தந்தூரி சிக்கன் பிரியாணி - Tandoori Chicken Biryani.

தந்தூரி சிக்கன் பிரியாணி - Tandoori Chicken Biryani.
தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
                                             https://rupeedeskshares.blogspot.com
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

தந்தூரி சிக்கன் பிரியாணி
சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க தேவைப்படும் பொருட்கள் :

தயிர் - ஒரு கப்

 பூண்டு - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிது
பச்சைமிளகாய் - 2
லவங்கம் - 4
எலுமிச்சை - பாதி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

பிரியாணிக்கு தேவையான பொருட்கள்:

அரிசி - அரை கிலோ (ஊறவைக்கவும்)
சிக்கன் லெக்பீஸ் - 8
வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா 2

தந்தூரி சிக்கன் பிரியாணி

செய்முறை

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வதற்கு முதலில் சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

சிக்கனை சுத்தம் செய்த பின் அரைத்த கலவையை சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

சிக்கன் நன்றாக ஊறியதும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் சிக்கனை முக்கால் பதம் வேகும் வரை பொரித்து எடுக்கவும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா தூளை போட்டு நன்றாக கிளறிவிடவும்.

அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்துள்ள அரிசியை அவற்றில் கலந்து எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.

அடுத்து அதில் பொரித்த சிக்கனை போட்டு 15 நிமிடம் தம்மில் போடவேண்டும்.

அரைமணி நேரம் கழித்து பாத்திரத்தை திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி ரெடி.

Biryani | Variety Rice | Recipes | பிரியாணி | வெரைட்டி சாதம் | அசைவம் | சிக்கன் சமையல் |