Showing posts with label சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு மருந்துகள். Show all posts
Showing posts with label சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு மருந்துகள். Show all posts

சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு மருந்துகள்

சித்த மருத்துவத்தில் சில முக்கிய நோய்களுக்கு மருந்துகள்!!!
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க:
முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும்.

அம்மை நோய் தடுக்க:
10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது.

குஷ்டநோய் குணமாக:
வல்லாரை இலையை பொடி செய்து மூன்று வேளை வெண்ணையுடன் கலந்து ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர முழு குண ஆகும்.

சர்க்கரை நோய்:
ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய், தான்றிக்காய், சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு நீராகாரம் குடித்து வந்தால் யானைக்கால் நோ வராது.

மஞ்சள் காமாலை நோய் குணமாக;:
வாழை தண்டை உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.

இரத்தம் விருத்தியாக:
செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் விருத்தியாகும்.

உடல் வலி குணமாக:
வில்வ இலையும், அருகம் புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.