குழந்தைகளை பாதிக்கும் ஆஸ்துமா -Asthma-affects-children

குழந்தைகளை பாதிக்கும் ஆஸ்துமா -Asthma-affects-children
Asthma-affects-children
குழந்தைகளை பாதிக்கும் ஆஸ்துமா
Asthma-affects-children

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஆஸ்துமா பாதிப்பு பெரியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், 5 முதல் 10 சதவிகிதம் வரை குழந்தைகளையும் ஆஸ்துமா பாதிக்கிறது.

‘‘சுற்றுச்சூழல் மாசு, பரம்பரை ரீதியான காரணங்களால் பொதுவாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இதே காரணங்களால் குழந்தைகளுக்கும் ஆஸ்துமா உண்டாகலாம். கிராமத்தைவிட நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு இந்த சாத்தியம் இன்னும் அதிகம். பல பெற்றோர் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை. உடனே வேறு மருத்துவர், வேறு சிகிச்சை என்று மாற்று வழிகளைத் தேடுகிறார்கள்.

அப்படியே ஆஸ்துமாவை ஏற்றுக்கொண்டாலும் இன்ஹேலர் வைக்க வேண்டும் என்று சொன்னாலோ, நெபுலைஸர் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னாலோ கேட்பதில்லை. பெற்றோரின் அறியாமையால் கடைசியில் குழந்தைதான் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளிடம் ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுப் பொருட்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.


‘‘நிறம், மணம், சுவை கிடைப்பதற்காக, உணவைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களால் குடல் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். இந்த வேதிப் பொருட்களால் மூச்சுக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டு ஆஸ்துமா உண்டாவதற்கும் 5 சதவிகித வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமாக இருக்கும் குழந்தை திடீரென்று மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவதற்கு உணவுப் பொருட்களே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக ஐஸ்க்ரீம் வகைகள், குளிர்பானங்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு உணவுகளில் இந்த வாய்ப்பு அதிகம். சில குழந்தைகளுக்கு இயற்கை உணவுகளே ஆஸ்துமாவை உண்டாக்குகின்றன.

அதனால், குழந்தைகள் இருமலால் அவதிப்பட்டால் சமீபத்தில் குழந்தை என்ன சாப்பிட்டது என்பதை பெற்றோர் கவனித்து, குறிப்பிட்ட உணவை அதன்பிறகு தவிர்க்க வேண்டும். காய்ச்சல் இல்லாமலே சளி ஏற்படுவது, இருமலுடன் வாந்தி, 10 நாட்கள் வரை சளித் தொல்லையால் குழந்தை அவதிப்படுவது போன்றவை ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது அவசியம்.