எதுமலை - அருணாசலேஸ்வரர் கோவில் - Yethumalai Arunachaleswarar-temple

எதுமலை -  அருணாசலேஸ்வரர் கோவில் - Yethumalai Arunachaleswarar-temple

கேட்ட வரம் அருளும் அருணாசலேஸ்வரர் கோவில் - arunachaleswarar-temple

                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

எதுமலை - அழகு தாலாட்டும் இந்தக் கிராமத்தில் நடுநாயகமாய் அமைந்துள்ளது ஒரு சிவாலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் அருணாசலேஸ்வரர். இறைவின் பெயர் உண்ணாமுலையம்மன்.

அருணாசலேஸ்வரர், கோவில் உட்புறத் தோற்றம்
எதுமலை - அழகு தாலாட்டும் இந்தக் கிராமத்தில் நடுநாயகமாய் அமைந்துள்ளது ஒரு சிவாலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் அருணாசலேஸ்வரர். இறைவின் பெயர் உண்ணாமுலையம்மன். பல நூறு ஆண்டுகளைக் கடந்த ஆலயம் இது.

விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் ஆண்டு கொண்டிருந்த காலம் அது. அங்கு எதுர்மலை, பாலைமலை என இரண்டு ஊர்கள் இருந்தன. இரண்டு கிராமங்களுக்கும் இடையே ஒரு பெரிய குளம். அந்த இரண்டு ஊர்களிலும் இரண்டு பெருமாள் ஆலயங்களும், சிவாலயமும் இருந்தன.


அங்கிருந்து இந்தப் பக்கம் குடியேறிய ராயர் வம்சத்தினர் அதே அமைப்பில் இரண்டு கிராமங்களை அமைத்தனர். அதே பெயர்களில் இங்கு அமைக்கப்பட்ட ‘எதிர்மலை’ திரிந்து ‘எதுமலை’ என தற்போது அழைக்கப்படுகிறது. பாலைமலை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட கிராமம் தற்போது ‘பாலையூர்’ என வழங்கப்படுகிறது. இந்த ஊர் எதுமலைக்கு அருகிலேயே உள்ளது.

அங்கு உள்ளது போல் தம் வம்சத்தினர் வழிபட பாலையூரில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தையும், எதுமலையில் வரதராஜப்பெருமாள் மற்றும் அருணாசலேஸ்வரர் ஆலயங்களையும் கிருஷ்ண தேவராயர் உருவாக்கினார்.

இது செவி வழி தல வரலாறு. பின்னர் வந்த மன்னர்கள் இந்த ஆலயங்களை புனரமைப்பு செய்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த சிவாலய முகப்பு தெற்கு நோக்கி உள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான திருச்சுற்று உள்ளது. வலதுபுறம் பல்லாண்டுகளைக் கடந்த தல விருட்சம் வில்வம் தழைத் தோங்கி காட்சி தருகிறது. அடுத்துள்ளது மகா மண்டபம். அதை அடுத்து அர்த்த மண்டபம் காணப்படுகிறது. அடுத்தாற்போல் உள்ள கருவறையில், மூலவர் அருணாசலேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இறைவனின் சன்னிதியை அடுத்து இறைவி உண்ணாமலை அம்மனின் தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தல அம்மனுக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கியிருக்க, கீழ் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காணப்படுகிறது. அன்னை நின்ற கோலத்தில் இளநகை தவழ கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

திருச்சுற்றில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயர்களும், கிழக்கில் கால பைரவரும், சூரியனும் அருள் பாலிக்கின்றனர். தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயத்தில், சிவராத்திரி, கார்த்திகை, சோமவாரங்கள், மார்கழி 30 நாட்கள், தைப் பொங்கல், ஆண்டு பிறப்பு முதலிய நாட்களில் இறைவன் இறைவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை ஏற்றும் வைபவமும், ஐப்பசி பவுணர்மியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

குடும்ப சகிதமாக நந்தீஸ்வரர்

இங்கு மேற்கு திருச்சுற்றில் பாலமுருகன் என்ற திருநாமத்தில், நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். அவருக்கு எதிரே கோஷ்டத்தில் மகாவிஷ்ணு அருள்பாலிப்பது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

குடும்ப சகிதமாக நந்தீஸ்வரர் :

பொதுவாக சிவாலய கருவறைக்கு எதிரில் நந்தி பகவான் வீற்றிருக்கிறார். இங்கும் நந்தியம் பெருமான் இருக்கிறார். அது மூன்று நந்தியாக இருக்கிறது. அதாவது தாய், தந்தை, கன்று என்ற அமைப்பில் மூன்று நந்திகள் இறைவனின் சன்னிதிக்கு எதிரில் அமைந்துள்ளன. அந்தக் காலத்தில் இந்த கிராமம் மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தன. அந்தக் காட்டுப் பகுதியில் நிறைய காட்டு எருமைகள் மனம் போல் திரிந்து கொண்டிருந்தன. ஊரில் இருந்த விளை நிலங்களையும், வாழை மற்றும் தென்னை மரங்களையும் இந்த காட்டு எருமைகள் கூட்டமாக வந்து துவம்சம் செய்து கொண்டிருந்தன. இதனால் கிராம மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர்.

அவர்கள் இத்தல இறைவன் அருணாசலேஸ்வரரின் சன்னிதியின் எதிரே நந்தி பகவானை குடும்ப சகதிமாய் பிரதிஷ்டை செய்து தங்கள் வேதனைகளை சொல்லி கண்ணீர் விட்டு கதறினர். இதையடுத்து அவர்களுக்கு நந்தி பகவானின் அருள் பரிபூரணமாகக் கிடைத்தது. அதன் பின் காட்டு எருமைகள், விளைச்சல் நிலங்களின் பக்கமே வருவது இல்லையாம். இன்னும் தங்கள் நிலங்களில் விளையும் பயிர்கள் சேதாரம் இன்றி வீட்டிற்கு வந்து சேர, பக்தர்கள் நந்தியின் குடும்பத்தை ஆராதனை செய்ய தவறுவதில்லை.

வேண்டிய வரத்தை வேண்டியபடி அருளும் இத்தல இறைவன், இறைவியை நாமும் ஒரு முறை தரிசிக்க எதுமலை சென்று வரலாமே.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

திருச்சி மாட்டம் மண்ணச்சநல்லூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எதுமலை கிராமம். திருச்சியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் இருக்கின்றன.

Shiva Temple | Temples | சிவன் கோவில் | கோவில்

வியாபார முடக்கத்தில் இருந்து விடுபட ஸ்லோகம் - vinayagar-slokas

வியாபார முடக்கத்தில் இருந்து விடுபட ஸ்லோகம் - vinayagar-slokas

வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு வந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 48 நாட்கள் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

விநாயகர்
(ஸ்தம்பனம் உடைய) வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு ஸ்தம்பித்து நின்று விட்டால் அந்த இடத்தில் ஈசானியத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு “ஓம் அரி ஒம்”; என்று தினசரி 1008 உரு 48 நாட்கள் ஜெபிக்க முடக்கம் உடையும்.

48 நாட்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

பித்ரு தோஷம் - Pitru Dosha Pariharam

பித்ரு தோஷம் -  Pitru Dosha Pariharam

பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

த்ரு தோஷம்
பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.

பித்ருதோஷம் என்பதை இரண்டு வகைகளில் விவரிக்கலாம். ஜோதிடம் சார்ந்த ஒன்று. அதைச் சாராத ஒன்று. உலகின் எந்த ஒரு புனிதமதமோ அல்லது புனிதநூலோதாயையும், தந்தையையும் சிறப்பித்துத்தான் சொல்லுகின்றன. ஆனால் என்னுடைய மேலான இந்துமதம்மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தி, தெய்வத்தையே நான்காமிடத்தில் நிறுத்தி பெற்றவர்களை முதலிடத்தில் வைத்துச் சிறப்பிக்கிறது.


இந்துமதம், நாம் இந்த பூமிக்கு வருவதற்கு ஆதாரமாக இருந்து, நமக்கு உடல் கொடுத்த தாயையும், தந்தையையும் தெய்வத்திற்கும் முன்னே வைத்து முதலில் வணங்கச் சொல்கிறது. உடலும், உயிரும் கொடுத்த தாய்,தகப்பனை அவர்கள் உயிருடன் இருக்கும் போதும் மதித்து வணங்கி, அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகும் அவர்களை வருடாவருடம் நினைத்துப் போற்றி பசியாற்ற வேண்டியதே ஒரு இந்துவின் தலையாயக் கடமை.

தாயும், தந்தையும் நமக்கு முதன்மையானவர்கள் என்றால் அவர்கள் இருவரும் இந்தப் பூமியில் பிறப்பதற்குக் காரணமான தாத்தாவும், பாட்டியும் முதன்மைக்கு முதலானவர்கள் ஆகிறார்கள். அந்த தாத்தா,பாட்டிக்கு உடல் கொடுத்த, அவர்கள் இந்த உலகில் பிறக்க காரண மானமுப்பாட்டன்-முப்பாட்டி அவர் களுக்கும்முதலானவர்கள் ஆகிறார்கள். இப்படியே இந்தச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டே சென்றால்இதில் ஏதோ ஒருமுனை நிறுத்தப்பட்டு அது ஆதி முதல்வரான பரம் பொருளிடம் போய் நிற்கும்.

இந்துமதத்தில் மட்டுமே உள்ள சிறப்பான “குலதெய்வ வழிபாடு”உண்மையில் நம் குலத்திற்கு,நம் குடும்பத்திற்கு எல்லாமுமாய் இருந்து, நமக்கு உடல் கொடுத்த ஒரு முப்பாட் டன்அல்லது முப்பாட்டியை வழிபடுவது தான். அவர்கள் நமக்குத் தந்த இந்த வாழ்க்கைக்கு நன்றி செலுத்துவது தான். என்றோ ஒருநாள் அவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்தியஇடத்திற்குச் சென்று, நாம் வந்த இடத்தை நினைவு கூறுவதுதான்.

மதம் எனும் நமது வாழ்வியல் விதிப்படிசூரிய னும்சந்திரனும் தாய் தந்தையராகக் கருதப்படு கிறார்கள். ஒவ்வொரு உயிரும் இவர்களது ஒளியால்தான் உண்டானது. தாயும் தந்தையும் இணைந்ததால், சேர்ந்ததால் நாம் பிறந்தோம். எனவே சூரியனும் சந்திரனும் இணையும், சேரும் ஒவ்வொரு மாத அமாவாசையன்றும் பெற்றோரை நினைக்கச் சொன்னது நமது மதம். இந்து மதம் விஞ்ஞானரீதியிலானது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

அமாவாசை தினத்தன்று,சிறுவனான எனது மகனை அருகில் வைத்துக் கொண்டு என் தாய், தந்தையருக்குவிரதமிட்டு நான் வழிபடும்போது அதில் ஒரு கலாச்சாரக்கடத்தலும், என்னுடைய சுயநலமும் கலந்திருக்கிறது. “என் தாய், தந்தையை நான் மறக்காமல் இருப்பதைப் போல,மகனே... என் மறைவுக்குப் பிறகு, நீ என்னை மறந்து விடாதே” என்று மறைமுகமாக என் மகனுக்கு நான் எடுத்துச் சொல்வதே அது.

இந்த வழிபாட்டைமுறையாகச்செய்யாதவர்கள், பித்ருக்களுக்குஉணவளித்துவழிபடத்தவறியவர்கள், பூமி தனது ஒருபாதிச்சுற்றை முடித்து வடக்கிருந்துதெற்காய்த் திரும்பும், உத்தராயணம்எனப்படும்,ஒருவருடத்தின் பாதி அமைப்பில் முதலில் வரும் ஆடிமாத அமாவாசையன்று, நதிக்கரையிலோ கடற்கரையிலோ முன்னோர்களை வழிபட்டு அவர்களை திருப்திப்படுத்தும் தர்ப்பணம் செய்யலாம் என்றும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
இதுவே நமது பெற்றோரையும், அவர்களுக்கு மூத்தோரையும் நினைத்து நாம் வழிபடும் முறை.

இனி ஜோதிடப்படி பித்ருதோஷம் என்பதற்கு வருவோம். ஜோதிடப்படி சூரியனே தந்தை சந்திரனே தாய் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். இங்கு சூரியன் பிதுர்க்காரகன் என்றும் சந்திரன் மாதுர்க்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மூல ஒளியான சூரியனாலேயே நாமும் நாம் வாழும் பூமியும் பிறந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

சூரியன் எனும் செம்பொருளையே சிவம் என்ற பெயரில் நமது மூல நூல்கள் குறிப்பிடுகின்றன. சூரியன் எனும் முதன்மையான ஆண்மைச் சக்தியையே தந்தையாகவும், அதற்கு துணைநிற்கும் சந்திரன் எனும்பெண்மைச் சக்தியையேதாயாகவும் உருவகப்படுத்தி அம்மையப்பனாக நாம் வழிபடுகிறோம்.

நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களிலும் ஒளிக்கிரகங்கள் எனப்படும் இந்தச் சூரியனும், சந்திரனுமே ஒரு ஜாதகத்தின் முதன்மையானவர்கள். ஜாதகத்தில் சூரிய, சந்திரர்களின் வலிமை முக்கியமானது எனும் நிலையில் இந்த இருவருடன் இருட்டுகளான ராகு, கேது, சனி ஆகியவை இணைந்து அவர்களைப் பலமிழக்கச் செய்யும் நிலையே ஜோதிடப்படி பித்ருதோஷம் எனப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் சூரியனை வைத்தே அந்த ஜாதகத்தின் உயிராகக் கருதப்படும் லக்னம் கணிக்கப்படுகிறது. அதேபோல அந்த உயிர் இயங்கத் தேவைப்படும் உடலானது சந்திரன் இருக்கும் இடத்தை. வைத்து ராசி என்று சொல்லப்படுகிறது. சூரியனும், சந்திரனும் தாய், தந்தையரைக் குறிப்பிடுவது போல, ராகு, தந்தையின் முன் னோர்களையும், கேது தாயின் முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் உயிராகிய சூரியனுடனோ உடலாகிய சந்திரனுடனோ இணைந்து அவர்களைப் பலவீனப்படுத்துவது பித்ருதோஷமானது.

மேலும் ஒரு ஜாதகத்தின் சென்ற பிறவி நன்மைகளையும், அதனால் உண்டாகும் இப்பிறவி பாக்கியங்களையும் குறிப்பிடும் ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இந்த சாயாக்கிரகங்கள் அமர்வதும் பித்ருதோஷம்தான் என்றும் விளக்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த தோஷத்தைப் பற்றி இன்றைய ஜோதிடர்களால்பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன. நம்முடைய முன்ஜென்மத்தில் நாம் பிறருக்குச் செய்த நன்மை, தீமைகளும் நம்முடைய முன்னோர்கள் செய்த நன்மை தீமைகளும், பெற்ற பாராட்டுகளும்,முக்கியமாக சாபங்களும் சில இடங்களில் நம்பமுடியாத அளவிற்கு விவரிக்கப்படுகின்றன.

ஜோதிடம் எனப்படுவது ஒரு பரிபூரண காலவியல் விஞ்ஞானம் என்பதில் உறுதியாக இருக்கும் எளியஜோதிடனான நான் மேற் கண்ட கருத்துக்களுக்குள் செல்ல விரும் பாமல், இந்த பித்ருதோஷத்தை என் சிற்றறி வுக்குஎட்டியவாறுவிவரித்துச் சொல்ல விரும்புகிறேன். இங்கே பித்ருதோஷவிளக்கங்களைப் பொறுத்தவரை,பயமுறுத்தல்களும், பரிகாரங்களுமே அதிகமாகத் தென்படுகிறது. பித்ருதோஷம் எனப்படுவது சூரிய சந்திரனுடன் ராகு இணைவதால் உண்டாகும் தோஷம் என்று சொல்லப்படுவதன் மறைமுகமான காரணம், சூரியன் தன்னுடைய சுபத்துவத்தையும் அந்த ஜாதருக்கு நன்மைகள் தரும் வலுவை இழப்பதாலும்தான் என்பதே உண்மை.

ஆனால் ஒரு ராசியில் ராகுவும், சூரியனும் சேர்ந்திருப்பதாலேயே சூரியன் வலுவிழந்து விடுவது இல்லை. இதற்கு உதாரணமாக சூரியனும், ராகுவும் இணைந்த எத்தனையோ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்அதிகாரிகளையும், அரசாங்கத்தில் உயர்நிலையில் இருப்பவர் களையும் என்னால் காட்ட முடியும். ஒளிக்கிரகங்களான சூரிய, சந்திரர்களுடன், ராகு-கேதுக்கள் இணைவதாலேயே ஒரு மனிதனுக்கு நல்லவை நடக்காமல் போய் விடுவ தில்லை. சர்ப்பக்கிரகங்கள் ஐந்தாமிடத் தில் இருப்பதாலேயே ஒருவருக்கு குழந்தை பிறக்காமல் போய் விடுவதும் இல்லை.

ராகு-கேதுக்கள் எத்தனை டிகிரியில் அவர்களை நெருங்கி வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள். அல்லது குறிப்பிட்ட தூரம் விலகி நின்று ராகு,சூரியனின்வலுவை ஏற்று அந்த ஜாதகருக்கு நன்மை செய்யப் போகிறாரா? அல்லது வேறுவகைகளில் அந்த ராகு-கேதுக்களுக்கோ, சூரிய-சந்திரர்களுக்கோசுபத்துவம் ஏற்பட்டு அவர்கள் வலிமை இழக்காமல் இருக்கிறார்களா என்பதை துல்லியமாகக்கணித்தபிறகேபித்ருதோஷம்கணக்கிடப்பட்டுச்சொல்லப்பட வேண்டும்.

ஆனால் இங்கேசூரியனுடன் ராகு சேர்ந்து விட்டாலே, இது பித்ரு தோஷம், உடனே காசிக்கு போ,ராமேஸ்வரம் போ இந்தப் பரிகாரத்தை செய் என்றுதான் பலன் சொல்லப்படுகிறது. ஒரு ஜாதகத்தில், எந்த அமைப்பால்இந்த ஜாதகருக்கு திருமணம், புத்திரபாக்கியம், வேலைவாய்ப்பு போன்றவைகள் நடக்கவில்லை என்பதைக் கணிக்கத் தடுமாறும் அல்லது கணிக்கத் தெரியாத, அனுபவக்குறைவால் ஜோதிட ஞானம் முழுமையாக கை வராத ஒரு மேலோட்டமான ஜோதிடருக்குபரிகாரம் சொல்ல பயன்படும் ஆயுதமாகவே இந்த பித்ருதோஷம் உபயோகப்படுகிறது.

நமது மூலநூல்களில் இது கடுமையான தோஷம் என்றோ, இதற்கு இந்த பரிகாரம்தான் செய்ய வேண்டும் என்றோ எந்த இடத்திலும் குறிப்பாக சொல்லாதபோதுநிகழ்காலஜோதிடர்கள் இந்த அமைப்பைப் பற்றி பெரிய பீதியைக்கிளப்பத் தேவையில்லை. உண்மையில்சூரியனும்,சந்திரனும் அந்த ஜாதகத்திற்கு எந்த ஆதிபத்தி யத்தைக் கொண்டவர்கள்? ராகு-கேதுக்கள்சுபத் துவம்அடைந்திருக்கிறார்களா இல்லையா? அவர்கள் எத்தனை டிகிரியில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்தபிறகே பித்ருதோஷம் சொல்லப்பட வேண்டும்.

ஒரு முறையான ஜோதிடர், கிரகங்களின் அமைப்பையும் அந்த ஜாதகத்தில் உள்ள தடைகளையும் தெளிவாகக் கணக்கிட்டு, தடையை ஏற்படுத்துகின்ற கிரகத்தை துல்லியமாகக் கணித்து, அதற்குரிய முறையான தெய்வஸ்தலங்களுக்கு அந்த ஜாதகரை அனுப்பி, பரம்பொருளின் அருள் கிடைக்கச் செய்து, அவரின் குறைகளை நீக்கித் தரவேண்டும். அதுவே முழுமையான ஜோதிடரின் கடமை.

அதைவிடுத்து தோஷம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லையா? பித்ரு தோஷம் என்று சொல்லிவிடு. இந்த ஊருக்கு போ. அந்த ஊருக்கு போ. இந்த ஹோமத்தைச் செய், அந்த ஹோமத்தைச் செய் என்று சொல்லி அனுப்பிவிட்டு அதைச் செய்தாலும் எனக்குப் பலன் இல்லையே என்று மறுபடியும் ஜாதகர்திரும்பி வந்ததும், உன் தலையெழுத்து அவ்வளவுதான். உன் கர்மாவைத்தீர்க்க முடியாது என்று ஒரு அரைகுறை ஜோதிடர் சொல்வதால்தான் இந்த தெய்வீக சாஸ்திரம் களையிழந்து போகிறது.

பரம்பொருள் அனுமதித்தால் இதைப்பற்றி “முறையான பரிகாரங்கள்” என்ற தலைப்பில் எல்லாம் வல்ல மேலான அருட்சக்தியை விளக்கி விரைவில் மாலைமலரில் எழுதுகிறேன். தாய், தந்தையருக்கு முறைப்படியான கடமைகளைச் செய்யாததால்தான்இந்த தோஷம் ஏற்படுகிறது என்பதிலும் கருத்துவேறுபாடு உள்ளது. அதிலும் எந்த தோஷமாக இருந்தாலும் அது முறையாக, தெளிவாகக் கணிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

எந்த தோஷமாக இருப்பினும் அனைத்தும் பரம்பொருளின் கருணைக்கு உட்பட்டதே. அவனின் திருத்தலங்களுக்குச் சென்று மனமுருகி வேண்டினாலே அனைத்தும் சித்திக்கும்.

எல்லாம் அவன் செயல்.

Pitru Dosham | Dosha Pariharam | Pariharam | பித்ரு தோஷம் | தோஷ பரிகாரம் | பரிகாரம் | 

கந்த சஷ்டி பிறந்த கதை - Skantha Sashti Story

கந்த சஷ்டி பிறந்த கதை - Skantha Sashti Story

அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கந்த சஷ்டி உருவான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

முருகன்
கஷ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்த பிள்ளைகள், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள், குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று, சிவனை நோக்கித் தவமிருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர்.

சூரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும், அசுரர்களின் பணியாளர்களாக மாறினர். தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர்.

‘சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும்’ என்றார் பிரம்மா.

தேவர்களும், கயிலாயம்சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து. ஆறுநெருப்புப் பொறிகளை உண்டாக்கினார்.

அவை சரவணப்பொய்கையில் விழுந்து, குழந்தைகளாக மாறின. அவற்றை ஒன்று சேர்த்த போது, கந்தன் ஆனார். இவர் சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களைக் காத்தார். ஐப்பசி சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக ஐதீகம்.

அதனால், கந்த சஷ்டியன்று, கோவில்கள் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.

டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்து - Side-Effects-of-Diapers

டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்து - Side-Effects-of-Diapers

டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை பற்றி இவர்கள் அறிவதில்லை. இங்கு குழந்தைகளுக்கு டயபர் ஏற்படுத்தும் ஆபத்துகளை பற்றி பார்க்கலாம்.



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்து
இப்போதையை தலைமுறையினர் குழந்தைகள் அசுத்தம் செய்துவிடுவார்களோ எனும் பயத்தால் குழந்தையை தூக்குவதே கிடையாது. இதை தவிர்க்க அவர்களுக்கு கிடைத்த புதிய வழி டயபர்களை உபயோகிப்பது. இவற்றை அகற்றி அப்புறபடுத்துவது எளிதான ஒன்று என கருதுவதால் இவற்றை உபயோகிறார்கள். ஆனால் டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை பற்றி இவர்கள் அறிவதில்லை. இங்கு குழந்தைகளுக்கு டயபர் ஏற்படுத்தும் ஆபத்துகளை பற்றி பார்க்கலாம். 

1 ஈரமான டயபரை கவனிக்காமல் அதிக நேரம் விட்டுவிட்டால், குழந்தைகளுக்கு பாக்டீரியா தொற்று, தடிப்புகள் மற்றும் புண் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

2 பிறந்த குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். குழந்தையின் மென்மையான உடலில் டயபரை உபயோகிப்பது அவர்களின் சருமத்திற்கு ஏற்றதல்ல.

3 டயபரில் ஈரத்தை உறிஞ்சுவதற்கென இரசாயனங்கள், ஜெல்கள் மற்றும் சில வேதிப்பொருட்களை கலப்பதால் அவை குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

4 குழந்தைகளுக்கு பயன்படுத்தும் உபயோகித்து தூக்கி எறிய கூடிய டயபர்கள், சோடியம் பாலியாகிரிலேட் பயன்படுத்தி செய்யப்படுகிறது. மேலும் இதில் நச்சு தன்மை கொண்ட உறிபஞ்சுகள் இருப்பதால், குழந்தைகளுக்கு சில வகையான தொற்று நோய் ஏற்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைகிறது.

5 குழந்தைகள் டயபரை ஈரம் செய்யும் போது, அதிலிருக்கும் மூலக்கூறுகள் ஈரப்பதத்தை வெளி விடாமல் தடுக்கும். இதனால், டயபர் வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும், அந்த சமயத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்றவை எளிதில் பரவி, குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

6 தூக்கி எறிய கூடிய டயபரில் இருந்து அதிக அழுத்தத்தில் ஆவியாக கூடிய இரசாயங்களான எத்தில் பென்சீன், சொலின், தைலின் போன்றவை இருப்பதால் குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

7 உபயோகித்து தூக்கி ஏறிய கூடிய டயபர்களில் பிளாஸ்டிக், பேப்பர் மற்றும் பேஸிஸ் போன்றவை இருப்பதால், இவை எளிதில் மாக்குவதில்லை. இவை சுற்று சூழலை பாதிக்க கூடியவை. இதனால் பெரியவர்களையும் இவை பாதிக்கின்றன.

8 இவற்றை உபயோகிப்பதால் குழந்தைகளின் கண், மூக்கு மற்றும் தொடையில் வலி ஏற்படுவதோடு, குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயமும் உள்ளது.

இவை விலை அதிகமாக இருந்தாலும், விளம்பரங்களால் பெற்றோர்கள் ஈர்க்கப்பட்டு எளிதில் அப்புற படுத்திவிடலாம் என உபயோகிக்க துவங்கி விடுகிறார்கள். இதற்கென அவர்கள் அதிக அளவில் பணம் செலவிட்டு குழந்தைகளுக்கு வாங்கி உபயோகிக்கிறார்கள். இவற்றை தவிர்க்க குழந்தைகளுக்கு துணிகளை பயன்படுத்துவது சிறந்தது. உங்களுக்கு வேலை அதிகம் என்று நினைத்தால், இவை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.  

கண்டாங்கி சேலைகள் - Kandangi Sarees

கண்டாங்கி சேலைகள் - Kandangi Sarees

இளம் பெண்களை கவர்ந்த கண்டாங்கி சேலைகள்


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

காஞ்சீபுரம் பட்டுச் சேலைகளை போலவே தமிழகத்தில் சிறப்புமிக்க காட்டன் சேலைகள் ஏராளமாக தயாராகிறது. அதில் காரைக்குடி காட்டன் கண்டாங்கி சேலைகளுக்கு பல தனித்துவங்கள் உண்டு.

கண்டாங்கி சேலைகள்
தமிழக பெண்களின் பாரம் பரிய ஆடையான சேலைகள் மிகவும் பிரசித்திப் பெற்றது. குறிப்பாக காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகைகள் உண்டு என்றால் அது மிகையல்ல.

காஞ்சீபுரம் பட்டுச் சேலைகளை போலவே தமிழகத்தில் சிறப்புமிக்க காட்டன் சேலைகள் ஏராளமாக தயாராகிறது. அதில் காரைக்குடி காட்டன் கண்டாங்கி சேலைகளுக்கு பல தனித்துவங்கள் உண்டு.


உறுத்தலற்ற எளிய நிறங்கள், பாரம்பரிய டிசைன்கள், உடம்பை வதைக்காத தரம், வெயிலுக்கும், குளிருக்கும் தகுந்த இதம், கசங்காக தன்மை என பல்வேறு தனித்தன்மைகளை கொண்ட கண்டாங்கி சேலைகள் சுமார் 250 ஆண்டுகள் பழமையானவை.

முதலில் செட்டிநாட்டை சேர்ந்தவர்களின் எண்ணத்தில் உதித்த வடிவத்தில் உரு வாக்கப்பட்டது. காரைக்குடியை சுற்றியுள்ள கிராமங் களில் இன்றளவும் கண்டாங்கி சேலை நெசவு உற்சா கமாக நடந்து வருகிறது.

இச்சேலைகளின் முக்கிய சிறப்பே, நெசவு செய்யும் அத்தனை பேரும் பெண்கள் என்பது தான். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் செட்டிநாட்டு ஆச்சிமார்கள் இந்த சேலைகளைத் தான் விரும்பி உடுத்துவார்கள். முன்பு பெரியவர்கள் மட்டும் உடுத்தி வந்த இச்சேலைகளை தற்போது சினிமா நடிகைகளும், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என பலரும் விரும்பி அணிகிறார்கள்.

கண்டாங்கி சேலைகளின் ஸ்பெஷலே பார்டர் தான். டைமண்ட், கொடி, இலை, ருத்ராட்சம், கோபுரம், அன்னப்பட்சி, தாமரைப்பூ, யானை, மயில் என பல உரு வங்களில் டிசைன்களாக வைத்து கண்டாங்கி சேலைகள் தயாரிக்கப்படுகின்றன.

பெண்களின் கெண்டைக் கால் பகுதியில் இந்த சேலையின் பார்டர் பளிச்சிடுவதால் தான் கண்டாங்கிச்சேலை என பெயர் வந்தததாக சொல்கிறார்கள். ரூ.500-ல் இருந்து கிடைக்கும் இந்த சேலைகள் இரண்டு பார்டர்கள் கொண்டவை. நடுவில் கட்டம் போட்டதாகவும், அமைந்துள்ளது. காரைக்குடியை மையமாகக் கொண்டு சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளுக்கு இந்த சேலைகள் அதிகமாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நகரத்தார் சமூகம் அதிகமாக பயன்படுத்தி வந்த சேலை தற்போது வெளிநாடுகள் வரை பிரபலம் அடைந்துள்ளது. வேறு எந்த சேலைகளிலும் இல்லாத வகையில் 48 இஞ்ச் அகலம் கொண்ட கண்டாங்கி சேலைகள் 5.5 மீட்டர் நீளம் கொண்டவை.

காரைக்குடி மட்டுமல்லாது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலும் இந்த சேலைகள் தயார் செய்யப்படுகிறது. மூன்று தலைமுறையினர் சுமார் 80 ஆண்டுகளுகளுக்கும் மேலாக இதனை தயாரித்து வருகிறார்கள்.

கண்டாங்கி சேலைகள்

இந்த சேலைகளுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்தது கூடுதல் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. புவிசார் குறியீடு கொடுப்பதால் மற்ற யாரும் அந்த பெயரை பயன்படுத்தி அந்தப் பொருளை விற்க முடியாது. உற்பத்தி செய்பவர்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கிறது.

கண்டாங்கி சேலைகளுக்க புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் இதனை கைத்தறி சேலை என்று கூறி பவர்லூம் சேலையை விற்பனை செய்ய முடியாது என்பதால் உண்மையான கைத்தறி நெசவாளர்களின் நிலை மேம்படும் சூழல் ஏற்பட்டிருப்பது நெசவாளர் களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

பொதுவாக அதிக கெமிக்கல் கொண்டு செய்யப்படும் சேலைகளுக்கு சில மணி நேரத்தில் நிறத்தை ஏற்றி விடலாம். ஆனால் கண்டாங்கி சேலையில் நிறம் ஏற்ற ஒரு வாரம் கூட ஆகும். ஆனால் கண்டாங்கி சேலைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாது. கண்டாங்கி சேலைக்கு முக்கிய மூலப்பொருளாக காரைக்குடி பகுதி தண்ணீரை கூறுகிறார்கள் அப்பகுதி நெசவாளர்கள்.

ஆரம்பத்தில் 1939&ம் ஆண்டுகளில் காரைக்குடி கண்டாங்கி சேலைகளை தயாரிக்க சுத்தமான 40 எண் ரக பருத்தி நூல்களைக் கொண்டே தயாரித்திருக்கிறார்கள். கட்டினால் கம்பீரமான தோற்றப்பொலிவு தரும் இவ்வகை சேலைகளை ரசாயன கலப்பன்றி உற்பத்தி செய்ய நாளடைவில் 60 எண் ரகத்தினைத் தாண்டி, 80 எண் ரக வகையான தூய பருத்தி நூல்களைக் கொண்டு தயாரிக்க இச்சேலைகள் இன்றைய இளைய தலைமுறை பெண்களுக்கும் பிடித்துப் போய் விட்டது.
முதலில் தங் களுக்கு தேவையான நூல்களை கொள்முதல் செய்து அதன்பின் சாதம் வடித்த தண்ணீரில் ஊற வைத்து நிறமிட்டு புணைந்து நெய்ய அனுப்புவார்கள்.

நூல் கொடுக்க, பிசிறுகளை சுத்தம் செய்ய, கட்டை மாட்டிவிட என குறைந்தது 3 நபர்கள் இருந்தால் தான் ஒரு புடவையை நெய்ய முடியும் என்கின்றனர் உற்பத்தி யாளர்கள். எக் காலத்திலும் நிறம் மங்காததும், அணிவதற்கு எளிதானதுமாக விளங்கும் இச்சேலைகள் அணிந்தவர்களுக்கு சிறப்பு தோற்றத்தை தருகிறது என பெண்கள் கூறுகிறார்கள்.

தூய பருத்தி என்பதால் எளிதில் வியர்வை ஊறிஞ்சி சருமத்தினை பாதுகாக்கும் என்பது தான் இதனுடைய வெற்றிக்கான மூலமந்திரம்.

ரசாயன கலப்பில்லாதவை

கண்டாங்கி சேலைகள் உற்பத்தி தொடங்கிய நாட்களில் செட்டிநாட்டில் உள்ள ஆச்சிமார்கள் விரும்பி அணிய செட்டிநாட்டு பருத்தி சேலை என்றே அழைக்கப்பட்டது. பின்னர் நகரத்தாரின் சொல்வண்ணத்தால் இது கண்டாங்கி சேலையானது. எனினும் 1980&களில் மீண்டும் செட்டிநாட்டு பருத்திச்சேலை என்றே அழைக்கப்பட்டது என்கின்றனர் உற்பத்தியாளர்கள். சேலையின் நடுவில் புட்டா டிசைன், கம்பி டிசைன், கோபுர டிசைன் மற்றும் மாங்காய் டிசைன் என போட்டு பெண்களை கவர்ந்த சிலை அதே தரத்துடன் போல்ட் மற்றும் ஸ்டிரைப்ஸ் என கூகுள், பேஷன் டெக்னாலஜியின் உதவியுடன் மாறினாலும், இரண்டு பக்க பார்டர் மாறாததால் மறுபடியும் கண்டாங்கி என்றே மாறி உள்ளது.

இந்திய சேலைகள் தயாரிப்பால் அதிகம் ரசாயனம் கலக்கப்படுவதால் இதனை வெளிநாட்டவர்கள் அதிகமாக இறக்குமதி செய்ய தயங்குகின்றனர். இதை கருத்தில் கொண்டு கண்டாங்கி சேலைகள் ரசாயன கலப்பின்றி இயற்கை வண்ணம் மற்றும் பசை பொருட்களை பயன்படுத்தி நெய்கின்றனர்.
நயன்தாரா முதல் நாட்டு நடும் கிராமத்து மூதாட்டி வரை கண்டாங்கி சேலை கட்டினால் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பச்சை, நீலம், மாம்பழம் மஞ்சள், பிரவுண், சிவப்பு போன்ற அடர்த்தியான வண்ணங்களில் அகலமான சரிகை பார்டர் வைத்த இந்த சேலைகள் எல்லா காலத்துக்கும் ஏற்றவை.

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் - Dengue Fever Control Tips

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் - Dengue Fever Control Tips


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி. டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்...
டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ்களால் உருவாகிறது. டெங்கு காய்ச்சல் வைரஸ்கள் நான்கு வகைகளை உடையது. டென்வி-1, டென்வி-2, டென்வி-3 மற்றும் டென்வி-4 வகை வைரஸ்கள் மனிதனை தாக்கி டெங்கு காய்ச்சலை உருவாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் ஏடிஸ் வகை கொசுக்கள் பலவற்றினால் பரப்பப்படும். குறிப்பாக ஏடிஸ் ஈஸிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் சாதாரண காய்ச்சலுடன் இருக்கும். நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சராசரியாக 3 முதல் 14 நாட்கள் பிடிக்கும். ஆனால், பெரும்பாலும் 4 முதல் 7 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்றும். குழந்தைகளுக்கு சாதாரணமாக தோன்றும் ஜலதோஷம், வாந்தி, பேதியுடன் அறிகுறிகள் தொடங்கும். பெரியவர்களுடைய அறிகுறியை விட குறைவாக குழந்தைகளுக்கு தோன்றும் நோய்தாக்கம், பின்னர் அதிபயங்கர நோய் தாக்குதலுக்கு உள்ளாக்கும்.


நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் 20 சதவீதத்தினர்களுக்கு நோய் அறிகுறியான, அதிவிரைவு காய்ச்சல், கண்ணிற்கு பின்னால் வலி, தசை வலி மற்றும் தோலில் தடிப்புகள் உருவாகும். நோய் உடலில் தங்கும் நேரத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவம், அபாயகரமான பருவம் மற்றும் மீழும் பருவம் என பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்தில் பயங்கர காய்ச்சலோடு ஆரம்பிக்கும் நோயானது அதிகபடியான உடல் வலியையும், தலைவலியையும் குறைந்தது 2 முதல் 7 நாட்களுக்கு கொடுக்கும். இந்த நேரத்தில் 50 முதல் 80 சதவீத நோயாளிகளுக்கு தோல் தடித்து பின் தோலில் ஏற்படும் தடிப்புகள்போல் உருவாகும். சிலருக்கு லேசான ரத்தப்போக்கு வாயிலும், மூக்கிலும் ஏற்படலாம்.

நோய் அபாயகரமான கட்டத்திற்கு செல்லும் போது ரத்த நாளங்களும், சிறு நரம்புகளின் சுவர்களும் பலவீனமடைந்து இவற்றிலிருந்து திரவங்கள் நெஞ்சு கூட்டிற்கும், வயிற்றிற்குள்ளும் வந்து சேரும். இதனால் ரத்தத்தில் நீரின் அளவு குறையும், முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவும் குறைவுபடும். இதனால் இந்தக்கட்டத்தில் உறுப்புகள் செயலிழப்பதும், அதிக ரத்தப்போக்குகளும் குறிப்பாக குடல் பகுதிகளில் ஏற்படும். நோயிலிருந்து மீழும் கட்டத்தில் ரத்த நாளங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரானது மீண்டும் நாளங்களுக்குள் உள்ளிழுக்கப்படும். இந்த நிகழ்வுகள் 2 முதல் 3 நாட்களுக்கு நடைபெறலாம். இந்நிகழ்வு பயங்கர உறுத்துதல்களையும, இதயத் துடிப்பை குறைக்கவும் செய்யும்.

சில நேரங்களில் ரத்த நாளங்களில் அதிகப்படியான நீர்சேர்க்கை உருவாகும். இதனால் மூளை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் 67 சதவீத சுயநினைவிழப்பு ஏற்படும். இதை தொடர்ந்து இதய தொற்றுகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறாக இந்நோய் பாதிப்புகள் இரண்டு வகையான பாதிப்பை உருவாக்கும் ஒன்று மரணத்தை ஏற்படுத்தும் டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சல். இவை அதிக ரத்தப் போக்கையும், ரத்த தட்டையணுக்களையும், ரத்தத் திரவங்களையும் குறைவுபடச் செய்யும். இரண்டாம் வகை டெங்கு, ஷாக் அறிகுறியை உருவாக்கி இதயத்துடிப்பை வெகுவாக குறைத்து அபாயக் கட்டத்தை அடையச் செய்யும்.

டெங்கு வைரஸ்களை தாங்கி வரும் ஏடிஸ் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது அதன் எச்சிலோடு வைரஸ் கிருமிகள் மனித தோல்களுக்குள் உட்புகும். இந்த வைரஸ் கிருமிகள் பின்னர் தந்திரமாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்த வெள்ளை அணுவுக்குள் நுழைந்து, தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உடலில் உலாவரும். இந்த ரத்த வெள்ளையணுக்கள் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தன்னுள் இருக்கும் வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கும்.

இந்த செல்கள் வைரஸ்களை அழிக்கும் “இன்டர்பெரான்” எனும் பொருள்களை உடலில் உருவாக்க சமிக்ஞைகளை வெளியிடும். இதன் மூலம் உடலில் அதிகபடியான இன்டர்பெரான் எனும் புரத பொருள்கள் உருவாகும். இதனால், உடல் வெப்பம் மிக விரைவாக அதிகரிக்கும், உடல் வலியையும் உருவாக்கும். அதே சமயம் வைரஸ்களும் முடிந்தவரை தன் இனத்தைப் பெருக்க முயற்சியெடுக்கும். இதனால், எலும்பு மஜ்ஜைகளும், கல்லீரலும் பாதிப்படையும். இதனால், ரத்தத்தை உறையவைக்கும் தட்டையணுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். விளைவுரத்த நாளங்களின் துவாரங்கள் வழியாக திரவங்கள் வெளியேறி மேலே குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படும்.

பகல் நேரங்களில் கடிக்கும் தன்மையுடைய இக்கொசுக்கள் ஒரு கடி மூலம் நோய்களை உருவாக்கும் சக்தியுடையது. பெண் கொசுக்கள் நோய் தாக்கிய மனிதர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது வைரஸ் கிருமிகள் கொசுவின் உடலுக்குள் செல்கின்றன. பின் கொசுக்களின் குடல் சுவரில் 8 முதல் 10 நாள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும், பின்னர் கொசுக்களின் பிற உடல் உறுப்புகளுக்குள் செல்லும், பின்னர் கொசுவின் எச்சில் வழியாக வெளிப்பட்டு பிறரை கடிக்கும்போது அந்த மனிதர்களுக்குள் செல்லும். இந்த வைரஸ் கொசுக்களுக்கு எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது. டெங்கு கொசுக்கள் மனிதர்கள் வாழும் பகுதிகளின் மிக அருகிலுள்ள நல்ல தண்ணீர்தேக்கங்களில் முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும்.

இந்நோயை கண்டறிவது எளிதான காரியமில்லை, சாதாரணமாக வெள்ளையணுக்கள் எண்ணிக்கை, தட்டையணுக்கள் எண்ணிக்கையை வைத்து டெங்கு காய்ச்சலைக் கண்டறிவது சரியான வழிமுறையில்லை. ஏனென்றால், பல நோய்களுக்கு இவற்றின் எண்ணிக்கை குறைவுபடலாம். டெங்கு காய்ச்சலை சரியாக கண்டறிய, உடலிலுள்ள வைரஸ்களை வளர்த்தெடுக்கும் முறையையோ, வைரஸ் பி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டறியும் பி.சி.ஆர் முறையையோ, வைரஸ் புரதங்களைக் கண்டறியும் முறையையோ அல்லது வைரஸ் நோய்களின் தொற்றுகளால் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்களைக் கண்டறியும் முறையையோ பயன்படுத்தலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி. இந்நோயை பரப்பும் கொசுக்கள் நன்னீரில் வளருவதால் வீட்டின் உள்ளேயும், அருகேயும் தண்ணீர்தேங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கொசுக்கள் பகல் வேளைகளில் கடிப்பதால் அந்த நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கை, கால்களை மறைக்கும் உடைகளை உடுக்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அந்த வீடுகளில் டெங்கு வைரஸ் தாங்கிய கொசுக்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

சோயா பீன்ஸ் சுண்டல் - Soya-Beans-Sundal

சோயா பீன்ஸ் சுண்டல் - Soya-Beans-Sundal
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றும் சோயா பீன்ஸ் சுண்டல்



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றும் சோயா பீன்ஸ் சத்தானதும் சுவையானது. இன்று சோயா பீன்ஸ் சுண்டல் செய்முறையை பார்க்கலாம்.

சோயா பீன்ஸ் சுண்டல்
தேவையான பொருட்கள்

வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் - 1/2 கப்

 துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்  - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து

சோயா பீன்ஸ் சுண்டல்

செய்முறை

சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும்.

ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.

Sundal | Healthy Recipes | Recipes | Veg Recipes | சுண்டல் | சைவம் | ஆரோக்கிய சமையல் | 

தினை முறுக்கு - Millet-murukku.

தினை முறுக்கு - Millet-murukku.
தீபாவளி ஸ்பெஷல்: தினை முறுக்கு - Millet-murukku.


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

சிறுதானியங்களில் செய்யப்படும் நொறுக்குத் தீனிகள் உடலுக்கு நன்மை பயப்பதோடு உடல் எடை கூடுவதையும் தடுக்கும். இன்று தீபாவளி ஸ்பெஷல் தினை முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முறுக்கு
தேவையான பொருட்கள்

தினை - 2 கப் (வறுத்தது)

 பொட்டுக்கடலை - 2/3 கப் (வறுத்தது)
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - ¼ தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
கருப்பு எள் - 1 தேக்கரண்டி
காய்ச்சிய வெண்ணெய் - ¼ கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

முறுக்கு

செய்முறை

தினையையும், பொட்டுக்கடலையையும் தனித்தனியாக வாணலியில் இட்டு வறுத்தெடுத்துப் பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இரண்டையும் கலந்து அவற்றுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், ஓமம், கருப்பு எள் இவற்றையும் சேர்த்து கலக்கி அவற்றுடன் காய்ச்சிய வெண்ணையையும் சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீர் கலந்து முறுக்கு மாவை மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இல்லாத பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் முறுக்குகளை பொரித்தெடுக்கலாம்.

வெண்ணெய் மற்றும் பொட்டுக்கடலை மாவு அதிகமானால் முறுக்கு சரியாக வராமல் பிரிந்து போகக்கூடும். அதுபோன்ற சமையங்களில் அதிகப்படியாக வைத்திருக்கும் தினை மாவைக் கலந்து கொண்டால் முறுக்கு மொறு மொறுப்பாக வரும்.

சூப்பரான தினை முறுக்கு ரெடி.

Millets Recipes | Recipes | Fry Recipes | Snacks | ஸ்நாக்ஸ் | சிறுதானிய சமையல் | சைவம் | பிரை |

காடை முட்டை குழம்பு - Kaadai Egg Curry.

காடை முட்டை குழம்பு - Kaadai Egg Curry.
kadai-egg-curry.
சூப்பரான காடை முட்டை குழம்பு



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

காடை முட்டை குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா. சூப்பரான இருக்கும். இன்று காடை முட்டையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காடை முட்டை குழம்பு
தேவையான பொருட்கள் :

காடை முட்டை - 20

 எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
கரம்மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
நீர் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
காடை முட்டை


செய்முறை :

தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காடை முட்டையை வேக வைத்து கொள்ளவும். அவற்றை குளிர்ந்த நீரில் கழுவி அதன் ஓடுகளை உடைத்து தனியே வைக்கவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்

மசாலா வாசனை போனவுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்

அடுத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் காடை முட்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

காடை முட்டை குழம்பு ரெடி!!

kadai egg curry | Non Veg Recipes | Recipes | Kulambu | Egg Recipes | அசைவம் | முட்டை சமையல் | குழம்பு |