K Karthik Raja's Stock Review - Punjab National Bank (PNB)

K Karthik Raja's  Stock Review - Punjab National Bank (PNB)

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

K Karthik Raja's  Stock Reivew - Punjab National Bank (PNB)


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Join whatsapp 9094047040

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Rupeedesk
Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses
Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753
How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market Training



கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?

கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?
How-to-use-a-credit-card.

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அது ஒன்றும் பிரச்சினையில்லை. அவற்றை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

இன்றைய நிதி நிர்வாகத்தில் பலருக்கும் தவிர்க்கமுடியாத விஷயமாகிவிட்டது, கிரெடிட் கார்டு. அதை சரியாகப் பயன்படுத்தி, உரிய நேரத்தில் தவணைகளைச் செலுத்துவதன் மூலம் நல்ல கடன் வரலாற்றைப் பராமரிக்க முடியும்.

பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அது ஒன்றும் பிரச்சினையில்லை. அவற்றை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.


சிலர், தமது செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதத்தில், கிரெடிட் கார்டை திருப்பி அளித்துவிடலாம் என்று எண்ணலாம்.

உண்மையாகவே அவற்றை ரத்துச் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது அப்படியே பயன்படுத்தாமல் வைத்திருக்கப் போகிறீர்களா? கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது சரியான வழியா? அது நம்மைப் பாதிக்குமா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இங்கே காண்போம்...

கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது, ‘சிபில்’ எனப்படும் உங்களின் கடன் மதிப்பெண்ணைப் பாதிக்கும் என்றாலும், அது, கிரெடிட் உச்ச மதிப்பு, கார்டை பயன்படுத்திய காலம், உங்கள் மொத்த கிரெடிட் கார்டு தொகுப்பில் குறிப்பிட்ட கார்டின் விகிதம் போன்ற முக்கியக் காரணிகளைப் பொறுத்தது.

உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூடும்போது, உங்களின் மொத்த கடன் வரம்பும் குறையும் என்பதால், கடன் மதிப்பெண்ணும் குறையும். குறையக்கூடிய மதிப்பெண்ணின் அளவு, உங்களின் மற்ற கிரெடிட் கார்டுகளில் உள்ள கடனின் அளவைப் பொறுத்தது. அதாவது, அதிகக் கடன் வரம்புள்ள கார்டை ரத்து செய்யும்போது, குறைந்த வரம்புள்ள கார்டை ரத்து செய்வதைக் காட்டிலும் அதிகப் பாதிப்பு ஏற்படும்.

உங்கள் கிரெடிட் கார்டின் பயன்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பதால், கார்டில் எப்போதும் பாக்கி வைக்காமல் பார்த்துக்கொள்வது, கடன் மதிப்பெண்ணுக்கு உதவியாக இருக்கும்.

குறைந்த அளவு கடனுள்ள கிரெடிட் கார்டை ரத்து செய்யலாம் என்ற தவறான கருத்து நிலவுகிறது. நீங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்ய விரும்புகிறீர்களோ இல்லையோ, பாக்கியுள்ள கடனை கட்டியே ஆக வேண்டும்.

அதன் கணக்கை மூடாமல், பாக்கி கடனை கட்டி முடித்துவிட்டு அட்டையைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தாலும் கடன் வரம்பு அப்படியே இருக்கும்.

நீங்கள் கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆகவேண்டும் என்றால், அதே அளவு அல்லது அதைவிட அதிக வரம்புள்ள கார்டை வாங்காதவரை உங்களின் ஒட்டுமொத்தக் கடன் வரம்பு குறைந்துவிடும்.

அதிகபட்ச கடன் வரம்பை வைத்திருப்பது எப்போதும் உதவும் என்றாலும், சில நேரங்களில் கிரெடிட் கார்டுகளை திருப்பிக் கொடுக்கலாம்.

அதாவது, உங்களால் செலவு செய்வதை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து, கார்டை பயன்படுத்தும் தூண்டுதலைத் தவிர்க்க.

நீங்கள் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும்போது அல்லது உங்களின் கார்டில் அதீத வட்டி விகிதம் விதிக்கும்போதும், தேவையற்ற கட்டணங்கள் வசூலிக்கும் போதும்.

உங்களின் தேவைக்கு ஏற்றவாறு, அதிகச் சலுகைகள் தரும் கிரெடிட் கார்டு கிடைத்தால், நீங்கள் தற்போதைய இதே அளவு வரம்புள்ள கார்டாக அதை மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் செலவு செய்த அல்லது கடந்தகால வட்டி பாக்கி இருந்தால், அவற்றைச் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தவறாகக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது எனக் கருதினால், அதற்கு உரிய இடத்தில் முறையிட்டு, கார்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

சில வங்கிகள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது வழங் கும் சலுகைப்புள்ளிகள் பாக்கியிருந்தால், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின்பு அவற்றைப் பயன்படுத்த முடியாது என்பதால் முன்னரே பயன்படுத்திவிடுங்கள். அரிதாகச் சில நிறுவனங்கள், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின் குறிப்பிட்ட காலத்துக்கு அந்தச் சலுகை புள்ளிகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன அல்லது அதே வங்கியில் வேறு கிரெடிட் கார்டு பெற்றால், சலுகைப்புள்ளிகளை அதற்கு மாற்றவும் வழிவகை செய்கின்றன.

ஏதேனும் பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் வகையில் தானாகப் பணம் கழிக்கும் வசதியை கார்டில் தேர்வு செய்திருந்தால், அதை ரத்து செய்தபின் பிரச்சினை ஏற்படும் என்பதால் மறக்காமல் இவ்வசதியை நீக்க வேண்டும்.

சரி, கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆக வேண்டும் என்றால், அதைச் செய்வது எப்படி?

கிரெடிட் கார்டை ரத்துச் செய்யப் பல வழிகள் உள்ளன. அவை...

வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து, கார்டை ரத்துச் செய்வது பற்றித் தெரிவிக்கலாம்.

மின்னஞ்சல் வாயிலாக ரத்துச் செய்யக் கோரலாம்.

இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம்.

வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பம் அளிக்கலாம்.

கிரெடிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்துவதும், ரத்துச் செய்வதும் நமது முடிவு. நம் சூழ்நிலைக்கு ஏற்ப இவ்விஷயத்தில் விவேகமாக முடிவெடுக்கலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு 10 கட்டளைகள்

உடல் ஆரோக்கியத்திற்கு 10 கட்டளைகள்
healthy-lifestyle-tips

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.

1. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.

2.தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் இருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம். 


3. சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள்.

4. நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.

5. மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.



6. உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

7. உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள்.

8. இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே !

9. எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.

10. தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் உத்தரவாதம்.

பிரசவத்திற்கு பிறகு எப்போது மாதவிடாய் ஏற்படும்

பிரசவத்திற்கு பிறகு எப்போது மாதவிடாய் ஏற்படும்
When-menopause-occurs-after-delivery


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். இங்கு பிரசவத்திற்கு பின்னான மாதவிடாய் சுழற்சி எப்போது துவங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

கர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். பிரசவத்தின் பின் சரியாகி விடும் என்று நினைத்தால், பிரசவத்தின் பின்னும் கூட சில மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பகாலம் என்பது மாதவிடாய்க்கு விடுமுறை காலம் போன்றது. கர்ப்பகாலம் முழுவதும் மாதவிடாய் ஏற்படாது. ஆனால் பிரசவத்தின் பின் ஏற்பட தொடங்கி விடும். இங்கு பிரசவத்திற்கு பின்னான மாதவிடாய் சுழற்சி எப்போது துவங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

மாதவிடாய் என்பது கர்ப்பப்பையில் குழந்தை இல்லை என்பதற்கான அறிகுறியாகும். அதனால் கர்ப்பப்பையில் உள்ள திசுக்கள் உதிர்ந்து ரத்தமாக வெளியேறுகிறது. ஆனால் நீங்கள் கர்ப்பமான பின் மாதவிடாய் நின்று விடும். சில நேரங்களில் லேசான ரத்த போக்கு இருக்கும். ஆனால் இந்த நிலை தொடந்தாலோ அல்லது அதிக ரத்த போக்கு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் ஐந்து முதல் ஆறு வாரங்களில் மாதவிடாய் ஏற்படும். முழுக்க முழுக்க தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு மாதவிடாய் ஏற்படும். எனினும் இது ஒவ்வொரு பெண்ணிற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடும் என்பதால், இது தான் சரி என்று இதில் வரையறுக்க முடியாது.

பிரசவத்திற்கு பின் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அது பழைய மாதிரி இருக்காது. இரத்த போக்கு லேசாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். மாதவிடாய் சுழற்சி பழைய நிலைக்கு திரும்ப சிறிது காலம் எடுக்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு லேசான அல்லது அதிகமான ரத்த போக்கு நீடித்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

உங்கள் கருப்பையில் இருந்து முட்டை வெளியான பிறகு உடனே மாதவிடாய் சுழற்சி ஏற்படாது. அதுவும் குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு. இதனால் உடல் உறவு கொள்ளும் போது கவனமாக இருங்கள்.

உங்களையும் உங்கள் சுற்றத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மாதவிடாய் நேரத்தில் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துங்கள். மேலும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

சமூகத்தில் தனி மரியாதையை பெற்றுத் தரும் பெண் கல்வி

சமூகத்தில் தனி மரியாதையை பெற்றுத் தரும் பெண் கல்வி
Female-education-that-gives-individual-respect-to


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பெண்கல்வி பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. ஆணுக்கு இணையாகவோ, ஆண்களை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கல்வியே மிகவும் தேவையாகிறது.

மனிதனின் ஆறறிவை செழுமையாய் வைத்திருப்பதில் கல்வி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தக் கல்விக்கு ஆணென்றும், பெண்ணென்றும் பேதமில்லை. அப்படிப்பட்ட கல்வி இன்று பெண்களுக்குக் கிடைக்கிறதா ? இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் போன்றவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளிடம் என்கிறோம். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. உணவு, உடை, உறைவிடமே இல்லாத சூழலில் கல்வியை வழங்குவது நமது தேசத்தின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்.

இந்தியாவில் இன்று கல்வியறிவு பெற்ற பெண்கள் வெறும் 54.16 சதவீதம் தான். ஆண்களில் சுமார் 76 சதவீதம் பேர் அடிப்படைக் கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். நகர்புறம், கிராமப்புறம் எனும் வேறுபாடு எதுவும் இன்றி பெண்களுக்கான கல்வி குறைவாகவே இருக்கிறது. கேரளா, தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கல்வியில் வளர்ச்சி நிலையை நோக்கி நகர, வட மாநிலங்களான பீகார் போன்றவை கல்வியில் மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.

நமது சமூக அமைப்பு பெண்கல்வியை ஊக்குவிக்கவில்லை. பெண்கள் வீட்டை ஆள வேண்டும், ஆண்கள் நாட்டை ஆளவேண்டும் என பிரித்திருந்தன. எனவே பெண் என்பவள் வீட்டு வேலைகளைச் செய்து, குழந்தைகளையும் கணவனையும் கவனிப்பவராக மாறிப் போனார். ஆண்கள் கடும் உழைப்பைச் சிந்தி வீட்டுக்கான பொருளாதாரத் தேவையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டார்கள். வீட்டை ஆளும் பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்பது ஆணாதிக்க மனநிலையாய் இருந்தது.



இன்றைய உலகம் பெண்கல்வியை ஊக்கப்படுத்துகிறது. பெண்கள் கல்வியறிவு பெற்று பல்வேறு உயர் பதவிகளை இன்று வகிக்கின்றனர். நாட்டின் தலைவர்களாகவும், பெரிய நிறுவனங்களின் தலைவர்களாகவும் பெண்கள் இன்று இடம்பிடித்திருக்கின்றனர். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வே இதன் காரணமாகும். இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆண்களுக்கு இணையான அளவு பெண் ஊழியர்களும் இருக்கின்றனர். ஆனாலும் உயர் பதவிகளைப் பொறுத்தவரை சுமார் 80 சதவீதம் பதவிகள் ஆண்கள் வசமே இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

பெண்கல்வி எங்கும் கிடைக்கும் போது நமது நாட்டின் வறுமை நிலையும் மறையும். பொருளாதாரம் வளர்ச்சியடையும். சமூகம் மறுமலர்ச்சியடையும்.

பெண்கல்வி நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளை வளர்க்கும் பெரும் பொறுப்பு இன்றைக்கு பெண்களிடம் தான் இருக்கிறது. பெண்களின் கல்வியறிவு சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சரியான அறிவையும், அறிவுரைகளையும் வழங்க உதவும். குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமக்கின்ற பெண் வேர்களைப் போன்றவர். வேர்கள் வலுவாக இருக்கும் போது தான் மரம் செழுமையாக இருக்க முடியும். பெண்கல்வி அந்த வேர்களை பலப்படுத்தும். இதன் மூலம் குடும்பம் வலிமையாகும். குடும்பம் வலிமையாகும் போது ஒரு சமூகம் வலிமையாகும். சமூகம் வலிமையாகும் போது நாடு வலிமையடையும்.

பெண்கல்வி பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. ஆணுக்கு இணையாகவோ, ஆண்களை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கல்வியே மிகவும் தேவையாகிறது. ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை சமூகத்தில் உருவாகவேண்டுமெனில் பெண் கல்வி மிகவும் அவசியம்.

கல்வி ஒரு மனிதனுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக மென்மையான பெண்களுக்கு கல்வி தான் மிகப்பெரிய துணிச்சல் ஆயுதமாய் இருக்கிறது.

பாலியல் வன்முறை - பெண் குழந்தைக்கு தாய் சொல்லித் தரவேண்டியவை

பாலியல் வன்முறை - பெண் குழந்தைக்கு தாய் சொல்லித் தரவேண்டியவை
How-to-explain-violence-for-girls


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

பெண்குழந்தையைப் பெறுவதே மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நடப்பதற்கு சமம் என பாட்டிமார் கூறும் கூற்று இன்றைய நேயமற்ற சமூகத்தில் நிதர்சனமாகியிருக்கிறது.

உலகெங்கும் பல்லாயிரம் குழந்தைகள் பாலியல் வன்முறையினால் உயிரையும் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். பெரும்பாலான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. “வெளியே சொன்னால் நம் குழந்தைக்குத் தான் அவமானம்” எனும் கவலையும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் குடும்பத்தின் நெருங்கிய நபர் எனும் நிர்பந்தமும் இத்தகைய பாலியல் வன்முறைகள் சட்டத்தின் முன் வராமல் செய்து விடுகின்றன.

குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மிக முக்கியமாக எது “நல்ல தொடுதல்”, எது “மோசமான தொடுதல்” எது “பாலியல் தொடுதல்” என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது அன்னையின் கடமையாகும்.

நல்ல தொடுதல் அன்னையின் அரவணைப்பைப் போல ஆனந்தமாய், பாதுகாப்பாய், உற்காசமூட்டுவதாய் இருக்கும். இவை இன்னும் மிச்சமிருக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள். மோசமான தொடுதல் என்பதை அடித்தல், உதைத்தல், காயப்படுத்துதல் போன்ற வலி ஏற்படுத்தும் நிகழ்வுகளாகச் சொல்லிக் கொடுங்கள்.

தினமும் குழந்தைகளிடம் அன்றைய தினம் நடந்த செயல்கள், சந்தித்த மனிதர்கள் போன்ற அனைத்தையும் விரிவாக கேட்டு அறியுங்கள். ஏதேனும் பிழை நடந்திருப்பதாக உணர்ந்தால் பதட்டப்படாதீர்கள். முழுமையாய் கேளுங்கள்.

குழந்தை எதைச் சொன்னாலும் முழுமையாய் நம்புங்கள். பாலியல் தொந்தரவுகளை குழந்தைகள் ஒரு போதும் உருவாக்கிச் சொல்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏதேனும் “விளையாட்டு” எனும் பெயரில் குழந்தைகள் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதுண்டு என்பதை அன்னையர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான வெளிப்படையான, நட்புறவும் நம்பிக்கையும் கூடிய உரையாடல் மிக மிக முக்கியம். இல்லையேல் குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

சில சூழல் அல்லது சில நபர்களுடைய அருகாமை சந்தேகத்தைத் தருவதாக இருந்தால் அந்த சூழலைத் தவிருங்கள். குறிப்பாக குழந்தை யாருடனாவது நெருங்குவதை விரும்பவில்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள். அங்கே ஏதேனும் பிழை இருக்கலாம். உங்கள் குழந்தைகளை மூன்றாவது நபரிடம், நீங்கள் கூடவே இல்லாதபோது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக செலவிட அனுமதிக்காதீர்கள்.



உங்கள் குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தமானது. அதை வேறு யாரும் தொடும் உரிமை இல்லை என்பதை வெகு தெளிவாக, அழுத்தமாகவே குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதை மீறி யாரேனும் தொந்தரவு கொடுத்தால் கண்டிப்பான “நோ” சொல்ல குழந்தைகளைப் பழக்குங்கள்.

குழந்தைகளுடைய நடவடிக்கையில் பதட்டம், கோபம், மன அழுத்தம், சோகம் போன்ற உணர்வுகள் மேலோங்கியிருப்பதைக் கண்டாலோ, உடலில் ஏதேனும் அடையாளங்களைக் கண்டாலோ உஷாராகிவிடுங்கள். குழந்தைகளிடம் ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வு நடந்தால் யாரைச் சந்திக்க வேண்டும், யாரிடம் பேசவேண்டும் என்பதைச் சொல்லி வையுங்கள்.

குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளருங்கள். வீட்டில் பெற்றோர் முன்மாதிரிகையாக இருப்பதும், குழந்தைகளிடம் நேரத்தைச் செலவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதும் மிக மிக முக்கியம்.

குழந்தைகள் தவறு செய்தால் பக்குவமாய் திருத்துங்கள். பிழை செய்வது மனித இயல்பு, அதைத் திருத்துவதில் தான் மனித மாண்பு இருக்கிறது என்பதை உணர்த்துங்கள். இல்லையேல் பிழைகளை உங்களிடமிருந்து மறைக்கும் வழியையே குழந்தைகள் யோசிக்கும்.

திரையரங்கு, பேருந்து, பள்ளிக்கூடம், விளையாட்டுப் பூங்கா போன்ற இடங்களில் கவனமாக இருக்கவேண்டிய வழிமுறைகளை விளக்குங்கள். எதையும் பயமுறுத்தும் விதமாகச் சொல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

“அம்மா, அப்பாவிடம் சொல்லாதே” என யாராவது ஏதாவது சொன்னார்களா, செய்தார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பாலியல் விஷயத்தில் வாக்குறுதிகளை உடைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவையுங்கள்.

குழந்தைகளிடம் திடீர் பாசம் பொழியும் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது ஒரு கண் வைப்பது அவசியம். குழந்தைகளை கடைக்கு அழைத்துப் போகிறேன், திரையரங்கு அழைத்துச் செல்கிறேன் என முன்வந்தால் நாகரீகமாக தவிர்த்து விடுங்கள்.

ஆபாசப் புத்தகங்கள், படங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து அவர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதும், பின்பு அதை வைத்தே அவர்களை மிரட்டி, பயமுறுத்தி தொடர் தொந்தரவுகளை கொடுப்பதும் பரவலாக நிகழும் செயல் என்பதால் எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்.

90 விழுக்காடு பாலியல் தொந்தரவுகளும் குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே வருகின்றன. எனவே குழந்தைகள் உண்மையை விரைவில் பெற்றோரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம். தாயும், மகளுமான மிகவும் தனிமையான சூழலில் நிகழும் உரையாடலே உண்மையை முழுமையாய் வெளிக்கொணரும்.

பிரெட் பொரியல் செய்வது எப்படி?

பிரெட் பொரியல் செய்வது எப்படி?
bread-poriyal.
சூப்பரான பிரெட் பொரியல் செய்வது எப்படி?


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பிரெட்டில் பிரெட் பட்டர் ஜாம், பிரெட் சென்னா, சான்விச் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பிரெட்டில் பொரியல் செய்வது எப்படி என்று பாக்கலாம்.

தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் - 15

 நெய் - 50 கிராம்
தக்காளி - 2
குடை மிளகாய் - 1
இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்

தாளிக்க...

கிராம்பு - 1
ஏலக்காய் - 1
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - ½ ஸ்பூன்



செய்முறை :

பிரெட்டை ஓரங்களை நீக்கி விட்டு துண்டுகளா வெட்டி கொள்ளவும்.

குடைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு தாளித்து பின் இஞ்சி விழுது சேர்தது வதக்கிய பின்னர் தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது கிளறி அதில் பிரெட் துண்டுகளை சேர்த்து லேசாக கிளறி எடுக்கவும்.

இதில் சிறிது சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.

சூப்பரான பிரெட் பொரியல் ரெடி.

தேவைப்பட்டால் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பிரெட் பொரியலை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

சிக்கன் சூப் ரைஸ்

 சிக்கன் சூப் ரைஸ்
chicken-rice-soup
சூப்பரான சிக்கன் சூப் ரைஸ்


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட கொடுப்பது நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நாட்டுக்கோழி - 100 கிராம்
வேகவைத்த சாதம் இரண்டு கப் (ஓரளவு குழைந்திருந்தால் நன்றாக இருக்கும்)
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் -  ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரைக்கால் கப்
கறிவேப்பிலை - 5 இலைகள்
பூண்டுப் பல் - ஒன்று
பட்டர் (அ) நல்லெண்ணெய்  - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்  - அரைக்கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றைத் தட்டி வைத்துக்கொள்ளவும்.

குக்கரில் பட்டர் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.

குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேகவிடவும்.

பின்னர் குக்கரைத் திறந்து சூப்பை மட்டும் வடிகட்டி அதைச் சூடான சாதத்துடன் தேவையான அளவு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

ரசம் சாதம் போல இருக்க வேண்டும். ருசி பார்த்து, தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

சூப்பரான சூப்பரான சிக்கன் சூப் ரைஸ் ரெடி. 

சிருங்கேரி - தெய்வீகத் திருத்தலம்

சிருங்கேரி - தெய்வீகத் திருத்தலம்
sringeri-Sharadamba.


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் காண்போர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அபாரமானதோர் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள தெய்வீகத் திருத்தலமே சிருங்கேரி.

கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் காண்போர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அபாரமானதோர் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள தெய்வீகத் திருத்தலமே சிருங்கேரி. 1200 வருடங்களுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் பாரத திருநாட்டின் நான்கு பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்ட பீடங்களுள் தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் முதன்மையானதாகும்.

ஸ்ரீசங்கரரையே முதல் குருவாக கொண்டு தொடங்கிய ஸ்ரீசாரதா பீடத்தின் குருபரம்பரை அவருக்குப் பிறகும் இணையற்ற ஜீவன்முக்தர்களால் அலங்கரிக்கப்பட்டு வாழையடி வாழையாக இன்றளவும் தொடர்ந்து வருகிறது.



தற்போது இந்த பீத்தின் 36-வது ஜகத்குரு சங்கராசார்யராக ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்கள். அளவிடமுடியா ஆன்மீக சாதனைகளைப் படைத்தவரும், கருணைக்கடலும் உலகம் போற்றும் பண்டிதருமான ஆசார்ய சுவாமிகளை நாடி அவரது ஆசிகளை பெற்றுச் செல்வதற்காகவும் மற்றும் சாரதா பீடத்து திவ்விய ஆலயங்களில் தெய்வ தரிசனம் செய்து அளவற்ற ஆனந்தத்தை அடைவதற்காகவும் நாடெங்கிலும் இருந்து நாள்தோறும் எண்ணற்ற ஆஸ்திக பெருமக்கள் சிருங்கேரிக்கு செல்கின்றனர்.

இத்தலத்தைக் கண்டதும் உள்ளத்தைப் பறிகொடுக்காதவர் எவருமிலர் என்றே கூறலாம். இயற்கை பேரெழிலும் தெய்வீகச் சூழலும் நிரம்பப்பெற்ற இத்தலம், தன்னிடத்தே இறையுணர்வுடன் வருவோருக்கு இக பர சுகங்களை மட்டுமல்லாது பிறவிப்பிணியை நீக்கிட உதவும் ஆத்ம ஞானத்தையும் தரவல்லது.

இத்தலம் ராமாயணக்காலத்திற்கும் முற்பட்டதாகும். அக்கால கட்டத்தில் விபாண்டகர் எனும் பெரும் தவ வலிமை பூண்ட முனிவர் இப்பிரதேசத்தில் வசித்து வந்தார். அவர் ஒரு நாள் கானகத்தின் வழியாக சென்று கொண்டிருக்கும்போது அங்கே ஓர் அழகிய ஆண் குழந்தை கேட்பாரின்றி கிடப்பதை கண்டார்.

அதன்மேல் பரிவு கொண்ட அவர் அக்குழந்தையை தன்னுடன் எடுத்து வந்து விட்டார். தெய்வீக ஒளியுடன் விளங்கிய அக்குழந்தையின் தலையில் ஒரு சிறிய கொம்பு போன்ற வளர்ச்சி இருப்பதை கண்ட விபாண்டகர் அக்குழந்தைக்கு ‘ரிஷ்ய சிருங்கர்’ எனப்பெயர் சூட்டி வளர்த்து வரலானார். விபாண்டகரின் நேரடி கண்காணிப்பில் வேத சாஸ்திர கல்வியைக் கற்று தவ வன்மையுடன் வளர்ந்து வந்த ரிஷ்ய சிருங்கர் பெண்களை கண்டதேயில்லை.

பழங்கள் மற்றும் கிழங்கு வகைகள் போன்ற இயற்கை உணவினை தவிர வேறு உணவுகள் எதையும் அறிந்தாருமில்லை. அவரது பிரம்மசரிய நெறி மிக மிக உயர்ந்து இணையற்று விளங்கியது. அக்காலக் கட்டத்திலேயே அப்பிரதேசத்திற்கு சற்றுத் தொலைவில் இருந்த நாட்டினை ரோமபாதர் எனும் அரசர் ஆண்டு வந்தார். தமது நாட்டில் நீண்ட காலமாகவே மழை பொழியாமல் எங்கும் பெருவறட்சி நிலவுவதை கண்டு மிகவும் கவலை கொண்ட அந்த அரசர் அதுபற்றி தமது மதியூக மந்திரிகளிடம் ஆலோசனை செய்தார்.

அவர்கள் அவருக்கு ரிஷ்ய சிருங்கரைப் பற்றி எடுத்துரைத்து, இணையற்ற பிரம்மசாரியான அவரது பாதம் அந்நாட்டில் படுமேயானால் உடனடியாக மழை பொழியும் எனக் கூறினர். ரிஷ்ய சிருங்கர் பெண்களை இதுவரை பார்த்திராததால், திறமை கொண்ட பெண்கள் சிலரை அனுப்பி வைத்து அவரது கவனத்தை ஈர்த்து விபாண்டகருக்கு தெரியாவண்ணம் அவரை இந்நாட்டிற்கு அழைத்து வந்து விடலாம் என்றும் ரோமபாதருக்கு அம்மந்திரிகள் ஆலோசனை கூறினர்.

விபாண்டகரின் கோபத்தை கிளறி பெரும் சாபத்தைப் பெறக்கூடிய அபாயம் இருந்தபோதிலும், நாட்டின் நன்மையை முன்னிருத்தி ரோமபாதரும் அதற்குச் சம்மதித்தார். அரசரின் ஆணைப்படி, அழகும் திறமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பெண்கள் சிலர் விபாண்டகர் இல்லாத சமயம் அவரது ஆசிரமத்திற்கு சென்று ரிஷ்ய சிருங்கரைச் சந்தித்தனர். அவர்களை கண்ட அந்த தெய்வீக பிரம்மச்சாரி அவர்களை வேதத்தில் கூறப்படும் மேலுலகவாசிகள் என்றே எண்ணி விட்டார்.

அவர்களிடம் தனக்கு இனம் புரியாததொரு ஈர்ப்பு ஏற்படுவதை உணர்ந்த அவர் அவர்களது அழைப்பையேற்று, தனது தந்தைக்கு தெரியப்படுத்தும் எண்ணமுமின்றி அவர்களுடன் கிளம்பி விட்டார். அவர்களது நாட்டில் ரிஷ்ய சிருங்கரின் பாதம் பட்டதுதான் தாமதம், பெருமழை பெய்யத் தொடங்கி விட்டது.
மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அரசரும் தமது மகளையே ரிஷ்ய சிருங்கருக்கு மணமுடித்தும் வைத்து விட்டார்.

இதற்கிடையில் தமது புத்திரரை வஞ்சித்து தமக்குத் தெரியாமல் அவரை அழைத்துச் சென்று விட்ட அரசர் ரோமபாதரின் செயலை தமது ஞானக்கண்ணால் அறிந்து கொண்ட விபாண்டகர், பெரும் சினம் கொண்டவராக ரோமபாதரின் நாட்டை அடைந்தார். ஆயினும் அரசரின் பணிவார்ந்த சொற்களாலும் உபசரிப்பாலும் சினம் தணிந்த விபாண்டகர் நடந்த அனைத்தும் ஈசனின் திருவுளம் என்பதைப் புரிந்து கொண்டவராய் மணமக்களை நெஞ்சார வாழ்த்தி விட்டு கானகத்திற்கே திரும்பி விட்டார்.

கானகத்தில் இருக்கும் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து நீண்ட தவத்தில் ஈடுபட்ட விபாண்டகர் தமது உடலை நீத்து பெரும் ஒளி வடிவில் அக்குன்றிலிருக்கும் சிவலிங்கத்தினுள்ளே ஐக்கியமானார். (சிருங்கேரியில் இன்றும் இக்குன்று உள்ளது. அம்மஹாமுனிவர் ஐக்கியமான லிங்கம் உள்ள ஆலயமே ஸ்ரீமலஹானிகரேசுவரர் ஆலயம் என்ற பெயருடன் விளங்கி வருகிறது).

ரோமபாதரின் நாட்டில் இருந்த ரிஷ்ய சிருங்கரின் மகிமைகளை அறிந்த அண்டைநாட்டு அரசரான தசரத மகாராஜா அவரைத் தமது அயோத்தி நாட்டிற்கு வருகை புரிந்து தமக்கு சத்புத்திரர்கள் பிறக்கும் வகையில் யாகம் ஒன்றை நடத்தி அளித்து ஆசீர்வதிக்கும்படி வேண்டி கேட்டுக் கொண்டார். அதற்கிணங்கி, ரிஷ்ய சிருங்களும் அப்படியே செய்து கொடுத்தார். அதன் விளைவாக ஸ்ரீராமபிரான் முதலான தெய்வீக புத்திரர்கள் தசரதருக்கு கிடைக்கப் பெற்றார்கள்.

சிறிது காலம் சென்றபின் ரிஷ்ய சிங்கருக்கு தனது அருந்தவப் பயனாலும் இறையுளத்தாலும் விரைவிலேயே இல்வாழ்க்கையில் ஈடுபாடு விலகியதால், அவர் தமது குடும்பத்தார் மற்றும் நாட்டு மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு கானகம் திரும்பி தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார். தமது புவியுலக வாழ்நாளின் இறுதியில் தாம் தியானம் செய்த இடத்திலிருந்த சிவலிங்கத்திலேயே ஒன்றி மறைந்தார்.

ஸ்ரீரிஷ்ய சிருங்கர் வாழ்ந்த பிரதேசமே ரிஷ்ய சிங்ககிரி என அழைக்கப்பட்டது. பின்னர் சிருங்ககிரி எனவும், தற்போது சிருங்கேரி எனவும் மருவித் திகழ்கிறது.

என் கண்கள் உன்னைத் தரிசிப்பதிலும் கைகள் உன்னை பூஜை செய்வதிலும் காதுகள் உன் பிரபாவத்தைக் கேட்பதிலும் வாக்கு உன்னை ஸ்தோத்திரம் செய்வதிலும் தலை உன் பாதத்தை வணங்கியதாகவும் எப்போதும் இருக்க வேண்டும். என் மனது உன் தியானத்தில் ஈடுபடட்டும்

சிருங்கேரி கோவில் பற்றிய 50 வழிபாட்டு தகவல்கள்

சிருங்கேரி கோவில் பற்றிய 50 வழிபாட்டு தகவல்கள்
sringeri-Sharadamba-Temple-50-worship-tips.


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் பற்றிய 50 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

1. இந்தியாவின் சமய வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றிருப்பது சாரதா பீடமாகும்.

2. துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது.


3. ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவமாக சாரதா பீடம் இருக்கிறது.

4. சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது. மங்களூர், ஷிமோகாவில் இருந்தும் சிருங்கேரிக்குச் சென்று வரலாம்.

5. ஸ்ரீ சாரதாதேவி மடத்திலேயே குறைந்த வாடகையில், அங்கு செல்லும் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்கின்றன.

6. கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னை சாரதா தேவியின் உற்சவ சிலை ஊர்வலமாக, வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.

7. சிருங்கேரி செல்பவர்கள், இங்கிருந்து 22 கி.மீ. தொலைவிலும், கிக்கா என்ற இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஸ்ரீமனே நீர் வீர்ச்சியை கண்டு களித்து வரலாம். இந்த நீர் வீழ்ச்சி, கர்நாடக மாநிலத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள மிக அழகிய நீர் வீழ்ச்சியாகும்.

8. யாத்திரையின் கடைசியில் காஞ்சியை அடைந்த ஸ்ரீசங்கரர் தன்னிடம் வைத்துக் கொண்ட யோகலிங்கத்தை அங்கே வைத்து “காமகோடி” பீடத்தை ஸ்தாபித்ததாக சொல்வார்கள். மற்ற லிங்கங்களான மோட்சலிங்கம், ஸ்ரீசிதம்பரத்திலும், முக்தி லிங்கம் ஸ்ரீபத்ரிநாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும் போக லிங்கம் ஸ்ரீசாரதா பீடத்திலும் ஸ்தாபிக்கப்பட்டன.

9. சாரதை கோவில் நுழைவு வாயிலில் இருந்தே தரிசனம் செய்யும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. சாரதை கல்விக்கு அதிபதி என்பதால் அங்கு வந்து அட்சராப்பியாசம் செய்து கொண்டு போகின்றனர்.

10. சதா நேரமும், அங்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத பூஜை, நாம் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நைவேத்தியப் பிரசாதத்துடன் சகஸ்ரநாம அர்ச்சனைக்கு பணம் கட்டினால் பிரசாதம் என்று பெரிய அளவில் தேங்காய் பர்பி தருகிறார்கள்.

11. குரு பரம்பரையை வெளிப்படுத்தும் விதமாகவே எட்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் ‘பாரதி தீர்த்த’ எனும் பட்டத்தை சூட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.

12. சிருங்கேரி மடத்தில் உலகிலேயே மிகப்பெரிய வீணை உள்ளது. இந்த வீணைக்கு சார்வபவும வீணை என்று பெயர். தமிழ்நாட்டில் தயாரான இந்த வீணை கடந்த 2003-ம் ஆண்டு சிருங்கேரி மடத்துக்கு வழங்கப்பட்டது. 10 அடி நீளம், 76 செ.மீ. அகலம், 74 செ.மீ. உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டது.

13. நாட்டிய சாஸ்திரத்தில் வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்களில் ஒரு ரசத்துக்குப் பேர் சிருங்காரம். சிருங்காரம் என்றால் அழகு என்று அர்த்தம் வரும். சிங்காரி அம்பாளை செல்லமா நாம சொல்லும் வார்த்தை கூட இந்த சிருங்காரத்தில் இருந்து வந்த ரீங்காரம்தான் சிருங்கம் + கிரி = சிருங்கேரி.

14. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.

15. அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம் பாவுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஸ்ரீ சங்கர பகவத்பாதரால் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14-ம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.

16. சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது.

17. யசூர் வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.

18. கோவில் கட்டிடம் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் காரணத்தால், தென் இந்திய இந்து கலாச்சார கட்டிடக்கலைப்படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது.

19. அஷ்டலட்சுமி ஓவியம் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட எட்டு கதவுகளும் இங்கு உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் யாவும் தமிழ்நாட்டு சிற்பக் கலையினை பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.

20. நவராத்திரி மற்றும் சித்ரா சுக்ல பூர்ணிமா சிறப்பு பூஜை இரண்டும் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

21. உள்ளூர் மக்கள் தீபோத்சவம், கார்த்திகா பூர்ணிமா, லலிதா பஞ்சமி, சாரதா ரதோத்சவம் போன்ற வற்றை இந்த புனித தலத்தில் கொண்டாடுகின்றனர்.

22. ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

23. நடை திறக்கும் நேரம் :- தினமும் காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

24. அருகிலுள்ள விமான நிலையம்- மங்களூர் 7 கி.மீ., அருகில் உள்ள ரெயில் நிலையம்- சிருங்கேரி 55 கி.மீ.

25. ஆலயத்தில் வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் இருக்கின்றன. நவராத்திரி முதலிய விசேஷ நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்க ரதப் பவனி உண்டு. பக்தர்கள் பணம் கட்டினால் வெள்ளிக்கிழமைகளில் தங்கரத, வெள்ளி ரத சேவை கிடைக்கும்.



26. சிருங்கேரியில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது சங்கர ஜெயந்தி. ஏப்ரல், மே மாதங்களில் வைகாச சுக்ல பஞ்சமியன்று கொண்டாடப்படுகின்றது.

27. வியாஸ பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ணாஷ்டமி, விநாயக சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாப விரதம், உமா மகேஸ்வர விரதம், சாதாம்பாள் அபிஷேக, ரத சப்தமி ஆகியவை குறிப்பிடும்படியான திருவிழாக்கள்.

28. மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் சந்திர மவுலீசுவரருக்கு சுவாமிஜி பூஜை செய்வார்.

29. ரிஷ்யசிருங்க பர்வதம் ஒரு பச்சைப் பசேல் வனப் பிரதேசம். மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகள். கடுமைமான கோடையில் கூட, ஜிலு ஜிலுவென்று அருமையான சீதோஷ்ண நிலை, மனதிலும் உடலிலும் எப்போதும் ஒரு நிம்மதி நிலவ வைக்கும் சூழல் உள்ளது.

30. இங்குள்ள அத்வைத ஆராய்ச்சி நிலையத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள், வேதம், உபநிடதம், சாஸ்திரம், தர்க்கம் முதலான மேன்மையான சமஸ்கிருத நூல்கள் கொண்ட நூலகம் இருக்கிறது. இங்கு வேத பாடசாலை மாணவர்களும் அயல்நாட்டினரும் அமைதியாக அமர்ந்து நூல்களை ஆராய்ந்து குறிப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

31. குரு நிவாஸ் என்ற பிரம்மாண்ட அழகிய கட்டிடத்தில் ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதீ தீர்த்த மகா சுவாமிஜி காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.

32. சிருங்கேரிக் கோவில்களையும் மடத்தையும் நிர்வகிக்கும் சாரதா பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் அருமையான தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைவான வாடகையில் கிடைக் கின்றன. வரும் யாத்ரீகர்கள் யார் வேண்டு மானாலும் வரிசையில் நின்று தங்கள் ஊர், பெயரைப் பதிவு செய்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம்.

33. வெள்ளிக்கிழமை தோறும் விசேஷமாக ஸ்ரீசக்கர பூஜை நடத் தப்படுகிறது. அது அற்புதமான தெய்வீக அனுபவமாக இருக்கும்

34. வித்யா சங்கரர் கோவிலின் அமைப்பு திராவிட, ஹொய்சாள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது.

35. கோவில் மண்டபத்திலேயே கூட்டம் கூட்டமாக குழந்தைகளை கைபிடித்து அரிசியில் எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கிறார்கள். அன்னை சரஸ்வதியின் சன்னதியில், அறிவுக் கண் திறக்கும் இந்த பாரம்பரிய சடங்கை அனைத்து பக்தர்களும் எளிய முறையில் நடத்திக் கொள்ள வசதி செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

36. துங்க பத்ரா நதிப் படித்துறை நீண்ட படிகளுடன் அழகாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து கொண்டு நதியில் பெரிய பெரிய மீன்கள் துள்ளி விளையாடுவதையும் கரை அருகில் வந்து மக்கள் வீசும் பொரியை விழுங்குவதையும் நாள் முழுக்க அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

37. படித்துறையில் மீன் கூட்டங்கள் வருவதனால் நீராட முடியாது. பாலத்திற்கு மறுபுறம் நதி வளைந்தோடும் இடத்தில் குளிக்கலாம்.

38. சிருங்கேரியில் மூவாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய நேர்த்தியான, சுத்தமான, காற்றோட்டமுள்ள உணவுக் கூடம் இருக்கிறது. சுடச்சுட சாதம், பூசணிக்காய், கத்தரிக்காய் என கலந்து கட்டிய சாம்பார், ரசம், ஒரு பாயசம், இனிப்பு, மோர் என்று எளிய உணவுதான்.

39. சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்க கோபுர கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. கர்ப்பகிரகத்தின் விமானத்தில் அமைந்த தங்க கலசங்களுக்கு, பாரதி தீர்த்த சன்னிதானம் மற்றும் சன்னிதானம் விதுசேகர பாரதி அபிஷேகம் செய்தனர்.

40. சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம பாரதி சுமார் 1900-ல் நெல்லை மாவட்டம் கோடகநல்லூருக்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊரை “தட்சண சிருங்கோ” என்று வர்ணித் தார். இங்கு உள்ள சங்கரமடம் முதன் முதலில் கட்டப்பட்ட கிளைகளில் ஒன்றும், மிகவும் பழமையானதும் ஆகும்.

41. சிருங்கேரியில் தங்கம், வெள்ளி தேர்கள் உள்ளன.

42. பெருமாள் வராக உருகக் கொண்டு கடலுக்குள் புகுந்து தன் இரு கொம்புகளால் பூலோகத்தை மீட்டு தூக்கி நிறுத்திய போது அவரது இரு கொம்புகளும்-சிருங்கம் பதிந்த புண்ணிய பூமி அதனால் சிருங்கேரி எனப்பெயர் பெற்றது.

43. துங்கா நதியினால் புனிதமானதாகிய சிருங்ககிரி பல மகான்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வேத சாஸ்திரங்களைக் குறைவறக்கற்ற எண்ணற்றோர், சிருங்க கிரியில் சங்கரரின் அருகாமையில் இருந்து சாஸ்திர ஞானம் பெற்றார்கள்.

44. ஸ்ரீசுரேஸ்வரர், ஸ்ரீபத்மபாதர், ஸ்ரீ கஸ்தாமலகர், ஸ்ரீதோடகர் ஆகிய நான்கு சீடர்களுடன் பன்னிரண்டு ஆண்டுகள் ஸ்ரீசங்கரர், சிருங்கேரியில் வாசம் புரிந்தார்.

45. சிருங்ககிரி காசி தலத்திற்கு நிகரானது.

46. கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்பது தொன்மை யான பழமொழியாகும்.

47. சிருங்கேரி மடத்துக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருதடவையாவது சிருங்கேரிக்கு சென்று வழிபடுவதை அவர்கள் முதன்மை கடமையாக வைத்துள்ளனர்.

48. சிருங்கேரி சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகளின் பூர்வாச்சிரமப் பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. இவருடைய தாய்மொழி தெலுங்கு. ஆனால் கன்னடம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளிலும் பேசுவார்.

49. தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், மேல்மங்கலம், பெரியகுளம், கோவை, கல்லிடைகுறிச்சி, பத்தமடை, வத்தலகுண்டு, நாகர்கோவில், கரூர் ஆகிய 11 ஊர்களில் சிருங்கேரி சாரதா மடத்துக்கு கிளைகள் உள்ளன.

50. சாரதாதேவியின் கிருபையால் தர்மநெறி ஆன்ம நெறி பாரதம் முழுவதும் புத்துயிர் பெற்று உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே சிருங்கேரி சாரதா பீடத்தின் லட்சியமாகும்.

வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்ட கோவில்

வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்ட கோவில்
Vidyashankara-Temple-Sringeri


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வித்யா சங்கரர் கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்டது. 14-ம் நூற்றாண்டில் இருந்த சிருங்கேரி மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவர் தான் வித்யா சங்கரர்.

வித்யா சங்கரர் கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்டது. ஓய்சாளர் மற்றும் திராவிடக் கலைப்பாணி கலந்த கட்டிடக்கலை. கி.பி. 14-ம் நூற்றாண்டில் இருந்த சிருங்கேரி மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவர் தான் வித்யா சங்கரர். இவருக்கு வித்யா தீர்த்தர் என்றும் பெயர் உண்டு. ஆதி சங்கரருக்குப் பிறகு சிருங்கேரி மடத்தின் 11-வது குருவாக விளங்கியவர்.

வித்யா சங்கரர் கி.பி. 1228-ம் ஆண்டு சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக பட்டம் சூடினார். கி.பி. 1333-ம் ஆண்டு சமாதியை அடைந்தார். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக மடத்திற்குத் தொண்டாற்றியுள்ளார். அவர் ‘லும்பிகா’ யோக நிலையில் இருந்தபேது சமாதி நிலையை அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

நிலவறை ஒன்றில் இறங்கி தியான நிலையில் இருக்கப்போவதாகவும் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு அந்த சுரங்க வாயிலைக் திறந்து பார்க்குமாறும் அப்போது அவர் லிங்க வடிவில் காணப்படுவார் என்றும் தமது சீடர்களுக்குக் கூறியிருந்தார். ஆனால், ஆவலால் உந்தப்பட்ட சீடர்கள் மூன்றாண்டுகள் கழிந்ததுமே சுரங்க அறையை திறந்து பார்க்க, அங்கு ஒரு லிங்கம் காணப்பட்டதாக அந்த வட்டாரத்தில் ஒரு கதை வழங்கப்பட்டு வருகிறது.

வித்யா சங்கரருக்கு பிறகு பட்டம் பெற்ற அவரது சீடர் பாரதிதீர்த்த சுவாமிகள் தமது குருவின் மேல் கொண்ட பேரண்பு மற்றும் அபிமானத்தின் காரணமாக அவருக்கு ஒரு கோவிலை எழுப்பத் திட்டம் தீட்டினார். இந்த கோவில் கட்டுமான பணிகளுக்காக விஜயநகர மன்னர்களாகிய ஹரிஹரர். புக்கர் ஆகியோர் நன்கொடைகளை வழங்கினர்.

அவர்களின் குருவாகவும், அமைச்சராகவும் இருந்த வித்யாரண்யர் கோவில் பணிகளை முடித்து கி.பி.1356-ம் ஆண்டில் குடமுழுக்கு விழாவுக்கும் ஏற்பாடு செய்தார். வித்யாசங்கரர் கோவில் ஓய்சாளர் கலைப்பாணியும், திராவிடக்கலைப்பாணியும் கலந்த அரிய படைப்பாகும். இக்கோவில் உயர்ந்த மேடையில் மீது கட்டப்பட்டுள்ளது. கோவில் கிழக்கு முகம். மூலத்தானமும், அதன் முன்பு ஒரு மண்டபமும் உள்ளது. இவற்றைச்சுற்றி வருவதற்காக பாதையும் உள்ளது.

நவரங்க மண்டபம் பதினெட்டு அடி உயரமுள்ளது. இம்மண்டபத்தின் விதானம் எட்டடி சதுரம் உள்ளது. அதன் நடுப்பகுதி தாமரை மலரைக் கவிழ்த்து வைத்தது போல இரண்டடி ஆழம் கொண்டது.

தாமரை இதழ்களில் கிளிகள் அமர்ந்திருப்பது போன்று காணப்படுகிறது. நடுவில் தாமரை மொட்டு போன்ற சிற்ப வடிவம். இதழ்கள் ஐந்தடுக்குகளாக உள்ளன. மேற்குறிப்பிட்ட மண்டபத்திற்கு மூன்று வாயில்கள் கிழக்கு, தெற்கு, வடக்குப் பக்கங்களில் காணப்படுகின்றன. இந்த வாயில்களின் வெளிப்புற முகப்பு உத்தரத்தில் கீழ்க்காணும் சிற்ப வடிவங்கள் உள்ளன.

தெற்கு வாயில்-சரஸ்வதி
மேற்கு வாயில்-லட்சுமி நாராயணர்
வடக்கு வாயில்-உமா மகேசுவரர்

மண்டபத்தின் வெளிச்சுவர் முழுவதும் கண்ணைக்கவரும் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை திருமாலின் பத்து அவதாரங்களையும், சிவபெருமான் சக்தி ஆகியோரின் பல்வேறு வடிவங்களையும், கோமடேசுவரரின் சிறிய சிற்ப வடிவத்தையும் கொண்டுள்ளன. இந்த சிற்பங்களின் மேல் வரிசையில் சிறிய அளவில் அமைந்த கந்தர்வர்களின் சிற்பங்கள் அமைந்துள்ளன. மற்றொரு சிறப்பம்சம் கோவில் மூலைகளில் மேலிருந்து தொங்கும் கல் சங்கிலிகள்.

நவரங்க மண்டபத்தை சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த 12 தூண்கள் தாங்கி நிற்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றிலும் சிங்கத்தின் மீது அமர்ந்த வீரன். சிங்கங்களின் வாய்களில் உருளும் கருங்கற்களால் ஆகிய பந்துகள். ஒவ்வொரு தூணிலும் ஒரு ராசி வீதம் 12 ராசிகளின் அடையாளங்கள். மேலே சூரியனைக்குறிக்கும் சிற்ப வடிவம்.

மூலவர் அறையில் உள்ள லிங்கத்திற்கு ‘வித்யா சங்கரலிங்கம்’ என்று பெயர். இது வித்யாதீர்த்த சுவாமிகளின் நினைவாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவருக்கு மேல் பகுதியில் விமானம் உள்ளது. இது மூன்றடுக்குகளையும், ஒரு கலசத்தையும் கொண்டுள்ளது. கலசம் உலோகத்தால்ஆகியது.
சிருங்கேரியை அடைய பல்வேறு ஊர்களில் இருந்து நல்ல சாலைகளும், பேருந்து வசதிகளும் உள்ளன. மங்களூர் சிருமகளூர் ஆகிய இடங்களில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. பெங்களூர், சிமோகா, மைசூர் ஆகிய இடங்களில் இருந்து நேரடிப்பேருந்துகளும் உள்ளன.

கணபதியின் விரதங்கள்

கணபதியின்  விரதங்கள்
vinayagar-viratham


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் கணபதியை வேண்டி வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது வெற்றியை தரும். கணபதியின் அருளை பெறுவதற்காக விரதங்களை பார்க்கலாம்.

1. வைகாசி வளர்பிறை:

முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.

 
2. செவ்வாய் விரதம்:

ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.

3. சதுர்த்தி விரதம்:

பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.

4. குமாரசஷ்டி விரதம்:

கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இழைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.

5. தூர்வா கணபதி விரதம்:

கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.

6. சித்தி விநாயக விரதம்:

புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.

7. தூர்வாஷ்டமி விரதம்:

புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.

8. விநாயக நவராத்திரி:

ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.

9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்:

ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.

10. செவ்வாய் பிள்ளையார் விரதம்:

ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர்.

11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை:

பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன. 

ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம்

ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம்
sringeri-Sharadamba.


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

1200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஆதிசங்கரர் சிருங்கேரியில் அம்பாளை எழுந்தருளச் செய்த சமயம், அம்பாளுக்கு சந்தனத்தாலான விக்ரகத்தை செய்து வைத்தார்.

1200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஆதிசங்கரர் சிருங்கேரியில் அம்பாளை எழுந்தருளச் செய்த சமயம், அம்பாளுக்கு சந்தனத்தாலான விக்ரகத்தை செய்து வைத்தார். பிறகு பனிரெண்டாவது குருவான ஸ்ரீ வித்யாரண்ய மகாசுவாமிகள் கேரள ஆலயங்களைப் போன்று ஓடுகளால் வேயப்பட்ட மேல் தளத்தை உடைய மூங்கில்களாலான ஆலயத்தை நிர்மாணித்து, பல நூற்றுக்கணக்கான வருடங்களாக அபிஷேகம் முதலியவைகளால் ஆராதிக்கப்பட்டு வந்ததால் சிதிலமாகத் தொடங்கியிருந்த சந்தன விக்ரகத்திற்கு பதிலாக தற்போதுள்ள தங்கத்தாலான விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார்.

33-ம் குருவான ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதீ மகாசுவாமிகள், மெருகூட்டப்பட்ட கருங்கற்களாலான மதிற்சுவர் களைக் கொண்ட, தற்போது காணப்படும் ஆலயத்தை உருவாக்கினார். 35-ம் குருவான ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகள் ஆலயத்திற்கு மேலும் பல திருப்பணிகளைச் செய்தார்.

தற்போதைய குருவான ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு தங்கத்தாலான நிலைப் படியையும், கதவுகளையும் உருவாக்கியதுடன் அம்பாளுக்கென்று தங்கத்தேர் ஒன்றையும் அர்ப்பணித்திருக்கிறார். ஆலயத்தினுள் இருக்கும் நவரங்க மகாமண்டபம் மிகத் தேர்ச்சியான சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய பற்பல தூண்களைக் கொண்டது. இத்தூண்களில் துர்கா, ராஜராஜேஸ்வரி முதலான கடவுள்களின் பிம்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சர்வ அலங்காரங்களுடன் இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ சாரதாம்பாளைக் காண கண்கோடி வேண்டும்.

மரகத லிங்கத்தை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

மரகத லிங்கத்தை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்
marakatha-shiva-lingam-worship-benefits


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம். புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம்.

கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும், சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும்.

மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி, பதவி, போன்றவற்றில் சிறந்து விளங்கலாம். சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும். மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.

அரிய வகை மரகத லிங்கங்கள், மாணிக்க லிங்கங்கள், கருநீல லிங்கங்கள், கனக புஷ்பராக லிங்கங்கள் என பலவகை லிங்கங்கள் உள்ளது.

K Karthik Raja - Share Market Training @ Chennai - TNagar

K Karthik Raja - Share Market Training @ Chennai