பவர் பைரவர் என்றும் சொல்வார்கள்.

தால் மக்கானி - DAL- MAKHANI

தால் மக்கானி - DAL- MAKHANI

நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் தால் மக்கானி

கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது. தால் மக்கானியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.

தால் மக்கானி - DAL- MAKHANI
தால் மக்கானி - DAL- MAKHANI

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753


தால் மக்கானி

தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து - 1 கப்

கடலை பருப்பு - கால் கப்

சி.வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு

பச்சை மிளகாய் - 5 (நறுக்கவும்)  

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - அரை டீஸ்பூன்  

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

தக்காளி - 2

உப்பு - தேவைக்கு  

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்  

வெண்ணெய் - 5 டீஸ்பூன்  

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உளுந்தையும், கடலை பருப்பையும் நீரில் நன்கு கழுவிவிட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

குக்கரில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க தொடங்கியதும் பருப்பு, உளுந்தை கொட்டி வேகவைத்து இறக்கவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகத்தை போட்டு தளித்த பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, மிளகாய், இஞ்சி - பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின்னர் வேகவைத்த பருப்பு, உளுந்தை கொட்டி நன்றாக கிளறி எல்லாம் வெந்ததும் இறக்கவும்.

அதில் வெண்ணெய், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

இதற்கு பெயர்தான் தால் மக்கானி. தால் என்றால் பருப்பு. மக்கானி என்றால் வெண்ணெய்.


தால் மக்கானியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை வராமல் தற்காத்துக்கொள்ளலாம். கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது.

ஆடிப்பால் - Aadi paal.

ஆடிப்பால் - Aadi paal.

உடல் ஆரோக்கியத்தை காக்கும் ஆடிப்பால்

  ஆடிப்பால் - Aadi paal.
  ஆடிப்பால் - Aadi paal.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753


உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் தேங்காய் பால் வைத்து செய்யும் ஆடிப்பால் செய்முறையை பார்க்கலாம்.

ஆடிப்பால்

தேவையான பொருட்கள் :

தேங்காய் துருவல் - 2 கப்

 பொடித்த வெல்லம் - 1 கப்

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:


தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். மூன்றுமுறை பிழிந்து பால் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

மூன்றாவதாக எடுத்த பாலுடன் வெல்லத்தை சேர்த்து வாணலியில் ஊற்றி கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

வடிகட்டிய பாலுடன் இரண்டாவது முறை பிழிந்த பாலை சேர்த்து கொதிக்கவிடவும். அது கொதிக்க தொடங்கியதும் முதலில் பிழிந்த தேங்காய் பாலை ஊற்றி கொதிக்கவிடுங்கள். அது கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூளை சேர்த்து இறக்கி, பருகலாம்.

சத்தான ஆடிப்பால் ரெடி


பூர்ண கொழுக்கட்டை - Vinayaka Modak

 பூர்ண கொழுக்கட்டை - Vinayaka Modak

கொழுக்கட்டை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பிள்ளையார் தான். அத்தகைய கொழுக்கட்டையை நாளை விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் செய்து, விநாயகரை வரவேற்போம்.


பூர்ண கொழுக்கட்டை - Vinayaka Modak
 பூர்ண கொழுக்கட்டை - Vinayaka Modak

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

பூர்ண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 2 கப் (வறுத்தது)

எள் - 2 கப்

வேர்க்கடலை - 2 கப்

பொட்டுக்கடலை - 2 கப்

தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

மண்டை வெல்லம் - 100 கிராம்

உப்பு - சிறிது

செய்முறை:

பூர்ணம் செய்ய...


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

மண்டை வெல்லத்தை நன்கு நைஸாக இடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும்.

பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் மண்டை வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

கொழுக்கட்டை செய்ய...

முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, சிறிது லேசான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதேப்போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும்.

இப்போது பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!

பிடி கொழுக்கட்டை - Pidi-Kolukattai

பிடி கொழுக்கட்டை -  Pidi-Kolukattai

விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். இன்று இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


பிடி கொழுக்கட்டை -  Pidi-Kolukattai

பிடி கொழுக்கட்டை -  Pidi-Kolukattai

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753


இனிப்பு பிடி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - இரண்டு கப்

வெல்லம் - ஒன்றை கப்

ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

தண்ணீர் - நான்கு கப்

துருவிய தேங்காய் - அரை மூடி

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறவும்.

ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.

பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி.


விநாயகர் சதுர்த்தி பூஜை விதிகள் - Vinayaka Pooja Rules

 விநாயகர் சதுர்த்தி பூஜை விதிகள் - Vinayaka Pooja Rules

பக்தர்கள் துயரைப் போக்கும் விநாயகர், சிவபெருமான் மற்றும் தேவி பார்வதியின் மூத்த மகன் ஆவார். அவரை போற்றும் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753



விநாயகர்

பக்தர்கள் துயரைப் போக்கும் விநாயகர், சிவபெருமான் மற்றும் தேவி பார்வதியின் மூத்த மகன் ஆவார். அவரை போற்றும் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்த நாள் இந்த ஆண்டு 22, ஆகஸ்ட் கொண்டாடப்படவுள்ளது.

* விநாயகரை வழிபடவும், அவருக்கான பூஜை சடங்குகளைச் செய்யவும் முதல் கட்டமாக விநாயகர் சிலையை வாங்கி வீட்டிற்குள் விநாயகரை அழைத்து வர வேண்டும்.

* வீட்டின் பூஜை அறையில் சிலையை வைக்க வேண்டும்.

* சிலையை இல்லத்தில் வைத்து அதற்கான மந்திரத்தை கூற வேண்டும். பிறகு விநாயகருக்கான பூஜை செய்து, கீர்த்தனைகள் பாடி அடுத்த 10 நாட்கள் விநாயகரை வழிபட வேண்டும்.

* அந்த 10 நாட்களும் தினமும் காலையில் விளக்கேற்றி, பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிவித்து, விநாயகரை வழிபட வேண்டும்.

* பின்னர் அவருக்கு பூக்கள், பழங்கள் , பிரசாதம் ஆகியவற்றை படைக்கலாம். விநாயகரை "மோதகப் பிரியன்" என்று கூறுவார்கள். அதனால் அவருக்கு பிடித்த மோதகத்தை தயாரித்து அவருக்கு பிரசாதமாக வைக்கலாம் . அல்லது உங்களால் முடிந்த எந்த ஒரு பிரசாதத்தையும் அவருக்கு படைக்கலாம்.

* விநாயகர் துதிகளை பாடி அவரை மகிழ்விக்கலாம் .

* பின்னர் ஆரத்தி காண்பித்து அவருடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம் .

* அதன் பிறகு பிரசாதத்தை எடுத்து உங்கள் வீட்டில் இருப்பவர்கள், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு வழங்கலாம். 


கும்பகோணம் அமிர்தகலசநாதர்

 கும்பகோணம் அமிர்தகலசநாதர்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, சாக்கோட்டை பகுதி. இங்குதான் அமிர்தவல்லி உடனாய அமிர்தகலசநாதர் கோவில் இருக்கிறது.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753


கும்பகோணம் அமிர்தகலசநாதர்
கும்பகோணம் அமிர்தகலசநாதர்


அமிர்தகலசநாதர்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, சாக்கோட்டை பகுதி. இங்குதான் அமிர்தவல்லி உடனாய அமிர்தகலசநாதர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும் கோட்டை ஒன்று இருந்த காரணத்தால் ‘கோட்டைக்கோவில்’ என்றும் இது அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் வேடனாக வந்து அம்பெய்தி கும்பத்தை உடைத்தபோது, கலசம் மட்டும் போய் விழுந்த இடம் இதுவாகும். சோழர் கால சிற்பக்கலையின் மிகச் சிறந்த வேலைப்பாடாக விளங்கும் இத்தல மூலவர், சிவலிங்க ரூபமாக காட்சி தருகிறார்.

எனவே தான் இத்தல இறைவன் ‘அமிர்தகலசநாதர்’ என்று பெயர் பெற்றார். மூலவர் சன்னிதிக்கு வடக்குப் பகுதியில் தென் திசை நோக்கிய சன்னிதியில் அமிர்தவல்லி அம்மன் வீற்றிருக்கிறார். அம்மனுக்கு தவத்தின் பயனை இறைவன் உணர்த்திய தலம் இதுவாகும்.

மிளகு சீரக இடியாப்பம்

 மிளகு சீரக இடியாப்பம்

இருமலை குணமாக்கும் மிளகு சீரக இடியாப்பம்

சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மிளகு சீரக இடியாப்பம் செய்து சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

மிளகு சீரக இடியாப்பம்

தேவையான பொருட்கள்

இடியாப்பம் - 6

 இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

நல்லெண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு


மிளகு சீரக இடியாப்பம்

செய்முறை

இடியாப்பத்தை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள்,பெருங்காயத்தூள், சிறிது உப்பு போட்டு இடியாப்பத்தை சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.

சூப்பரான மிளகு சீரக இடியாப்பம் ரெடி.

பிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

 பிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

சிவபெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது, பிரதோஷம். சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து, முடிந்தவரை மவுன விரதம் இருந்து, மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்யவேண்டும்.


 பிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

பிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

சிவபெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது, பிரதோஷம். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து, முடிந்தவரை மவுன விரதம் இருந்து, மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்யவேண்டும். அதோடு நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தால் நல்ல பலனைத் தரும்.

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை, காத்தருளிய வேளையே, ‘பிரதோஷ வேளை’யாகும். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் என மாதம் இருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரிய மறைவிற்கு முன்னே, மூன்றே முக்கால் நாழிகை, மறைந்ததற்கு பிறகு மூன்றே முக்கால் நாழிகை என மொத்தம் ஏழரை நாழிகைக் காலம் ‘பிரதோஷ காலம்’ எனப்படும். குறிப்பாக, மாலை 4.30 மணி முதல் இரவு 7மணி வரை.

சாதாரண நாட்களில் ஒருவர் ஆலயத்திற்கு வரும்போது, மூன்று முறை வலம் வருவார்கள். அதுவே பிரதோஷ தினத்தில், ‘சோம சூக்தப் பிரதட்சணம்’ முறையில் வலம் வர வேண்டும். திருப்பாற்கடலை கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷம், தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய தேவர்களை, ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள், வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த பக்கத்திலும் எதிர்த்துச் சென்று பயமுறுத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்ச்சிதான் ‘சோமசூக்தப் பிரதட்சணம்’ எனப் பெயர் பெற்றது.

முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சன்னிதி வரை சென்று, அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். அப்படி செய்தால் ‘அசுவமேத யாகம்’ செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும்.

சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. பிரதோஷ வழிபாடு செய்ய, திருமால், பிரம்மன் உள்ளிட்ட தேவர்களும் கூட சிவாலயம் செல்வார்கள். ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ நேரமாகும். இது ‘தினப் பிரதோஷம்’ எனப்படும். சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரி சனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், துயர் நீங்கவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

நலம் தரும் நந்திகேஸ்வரர்

நந்தி தேவருக்கு ‘ருத்ரன்’ என்றொரு பெயரும் உண்டு. ருத் - என்றால் துக்கம். ரன் - என்றால் ஓட்டுபவன். ருத்ரன் - என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள். பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு, நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்வார்கள்.