பாலக் பக்கோடா

பாலக் பக்கோடா
palak-pakoda.
சத்தான ஸ்நாக்ஸ் பாலக் பக்கோடா


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பாலக்கீரை நம் உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு. இன்று பாலக்கீரையில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாலக் கீரை - 3 கப்

 கடலை மாவு - 1 ½ கப்
அரிசி மாவு - 2 ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வறுத்து அரைத்த சீரகத் தூள் - ½ டீஸ்பூன்
இஞ்சி விழுது - ½ டீஸ்பூன்
புதினா இலை - 12
கொத்தமல்லி தழை - 2 டேபிள் ஸ்பூன்
சூடாக்கிய எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



செய்முறை :

பாலக்கீரை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை, கொத்தமல்லி, புதினா, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இறுதியாக சூடாக்கிய எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பக்கோடாவிற்கு தேவையான பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும். பஜ்ஜி மாவைப் போல் நீர் பதத்தில் இல்லாமல் பொள பொளவென்று இருக்க வேண்டும். அப்போதுதான் பக்கோடா பொரிப்பதற்கு பதமாக, நன்றாக இருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து பாலக் கீரை கலந்து சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விடவும். அது பொன்னிறமாக ஆகும் வரை வறுக்கவும்.

பாலக் கலவையை வாணலியில் அளவாக போட்டால் நன்றாக மொறுமொறுவென வரும். இந்த பக்கோடாவை காற்று போகாமல் மூடி வைத்தால் 2, 3 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.

சூப்பரான பாலக் பக்கோடா ரெடி.