கேரட் - முந்திரி அடை

 கேரட் - முந்திரி அடை

குழந்தைகளுக்கு சத்தான கேரட் - முந்திரி அடை

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைகளுக்கு தினமும் கேரட், முந்திரி கொடுப்பது உடலுக்கு நல்லது. இன்று கேரட், முந்திரி வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1 கப்

 கடலை பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 3
அரிசி - 2 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் துருவல் - கால் கப்
முந்திரி - தேவையான அளவு
நெய் - தேவைக்கு



செய்முறை :

முந்திரி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை நீரில் 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

ஊறவைத்த பருப்பு, அரிசியை மிக்சியில் போட்டு பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவில் உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து சற்று தடிமனாக ஊற்றி அதன் மேல் நறுக்கிய முந்திரியை தூவி கைகளால் அழுத்தி விட்டு சுற்றி நெய் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

சத்து நிறைந்த கேரட் - முந்திரி அடை ரெடி.