சிவனாக மாறும் பெருமாள்

சிவனாக மாறும் பெருமாள்
shiva-changed-perumal-in-tirupati-on-friday

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
       
திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதி தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார்.

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதியும், வைணவத்தின் மிகச் சிறந்த ஆலயம் என்பதும் தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த நாள் வெள்ளிக்கிழமை.

ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து, அவருக்கு எளிய வஸ்திரத்தை சாத்தி, மந்திர ரூபத்தில் அவரை ‘சங்கர நாராயணர்’ போல் மாற்றுகிறார்கள். அவருக்கு வில்வ மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது.

அந்த வேளையில் பெருமாள் அங்கிருந்து இறங்கி, அலமேலுமங்காபுரத்தில் தாயாரை பார்க்கச் செல்வதாக ஐதீகம். வெள்ளிக்கிழமை அன்று பெருமாளின் தரிசனத்துக்கு, அலமேலுமங்காபுரத்தில் கூட்டம் அலை மோதும். மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதியில் சுவாமியை மந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து, நாராயணனாக மாற்றுவார்கள்.

தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்

தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்
mother-and-father-are-the-first-teachers-of-the-children


   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
    
குழந்தைகள் வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா?

ஆண், பெண் வேறுபாடு பற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுள் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுதி எனும் செய்தி ஆணினத்துக்கே ஒரு மாபெருங் களங்கமாகும். குற்றம் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால் குற்றத்துக்குக் காரணமாக விளங்கும் சூழல்களைத் தெரிந்துகொண்டு அவற்றை நீக்குவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டால் இந்தக் கொடுமை நிகழாமல் செய்துவிடலாமே. அதற்காகப் பிள்ளைகளை வீட்டுக்குளேயே பூட்டிவைக்க வேண்டும் என்று பொருளல்ல. அவர்களுக்குத் தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையல்லவா?

வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெறித்துப் பார்த்தல், முறைத்துப்பார்த்தல், உடலைத் தடவுதல், பிறர் அறியாமல் தீண்டுதல், கேலி செய்வதைப் போல சீண்டுதல் ஆகியவை தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.

சிறுவர்களாக இருந்தாலும், சிறுமிகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்த வேண்டும். இவற்றைப் பெற்றோர்களே செய்ய முடியும்; செய்யவேண்டும். அப்படி விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் உடனே தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு குழந்தைகளை அன்புடனும், பரிவுடனும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழிக்கும் பெற்றோர்கள் மிகுதி. அந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளோடு மனம்விட்டுப் பழகுவதற்கும் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக்கூடாதா? அவ்வாறு பழகாததால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும், இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.

பல நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் கதைமாந்தர்களிடம் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஈடுபாடு கூடப் பெற்றோர்களிடம் ஏற்படாமல் போய்விடுகிறதே...! ஏன்?

வீட்டுக்கு வெளியே தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பெற்றோரிடம் எடுத்துக் கூறும் தைரியம் குழந்தைகளுக்கு இல்லை. பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்கு இந்தத் துணிவை ஏற்படுத்தும். இந்தத் துணிவைப் பெற்றோர் உருவாக்காததால் பிள்ளைகள் சின்னச்சின்னச் சிக்கல்களுக்குக்கூடப் பயந்து உடனடியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

“பாதகம் செய்வாரைக் கண்டால்
பயங் கொள்ளலாகாதுபாப்பா
மோதி மித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” எனச் சிறுவர், சிறுமிகளுக்குத் துணிவு ஏற்படுத்தப் பாரதியார் வழிகாட்டுவது இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமாக விளங்குகிறது.

தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் போதிய நேரமின்மையால் பிள்ளைகளின் மேல் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக, இத்தகைய குடும்பங்களில் வார விடுமுறை நாட்களில் பெற்றோர் பிற பணிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் பிள்ளைகளுக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.

பிள்ளைகளுக்கு உண்மையாகவே ஊட்டமளிப்பது பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் பரிவுமேயாகும். இவற்றைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது மட்டுமே பெற்றோரின் பணி என்று பலர் கருதிவிடுகிறார்கள்.

முதலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும். அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சண்டை போட்டுக்கொள்ளும் வீடுகளில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவர்கள் அறியாமலேயே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடுகின்றது.

“நீ அம்மா கட்சியா, அப்பா கட்சியா?” என்று வீட்டிலேயே அரசியல் மோதல் உருவாகுவது வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. பிள்ளைகளின் வருங்காலம் கருதியும் நாட்டின் எதிர்காலம் கருதியும் பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்க்கு உரியது.

“ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்” என்னும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் பெற்றோர்களுக்கான அறிவுரையாகவும் விளங்குகிறது.

“இன்று குழந்தைகளுக்கு நல்ல வழியைக் காட்டி வளர்த்தால் நாளைக்கு அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள்” என்னும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது.

மராட்டியச் சிங்கம் சிவாஜி குழந்தையாக இருந்தபோது அவரது தாய் ஜீஜாபாய் கூறிய வீரசாகசக் கதைகளே சிவாஜியைத் தலைசிறந்த வீரனாக உருவாக்கின. தேசத் தந்தை காந்தி சிறுவயதில் தாயாரிடம் கேட்ட அறிவுரைதான் அவரை மகாத்மா எனும் மாண்புநிலைக்கு உயர்த்தியது. ‘நவ இந்தியாவின் சிற்பி’ நேரு ஒரு சிறந்த தலைவராக உருவாக அவரது தந்தை மோதிலால் நேருவே காரணம்.

இவ்வாறு தலைவர்கள், அறிஞர்கள் பலரின் உருவாக்கத்திற்குப் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையான காரணமாக விளங்கியதனை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

‘தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். அதற்காகப் பிரம்பைக் கையில் தூக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். கண்டிப்பாகச் சொல்வதை விடக் கனிவாகச் சொல்வது மனத்தில் பதியும். அவர்களிடம் நண்பர்களாகப் பழகுங்கள். தங்கள் சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கப் பழக்குங்கள். சீர்தூக்கி ஆராயத் தெரிந்துகொண்டால் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி அடைவார்கள்’ என்னும் தந்தை பெரியாரின் அறிவுரையைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 

ஆஸ்துமா - ஆரோக்கிய உணவு

ஆஸ்துமா - ஆரோக்கிய உணவு
Healthy-food-and-asthma

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


ஆரோக்கியமான உணவுக்கும், ஆஸ்துமாவுக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா தொந்தரவு 30 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

உலகளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் தாக்கும் நோய்கள் பட்டியலில் ஆஸ்துமாவும் இணைந்திருக்கிறது. சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமாவை தடுக்க முடியும். பழங்கள், காய்கறிகள், முழு தானிய வகைகளை சாப்பிடுவதன் மூலம் சுவாச கோளாறு, நெஞ்சுவலி போன்ற பிரச்சினைகளில் இருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம். ஆரோக்கியமான உணவுக்கும், ஆஸ்துமாவுக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா தொந்தரவு 30 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

ஆஸ்துமா பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் உப்பு, சர்க்கரை போன்றவற்றை குறைத்துக்கொள்வது நல்லது. ஒமேகா 3 அமிலம் நிறைந்த மீன்வகைகள், பெர்ரி பழங்கள், பால், கேரட், அவகெடோ போன்றவற்றை சாப்பிடலாம். துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உலர் பழவகைகள், சூப்புகள், உருளைக்கிழங்கு சேர்த்த உணவுகள், பாலாடைக்கட்டி, காளான், சோயா சாஸ் போன்றவைகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இவை ஆஸ்துமாவின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும்.

அரிசி கடலைப்பருப்பு உருண்டை

அரிசி கடலைப்பருப்பு உருண்டை

சத்து நிறைந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை
Uppu-Urundai

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

காலையில் டிபனாகவும், மாலையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட சத்தான உணவு இந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை. இன்று இந்த உருண்டை செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - ஒரு கப்,
துருவிய இஞ்சி, மாங்காய் - சிறிதளவு,
ஊற வைத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது - சிறிதளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

பச்சரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கைவிடாமல் கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

பின்னர் இந்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

நேத்து வச்ச மீன் குழம்பை சாப்பிடுவது நல்லதா?

நேத்து வச்ச மீன் குழம்பை சாப்பிடுவது நல்லதா?
old-fish-curry-not-good-for-health

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
              

`நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் சுவை…’ என்று கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் எந்த உணவையும் சமைத்த உடனேயே சாப்பிடுவதுதான் நல்லது.

`நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் சுவை…’ என்று கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் எந்த உணவையும் சமைத்த உடனேயே சாப்பிடுவதுதான் நல்லது.

எந்த வகை உணவாக இருந்தாலும் அதிலிருக்கும் மினரல்ஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் சமைத்த உடன் வெளிவரும் என்பதால், சமைத்த சூடு அடங்குவதற்குள் சாப்பிட்டால் சத்துக்கள் அனைத்தும் உடலில் சேரும். உணவு ஆறிய பின்னர் சாப்பிடுவதால் அது வெறும் சக்கைதான். அதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது அதைவிட வேஸ்ட்! சுவையும் இருக்காது.

பிரியாணி, மீன், கோழி, மட்டன் குழம்பு மற்றும் பிற அசைவ உணவுகளை நாள்விட்டு சாப்பிட்டால் சில நேரங்களில் `புட் பாய்ஷன்’ ஆகவும் மாறலாம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக அலர்ஜி மற்றும் தோல் நிறம் மாறும். அதேபோல், காய்கறிகளை நறுக்கி பிரிஜ்ஜில் வைத்து அப்புறம் சமைப்பது, குழம்பை பிரிஜ்ஜில் வைத்து, அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது என்பதெல்லாம் நோய்களை நாமே தேடிக்கொள்வதற்கு சமம்!

ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ்

ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ்
sweet-corn-cheese-Nuggets



                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ்

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஸ்வீட் கார்ன், சீஸ் சேர்த்து நக்கட்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப்
மக்காச்சோள மாவு - 4 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 1
பிரெட் தூள் - கால் கப்
சீஸ் துருவல் - கால் கப்
மைதா மாவு - கால் கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

ஸ்வீட் கார்னை வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, சேர்த்து நன்றாக பிசையவும்.

பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டி வைக்கவும்.

அகலமான தட்டில் மைதா மாவுடன், பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

உருட்டிய நக்கட்ஸ்களை மைதா கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டி வைத்த நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் ரெடி. சாஸ் உடன் பரிமாறவும்.

ஒரு சிறந்த தலைவனுக்கு கண்டிப்பாக 'இது' இருக்க வேண்டும்

ஒரு சிறந்த தலைவனுக்கு கண்டிப்பாக 'இது' இருக்க வேண்டும்
five-ways-be-more-humble-leader

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நாட்டில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, இந்த நிலை அரசியல் தளத்தில் மட்டுமல்ல நாம் பணிபுரியும் நிறுவனங்களிலும் கூட இதே நிலை தான். ஆகவே ஒரு நிறுவனத்தில் நல்ல தலைவனாக இருக்கத் தேவையான அதிமுக்கியமானவற்றையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

பணிவின் பலன்கள் பணிவு என்பது ஒரு சிலருக்கு இயற்கையாகவே இருக்கும். மற்றவர்கள் சிறந்த தலைவராக வரவேண்டும் எனில் பணிவை வரவழைத்துக்கொள்ள வேண்டும். எப்படி நல்ல பணிவான தலைவராக இருந்து தமக்கு கீழே பணியாற்றுபவர்களின் உண்மையான திறமையை வெளிக்கொணர உதவும்.

எல்லைகளை உணர்தல் தலைவரோ இல்லையோ, யாராக இருந்தாலும் அனைத்தையும் தெரிந்துகொள்வது என்பது சாத்தியமில்லை. இதை ஒத்துக்கொள்வது தான் பணிவைக் கற்க முக்கிய அம்சம். எப்போதும் மற்றவர்களின் கருத்துக்களை கேட்பது, தேவைப்படும் போது அவர்களிடம் ஆலோசனைகள் கேட்பது மிகவும் அவசியம். இதன் மூலம் உங்களின் பார்வை குறுகியதாக இருக்கும் பட்சத்தில் பல்வேறு கோணங்களில் கருத்துக்கள் கிடைக்கும் போது சிறப்பான ஒன்றாக இருக்கும். இது தான் உங்கள் நிறுவனத்தை முன்நோக்கி செலுத்த முக்கியமான ஒன்று.

கற்க எப்போதும் தயாராக இருத்தல் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் எதையாவதை கற்க வேண்டியவை இருக்கும். உங்களின் சக பணியாளர்களிடம் மட்டுமில்லாமல், காவலாளிகள், தேநீர் கொண்டு வரும் நபர் என அனைத்து மட்டத்திலும் உள்ள பணியாளர்களிடம் இருந்து கற்க முடியும். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்

கூட்டுமுயற்சியே பிரதானம் அதிகாரம் செலுத்தும் தலைவனாக இல்லாமல் ஊக்கமளிக்கும் தலைவனாக இருக்க முயலுங்கள். உங்கள் குழுவுடன் நெருங்கிப் பணியாற்றுவதன் மூலமும், ஒவ்வொரு நபரையும் பாதிக்கும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதன் மூலமும் இதனைச் செய்யமுடியும். மக்களை மையப்படுத்திய தலைவனாக இருக்கும் பட்சத்தில் பணிவு தானாகவே வந்துவிடும். ஏனெனில் மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதில் இருந்து நீங்கள் கற்கிறீர்கள்.

விமர்சனங்களுக்கு மதிப்பளித்தல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், ஒரு தலைவனாகவும் நீங்கள் திறந்த மனதுடன் விமர்சனங்களை வரவேற்ற வேண்டும். பெரும்பாலானோர் தங்களை சுற்றி தாங்களே சுவர் அமைத்துக்கொண்டு, பிறர் அணுகுவதைத் தடுக்கின்றனர். நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடிந்தால் மட்டுமே , உங்களால் வளரமுடியும் மற்றும் உங்களைச் சுற்றி இருப்பவர்களும் உங்களைப் பாராட்டுவார்கள்.

சிறப்பாகக் கவனித்தல் மற்றவர்கள் பேசும் போது அதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இது அவர்களைப் புரிந்துகொள்வதற்கு மட்டும் உதவாமல், அவர்கள் உங்கள் மீது எவ்வளவு மதிப்பு வைத்துள்ளனர் என்பதையும் காட்டும். பணிவு தான் சிறப்பான உரையாடலுக்கான தூண் - எனவே நம்மிடம் பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்

டெபிட் கார்டை(Debit Card)பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?

டெபிட் கார்டை(Debit Card)பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?
tips-use-debit-card-safely
   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
               
டெபிட் கார்டுகளின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி டெபிட் கார்டு பயன்பாடு குறித்த அறிவுரைகளை அவ்வப்போது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. செல்கின்ற இடம் எல்லாம் பணத்தைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய சுமை, டெபிட் கார்டுகள் மூலமாக முற்றிலும் நீங்கிவிட்டது எனலாம். கிரடிட் கார்டுகளைப் போல டெபிட் கார்டுகள் வாடிக்கையாளர்களைக் கடனாளிகளாக மாற்றுவதில்லை. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்பப் பல்வேறு வகையான டெபிட் கார்டுகளைப் பாரத ஸ்டேட் வங்கி வழங்குகிறது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பிளாட்டினம் இண்டர்னேஷ்னல் டெபிட் கார்டு, ஸ்டேட் பாங்க் ஆப் கிரெடிட் கார்டு, ஸ்டேட் பாங்க் கிப்ட் கார்டு, ஸ்டேட் பாங்க் பெஹலா கதம் மற்றும் பெஹிலி போட்டொ டெபிட் கார்டு (பதினெட்டு வயது நிரம்பாதவர்களுக்காக), எஸ்பிஐ இண்டச் டேப் அண்ட் கோ டெபிட் கார்டு போன்ற பல வகையான டெபிட் கார்டுகளை வழங்குகிறது.

உங்களுடைய டெபிட் கார்டைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த 5 வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

கண்காணித்தல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டெபிட் கார்டு பயன்பாட்டைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.

குறுந்தகவல் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் பாரத ஸ்டேட் வங்கி அது தொடர்பான குறுஞ்செய்தியை அனுப்புகிறது. அந்தக் குறுஞ்செய்தியோடு தங்களுடைய பரிவர்த்தனைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரசீதுகள் ஏடிஎம் மூலமாக ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்தவுடனும் பெறப்படும் ரசீதுகளைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும் அல்லது பிறருடைய கையில் கிடைக்காத வண்ணம் அழித்துவிட கொள்ள வேண்டும்.

விவரங்கள் டெபிட் கார்டு, அல்லது கிரெட் கார்டு எண், பின் எண், சிவிவி எண் என எந்தத் தகவல்களையும் பிறருக்கு வழங்கக் கூடாது.

கட்டுப்பாடுகள் பொதுவாக, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிவர்த்தனையில் ஈடுபட முடியாது. எனவே, டெபிட் கார்டைப் பயன்படுத்திப் பெரும் தொகையில் பொருட்களை வாங்கும் பொழுது இதனைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் சிவதூதி

ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் சிவதூதி
ambigai-mantra
   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
          
புஷ்கரம் என்ற ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர். இந்த சிவதூதியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எந்த ஆபத்தும் நெருங்காது.

இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப-நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்கும் முன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர்.

எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூரிய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்தினங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள்.

மந்திரம்:

ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:

சுக்ல பட்ச சப்தமி, கிருஷ்ண பட்ச நவமி.

பலன்கள்: நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். எந்த ஆபத்தும் நெருங்காது.

பாவங்களை போக்கும் ஆடிப் பவுர்ணமி

பாவங்களை போக்கும் ஆடிப் பவுர்ணமி
aadi-pournami-worship

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
          
சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த பவுர்ணமி நாளில் தான் வருகின்றன.

சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த நாளில் தான் வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா மிகவும் சிறப்பாக பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பதினோராவது நாள் ஆடித்தபசு. ஆடித்தபசுக் காட்சியை கண்டால் பாவங்கள் அனைத்தும் கரைந்து மனது லேசாகும் என்பது நம்பிக்கை.

திருச்சி அருகே உள்ள உறையூரில் எழுந்தருளியுள்ள பஞ்சவர்ணேஸ்வரர், ஆடிப் பவுர்ணமி நாள் ஒன்றில் தான் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சி அளித்தாராம்.

வேதங்களை கடத்திப்போய், பிரம்மனின் படைப்பு தொழிலை ஸ்தம்பிக்கச் செய்தனர், மது, கைடபர் என்ற இரு அசுரர்கள். அதனால் பாதிக்கப்பட்ட பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். திருமால், குதிரை முகத்துடன் ஹயக்ரீ வராக தோன்றி கடலின் அடியிலிருந்த அசுரர்களோடு போரிட்டு வேதங்களை மீட்டு வந்த நாள் ஆடிப் பவுர்ணமி. 

திருவெண்காடு பரிகார பூஜை - நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பூஜை

 திருவெண்காடு பரிகார பூஜை - நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பூஜை
thiruvenkadu-dosha-pariharam
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான திருவெண்காடு பரிகார பூஜை


   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


நரம்புத் தளர்ச்சி உடையவர்களும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் அவசியம் தரிசித்துப் போக வேண்டிய தலம் திருவெண்காடு. இந்த கோவிலில் பரிகாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

புதன் பகவான் உங்கள் ஜாதகத்தில் மீனத்தில் நீசம் பெற்று இருந்தாலும், செவ்வாய், சந்திரனுடன் சேர்ந்து இருந்தாலும், 6, 8, 12-ல் அமையப் பெற்றிருந்தாலும், கோசாரப்படி உங்கள் ராசியில் சஞ்சாரிக்கும்போதும், (ஒரு மாத காலம்) மிதுனம், கன்னிராசி, லக்னத்தில் பிறந்திருந்தாலும், புதன்கிழமை பிறந்தவராக இருந்தாலும், புதன் திசை, புதன் புத்தி நடந்து கொண்டு இருந்தாலும்,

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தாலும், தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் ஐந்து வந்தாலும், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும், திருவெண்காடு வந்து, புதன்கிழமை, புதன் ஓரையில் புதன் பகவானை வழிபட்டுப் பரிகார பூஜை செய்தால் கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் எல்லாம் உண்டாகும்.

நரம்புத் தளர்ச்சி உடையவர்களும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் அவசியம் தரிசித்துப் போக வேண்டிய தலம் இது. மனநோய், சோகை, புற்றுநோய், வாதநோய், நரம்புத் தளர்ச்சி, வெண்குட்டம், ஆண்மைக்குறைவு, சீதள நோய் ஆகிய நோய்களுக்கு புதனே காரணமாக இருப்பதால் மேற்கண்ட நோயால் பாதிக்கப்பட்டவர் அவசியம் திருவெண்காடு வந்து, புதன் பகவானுக்கு பரிகார பூஜை செய்து ஆக வேண்டும்.

திருவக்கரை வக்கிரகாளியம்மன்

திருவக்கரை வக்கிரகாளியம்மன்
thiruvakkarai-vakrakaliamman

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
             

திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும். வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்ததால் வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

நீண்ட நாட்கள் கடுந்தவம் புரிந்தான் வக்கிராசூரன். முடிவில் ஈஸ்வரன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று கேட்டார். தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் வரம் கேட்டான். அப்போது ஈஸ்வரன் அசைவ உணவு நமக்கு ஆகாதே என்றார்.

காலையில் பூசை செய்து உணவு உண்ட பிறகே சிவலிங்கத்தை கண்டத்தில் வைப்பேன் என்றான் அசுரன். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரமளித்தார். வரம் பெற்றதும் தேவர்களைத் துன்புறுத்தினான்.

தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். உமையவள்தான் சாமுண்டியாக 16 கலைகளுடன் வராகி, இந்திராணி, கௌமாரி, சாமுண்டி, மகேஸ்வரி, வைணவி, பிராமி எனும் சப்தமாதர்களாகத் தோன்றினான். அவன் எட்டு திருக்கரங்களுடன் சூலம், வில், வாள், ஈட்டி, இருப்புலக்கை, தோமரம், பாசம், அங்குசம், பரசு ஆகிய ஆயுதங்களுடன் தோன்றி அழிக்கத்தக்கவள்.

அவன் பெண்களால் அழிய வரம் பெறவில்லை. அவன் லிங்கத்தைக் கண்டத்தில் வைத்திருக்கும்போது கொல்ல முடியாது.- அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்கவேண்டும் என்று மகாவிஷ்ணு குறிப்பிட்டார்.

அதன்படி மகாவிஷ்ணு ஈஸ்வரியை அழைத்து அசுரனை கொல்லும் வழிமுறைகளைக் கூறினார். ஈஸ்வரியும் 16 கலைகளுடன் பெரிய உருவம் எடுத்து மகாவிஷ்ணு யோசனைப்படி வக்கிர துர்முகியை அழித்து பின்னர் வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்ததால் வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

வக்கிரசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப் பெயர் பெற்றது. இவ்வாலயத்தின் வடக்குமுகமான காளியின் எதிரில் வக்கிரசூரன் சிலை உள்ளது. அவன் கண்டத்தில் வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும் இது. திண்டிவனத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 

மகராசனம் - கழுத்து - முதுகு- இடுப்பு வலியை குணமாக்கும்

கழுத்து - முதுகு- இடுப்பு வலியை குணமாக்கும் மகராசனம்
neck-back-pain-control-makarasana

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் 
             

கழுத்து மற்றும் முதுகில் வளையும் தன்மை அதிகரிக்கும் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலிக்கு பயனுள்ள ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

பெயர் விளக்கம்: ‘மகர’ என்றால் முதலை என்று பொருள். இந்த ஆசனம் முதலை தலை தூக்கிய நிலை போல இருப்பதால் ‘மகராசனம்’ என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை: தரை விரிப்பின் மேல் குப்புறப்படுக்கவும், இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும், கைகளை தலைக்கு முன்னால் நீட்டி காதுகளுக்கு அருகில் இருக்கும்படி வைக்கவும், உள்ளங்கைகள் தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும். நெற்றியை தரை விரிப்பின் மேல் வைக்கவும், உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கண்கள் மூடி இருக்கட்டும், சில வினாடிகள் கழித்து கண்களை திறந்து முழங்கைகளை மடக்கி இரண்டு உள்ளங்கைகளையும் கன்னத்தின் இரு பக்கங்களிலும் வைக்கவும். கண்களை மூடவும் இந்நிலையில் 2 முதல் 5 நிமிடம் நிலைத்திருக்கவும், இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.

பயிற்சிக்குறிப்பு: இரண்டு நிமிடம் கூட இந்த ஆசன நிலையில் நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யலாம்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: கழுத்து, முதுகு, இடுப்பு பகுதியின் மீதும் மூலாதார சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயன்கள்: கழுத்து மற்றும் முதுகில் வளையும் தன்மை அதிகரிக்கும் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலிக்கு பயனுள்ள ஆசனம் இது.

குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
parents-advice-to-children

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.

தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குறிப்பாக பழக்கிவிடப்படுகின்றனர். இதற்கு பெரும்பான்மையான காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே. மேலும், பல குழந்தைகள் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதை விடுத்து, ஒதுங்கி செல்லவே துணிகின்றனர். எதையும் தைரியமாக ஒப்புக்கொள்ளும் அல்லது தைரியமாகப் போராடும் நிலையும் குறைந்து வருகிறது.

இதற்கு காரணம் பெரும்பாலும் ஒரு சில குடும்பங்களில் ஒரு குழந்தையே போதும் என்ற தங்களது சுயநலம்தான் காரணம். இதனால் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, சுயநலமாகவே வாழப் பழகிவிடுகின்றனர். தனக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்பு தானாகவே வளர்ந்து, அது ஆரோக்கியமான பழக்கமாகிவிடும்.

சின்னச் சின்ன தவறுகளும், புறக்கணிப்புகளும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி தவறான முடிவுகளுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். எது அவமானம், எது பாராட்டுக்குரியது என்பதை அறியாமலே அந்த உணர்வுகளை தங்களுக்குள் எடுத்துக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் பல குழந்தைகள் திணறி வருகின்றனர்.

குழந்தைகள் வளரும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை யாரிடமும் நம்பகத்தன்மையாக முன் வந்து அதற்கான தீர்வுகளை தேடுவதில்லை. இணையதளம், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்களுக்கான தீர்வுகளை தேடுகின்றனர். அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மற்றொரு பிரச்சனைகளின் வசம் சிக்குகின்றனர்.

இப்படி குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்,

* பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை தவிருங்கள்.

* ஒரு தோல்வி ஏற்பட்டால், அதுதான் வெற்றிக்கான முதல் படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

* ஏமாற்றங்கள் தோல்விகள் அல்ல என்பதை எடுத்து கூறுங்கள்.

* அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். எது அத்தியாவசியம், எது அத்தியாவசியம் இல்லாதது என்பதை சொல்லிக் கொடுங்கள்.

* ஒரே குழந்தை இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எல்லாமே தனக்கானது என்கிற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே கற்றுக் கொடுங்கள்.

* அடிக்கடி உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளோடு ஒன்று கலந்து பழகும் சூழலை உருவாக்குங்கள்.

* ஆண், பெண் வித்தியாசம் பற்றி கற்றுக் கொடுங்கள்.

* இரண்டும், மூன்று குழந்தைகள் இருப்பின், ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, குறை சொல்லிப் பாராட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, தட்டிக் கொடுத்து சமமாக நடத்துங்கள்.

* உங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் கொடுக்கும் பொருட்களை, உங்கள் குழந்தைகளின் கரங்களாலேயே கொடுக்க வையுங்கள்.

* பள்ளிக்கூடங்களில் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை வீட்டிலும் கற்றுக் கொடுங்கள்.

* கணவன், மனைவி இடையே பிரச்சனையோ, உறவினர்களிடம் மனஸ்தாபமோ இருந்தால் அவற்றை உங்கள் குழந்தைகள் முன்பு காட்டிக் கொள்ளாதீர்கள்.

* செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.

* போதும் என்கிற மனப்பான்மைக்கு பழக்குங்கள்.

* அவர்களுடன் நட்புடன் பழகுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் உங்களிடம் குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

ஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பது சரியா?

ஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பது சரியா?
ice-cubes-rubbing-the-face

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்                
உங்கள் சருமத்தை பாதுகாக்கும் எளிய பொருள் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் உள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள பருக்கள் மங்க வேண்டுமா? அல்லது நீங்கள் போடும் மேக்கப் ரொம்ப நேரம் நீடிக்க வேண்டுமா? ஐஸ் கட்டி தான் தீர்வு. உங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி மேஜிக் போல உங்கள் சருமத்தில் மாயம் செய்யும்.

நாள் முழுவதும் அலைந்து வேலை செய்வதால் உடலும் சருமமும் சோர்ந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம். இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை ஐஸ் பொலிவு பெற செய்யும். ஐஸ் பேஷியல் தான் தற்போதைய டிரெண்டிங்காக உள்ளது.

எல்லாரும் தன்னுடைய சருமம் பிரகாசமாக பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.

நமது முக அழகை கெடுக்கும் கருவளையங்களை ஐஸ் கட்டி கொண்டு விரட்டி விடலாம். இதற்கு நீங்கள் சிறிதளவு ரோஸ் வாட்டரை கொதிக்க வைத்து பின்னா் அதில் வெள்ளரிக்காய் சாறு கலந்து இதை ஐஸ் ட்ரேயில் வைத்து ஃபிரிசரில் வைத்து விடுங்கள். இதை முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் கருவளையம் ஓடிவிடும்.

வயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை

வயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை
Simple-diet-that-helps-diagnose-stomach-ailments



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


இன்றைய நவீன யூகத்தில் உணவுமுறையில் சில மாறுதல்களை செய்வதன் மூலம் வயிற்று கோளாறுகளை தவிர்க்கலாம். அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. காபி மற்றும் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும்.

ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.

இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.

ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும்.

இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். 

குதிரைவாலி கொள்ளு கஞ்சி

 குதிரைவாலி கொள்ளு கஞ்சி
kollu-rice-kanji

கொழுப்பை கரைக்கும் குதிரைவாலி கொள்ளு கஞ்சி


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்             


உடலில் உள்ள அதிகப்படியாக கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது கொள்ளு. இன்று கொள்ளுவை வைத்து சத்தான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 1 கப்,
கொள்ளு - அரை கப்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை :

கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து நீரில் மூழ்கும் வரைப் போட்டு 2 மணி நேரம் ஊறவிடவும்.

குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் அதை குக்கரில் போட்டு அதனுடன் கொள்ளுவை போட்டு மூழ்கும் அளவிற்கு மேல் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.

நன்கு குழைய வெந்ததும் அதில் கடைந்து அடுப்பில் வைத்து மேலும் நீர் சேர்த்து கிளறிவிட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

சூப்பரான குதிரைவாலி கொள்ளு கஞ்சி ரெடி

கோதுமை ரவை சிக்கன் பிரியாணி

கோதுமை ரவை சிக்கன் பிரியாணி
wheat-rava-chicken-biryani

ஜீரக சம்பா, பாஸ்மதி அரிசியில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை ரவையில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


தேவையான பொருட்கள் :

சிக்கன் - கால் கிலோ
கோதுமைக் குருணை - 2 கப்
நெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சின்னவெங்காயம் - அரை கைப்பிடி
பெரியவெங்காயம் - ஒன்று
இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 4 (கீறியது)
தக்காளி - 2
புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 4 கப்
முந்திரிப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து இரண்டரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இத்துடன் சின்னவெங்காயம், பெரியவெங்காயம், இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் முக்கால் பாகம் புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கி போதுமான அளவு உப்பைச் சேர்க்கவும்.

சிக்கனில் இருந்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.

இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் மல்லித்தூள் (தனியாத்தூள்) சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி, சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்ததும் கோதுமைக் குருணையைச் சேர்த்து 5 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

கோதுமையும் கறி, தேங்காய் பால் சேர்ந்து கெட்டியானதும் தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் மூடி தம்மில் வைக்கவும்.

கலவை உப்புமா பக்குவத்துக்கு வந்தவுடன், புதினா, கொத்தமல்லித்தழை, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான கோதுமை ரவை சிக்கன் பிரியாணி ரெடி.

பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு எதிராக கடன் பெறுவது எப்படி?

பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு எதிராக கடன் பெறுவது எப்படி?
how-avail-loan-against-mutual-funds-instantly


            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



நாம் அனைவரும் பல்வேறு அவசர சூழ்நிலைகளை நம்முடைய வாழ்வில் கட்டாயம் எதிர்கொள்ள நேரிடும். அத்தகைய அவசர சூழ்நிலைகளைச் சமாளிக்க நம்முடைய நிதி நிலை கை கொடுக்காத போது, நாம் பல்வேறு வழிகளில் பணத்தைத் திரட்ட முயற்சி செய்திடுவோம். நம் முன்னே பல்வேறு வழிமுறைகள் உள்ள போதும், அதில் மிகச் சிறந்த மற்றும் சுலபமான வழியை மட்டுமே தேர்ந்தெடுப்போம். அத்தகைய சுலபமான வழிகளில் ஒன்று, நம்முடைய பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு ஈடாகக் கடன் பெறுவது. பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு எதிராகக் கடன் பெற இயலுமா? ஆம் எனில், எவ்வாறு கடன் பெறுவது? அதற்கான நடைமுறைகள் என்ன? இதைப் பற்றிய பல்வேறு விபரங்களை இந்தக் கட்டுரையில் நாம் விரிவாகக் காணலாம்.

எச்டிஎப்சி வங்கி சமீபத்தில் எச்.டி.எப்.சி வங்கி பரஸ்பர நிதிகளுக்கு (மியூச்சுவல் பண்ட்) எதிராக உடனடியாகக் கடன் வழங்கும் வசதியை தன்னுடைய இணைய வங்கி சேவையியல் இணைத்தது. இந்த வசதியை வழங்குவதற்காக, HDFC வங்கி CAMS உடன் இணைந்துள்ளது (இந்தியாவில் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கான நான்கு R & T முகவர்களில் ஒருவர்).

10 மியூச்சுவல் பண்ட் தற்போது, ஹெச்டிஎப்சி வங்கியானது 10 பரஸ்பர நிதி நிறுவனங்களுடன் இணைந்து பரஸ்பர நிதிக்கு எதிராகக் கடன் வழங்கி வருகின்றது. இனி வரும் நாட்களில், என் பார்வையில், ஹெச்டிஎப்சி வங்கியானது பிற R & T முகவர்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்களுடன் இணைந்து கடன் வழங்கும் வசதியை விரிவாக்க முயலும்.

ஏன் பரஸ்பர நிதியைப் பயன்படுத்தி உடனடியாகக் கடன் பெற வேண்டும்? நீங்கள் உங்களுக்கான அவசரக் கால நிதியைப் பாதுகாத்து வந்த போதிலும், உங்களுடைய திடீர் அவசரத் தேவைக்குத் தேவைப்படும் நிதியானது நீங்கள் சேமித்து வைத்திருக்கும் அவசரக்கால நிதியை விட அதிகமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்க நீங்கள் உங்களுடைய நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ உதவிக் கேட்கலாம். அல்லது உங்களுடைய பல்வேறு முதலீடுகளை விற்க வேண்டும். இதுபோன்ற அவசரக்காலச் சூழ்நிலை மேலும் 2 அல்லது 3 மாதங்களுக்கு மட்டுமே தொடரும் என வெகு நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்தால், அத்தகைய சூழலில் உங்களுடைய முதலீடுகளை விற்பது, அல்லது உங்களுடைய SIP ஐ நிறுத்துவது மிகத் தவறான முடிவாகும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு உதவத் தயங்கும் பொழுது, உங்களுடைய பரஸ்பர நிதி முதலீட்டைப் பயன்படுத்திக் கடன் பெறுவது மட்டுமே உங்களுக்கான கடைசி வாய்ப்பாக அமையும்.

பரஸ்பர நிதியங்களுக்கு எதிரான கடன் பெறும் செயல் எவ்வாறு இயங்குகிறது? பரஸ்பர நிதிகளுக்கு எதிராகக் கடன் பெற நீங்கள் முடிவு செய்தவுடன், நீங்கள் வங்கிகள் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) அணுக வேண்டும். அதற்கான பொதுவான தகுதி கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, 18 வயதிற்கு மேலான வயதிற்குட்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். சில வங்கிகள் கடன் வழங்க அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயித்துள்ளன.

தனிநபர் பங்கு நிதிகளுக்கு எதிரான கடன் அதை வைத்திருக்கும் தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. அதே சமயத்தில் பரஸ்பர நிதியை வைத்திருக்கும் இந்து பிரிக்கப்பதாத குடும்பம், (HUFs), நிறுவனங்கள், பங்குதாரர்கள், தனி உரிமையாளர்கள் போன்றவர்களுக்குக் கடன் வழங்கப்படுவதில்லை. எனினும், கடன் சார்ந்த பரஸ்பர நிதிகளை வைத்திருக்கும் தனிநபர்கள், பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் (HUFs), நிறுவனங்கள், கூட்டு ஸ்தாபனங்கள், தனி உரிமையாளர்களுக்குக் கடன் வழங்கப்படுகின்றது.

கடன் அளவு ஒவ்வொரு வங்கியும் அல்லது NBFC களும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகையை நிர்ணயிக்கின்றன. கடன் அளவு நீங்கள் வைத்திருக்கும் மொத்த நிதி மற்றும் அதனுடைய வகையைப் பொறுத்தது. கடன் அளவு பங்கு நிதிகளைப் பொருத்த வரை அதனுடைய மொத்த மதிப்பில் 50 சதவிகிதமாக இருக்கலாம். கடன் சார்ந்த பரஸ்பர நிதிகளைப் பொருத்தவரை கடன் அளவு 80% முதல் 85% வரை இருக்கலாம்.

சேவைக் கட்டணம் வங்கிகள் அல்லது என்.டி.எஃப்.சி.கள் இந்தக் கடன்களுக்குச் சில சேவை கட்டணங்களை வசூலிக்கலாம். எனவே இத்தகைய சேவைக் கட்டணங்களைப் பற்றி முழுவதுமாக அறியக் கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். பொதுவாக, பரஸ்பர நிதியங்களுக்கு எதிரான கடன் மீதான வட்டி விகிதம் 10% முதல் 11% வரை இருக்கும்.

வங்கி கிளைகள் உங்கள் வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தன்னுடைய அனைத்துக் கிளைகளிலும் இந்தக் கடன் வழங்கும் வசதியை வழங்காது. எனவே, எந்தக் கிளையில் கடன் கிடைக்கும் என்பதைச் சரிபார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வங்கிகள் பரஸ்பர நிதி அடமான கட்டணம் மற்றும் அதை விலக்கும் கட்டணம் போன்றவற்றை வசூலிக்கின்றன.

உங்களுடைய பரஸ்பர நிதிகளின் அடமானத்தை எவ்வாறு பதிவு செய்வது மற்றும் பதிவு செய்த அடமானத்தை எவ்வாறு அகற்றுவது? நீங்கள் வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கியவுடன், அந்த நிறுவனம் CAMS அல்லது கார்வி போன்ற பரஸ்பர நிதி ஆர் & டி முகவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்களுக்கு எதிராக அடமானத்தைக் குறிப்பிட்டு, அந்த அடமான உரிமையைத் தனக்கு அளிக்கும் படி கோரிக்கை வைக்கும். R & T முகவர்கள், உங்கள் பரஸ்பர நிதி பிரிவுகளுக்கான அடமான உரிமைகளைக் குறித்த பின்னர் அந்த யூனிட்களுக்கான அடமான உரிமையைக் குறிக்கும் உறுதிப்படுத்திய பத்திரத்தை வங்கிகளுக்கு அனுப்புவதுடன் அதனுடைய ஒரு நகலை முதலீட்டாளர்களுக்கும் அனுப்பி வைக்கும். அது முடிந்தவுடன், உரிமையாளரான நீங்கள் அந்தப் பரஸ்பர நிதி அலகுகளை விற்பனை செய்யத் தகுதியற்றவர்கள் ஆகி விடுவீர்கள். யூனிட்கள் உங்களுடைய பெயரில் இருந்த போதிலும், அதில் நீங்கள் மேலும் முதலீடு செய்ய மட்டுமே தகுதி பெறுவீர்கள். ஆனால் அந்தப் பரஸ்பர நிதி அலகுகளை விற்க உங்களுக்கு உரிமை கிடையாது. ஏனெனில் அந்தப் பரஸ்பர நிதி அலகுகள் வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனத்தின் பெயரில் அடமானத்தில் இருக்கும். நீங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திவிட்டால், வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அடமானத்தை விலக்கிக் கொள்வதாகப் பரஸ்பர நிதி முகவர்களுக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பும். ஒரு வேளை நீங்கள் வாங்கிய கடனில் ஒரு பகுதியை திரும்பச் செலுத்தி விட்டால், வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் எந்தவொரு நிபந்தனையுமின்றி, அடமானத்தில் உள்ள அலகுகளின் ஒரு பகுதியை அடமானத்தில் இருந்து அகற்றுவதற்குக் கோரிக்கை அனுப்பலாம். அதன் படி அடமானத்தில் உள்ள மொத்த அலகுகளில் ஒரு பகுதி அலகுகளுக்கு அடமான உரிமம் அகற்றப்படும். அதன் பின்னர் அந்த அலகுகளை நீங்கள் விரும்பியபடி சந்தையில் விற்றுக் கொள்ளலாம். அதற்குரிய தகுதி உங்களுக்குக் கிடைத்து விடும்.

பரஸ்பர நிதிகளுக்கு எதிரான கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்? வட்டி மற்றும் அசலை உங்களால் திருப்பிச் செலுத்த இயலாவிட்டால், உங்களுக்குக் கடனளித்த நிறுவனம் அடமான உரிமத்தை செயல்படுத்த தொடங்கும். அதாவது அடமான யூனிட்டுகளை விற்று, வருவாயை மீட்டெடுக்க அந்த நிறுவனங்கள் பரஸ்பர நிதி முகவர்களுக்குக் கோரிக்கையை அனுப்பும். அதன் பின்னர்ப் பரஸ்பர நிதி முகவர்கள் அடமான அலகுகளை விற்று அதற்குரிய பணத்தை உங்களுக்குக் கடன் அளித்தவர்களிடம் வழங்கி விடும்.