Showing posts with label தீர்த்தம் குடிக்கும் நோக்கம்!. Show all posts
Showing posts with label தீர்த்தம் குடிக்கும் நோக்கம்!. Show all posts

தீர்த்தம் குடிக்கும் நோக்கம்!

தீர்த்தம் குடிக்கும் நோக்கம்!

பெருமாள் கோவில் தரிசனத்தின் போது பக்தர்களுக்கு துளசி, தீர்த்தம், சடாரி வழங்கப்படும். இதில் தீர்த்தம் உத்தரணியில் (கரண்டி) மூன்றுமுறை தரப்படும். இதற்குரிய காரணத்தை 'த்ரி பிபேத் த்ரிவிதம் பாபம் தஸ்யேஹாஸு விநச்யதி' என்று 'ஸ்மிருதி வாக்யம்' விவரிக்கிறது.

'எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ஒருவர் செய்த பாவம் நீங்கி தூய்மை பெற வேண்டும்' என்பது இதன் பொருள்.

வைதீக முறைப்படி வீட்டிலோ, கோவிலிலோ கலசம் (குடம்) வைத்து பூஜித்து வழங்கப்படும் தீர்த்தத்திற்கும் இந்த விதி பொருந்தும்.