பெண்கள் தனியாக செல்லும்போது பின்னால் நின்று

பெண்கள் தனியாக செல்லும்போது பின்னால் நின்று அமுக்கிப்பிடித்தால்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 

பெண்கள் தனியாக செல்லும்போது பின்னால் இருந்து யாராவது அமுக்கிப் பிடித்து அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அவர்களை தைரியத்தோடு எதிர்கொள்ளலாம். எப்படி, என்று தெரிந்துகொள்ளலாம்.

இனியும் பெண்கள் பயந்துகொண்டிருப்பதில் பலனில்லை. தவறான நோக்கத்தில் அமுக்கிப்பிடிக்க முயற்சிப்பவரை அதிரடியாகத் தாக்கி வீழ்த்தித்தான் ஆகவேண்டும். பெண்கள் எப்போதுமே தங்களை தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கவேண்டும். அதற்கு அடிப்படையான தற்காப்பு பயிற்சிகளை அவர்கள் பெற்றுக்கொள்வது அவசியம்.

பெண்களிடம் இருக்கவேண்டிய மிகப்பெரிய ஆயுதம், தைரியம் நிறைந்த மனது. மனதில் தைரியம் இல்லாவிட்டால் சிறந்த போர் வீரன்கூட வீழ்ந்துவிடுவான். பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் பெருகிக்கொண்டிருக்க மிக முக்கியமான காரணம், அவர்களை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று ஆண்கள் நினைப்பதுதான். ஒருவர் தன்னிடம் தவறான நோக்கத்தில் தொட்டுவிட்டாலோ, தவறாக நடக்க முயற்சித்தாலோ பெண்கள் தடுமாறிப்போகிறார்கள். அந்த தடுமாற்றம்தான் அவர்களது முதல் பலவீனம். மனதில் தைரியம் இருந்தால் அந்த தடுமாற்றம் தோன்றாது.


பெண்கள் தனியாக செல்லும்போது பின்னால் இருந்து யாராவது அமுக்கிப் பிடித்து அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அவர்களை தைரியத்தோடு எதிர்கொள்ளலாம். எப்படி, என்று தெரிந்துகொள்ள படத்தை பாருங்கள்.

1. பின்னால் நின்று உங்களை ஒருவர் அமுக்கிப்பிடிக்க முயற்சிசெய்தால், இப்படித்தான் அவர் நடந்துகொள்வார்.

2. நீங்கள் தப்பிக்க முயற்சிக்கும்போது அவரது பிடி இறுகும். அப்போது நீங்கள் படத்தில் காண்பதுபோல் லேசாக முன்னோக்கி வளைந்துகொண்டு அவரது முகத்தை நோக்கி ஒருபுறம் திரும்பி பாருங்கள். அப்போது அவரது பிடி, லேசாக நழுவும்.

3. அப்போது படத்தில் காண்பதுபோல் அவரது முன்பகுதியை பலமாக பிடியுங்கள்.

4. எதிரி நிலைகுலைந்து பிடியை விடுவார். அப்போது அவர் தன்னிலையை இழக்கும் அளவுக்கு, உங்கள் கைமூட்டால் அவரது தாடையை பலமாக பதம்பாருங்கள்.

5. பின்நோக்கி விழத்தயாராகும் எதிரிக்கு கைகளால் பலமாக குத்துவிடவேண்டும்.

6. நிலைதடுமாறும் அவரது நெஞ்சில் கால் மூட்டால் பலமாக தாக்கவேண்டும்.