மீன் வடை(Meen-Vadai)செய்வது எப்படி?

மீன் வடை(Meen-Vadai)செய்வது எப்படி?
Meen-Vadai.

            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான மீன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் - 500 கிராம்

 முட்டை - 1
உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க

மீன் வடை

செய்முறை :

மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் அதை எடுத்து முள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் உதிர்த்த மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் கலவையில் சிறிது எடுத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.

ருசியான மீன் வடை தயார்.

இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

ஆரோக்கியத்திற்கு உகந்ததா எண்ணெய்?

ஆரோக்கியத்திற்கு உகந்ததா எண்ணெய்?
Is-the-oil-good-for-health


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


நமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம் பிடிக்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். சமையல் எண்ணெய் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.

நமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம் பிடிக்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். எப்போதும் ஒரே பிராண்ட் எண்ணெயை வாங்குவது சிலரின் வழக்கம். சிலர் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரைத்த எண்ணெயை வாங்குவார்கள். சிலர் எந்த எண்ணெய் தள்ளுபடியில் கிடைக்கிறதோ அதைத் தேர்வு செய்வார்கள். சிலர் சன்ஃப்ளவர் ஆயில், சிலர் ஆமணக்கு எண்ணெய், சிலர் ரைஸ் பிராண்ட் எனும் தவிட்டு எண்ணெய், சிலர் இவை அனைத்தையும் கலந்து வாங்குவார்கள்.

ஆனால், எல்லோருடைய தேர்வும் ஏதோவொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயாகவே (ரீஃபைண்ட் ஆயில்) இருக்கும். விதைகளில் இருந்துவரும் எண்ணெய், கருப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், பலர் கண்ணாடி போல இருக்கும் தூய எண்ணெய்களையே விரும்புகிறோம். எண்ணெயின் நிறத்தை மாற்றுவதற்காக சுத்திகரிக்கின்றனர்.


பிரஷ்ஷாகப் பிழியப்படும் எண்ணெய் ஒருவித நாற்றத்துடன் இருக்கும். அந்த நாற்றத்தைப் போக்க சில கெமிக்கல்களைப் போட்டு சுத்திகரிக்கப்படுகிறது. விதைகளிலிருந்து நசுக்கி எடுக்கப்படும் எண்ணெய் சீக்கிரமே கெட்டுவிடும். அதாவது இயற்கையாக அந்த எண்ணெயின் ஆயுள் சில நாள்களே. அதனால் சில கெமிக்கல்கள் சேர்த்து பிராசஸிங் செய்கிறார்கள்.

எண்ணெய்

ஒவ்வோர் எண்ணெயையும் அதன் தன்மைக்கேற்ப ஓரளவுக்கே சூடு செய்ய முடியும். எல்லாவித எண்ணெய்களையும் புதிதாக எடுத்துத் தனித்தனியாகச் சட்டியில் வைத்துக் கொதிக்க விடுங்கள். சில நிமிடங்களிலேயே அனைத்திலிருந்தும் கரும்புகை வரும். ஏனென்றால், அந்த எண்ணெயின் தன்மை அப்படி. அதனால், தன்மையை மாற்ற ஒரு ஹைட்ரஜன் அணுவை உள்ளே ஏற்றுகிறார்கள். இவ்விஷயங்களுக்காகவே சுத்திகரித்தல் நடைபெறுகிறது.

கொலஸ்ட்ரால் என்பது மிருகங்களால் உற்பத்தி செய்யப்படுவது. அதைத் தாவரங்களால் உற்பத்தி செய்ய முடியாது. அதனால், மார்க்கெட்டில் இருக்கும் எந்த விதை எண்ணெய்களிலும் கொலஸ்ட்ரால் இருக்காது. ஆனால், ஒமேகா6 எனும் ஒருவகை கொழுப்பு இந்த விதை எண்ணெய்களில் மிகுந்திருக்கும். இந்த ஒமேகா6, நம் ரத்தக் குழாய்களின் செல்களை பாதிக்கும்.

அந்தப் பாதிப்பைச் சரிசெய்ய நமது கல்லீரல், கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும். அதனால், இந்த விதை எண்ணெய்கள் நம் கொலஸ்ட்ராலை அதிகரிக்கவே செய்யும். விதை எண்ணெய்களில் கொலஸ்ட்ரால் இல்லை. ஆனால், அவற்றைப் பயன்படுத்திச் சமைத்துச் சாப்பிடும்போது நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது. எந்த எண்ணெயில் பொரித்தாலும் அது, டிரான்ஸ் ஃபேட் உருவாக்கி விடுகிறது. பொரித்த உணவுகளில் இக்கொழுப்பு உள்ளது. இது நேரடியாக நம் இதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கும்.

இன்று நீங்கள் டிரான்ஸ் ஃபேட் எடுப்பதை நிறுத்தினால்கூட, உங்கள் உடலில் உள்ள எல்லா டிரான்ஸ் ஃபேட்களும் இல்லாமல் போக மூன்று ஆண்டு ஆகும். நீங்கள் எந்த உணவுப் பொருளை வாங்கினாலும் இந்த டிரான்ஸ் ஃபேட் அளவைப் பாருங்கள். இது கொஞ்சமே இருந்தாலும்கூட, அதை வாங்கவே கூடாது.

ஆடி மாதம் கூழ் (koozh) ஊற்றுவது ஏன்?

ஆடி மாதம் கூழ் (koozh) ஊற்றுவது ஏன்?
aadi-masam-amman-koozh


            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம். இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

ஆடி மாதம் வந்துவிட்டாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி விடும். அதில் முக்கியமானது அம்மன் கோவிலில் ஊற்றப்படும் கூழ். ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம். இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி முனிவரை, பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி, துக்கம் தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் தன்னுடைய உயிரையும் விட முடிவு செய்த ரேணுகாதேவி, தீயை மூட்டி அதில் இறங்கினார். அப்போது இந்திரன் மழை பொழியச் செய்து தீயை அணைத்தான். இருப்பினும் தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார். பின்னர் பசியைப் போக்கிக் கொள்ள அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார்.


அங்குள்ள மக்கள், அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாகக் கொடுத்தனர். அதைக் கொண்டு கூழ் தயாரித்து சாப்பிட்டார், ரேணுகாதேவி. அப்போது அவர் முன்பாக தோன்றி சிவபெருமான், “உலக மக்களின் அம்மை நோய் நீங்க, நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும்” என்று வரம் அளித்தார்.

இந்தச் சம்பவத்தை நினைவு கூரும் வகையில்தான், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ‘ஆடிக்கஞ்சி’ என்பர்.

4 Types of Stocks in Share Market Investment - K Karthik Raja's Share Market Training

4 Types of Stocks in Share Market Investment  - K Karthik Raja's Share Market Training

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

4 Types of Stocks in Share Market Investment  

4 Types of Stocks in Share Market Investment  - K Karthik Raja's Share Market Training

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 
Technical Analysis Training, Fundamental Analysis Training, Best Stock market Training in Chennai, Top share market training at Chennai, Best Share market training in chennai

What is meant by Interest ? - K Karthik Raja's Share Market Training

What is meant by Interest ? - K Karthik Raja's Share Market Training

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

What is meant by Interest  - K Karthik Raja's Share Market Training

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 
Technical Analysis Training, Fundamental Analysis Training, Best Stock market Training in Chennai, Top share market training at Chennai, Best Share market training in chennai

மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் - Mangadu Kamatchi Amman Temple

மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் - Mangadu Kamatchi Amman Temple


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

                                       https://share-market-training-rupeedesk.business.site/

மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் “மாங்காடு” என்னும் காரணப் பெயர் பெற்றது.

இந்த ஆம்ராரண்யத்தில், ஒற்றை மாமரத்தடியில், ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரிந்து, பின்னர் காஞ்சியிலே ஈசனை மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம். மாங்காடு தலத்திற்கு ஒரேயரு முறை வந்து விட்டால் போதும், அதன் பின்னர் நம்மையறியாமல் நம் மனம் மாங்காட்டிற்கு நம்மை செலுத்தும்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.


இந்த மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாறு வருமாறு:-

ஒரு சமயம் கயிலை மலையிலே தனித்திருக்கும் போது ஞானப் பூங்கோதையாம் எம் அன்னை சிறு குழந்தையைப் போல விளையாட்டாக சூரிய , சந்திரர்களான அந்தப் பித்தனின் கண்களை பொத்த, அதனால் சர்வ லோகங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது. மக்களும் தேவர்களும், கடவுட் பூஜையிலிருந்து வழுவினர்.

இப்பாவம் அம்மையை சாராது என்றாலும், உலகத்தோர் உய்யும் பொருட்டும் அவர்கள் 32 அறங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டும் அம்மையே உலகமக்களுக்கு அவற்றை நடத்தி காட்ட வேண்டி பூலோகத்திற்கு சென்று காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்து சிவ பூஜை செய்யுமாறும், பின் தாமே வந்து மணம் செய்தருளுவதாகவும் அருளினார் சிவபெருமான்.

இறைவனின் ஆணைப்படி அம்மன் பூலோகத்தில் ஆம்ரவனமாம் இந்த மாங்காட்டுப்பதியிலே வந்து அவதரித்தாள். மாங்காட்டிலே காமாட்சியாய் அவதரித்த அன்னை ஈஸ்வரனை வேண்டி பல காலம் காத்திருந்தாள், பலன் ஏதும் இல்லாத காரணத்தாலும் ஐயனைக் காண வேண்டும் என்ற தாபத்தாலும் ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முணையில் ஒற்றைக் காலில் சிவனைக் காண கடுந்தவம் புரியத் தவக் கோலம் பூண்டாள்.
இதனால் அம்மை இத்தலத்திலே “தபசு காமாட்சி” என்று அழைக்கப்படுகின்றாள்.

ஐந்தணலிலே தன் இடக்காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி நடு அக்னியில் படும்படியும், வலது காலை இடது தொடைக்கு சற்றும் மேல் புறத்தில் இருக்குமாறும், இடது கரத்தை நாபிக் கமலத் திற்கு சற்று மேற்புறமாயும், வலது கரத்தில் ஜப மாலையுடன் தனது சிரசிற்கு மேலும், தனது அழகியத் திருக்கண்களை மூடிய கோலத்தில் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடுத் திருத்தலத்தில் உக்ர தவம் புரியலானாள் அம்மை.

மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த மகேஸ்வரி மேல் கருணை கொண்ட செஞ்சடையோன் அம்மைக்கு அருள் செய்ய வரும் போது, இதே தலத்தில் தன்னை பூசித்து வந்த அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். எனவே அம்மையை அசரீரியாக காஞ்சிக்கு செல்லுமாறும் தான் அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் கூறினார்.

ஆம்ரவனத்தில் தவம் இருந்த அம்மை , தன் நாயகன் சொல் கேட்டு அவரை அடைய காஞ்சி மாநகருக்கு சென்றாள். அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வரலானாள். பின்னர் கம்பாநதியை பெருகிவரச் செய்து தழுவக்குழைந்த நாதராகி பங்குனி உத்திர நன்னாளில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான். இவ்வாறு மாங்காட்டிலே தவக்கோலம் காட்டிய பண்டாசுரனை அழித்த அம்பிகை அதனால் காஞ்சியிலே மணக் கோலம் காட்டி “கல்யாண காமாட்சி “ யாக அருள் பாலிக்கின்றாள்.

பவளம் போல் மேனியனை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏற்பட்ட அவசரத்தால், தான் தவத்திற்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் அம்மன் மாங்காட்டில் இருந்து காஞ்சி சென்று விட்டதால் அந்த தீயின் உக்கிரம் தாங்காமல் இத்தலத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்க மாட்டாமல் தவித்தார்கள் நிலங்கள் வற்றிப் போயின.

அவர்களின் துன்பத்தை துடைக்கும் விதமாக ஆதி சங்கரர் மாங்காட்டுக்கு வந்தார். மக்கள் அவரிடம் தங்கள் குறைகளைக் கூற அவரும் தன் ஞான திருஷ்ட்டியால் உணமையை உணர்ந்து லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளினால் ஆன “அஷ்ட கந்தம்” அர்த்த மேரு என்னும் ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இதனால் தீயின் உக்கிரம் மறைந்து மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.

இந்த ஸ்ரீ சக்ரம் ராஜ யந்திரமாகும். அதாவது ஆமை (கூர்ம) வடிவத்தை அடித்தளமாகக் அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீ சக்ரம் உண்டாக்கப்பட்டுள்ளது.

எட்டு மூலிகைகளால் ஸ்ரீ சக்கரத்தை ஆதி சங்கரர் உருவாகியதால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஜவ்வாது சந்தனம், புனுகு போன்ற இன்ன பிறவும் சாற்றப்படுகின்றது. இத்திருக்கோவிலில் ஸ்ரீ சக்கரத்திற்கே முக்கிய வழிபாடு நடத்தப்படுகிறது. குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன.

தபஸ் காமாட்சி மோன நிலையில் இருப்பதால், மூலஸ்தானத்திலிருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஓர் கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமே உருவான “ஆதி காமாட்சி” அம்மனை மூலஸ்தானத்தில் காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். கிழக்குப் பார்த்த நிலையில் அம்பாள் இருந்தால், அங்கு அம்பாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும் என்பது மரபு.

அவ்வாறே இங்கும் காமாட்சி அம்மனுக்கு பிரதானமான தனி சன்னதி உள்ளது. மாமரத்து அடியில் அம்மன் தவம் செய்ததால் தல விருட்சமாக மாமரம் உள்ளது.

ஆகஸ்டு 4-ந்தேதி 1008 கலச அபிஷேகம் :

குழந்தை பேறு, வேலை வாய்ப்பு போன்றவற்றை தரும் அற்புதமான தலமாகவும் மாங்காடு தலம் திகழ்கிறது. திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பகல் 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. வெள்ளி மற்றும் பவுர்ணமியில் ஊஞ்சல் சேவை நடக்கிறது.

நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள். இத்தலத்தில் எல்லா மாதமும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது. பவுர்ணமி தோறும் 9 கலசங்களில் 9 சக்திகளை ஆவாசனம் செய்து நடத்தப்படும் நவகலச ஹோமமும், புஷ்பாஞ்சலியும் மிகவும் பிரசித்தம்.

தை மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளிக் கிழமைகளில் 108 கலச அபிஷேகம் நடைபெறும். ஆகஸ்டு 4-ந்தேதி ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் ஆதியில் அம்மன் புற்றில் இருந்ததாக கருதப்படுகிறது.

இங்குள்ள நவகன்னிகை சன்னதி சிறப்பு வாய்ந்தது. அம்மன் தவம் இருந்த போது இந்த நவ கன்னிகைகள்தான் காவல் புரிந்தனர்.

இவர்களை வழிபட்டால் உடல் உபாதைகள் நீங்கி சுகபோகம் உண்டாகும். கோவில் வட திசையில் திருக்குளம் உள்ளது. பிரச்சினைகள் தீர, 18,27,108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்ச மாலை சாற்றி வழிபடலாம். புரட்டாசி பவுர்ணமியன்று நடக்கும் நிறைமணி தரிசனத்தில் கலந்து கொண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

எலுமிச்சம் பழத்தில் மகிமை :

அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் முதல் வாரம் வரும் போது மற்ற பூஜைப் பொருட் களுடன் இரண்டு எலுமிச்சை பழம் எடுத்து செல்ல வேண்டும்.

அர்ச்சனை முடிந்ததும் அர்ச்சகர் ஒரு எலுமிச்சை பழத்தையும் மற்ற பிரசாதங்களையும் கொடுத்து அடுத்த வாரம் வரும் போது மறக்காமல் இந்த எலுமிச்சை பழத்தையும் வேறு இரண்டு எலுமிச்சம் பழங்களையும் எடுத்து வரச் சொல்வார்.

வீட்டுக்கு எடுத்து வந்த எலுமிச்சம் பழத்தையே தேவி காமாட்சியாக வைத்து ஆறு நாட்களும் பூஜித்து வரவேண்டும். ஆறு வாரம் சென்று அம்மனை வழிபட்ட பின் ஏழாவது வாரம் பசும்பாலைக் குங்குமப்பூ, கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி மற்ற பூஜைப் பொருட்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.

அர்ச்சனை செய்து நிவேதனம் முடிந்து பாலைத் திருப்பித் தருவார் அர்ச்சகர். பாலில் சிறிது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வைத்துக் கொண்டு மீதியை அங்குள்ள அனைவருக்கும் பகிர்ந்தளித்து விட்டு வீட்டிற்கு வந்து விட வேண்டும்.

நம்முடைய பிரார்த்தனை ஆறு வாரத்திற்குள்ளாக நிறைவேறி விடும். நோய் நொடிகள் அகன்று ஆரோக்கியம் ஏற்படும்.

கடும்பாடி சின்னம்மன் ஆலயம் - சைதாப்பேட்டை

கடும்பாடி சின்னம்மன் ஆலயம் - சைதாப்பேட்டை
Kadumbadi-Chinnamman-Temple-Saidapet Chennai


             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

                                       https://share-market-training-rupeedesk.business.site/


சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் ஆலயம் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் ஆலயம் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இந்தப் பகுதி மக்களுக்கு சின்னம்மன்தான் இஷ்டதெய்வம், காவல் தெய்வம் எல்லாமே! அழகிய கோபுரத்துடன் திகழ்கிறது கோவில். நுழைவாயிலின் வலப்புறத்தில் மதுரை வீரனும், இடப்புறத்தில் காத்தவராயனும் காட்சி தருகின்றனர். உள்ளே... கருணையும், உக்கிரமும் பொங்க, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் சின்னம்மன்.

கடன் தொல்லைகள் தீர, கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்க, திருமண தடை நீங்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள்.

 பக்தர்கள் ஆடி மாதம் பொங்கல் படையலிட்டும், அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சார்த்தியும், மஞ்சள் சரடு கட்டியும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

கோவில் உள்ளே இருக்கும் புற்றுச் சன்னதி ரொம்பவே விசேஷமானது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். சின்னம்மனை வணங்கிவிட்டு, புற்றுக்கு பால் அல்லது முட்டை படைத்து வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விரைவில் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு (ராகு காலம் நிறைவுறும் நேரம்) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தித்தால், கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்!

இங்குள்ள மக்கள் தங்கள் வீட்டில் எந்த விசேஷம் வைபவம் என்றாலும், இந்தக் கோவிலுக்கு வந்து அம்மனின் திருப்பாதத்தில் முதல் பத்திரிகையை வைத்துவிட்டே அடுத்தடுத்த வேலைகளைத் தொடங்குகின்றனர். அப்படி அழைத்தால், அந்த விழாவை அம்மனே முன்னின்று சிறப்பாக நடத்தி அருள்வாள் என பக்தர்கள் போற்றுகின்றனர். கோவிலில் வேப்ப மரமும், பனைமரமும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. வேப்ப மரத்துக்கு மஞ்சள் சரடு கட்டி, சின்னம்மனை வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!

ஆடி மாதம் வந்துவிட்டால் சின்னம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் இருப்பார்கள். அமாவாசைக்குப் பிறகு வருகிற வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது பிரம்மோற்சவ விழா. இந்தப் பத்து நாட்களும், தங்களது பிரார்த்தனை நிறைவேறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொங்கல் படையலிட்டும் அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சார்த்தியும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

இந்த நாளில் சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை, திருவீதியுலா என அம்மனைக் காணக் கண் கோடி வேண்டும். 9-ம் நாள் விழாவில் திருவீதிவிழா, பொங்கல் படையல், அக்னிக் கரகம் எடுத்து ஆடுதல்... என ஊரே அமர்க்களப்படும். 10-வது நாள் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடைபெறும். கார்த்திகையில் 108 சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெறும்.

கடும்பாடி சின்னம்மன் திருக்கோவிலில் அம்மன் சுயம்பு வடிவில் அருள்பாலிப்பதும், இவரை அணுகினால் கடன் தொல்லைகள் தீரவும், கணவன் மனைவி அன்னியோன்யமாய் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையாய் வாழவும் திருமணத் தடை நீங்கவும் அனுக்கிரகம் செய்வார் என்பது சிறப்பு. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தல் அமோகமாய் இருக்கும். அம்மை நோய் கண்டவர்களுக்கு சங்கு தீர்த்தம் மருந்தாய் அமைகிறது.

காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்துள்ளது.

ஆடி மாத பிரம்மோற்சவ விழா

சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. 11 நாட்களுக்கு இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு வகையான வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாத பிரம்மோற்சவ விழா ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

1-8-2019 (வியாழன்) மாலை புற்றுமண் எடுத்து வருதல்.
2-8-2019 (வெள்ளி) காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் கொடியேற்றம், மாலையில் யாளி வாகனம்.
3-8-2019 (சனி) காலை பவளக்கால் விமானம், மாலையில் மயில் வாகனம்.
4-8-2019 (ஞாயிறு) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் அன்னவாகனம்.
5-8-2019 (திங்கள்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் நாக வாகனம்.
6-8-2019 (செவ்வாய்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் சிம்ம வாகனம்.
7-8-2019 (புதன்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் யானை வாகனம்.
8-8-2019 (வியாழன்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் தொட்டி உற்சவம்.
9-8-2019 (வெள்ளி) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் குதிரை வாகனம்.
10-8-2019 (சனி) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் காமகோடி விமானம், அக்னி கரகம்.
11-8-2019 (ஞாயிறு) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் சிம்ம வாகனம்.
12-8-2 019 (திங்கள்) மாலையில் கந்தர்வ வாகனம்.

தெய்வீக சக்தி நிறைந்த வேப்பிலை

கருமாரிக்கும் இதர மாரியம்மன் அம்பிகைகளுக்கும் மிகவும் இஷ்டமான மரம் வேப்பமரம் தான். அரச மரத்தையும், வேப்பமரத்தையும் தெய்வீக மரங்கள் என்று சொல்வார்கள். அதனால் தான் அவைகளை தம்பதிகளாகக் கருதி ஒன்று சேர வளரச் செய்து திருமணமும் செய்விப்பார்கள். மரங்களில் வேப்ப மரத்தை சக்தியாகவும், அரச மரத்தை சிவமாகவும் கருதுவதுண்டு. மாரியம்மனுக்கு வாசனைப் பூக்களைவிட வேப்பிலை மிக பிடித்தமானது. நோய்களுக்கு மந்திரிக்க வேப்பிலை உபயோகிக்கிறார்கள். இம்மரத்தால் தெய்வத் திருவுருவங்கள் கூட செய்கிறார்கள்.

வேப்பமரத்தை சக்தி அம்சமாக கூறுவானேன்? சூரியனால் கொடுக்கப்படுகிற சக்தியை வெகு மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வது வேம்பு ஒன்றே என்று கருதப்படுகிறது. சூரிய சக்தியை கிரஹித்த வேப்பமரம் அதைக் கொண்டு எல்லா ஜீவராசிகளும் முக்கியமாக மனிதவர்க்கத்திற்கும் தொண்டு செய்து வருகிறது. சூரியனுடைய முக்கியமான அம்சங்களால் ஏற்பட்டது. உணர்ச்சிக்கு உஷ்ணம்போல ருசிக்கு கசப்பாகும்.

இக்குணங்களை அடைந்துள்ள வேம்பில் உஷ்ணத்தை சாந்தி செய்யும்படியான குணமும் அடங்கியுள்ளது. அதனாலேயே அதை சக்தி என்றும், பெண் ரூபம் என்றும் சொல்கின்றனர். வேம்புக்கு பராசக்தி என்ற பெயரும் உண்டு. கிராம தேவதைகள் இருக்கும் இடமெல்லாம் வேப்ப மரத்தைக் காணலாம். கிராம தேவதைகள் நம் மீது சினம் கொள்ளாமல் எப்போதும் சாந்தமாகவே இருக்க வேப்பிலை உதவும். வேப்பம் பூவை உட்கொள்வதால் குடல் சுத்தமாகும். அஜீர்ணம் நீங்கும். வேம்பில் ஆயிரம் மருந்து உள்ளது என்பது முற்றிலும் உண்மை. அதனால் தான் ஆடி மாதம் அம்மன் திருத்தலங்களில் அதிக அளவில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

18 சித்தர்கள் மந்திரம்

18 சித்தர்கள் மந்திரம்

18 சித்தர்கள் மந்திரம்

     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். அந்த வகையில் 18 சித்தர்கள் மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.

சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். அந்த வகையில் 18 சித்தர்கள் மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.

அகத்தியர் மூல மந்திரம்


ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி

போகர் மூல மந்திரம்

ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி


திருமூலர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி

இடைக்காடர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி


கருவூரார் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி


கோரக்கர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி


குதம்பை சித்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி


பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி


சட்டைமுனி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி


சிவவாக்கியர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி


சுந்தரானந்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி


கொங்கணர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி


வான்மீகர் மந்திரம்

ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி

கமலமுனி மந்திரம் ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி


மச்சமுனி மந்திரம்

ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி


பதஞ்சலி மந்திரம்

ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி


இராமத்தேவர் மந்திரம்

ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி


தன்வந்த்ரி மந்திரம்

ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி

12 Important Steps to Investing - K Karthik Raja Share Market Training

12 Important Steps to Investing  - K Karthik Raja Share Market Training

                                 
         Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
          RUPEEDESK - SHARE MARKET TRAINING 
                           https://share-market-training-rupeedesk.business.site

12 Important Steps to Investing  - K Karthik Raja Share Market Training
12 Important Steps to Investing  - K Karthik Raja Share Market Training

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 
Technical Analysis Training, Fundamental Analysis Training, Best Stock market Training in Chennai, Top share market training at Chennai, Best Share market training in chennai

When to start Investing - K Karthik Raja Share Market Training

When to start Investing - K Karthik Raja Share Market Training

                                 
         Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
          RUPEEDESK - SHARE MARKET TRAINING 
                           https://share-market-training-rupeedesk.business.site

When to start Investing - K Karthik Raja Share Market Training

When to start Investing - K Karthik Raja Share Market Training

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 
Technical Analysis Training, Fundamental Analysis Training, Best Stock market Training in Chennai, Top share market training at Chennai, Best Share market training in chennai

ஆடி மாத விரதங்கள்

ஆடி மாத விரதங்கள்


         Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
          RUPEEDESK - SHARE MARKET TRAINING 
                           https://share-market-training-rupeedesk.business.site

ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் விழாக்கள் வரிசை கட்டி நிற்கும். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆடி தபசு


ஒரு முறை அம்பாள், சிவபெருமானிடம் ஒரு வரம் கேட்டாள். அதாவது விஷ்ணுவுடன் இணைந்து காட்சி தர வேண்டும் என்பது அவளது கோரிக்கை. உடனே சிவபெருமான், “பொதிகை மலையில் புன்னை வனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும்” என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இதையடுத்து ஆடி பவுர்ணமி நாளில், பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி ‘சங்கர நாராயணர்’ கோலத்தில் இறைவன் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு, அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இந்த விழா இன்றும் பாரம்பரியமாக சங்கரன்கோவில் திருத்தலத்தில் நடைபெற்று வருகிறது.

ஆடிப்பூரம்

அம்பாளுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இந்த சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகுசிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும்.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் போன்றவற்றை தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன், மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றை தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரர்களை, தாய்- தந்தையை இழந்தவர்கள் அமாவாசை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பான ஒன்றாகும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆடி கிருத்திகை

கார்த்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி செவ்வாய்.. ஆடி வெள்ளி..

‘ஆடி செவ்வாய் தேடிக்குளி’ என்பார்கள். ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என்பதே இந்த பழமொழி கூறும் தத்துவம். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் பலரும், ‘அவ்வையார் விரதம்’ கடைப்பிடிப்பார்கள். கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் மேற்கொள்வார்கள்.

ஆடி பெருக்கு

ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். இந்த விழாவானது ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

உடற்பயிற்சியை தொடங்குவது - தொடர்வது எப்படி?

உடற்பயிற்சியை தொடங்குவது - தொடர்வது எப்படி?


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்                                        Click Here : Register for Free Training
 Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
  RUPEEDESK - SHARE MARKET TRAINING 
https://share-market-training-rupeedesk.business.site


நானும் உடற்பயிற்சி செய்யும் பேர்வழி’ என்று தடாலடியாக தலைதெறிக்க ஓடுவதோ, கண்ணில் காணும் பளுவை எல்லாம் தூக்குவதோ ஆபத்தில்தான் முடியும்.

உடற்பயிற்சியை தொடங்குவது எப்படி?
‘நானும் உடற்பயிற்சி செய்யும் பேர்வழி’ என்று தடாலடியாக தலைதெறிக்க ஓடுவதோ, கண்ணில் காணும் பளுவை எல்லாம் தூக்குவதோ ஆபத்தில்தான் முடியும். அப்படியென்றால் உடற்பயிற்சியை எப்படித்தான் ஆரம்பிப்பது?

சீரான மூச்சில் இருந்து உடற்பயிற்சிக்கான மூச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள 6 முதல் 8 வாரங்கள் தேவை. அப்போது மெதுவாக வாக்கிங், வேகநடை, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என உங்கள் வயதுக்கேற்ப தொடங்க வேண்டும்.

உடற்பயிற்சிக்கான சற்று அதிக பளுவை தாங்கக்கூடிய இதய வலிமை, நுரையீரல் வலிமை, எலும்புகள் இணையுமிடங்களின் வலிமை, தசைகளின் வலிமை, மன வலிமை என அனைத்தையும் படிப்படியாக மூச்சுத் திறமையால் கையாள தொடங்கவேண்டும்

முதல் 8 வாரங்கள் உடற்பயிற்சியை மெதுவாக, சிறியதாகத் தொடங்கி, சீராகக் கூட்டி ஆனால், தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் அல்லது அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் மீண்டும் தொடர்வது மிகஅவசியம்.

இல்லாவிட்டால் நீங்கள் பட்ட சிரமம், உங்கள் பலம் அனைத்தும் பலவீனமாக வாய்ப்புண்டு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் உடல், மன வலிமை கூடிக்கொண்டே இருப்பது உண்மை. வாரம் 4 அல்லது 5 நாட்கள், அதில் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் தொடர் உடற்பயிற்சி மிகவும் அற்புதமான தொடக்கமாகும்.

சிறப்புத் துறையில் ஈடுபாடு (Principle Of Specificity) முதல் 6 8 வாரங்களில் படிப்படியான முன்னேற்றத்துக்குப் பிறகு மேலும் படிப்படியாக, சிறுகச் சிறுக, தங்களுக்குத் தேவையான விளையாட்டுகளில் கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, நீந்தல், சிறகுப்பந்து, டென்னிஸ், ஓட்டப்பந்தயம், குஸ்தி, பாக்ஸிங், பளு தூக்குதல், நடனப் பயிற்சிகள், ஆண் அழகன், பெண் அழகி என குறிப்பிட்ட பயிற்சிகளில், சிறந்த பயிற்சியாளர்களின் துணையோடு கவனம் செலுத்த வேண்டும்.

இந்த சிறப்புப் பயிற்சிகள் அவரவர் விளையாட்டுக்கேற்ப, பலவித மாறுதல்கள் கொண்டதாக அமையும். எல்லாவற்றுக்கும் ஒரே விதமான பயிற்சி பலன் அளிக்காது. குறிப்பிட்ட பயிற்சி அளிப்பதில் வல்லுனரான பயிற்சியாளரிடம் செல்வதே உங்களின் திறமையை வளர்க்கவும் அந்த விளையாட்டில் நீங்கள் தலைசிறந்து விளங்கவும் வாய்ப்பாக அமையும். ஒன்றுமே செய்யாமல் சோம்பேறியாக இருப்பது, உடலை வாட்டி வதைத்து கொள்வது இவ்விரண்டையுமே நம் உடல் அறவே வெறுக்கிறது.

சமீபகாலமாக சில ஆண்கள் 6 அல்லது 8 பேக் என்று சொல்லிக் கொண்டு, 10 மணி நேரம் ஜிம்மில் தண்ணீர் கூடக் குடிக்காமல் உடலை வதைக்கின்றனர். அதே 24 மணி நேரமும் டி.வி. பார்ப்பது, மொபைல் போனிலேயே வாழ்வது என்றும் சிலர் இருக்கின்றனர்.

சில பெண்கள் எப்போதும் துணி துவைப்பது, தண்ணீர் அடித்து, எடுப்பது, அடுப்படியில் அவதிப்படுவது என இருப்பார்கள். இப்படி உடலுக்கு ஓய்வே இல்லாமல், உடலை வதைத்து, கொடுமைப் படுத்துவதையும் நம் உடல் விரும்பாது. அப்படி என்றால் உடலுக்கு உகந்ததுதான் என்ன?

நம் உடல் சில நேரங்களில் சிறிய, பளு குறைந்த வேலைகளையும் சில நேரங்களில் சற்று அதிக பளு உடைய வேலைகளையும் மாறி மாறிச் செய்து, சற்று ஓய்வுக்குப் பிறகு மீண்டும் செய்வதை மிகவும் ரசித்து விரும்புகிறது. இது உடற்பயிற்சி செய்வோருக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே பொருந்தும். ஆகவே... உடலை நேசித்து அதன் அன்பைபெறுங்கள்!

What is Investment ? - K Karthik Raja's Share Market Training

What is Investment  ? - K Karthik Raja's Share Market Training

                                 
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்                        Click Here : Register for Free Training
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
https://share-market-training-rupeedesk.business.site

What is Investment - K Karthik Raja's Share Market Training


K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 
Technical Analysis Training, Fundamental Analysis Training, Best Stock market Training in Chennai, Top share market training at Chennai, Best Share market training in chennai