Showing posts with label ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள். Show all posts
Showing posts with label ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள். Show all posts

ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள்

ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள்


ஓம் நமச்சிவாய நமஹ என்று 1001 முறை ஜபித்தப் பின்னரே,நாகலிங்கப் பூவைத் தொடும் அருகதை நமக்கு வருகின்றது;

அதே போல,நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாத்தவேண்டும் என்று விரும்பினால்,21 சாதுக்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும்;அதன் பிறகு தான் நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாத்தவேண்டும்;இப்படி முறைப்படி செய்தால் மட்டுமே நாகலிங்கப் பூவை ஈசனுக்கு அணிவித்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;

நாகலிங்கப் பூவின் மேல் பகுதியில் கோடி கன்னிகா தான சக்தியைக் கொண்டிருக்கின்றது;
நாகலிங்கப்பூவின் நடுப்பகுதி 10,000 கோவில்களின் கோபுரசக்தியைச் சேர்ந்தது;
நாகலிங்கப்பூவின் அடிப்பகுதி கோவில் குளம் வெட்டிய சக்தியைக் கொண்டிருக்கிறது;
நாகலிங்கப்பூவின் நடுவில் சிறியதாக ஒரு சிவலிங்கம் இருக்கும்;இதற்கு ஆத்மலிங்கம் என்று பெயர்;இத்தனை சிறப்புடைய நாகலிங்கப்பூவை மேலே கூறிய விதத்தில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்குப் புண்ணியம் கிட்டும்;

நாகலிங்கப் பூ உருவான வரலாறு 8,00,000 ஆண்டுகளைக் கொண்டது;விரிவான விளக்கம் பெற “அஷ்ட திக்கு பாலகர்கள் மகிமை-பாகம் 6”(ஏற்றம் தரும் எட்டு திக்குகள்) என்ற நூலை வாங்கி வாசிக்கவும்;வெளியீடு ஸ்ரீ ல ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம்,திரு அண்ணாமலை விலை ரூ.20/-

சித்தர்களின் தலைவர் அகத்தியரும்,அவரின் சீடர் போகரும் உரையாடுவது போல வடிவமைக்கப்பட்டிருக்கின்றது;இக்கருத்துக்கள் இந்த நூலில் இருந்து நன்றியோடு வெளியிடப்படுகின்றது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ