ஜவ்வரிசி போண்டா - Sabudana Bonda.

ஜவ்வரிசி போண்டா - Sabudana Bonda.
சூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி போண்டா


        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஜவ்வரிசியில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஜவ்வரிசி, காய்கறிகள் சேர்த்து சூப்பரான ஸ்நாக்ஸ் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - ஒரு கப்

 உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 5
கேரட், கோஸ் - தலா ஒரு கைப்பிடி
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

கேரட், கோஸை துருவிக்கொள்ளவும்.

இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஜவ்வரிசியை நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஊறவையுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசியை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், காய்கறித் துருவல், உப்பு, புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

இந்தக் கலவையைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து,வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்த உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

சூப்பரான ஜவ்வரிசி போண்டா ரெடி.

கடாய் சிக்கன் - Kadaai-Chicken.

கடாய் சிக்கன் - Kadaai-Chicken.

கடாய் சிக்கன் செய்வது எப்படி?
Kadai-Chicken.

இங்கு கடாய் சிக்கன் செய்வது எப்படி என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை விடுமுறை நாட்களில் முயற்சித்து, சாப்பிட்டு மகிழுங்கள்.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ

 வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பட்டை - 1
பச்சை ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பிரியாணி இலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

ஊற வைப்பதற்கு...

தயிர் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்

செய்முறை:

சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குடைமிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் மற்றும் தக்காளியை போட்டு உப்பு சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி இறக்கி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள், சீரகப் பொடி, பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின்னர் அரைத்த தக்காளியை ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள சிக்கனை அத்துடன் சேர்த்து, தீயை அதிகரித்து 10 நிமிடம் பிரட்டி விட்டு வேக வைக்க வேண்டும்.

சிக்கனில் உள்ள நீரானது முற்றிலும் வற்றியதும், தீயை குறைத்து, அதில் கரம் மசாலா சேர்த்து கிளறிய பின்னர் வதக்கிய குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், வாணலியை இறக்கி, அதன் மேல் பிரஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், கடாய் சிக்கன் ரெடி!!!

உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட் - Potato Pepper Roast

உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட் - Potato Pepper Roast

சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட்
Potato-Pepper-Roast

பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கை கொண்டு, அற்புதமான சுவையில் உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட் செய்து, சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 250 கிராம்

 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கு வெந்ததும் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

அடுத்து அதில் உப்பு சேர்த்து, தீயை குறைத்து பொன்னிறமாகும் வரை கிளறவும்.

கடைசியாக மிளகுத் தூளைத் தூவி பிரட்டி இறக்கினால், உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட் ரெடி!!!

கருணைக்கிழங்கு புளிக்குழம்பு - Karunai kilangu kulambu.

கருணைக்கிழங்கு புளிக்குழம்பு - Karunai kilangu kulambu.
அருமையான கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
karunai-kilangu-kulambu.

சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சூப்பரான இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ

 தேங்காய் பால் - 2 டம்ளர்
புளி - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சாம்பார் பொடி - தேவையான அளவு
கடுகு, உளுந்து - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

கருணைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர், புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

கொதிக்கும் புளிக்கரைசலில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய கருணைக்கிழங்கு துண்டுகளையும் போட்டு நன்றாக வேகவிடவும்.

பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

சூப்பரான கருணைக்கிழங்கு புளிக்குழம்பு.

ரவா ரோஸ்ட் - Rava Roast

ரவா ரோஸ்ட் - Rava Roast
வீட்டிலேயே செய்யலாம் ரவா ரோஸ்ட்
rava-roast

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஹோட்டலில் ரவா ரோஸ்ட் செய்வது போலவே வீட்டிலேயும் எளிய முறையில் செய்யலாம். இன்று வீட்டில் ரவா ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ரவை - 1 கப்

 அரிசி மாவு - 1 1/2 கப்
மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன்
கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
பச்சைமிளகாய் - 5
முந்திரி - 15

செய்முறை :

கொத்தமல்லி, முந்திரி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும். மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.

சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான ரவா ரோஸ்ட் ரெடி.

மட்டன் கீமா சமோசா - Mutton Keema Samosa

மட்டன் கீமா சமோசா - Mutton Keema Samosa
சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் கீமா சமோசா
mutton-keema-samosa

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மாலையில் காபி, டீயுடன் சாப்பிட சமோசா அருமையாக இருக்கும். இன்று மட்டன் கீமாவை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
மட்டன் கீமா - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
புதினா  இலை - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
நெய் - 3 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1 பெரியது
கரம் மசாலா - 1 தேக்கரண்டி

செய்முறை

வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மட்டன் கீமாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடரை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1 மணிநேரம் அப்படியே மூடி வைக்கவும்.

பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் கரம்மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

அடுத்து அதில் மட்டன் கீமாவை சேர்த்து வதக்கவும்.

கீமாவில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றும் வரை வதக்கிய பின்னர் இறக்கி ஆறவிடவும்.

மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும்.

வட்டங்களை கோன் வடிவமாக செய்து அதில் மட்டன் கீமா கலவையை வைத்து மூடவும். அனைத்து மாவிலும் இவ்வாறு செய்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் கீமா சமோசா ரெடி.

சிக்கன் கீமா பொடிமாஸ் - Chicken Podimas

சிக்கன் கீமா பொடிமாஸ் - Chicken Podimas
சூப்பரான சிக்கன் கீமா பொடிமாஸ்
Chicken-Podimas
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனில் சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்

 வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - கால் டீஸ்பூன்



செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து அதில் சிக்கன், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். சிக்கனில் உள்ள தண்ணீரில் சிக்கன் வேக வேண்டும். சிக்கனில் தண்ணீர் எல்லாம் வற்றியதும் சிக்கனை மிக்சியில் போட்டு உதிரியாக அரைத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானது சோம்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த சிக்கனை போட்டு வதக்கவும்.

சிக்கனில் நன்றாக மசாலா சேர்ந்து உதிரியாக வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சிக்கன் கீமா பொடிமாஸ் ரெடி. 

கேரட் ஊறுகாய் - Carrot Pickle.

கேரட் ஊறுகாய் - Carrot Pickle.
கேரட் ஊறுகாய் செய்வது எப்படி?
carrot-pickle.

கேரட்டில் கூட்டு, பொரியல் செய்து இருப்பீங்க. இன்று கேரட்டை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஊறுகாய் தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

கேரட் - கால் கிலோ

 எலுமிச்சை பழம் - ஐந்து
பச்சை மிளகாய் - பத்து
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி
கடுகு - ஒரு தேகரண்டி
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை பெரிய பல் உள்ள துருவலில் துருவிக்கொள்ளவும்.

எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.

சூப்பரான உடனடி கேரட் ஊறுகாய் ரெடி.

குறிப்பு : விரும்பினால் கேரட்டை நீளமான துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளலாம். 

புதினா பன்னீர் புலாவ் - Mint Paneer Pulao.

புதினா பன்னீர் புலாவ் - Mint Paneer Pulao.
சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ்
mint-paneer-pulao.

குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர், புதினா சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்
பன்னீர் - 200 கிராம்
புதினா - 1 கட்டு
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்

செய்முறை :

பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

தற்போது சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ் ரெடி.

வெந்தயக்கீரை சாம்பார் - Methi Keerai Sambar.

வெந்தயக்கீரை சாம்பார் - Methi Keerai Sambar.
சாதத்திற்கு அருமையான வெந்தயக்கீரை சாம்பார்
methi-keerai-sambar.

வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். இன்று வெந்தயக்கீரையை சேர்த்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

வெந்தயக்கீரை - 2 சிறுகட்டு,
துவரம்பருப்பு - ஒரு கப்,
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.

வாணலியில் கரைத்த புளியை ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிடவும்.

அடுத்து அதில் வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

சூப்பரான வெந்தயக்கீரை சாம்பார் ரெடி.

இறால் முட்டை பொடிமாஸ் - Prawn Egg Podimas

இறால் முட்டை பொடிமாஸ் - Prawn Egg Podimas
குழந்தைகளுக்கு விருப்பமான இறால் முட்டை பொடிமாஸ்
prawn-egg-podimas

குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முட்டை சேர்த்து சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

இறால் - 100 கிராம்

 முட்டை - 2
வெங்காயம் - 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
உப்பு - 1/2 ஸ்பூன்,
வெங்காயத்தாள் - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும்.

வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.

வெள்ளரிக்காய் கூட்டு - Cucumber Kootu.

வெள்ளரிக்காய் கூட்டு - Cucumber Kootu.

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய் கூட்டு
cucumber-kootu.


     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வெள்ளிக்காயை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று வெள்ளிக்காயில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த கூட்டு சூடான சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் - 1

 துவரம்பருப்பு - கால் கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
பால் - கால் கப்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
சி.வெங்காயம் - 5
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பருப்பை வேகவைத்துக்கொள்ளுங்கள்.

சீரகம், ப.மிளகாய், சி.வெங்காயம், தேங்காய் துருவல் ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி பால் சேர்த்து வேக வைத்துக்கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காய் நன்கு வெந்ததும் அதனுடன் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள்.

நன்கு கொதித்து வரும்போது அரைத்த தேங்காய் விழுதை கொட்டி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெள்ளரிக்காய் கூட்டில் கலந்து பரிமாறலாம்.

சூப்பரான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி. 

சோள ரவை புட்டு - Corn Rava Puttu

சோள ரவை புட்டு - Corn Rava Puttu
சத்தான டிபன் சோள ரவை புட்டு

சோளத்தில் (கார்ன்) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோள ரவையில் சத்தான சுவையான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

சோளக்குருணை - 1 கப்,

 அரிசி மாவு - 1/4 கப்,
தேங்காய்த்துருவல் - 3/4 கப்,
நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை,
ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - சிறிது.

செய்முறை :

மக்காச்சோளத்தை காயவைத்துச் சற்று கொரகொப்பாக நொய் போல் உடைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து அரிசி மாவையும், சோளக்குருணையையும் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.

வறுத்த அரிசி மாவையும், சோளக்குருணையையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில், ஏலக்காய்தூள் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலந்து நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

புட்டு குழலில் முதலில் சிறிது தேங்காய் துருவல் போட்டு பின்னர் கலந்து வைத்த மாவை போட வேண்டும். இந்த முறையில் அனைத்து மாவையும் போட்டு அடுப்பில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்,

சூப்பரான சத்தான சோள ரவை புட்டு ரெடி.

கொள்ளு சுண்டல் - Kollu Sundal

கொள்ளு சுண்டல் - Kollu Sundal
சத்தான ஸ்நாக்ஸ் கொள்ளு சுண்டல்
Kollu-Sundal.

சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கொள்ளு மிகவும் உகந்தது. இன்று கொள்ளுவில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

கொள்ளு - 1 கப்

 வெங்காயம் - 1
தேங்காய்த் துருவல் - 6 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தாளிக்க
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொள்ளுவை நன்றாக கழுவி 8 மணி ஊறவைத்த பின்னர் நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் வேக வைத்த கொள்ளுவை சேர்த்துக் கிளறுங்கள்.

கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான கொள்ளு சுண்டல் ரெடி.

ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி - Oats Vegetable Kanji.

ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி - Oats Vegetable Kanji.
சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி
Oats-Vegetable-Kanji.

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats) - அரை கப்

 கேரட் -  1
பீன்ஸ் - 5
பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
சீரகம் -  அரை டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 1/2 கப்

செய்முறை :

வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அடுத்து அதில் கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

தேவையான உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும்.

மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.

கஞ்சியை கொத்தமல்லி தூவி அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் பரிமாறவும்.

குறிப்பு :

கஞ்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது கொஞ்சம் தண்ணீர் போல தெரிந்தாலும் ஆறும்போது கெட்டியாகி கஞ்சி பதம் வந்துவிடும். மிகவும் ஆறவிட்டால் கஞ்சி "களி" ஆகும் .

சிறுதானிய புட்டு - Millets-puttu

சிறுதானிய புட்டு - Millets-puttu

சத்தான சுவையான சிறுதானிய புட்டு
Millets-puttu


     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சிறுதானிய புட்டு மிகவும் சத்தான சிற்றுண்டி. இன்று சிறுதானியங்களை சேர்த்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

புட்டு மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள்

சாமை - 1 கப்

 தினை - 1 கப்
வரகு - 1 கப்
குதிரைவாலி - 1 கப்
கேழ்வரகு - 1 கப்
கம்பு - 1 கப்
சோளம் - 1 கப்

புட்டு மாவு தயார் செய்யும் முறை

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். பின் அதனை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். சிறுதானியப்புட்டு மாவு தயார்.

இந்த மாவினை காற்று புகாத டப்பாவில் அடைத்து சுமார் மூன்று மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.



புட்டு தயார் செய்ய தேவையான பொருட்கள்

சிறுதானிய புட்டு மாவு - 1 கப்
தேங்காய் - ½ மூடி (மீடியம் சைஸ்)
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 3
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

தேவையான அளவு தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறுதானியப் புட்டு மாவை போட்டு அதனுடன் உப்பு கலந்த தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து கட்டி விழாமல் உதிரியாகப் பிசிறவும். புட்டு மாவானது உதிரியாகவும், ஈரப்பதத்துடனும் இருக்குமாறு செய்ய வேண்டும்.

பின் ஈரப்பதமான மாவினை ஒன்றுபோல் அழுத்திவிட்டு துணியால் மூடி பத்து நிமிடம் வைக்கவும். பின் புட்டு மாவினை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

வெந்த புட்டு மாவினை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும்.

சுவையான சிறுதானிய புட்டு தயார்.

விருப்பமுள்ளவர்கள் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக மண்டை வெல்லத்தை கலந்து புட்டு தயார் செய்யலாம்.

ப்ரோக்கோலி கேரட் சாலட் - Broccoli Carrot Salad.

ப்ரோக்கோலி கேரட் சாலட் - Broccoli Carrot Salad.
சத்து நிறைந்த ப்ரோக்கோலி கேரட் சாலட்
broccoli-carrot-salad.

ப்ரோக்கோலி, கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி - 100 கிராம்
கேரட் - 50 கிராம்
பெங்களூர் தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு.

செய்முறை :

ப்ரோக்கோலியை தண்டுடன் நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

நறுக்கிய ப்ரோக்கோலியை ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வதக்கிய ப்ரோக்கோலி, கேரட், தக்காளி, பெரிய வெங்காயம், போதுமான உப்பு, மிளகுத்தூளை சேர்த்து நன்றாக பிரட்டவும்.

கடைசியாக அதில் எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து காய்கறிகள் மீது தூவினால் சுவையான ப்ரோக்கோலி சாலட் ரெடி.

பனிவரகு கார அடை - PaniVaragu Adai

பனிவரகு கார அடை - PaniVaragu Adai

சத்தான டிபன் பனிவரகு கார அடை
Pani-Varagu-Adai.


     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சிறுதானியங்களில் பனிவரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பனிவரகில் சத்தான கார அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பனிவரகு - 1 கப்.

 கடலைப்பருப்பு - கால் கப்.
துவரம் பருப்பு - அரை கப்.
காய்ந்த மிளகாய் - 8.
உப்பு - தேவையான அளவு.
சோம்பு - 2 ஸ்பூன்.
பெருங்காயம் - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெங்காயம் - 2.
கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - அரை கப்.



செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பனிவரகு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

ஊற வைத்த பொருட்களை மிளகாய், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த மாவில் உப்பு சேர்த்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

பின்னர் அந்த மாவு கலவையில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்

சத்தான பனிவரகுக் கார அடை ரெடி.

கீரை ஆம்லெட் - Keerai Omelet.

கீரை ஆம்லெட் - Keerai Omelet.
சத்து நிறைந்த கீரை ஆம்லெட்
keerai-omelet.


     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று சத்தான சுவையான கீரை ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஏதாவது ஒரு கீரை - ஒரு கப்

 நாட்டு முட்டை - 3
வெங்காயம் - ஒன்று
ப.மிளகாய் - 2
மிளகுதூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

ப.மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து அரைடீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும். ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் சுத்தம் செய்த கீரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

கீரை பாதியளவு வெந்ததும் இறக்கி முட்டை கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேகவிடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.

லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, சுவையான கீரை ஆம்லெட் தயார்.

அரிசி பாலக் பொங்கல் -Samai Rice Palak Pongal.

அரிசி பாலக் பொங்கல் -Samai Rice Palak Pongal.
Samai Rice Palak Pongal.


     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி - 1 கப்

 பாசிப்பருப்பு - 1/3 கப்
பாலக் கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
உப்பு - 1/3 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
உளுந்து - அரை  டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
முந்திரி - 10

செய்முறை :

வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு 7 விசில் வரும்வரை வேகவிடவும்.

வெந்ததும் இறக்கி மசித்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் உளுந்து, சீரகம், மிளகு முந்திரி போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல் ரெடி.