Showing posts with label தேங்காய் சேர்த்த இறால் குழம்பு. Show all posts
Showing posts with label தேங்காய் சேர்த்த இறால் குழம்பு. Show all posts

தேங்காய் சேர்த்த இறால் குழம்பு

தேங்காய் சேர்த்த இறால் குழம்பு
prawn-kuzhambu-added Cocunut


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


இட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் தேங்காய் சேர்த்த இறால் குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இறால் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
கறிவேப்பிலை - மூன்று கொத்து
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் -  தேவையான அளவு
சீரகம் - கால் டீ ஸ்பூன்

செய்முறை :

இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்க வேண்டும்.

சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் இறாலை சேர்க்க வேண்டும்.

இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

சூப்பரான தேங்காய் சேர்த்த இறால் குழம்பு ரெடி.