சோளிங்கர் பெரியமலையில் தீர்த்தம்

சோளிங்கர் பெரியமலையில் தீர்த்தம்
yoga-narasimha-worship.
முகத்தில் தீர்த்தம் பட்டால் புத்துணர்ச்சி பெருகும்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சோளிங்கர் பெரியமலையில் மூலவர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை சிறப்புக் கட்டணம் செலுத்தி வழிபடுபவர்களுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் ஒரு பாக்கியம் கிடைக்கிறது.

சோளிங்கர் பெரியமலையில் மூலவர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை சிறப்புக் கட்டணம் செலுத்தி வழிபடுபவர்களுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் ஒரு பாக்கியம் கிடைக்கிறது. நரசிம்மருக்கு தீபாரதணை காட்டி தீர்த்தம் தந்த பிறகு அர்ச்சகர் பக்தர்களின் முகத்தில் சிறப்பு தீர்த்தம் ஒன்றை தெளிப்பார். நரசிம்மரின் காலடியில் பெரிய தாம்பள தட்டுகளில் உள்ள பெரிய கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும் தீர்த்தத்தையே பக்தர்கள் முகத்தில் தெளித்து சிறப்பு செய்கிறார்கள். 2 அல்லது 3 தடவை முகத்தில் தீர்த்தம் தெளிக்கப்படுகிறது.

நரசிம்மரின் பரிபூரண அருள் பெற்றுள்ள அந்த தீர்த்தத்தை கையாலோ அல்லது துணியோலோ துடைக்ககூடாது. புதிதாக சோளிங்கர் ஆலயத்துக்கு செல்பவர்களுக்கு இந்த குறிப்பை அர்ச்சகர்கள் சொல்லி விடுகிறார்கள். எனவே அர்ச்சகர் தெளிக்கும் தீர்த்தத்தை யாரும் துடைப்பதில்லை.

 புனிதமான இந்த தீர்த்தம் முகத்தில் பட்ட மறு வினாடியே பக்தர்கள் முகம்‘பளிச்’ சென புத்துணர்ச்சி பெற்று விடுகிறது. கண்திருஷ்டி, பீடை, பில்லி, சூனியம் எது இருந்தாலும் தீர்த்தம் பெற்ற மனுவினாடியே அவையெல்லாம் பஞ்சாக பறந்தோடி ஓடி விடுகின்றன.

1350 படிக்கட்டுகள் ஏறி வந்த களைப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறது. எனவே பெரிய மலைக்கு சென்று ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை வழிபட்டதும் அர்ச்சகர் தெளிக்கும் தீர்த்தத்தை பெறத் தவறாதீர்கள்.