திலா ஹோமம் ( Thilaa Homam )

திலா ஹோமம் ( Thilaa Homam ) என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



பித்ருக்களின் மனம் குளிரவைக்கும் திலா ஹோமம் !

பல ஆயிரக்கணக்கான அன்பர்களின் வருங்கால ஷேமத்தை மனதில் கொண்டு, அவர்கள் வாழ்வில் நிச்சயமாக ஒரு மலர்ச்சியை ஏற்படுத்த, அந்த சர்வேஸ்வரனை முழு மனதாய் தியானித்து – திலா ஹோமம் பற்றி ஒரு முழு விளக்கக் கட்டுரை சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

தில் என்றால் எள். திலா ஹோமம் ( Thilaa Homam ) என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம். சாதாரணமாக பிதுர்க்களுக்கு செய்யும் தர்ப்பனத்திற்கும், திலா ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. திலா ஹோமம் – ராமேஸ்வரம் அல்லது திருப்புல்லாணி ஆகிய இரு இடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.

ராமேஸ்வரம் – நம் நாட்டின் தொன்மை வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களில் மிக முக்கியமானது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த ராமநாதரால் உலகம் எங்கும் கோடிக்கணக்கான பக்தர்களை வசீகரித்து, பல கோடிக்கணக்கான ஆன்மாக்களின் பாவங்களைக் கரைத்து ஜீவன் முக்தி அடையை செய்யும் தவ பூமி.

திலா ஹோமம் எங்கே செய்வது? ஏன் செய்ய வேண்டும்? யார் யார் கண்டிப்பாக செய்ய வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்ன பலன்கள் ஏற்படும் என்கிற உங்கள் மனதில் தோன்றும் கேள்விளுக்கு விளக்கம் இதோ.

நீங்கள் அந்தணர்களாய் இருந்தால் நீங்கள் செல்லவேண்டிய இடம் திருப்புல்லாணி. மற்ற அனைத்து சமூகத்திற்கும் ராமேஸ்வரத்தில் செய்வது தான் முறை. ஒரு சிலருக்கு ராமேஸ்வரத்தில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிப்பதும் வழக்கம்.

திலா ஹோமம் முடித்தவுடன் – தங்களால் முடிந்த அளவுக்கு ( 3 பேருக்கோ, 9 பேருக்கோ, 27 பேருக்கோ ) அன்னதானம் செய்வதும் நல்லது.

பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம் தான். எவர் ஒருவர் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பனங்கள் தரப் படவில்லையோ, எவர் ஒருவர் தலைமுறையில் – செயற்கை மரணம் ( கொலை) , ஆத்மாவின் விருப்பம் இல்லாமல் பிரிந்த உயிர் – விபத்துகள் போன்றவை, தற்கொலை , வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்காமல் , அநாதை இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றில் அவர்களை வாட விடுதல் , போன்ற சமபவங்கள் நடந்திருப்பின், அந்த குடும்பத்திற்கு பிதுர் தோஷம் ஏற்படுகிறது. அந்த ஜாதகர் திலா ஹோமம் செய்யாமல் வேறு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் அது உரிய நிவாரணம் அளிக்காது.

எவர் ஒருவர் வாழ்வில் திருமணத் தடை, விவாக ரத்து , நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை , முறைகேடான உறவு முறைகள் – அதனால் வழக்கு, வில்லங்கம், குழந்தைகள் இல்லாமை, கர்ப்பசிதைவு, குழந்தைகள் – பெற்றோர் மனம் கோணும்படி வேறு மதம் அல்லது சமூகத்தில் திருமணம் புரிதல், எத்தனையோ உரிய தகுதிகள் இருந்தும் , திறமைகள் இருந்தும் வாழ்வில் அதற்குரிய நிலையை அடைய முடியாமல் போதல், குடும்பத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுதல் , இதோ முடிந்துவிட்டது இந்த வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கடைசித் தருணத்தில் – நம் கை நழுவி போகும் நிலை , என்று – திருப்தி அடையாத ஆத்மாக்கள் – அந்த தலைமுறையை , அது தாய் தந்தையோ , வாரிசுகளோ – அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை , சாந்தி அடையச் செய்து – அவர்களின் முழு ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படும் ஹோமமே இந்த திலா ஹோமம்.

ஜாதகப்படி – யார் யாருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை எப்படி உணர முடியும்?

எல்லோருடைய ஜாதகத்திலும் அவரவர் பிறந்த நேரப்படி லக்கினம் கணிக்கப்படுகிறது. மொத்தம் இருக்கும் பன்னிரண்டு கட்டங்களில் , ஒரு கட்டத்தில் ” ல” என்று எழுதி இருக்கும். இது அந்த ஜாதகரின் முதல் வீடு என்று அழைக்கப்படுகிறது . கடிகாரச் சுற்றுப்படி 1 முதல் 12 வீடுகள் எண்ணிக்கொள்ளவும். எவர் ஒருவர் ஜாதகத்தில் – 1 , 5 , அல்லது 9 எனப்படும் திரிகோண வீடுகளில் – சர்ப்ப கிரகங்கள் எனப்படும் இராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் – அது பிதுர் தோசமுள்ள ஜாதகம் என்று கருதப்படுகிறது. இதைத் தவிர எவர் ஒருவர் ஜாதகத்தில் இரண்டு முக்கியமான வீடுகளும் – பூர்வ புண்ணியம் எனப்படும் 5 ஆம் வீடும், கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் வீடும் – பாதிக்கப் பட்டிருந்தால் , அதன் அதிபதிகள் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் , அந்த அதிபதிகளின் திசை நடக்கவிருந்தால் அவர்களும் பிதுர் தோஷத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பொருள்.

இது ஒரு பவர்புல் ஹோமம். முழு மனதுடன் செய்ய வேண்டும். முறைப்படி செய்ய தவறினால் அது செய்பவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது போக முக்கியமான விஷயம் – நம் வாழ் நாளில் ஒரே ஒரு தடவை மட்டுமே இதை செய்ய வேண்டும். சரியாக செய்யப்படும் திலா ஹோமம் , ஒரு சந்ததிக்கே நல்ல வழிகாட்டும்.இதை செய்த ஆறு மாதங்களில் – நீங்கள் இதைக் கண்கூடாக உணர முடியும். உங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனை நிகழும்.

உங்கள் ஜாதகப்படி பலம் பொருந்திய நாளில் இதைச் செய்வது நல்லது. பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் செய்ய ஆரம்பித்தால் , காலை 9 மணி அளவில் தான் முடியும். அந்த தினம் இரவு ராமேஸ்வரத்தில் தங்கி , மறுதினம் நீங்கள் ஊருக்கு கிளம்புவது நல்லது.

யோக பலம் பொருந்திய நாளை எப்படி தெரிந்து கொள்வது ?
உங்கள் லக்கினத்திலிருந்து – 9 ஆம் வீட்டுக்கு உரியவரின் கிழமை உங்கள் வாழ் முழுவதும் – யோகமான நாளாக கருதப்படும். உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்தால், 9 ஆம் வீடு தனுசு. அதற்கு அதிபர் – குரு பகவான். ஆகவே வியாழக்கிழமை – உங்களுக்கு யோகமான நாள். ஆகவே மேஷ லக்கினத்தில் பிறந்தவராக இருந்தால் – ஒரு வளர்பிறை வியாழக்கிழமையில், உங்கள் ராசிக்கு சந்திர அஷ்டமம் இல்லாத நாளில் – திலா ஹோமம் செய்து , அன்று இரவு தங்கி, வெள்ளிகிழமை ராமேஸ்வரத்திலிருந்து கிளம்புதல் நலம். இதைபோலே , உங்கள் ஜாதகப்படி யோகமான நாளைத் தெரிந்துகொண்டு செயல்படவும்.

ஜாதகப்படி பிதுர் தோஷம் இல்லாதவர்களும், விருப்பம் இருந்தால் – வாழ்வில் ஒரே ஒரு முறை – திலா ஹோமம் செய்து கொள்ளலாம்.

ஒருவருக்கு திலா ஹோமம் செய்ய, கிட்டத்தட்ட சுமார் 10 இலிருந்து 15 ஆயிரம் வரை செலவு ஆகும். அனைவருக்கும் அந்த சர்வேஸ்வரனின் ஆசிகளும், முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

ராமேஸ்வரம், திருப்புல்லாணி , தேவிப்பட்டினம் ( நவபாஷாணம்). இந்த இரு இடங்களுமே ராமேஸ்வரத்திற்கு வெகு அருகில் இருக்கும் ஸ்தலங்களாகும். இதில் நவபாஷானத்தில் இருக்கும் நவகிரகங்கள் ஸ்ரீ ராமராலேயே நிறுவப்பட்டு , வழிபட்ட நவகிரகங்களாகும். நாமே கிரகங்களை வலம் வந்து, நம் கைப்பட அர்ச்சித்து வழிபடலாம். (ஆண், பெண் இருபாலாரும்).

முகச்சுருக்கத்தை போக்கும் இயற்கை வழிமுறை

முகச்சுருக்கத்தை போக்கும் இயற்கை வழிமுறை


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



முகச்சுருக்கத்தைப் போக்க, இயற்கை வழிமுறைக்கு மாறுங்கள். இதுதான் உங்கள் சருமத்துக்குப் பாதுகாக்க சிறந்த வழியாகும்.

முகச்சுருக்கத்தைப் போக்க, இயற்கை வழிமுறைக்கு மாறுங்கள். அல்லது மருத்துவரின் ஆலோசனைபெற்று, உங்கள் சருமத்துக்கு உகந்த கிரீம்களைப் பயன்படுத்துங்கள். இதுதான் உங்கள் சருமத்துக்குப் பாதுகாக்க சிறந்த வழியாகும்.

* தினந்தோறும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.

* இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய், கனிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* தினமும் வைட்டமின் ஏ நிறைந்த கேரட், மூன்று நிற வகைப் பழங்கள் சாப்பிடுங்கள். சருமத்துக்குப் பொலிவைத் தந்து இளமைத் தோற்றத்தைத் தக்கவைக்கும்.

* மறக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

* அடிக்கடி முகத்தை நன்றாகக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

* குளித்தவுடன் முகத்தை அழுத்தித் தேய்க்காமல், துணியால் மெதுவாக ஒத்தி எடுக்க வேண்டும்.

* மனதில் கவலையைக் குறைத்துக்கொண்டாலே போதும். முகத்தில் எப்போதும் இளமையும், புத்துணர்வும் தாண்டவமாடும்.

* கிரீம்கள் வாங்கும் போது என்னென்ன ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றின் நன்மை, தீமை என்ன என்பதை அறிந்துதான் கிரீமை வாங்க வேண்டும்.

*ஆல்பா ஹைட்ராக்சி ஆசிட் (Alpha hydoxy acid) என்ற ஃப்ரூட் ஆசிட் தோலின் நிறம் மற்றும் தன்மையை மாற்றக்கூடியது. வெள்ளரிக்காய், பப்பாளி, எலுமிச்சை போன்ற பழங்களால் செய்யப்பட்ட அழகு கிரீம்கள் நல்ல பலனைத் தரும். அதனால், இவற்றை நம்பி வாங்கலாம்.

*சன் புரொடக்ஷன் ஃபேக்டர் (SPF) 30 இருப்பதைத் தேர்ந்தெடுங்கள்.

வெண்ணீரின்(Hot Water) பயன்கள்

வெண்ணீரின்(Hot Water) பயன்கள்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


இதை அதிக அளவில் பகிர்தல் அனைவரும் பயன் பெற உதவும்

ஒரு ஜப்பானிய  மருத்துவர் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.

1 மைக்கிரேன்

2 உயர் இரத்த அழுத்தம்

3 குறைந்த இரத்த அழுத்தம்

4 மூட்டு வலி

5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்

6 கால்-கை வலிப்பு

7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்

8 .இருமல்

9 .உடல் அசௌகரியம்

10. கொலு வலி

11 ஆஸ்துமா

12 ஹூப்பிங் இருமல்

13 .நரம்புகள் தடுப்பு

14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
 நோய்கள்

15.வயிற்று பிரச்சினைகள்

16 .குறைந்த பசியின்மை

17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

*சுடு நீர் பயன்படுத்துவது எப்படி?*

காலையில் எழுந்து, வெரும் வயிற்றில்  சுமார் 2 தம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.

*குறிப்பு:*

 *தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம்.*

*சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்*

30 நாட்களில் நீரிழிவு நோய்

30 நாட்களில் இரத்த அழுத்தம்

10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

10 நாட்களில் ஏராளமான பசி

10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

✔ மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

30 நாட்களில் இதய நோய்கள்

 3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

 4 மாதங்களில் கொழுப்பு

 9 மாதங்களில்    கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம்

4 மாதங்களில் ஆஸ்துமா

* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!

குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

* குளிர் நீர்  இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. *இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்*

*இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது* கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

* குளிர்ந்த நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

*தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*

நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும்.



மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்?

மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்?

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது நல்லது?

சிவனுக்கு உரிய நாளான மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால் ஒருவர் நினைத்த காரியம், ஆசை மற்றும் அவர்களின் கஷ்டங்கள் நீங்கி சுகமுடன் வாழலாம்.

இந்நாளில் சிவபெருமானுக்கு பூஜை செய்வதால் சிவனின் அருள்பார்வையை பெறலாம். அதிலும் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் சிவனின் அருளை முழுமையாக பெறமுடியும் என தெரிந்துகொண்டு அபிஷேகம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா...!

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்கள், சிவலிங்கத்தை கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் ஆசைகள் நிறைவேறும்.

கடக ராசி

கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்கள், பால் மற்றும் நீரால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நல்ல ஆரோக்கியத்தை அருள்வார்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள்புரிவார்.

விருச்சக ராசி

விருச்சக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும்.

மகர ராசி

மகர ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார்.

கும்ப ராசி

மகாசிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம், லாபம் கிடைக்க உதவுவார்.

மீன ராசி

மீன ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு இருக்க வழி வகுக்கும்

 எல்லா வளமும் பெற மகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி?
மகாசிவராத்திரி விரத முறை..!

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகாசிவராத்திரிதான். அதனால்தான் மகாசிவராத்திரியன்று நாம் சிவபெருமானை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்று கூறுகின்றனர். மகாசிவராத்திரியன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும். விரதம் இருப்பதால் உண்டாகும் பலன் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

👉 சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.

👉 சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம்.

👉 மனிதர்களுக்கு ரொம்ப முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

  👉 மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்று ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விரதத்தை 24 அல்லது 12 வருடங்களாவது மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாழ்வில் எல்லா வளமும் வந்து சேரும்.

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

👉 மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

👉 சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும்.

👉 தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும்.

👉 வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.

👉 பூஜையின் போது சிவாய நம என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோ சக்தியை கொடுக்கும்.

👉 பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச் சிறந்த பலனை தரும். அன்றைய தினம் இரவில் தூங்கக்கூடாது.

👉 நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

👉 சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேதயாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதற்கு ஈடாகாது என்பர்.

 மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று மாத சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மட்டும் சிவராத்திரி, மகா சிவராத்திரி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவார்கள். உலகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது.

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.

அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.

பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.

ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார்.

நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான்.... நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.

விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார்.

இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.

இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி விழா தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.

திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது.

சிவபெருமானுக்குரிய முக்கிய 25 வடிவங்களில் முதலாவது அமைவது லிங்கோத்பவர் வடிவம்தான். லிங்கம் என்பது சிவ வடிவம். அந்த லிங்கத்தில் இருந்து தோன்றிய உருவம்தான் லிங்கோத்பவர். அதாவது லிங்கத்துக்கு தலை, கை, கால் முளைத்தால் கிடைக்கும் உருவம்தான் லிங்கோத்பவர்.

சிவபெருமான் முதலில் உருவம் இல்லாமல் அருவமாகத்தான் இருந்தார். ஆனால் உலக உயிர்கள் முன்பு தோன்ற நினைத்தபோது அருவுருவாகவும், பிறகு உருவமாகவும் தோன்றினார். அருவத்துக்கும், உருவத்துக்கும் இடையில் நின்றதே அருவுருவமாகும். இதுதான் திருவண்ணாமலையில் நெருப்புப் பிழம்பாக நின்ற லிங்கோத்பவர் உருவமாகும். எனவேதான் திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் வழிபாடு, மிக, மிக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதை காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

பொதுவாக லிங்கோத்பவரை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மலையில் இருட்டத் தொடங்கும் நேரத்தில் இவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும்.

மகாசிவராத்திரி நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் மூன்றாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அருவுருவமாக லிங்கோத்பவர் அருள்பாவித்த காலமாக இதை சொல்கிறார்கள்.

ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் மகா சிவராத்திரியின் இரண்டாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கோத்பவர் முதன் முதலில் திருவண்ணாமலையில் தோன்றியவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் மற்ற தலங்களுக்கு முன்பாக இரண்டாம் ஜாமத்திலேயே திருவண்ணாமலையில் பூஜைகள் நடத்தப்படுவதாக ரமேஷ் குருக்கள் தெரிவித்தார்.

உலக உயிர்கள் “நான்”, “எனது” என்பன போன்ற ஆணவம், அகந்தை கொள்ளாமல், தானும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறு அணுவே என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதே லிங்கோத்பவர் வடிவத்தின் தத்துவமாக உள்ளது. இந்த வடிவை வழிபட்டால் உடல் நலமும், மோட்ச பிராப்தமும் கிடைக்கும். எனவேதான் இந்த வழிபாட்டை, “மோட்ச பிரதாயினி” என்று சொல்கிறார்கள்.

லிங்கோத்பவர் பூஜையின்போது மட்டும் சுவாமிக்கு நெய்பூசி, வெண்ணீர் அபிஷேகம் செய்து, பிறகு கம்பளி போர்த்தி தாழம்பூ சூட்டுவார்கள். இந்த ஒரு காலத்தில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ அணிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியன்று இந்த பூஜையை நேரில் பார்த்து தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கெல்லாம் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு தங்கக்கவசம் அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெறும்.

அன்றிரவு 4 ஜாம பூஜைகள் நடத்துவார்கள். இரவு 7 மணிக்கு முதல் ஜாம பூஜை, 11 மணிக்கு இரண்டாம் ஜாம பூஜை நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் ஜாம பூஜை நடத்துவார்கள்.

இதில் இரவு 11 மணி முதல் 1 மணி வரையிலான இரண்டாம் ஜாம பூஜை லிங்கோத்பவருக்கான பூஜையாக நடைபெறும். அடி, முடி காண முடியாதபடி சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக நின்ற நேரம் அது. எனவே இந்த நேரத்தில் லிங்கோத்பவரை வழிபாடு செய்வதும், கிரிவலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக இரவு முழுவதும் பன்னிரு திருமுறை இசைக் கச்சேரி நடைபெறும். ராஜகோபுரம் அருகே 108 தவில், நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி நடக்கும்.

கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வைப்பார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் லட்சதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினத்தன்று லட்ச தீபத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அது மட்டுமல்ல, கிரிவலம் வரும் பக்தர்கள், மகாசிவராத்திரி தினத்தில் மட்டும் வில்வ கூடையை ஏந்தியபடி கிரிவலம் செல்வது வித்தியாசமாக இருக்கும். நெருப்பு மலையாக இருக்கும் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த பக்தர்கள் கூடை, கூடையாக வில்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகமாகும். சிவராத்திரி கிரிவலம் காரியசித்தி தரும் என்பார்கள்.

சிவபெருமான் நெருப்பு மலையாக உருவெடுத்தது பற்றி பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும். கார்த்திகை தீபத்தன்றுதானே ஈசன் நெருப்பு உருவில் தோன்றினார் என்று நினைக்கலாம்.

உண்மையில் சிவபெருமான் திருவண்ணாமலையில் இரண்டு தடவை ஜோதி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாசி மாதம் விஷ்ணு, பிரம்மாவின் ஆணவத்தையும், அகந்தையையும் விரட்ட நெருப்புப் பிழம்பாக வந்தார். கார்த்திகை மாதம் அம்பாளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தப்போது ஜோதிச்சுடராக வந்தார். முதல் ஜோதி தரிசனத்துக்கும் இரண்டாம் ஜோதி தரிசனத்துக்கும் வித்தியாசம் உள்ளதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாசியில் நெருப்புப் பிழம்பு, கார்த்திகையில் ஜோதி சுடர்.

சிவபெருமான் ஜோதி ரூபமாக வெளிப்பட்டதால்தான் திருவண்ணாமலை தலம், “அக்னி தலம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அண்ணாமலையார் சன்னதியின்அர்த்த மண்டபத்தில் சிறிது நேரம் நின்று பாருங்கள்... அனல் வீசுவதுபோல இருக்கும். வியர்த்துக் கொட்டும். திருவண்ணாமலை நெருப்புத்தலம் என்பதை உறுதிப்படுத்த இந்த உதாரணம் ஒன்றே போதும் என்கிறார் ரமேஷ்குருக்கள்.

சமீபத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அணுவில் உள்ள எலக்ட்ரானுக்குள்ளும் லிங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். எலக்ட்ரானுக்குள்ளும் பச்சை நிற வட்டமும, நடுவில் செந்நிறமான ஜோதி வடிவமும் இருப்பதைக் கண்டார்கள். இது திருவண்ணாமலையில் பச்சை பசேல் இயற்கை வளத்துக்கிடையே ஈசன் நெருப்புப் பிழம்பாக தோன்றியதை பிரதிபலிப்பதாக ஆன்மிக பெரியவர்கள் சொல்கிறார்கள்.

அந்த நெருப்பு மலைதான் பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக விஷ்ணு, பிரம்மா வேண்டுதலின்பேரில் சிறு லிங்கமாக மாறியது. அந்த லிங்கத்தை சுற்றியே தற்போதைய ஆலயம் உருவானது.

பணத்தை எப்போது சேமிக்க வேண்டும்? எப்போது முதலீடு செய்ய வேண்டும்?

பணத்தை எப்போது சேமிக்க வேண்டும்? எப்போது முதலீடு செய்ய வேண்டும்?

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருவதைப் போல், செல்வமும் மக்களைச் சுற்றிச் சுற்றி வருகின்றது. இன்று ஒருவரிடம் இருக்கும் செல்வம், நாளை மற்றொருவருடையதாக மாறி விடும். எனவே பணத்தை உழைத்துச் சம்பாதிக்கும் நாம் அதை மிகக் கவனமாகச் சேமித்து வைக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் நாணயமானது நம்மை விட்டுக் கண்டிப்பாக உருண்டோடி விடும்.

பணத்தைச் சேமிப்பது என்றால் நம்முடைய இளம் வயதில், நம்முடைய தாய்மார்கள், தங்களுடைய அஞ்சறைப் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த சிறு தொகை கண்டிப்பாக நினைவுக்கு வரும். எனினும் அந்தச் சேமிப்பினால் எந்தவிதமான வருவாயும் கிடைக்காது. ஒரு புத்திசாலி தான் சேமிக்கும் பணத்திலிருந்தும் வருவாயை எதிர்பார்க்க வேண்டும்.

ஒற்றுமைகள்
இதற்கு நீங்கள் கண்டிப்பாகப் பணத்தைச் சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது முக்கியம். அவ்வாறு புரிந்து கொண்டு உங்களுடைய பட்ஜெட்டிலும், செல்வத்தைக் கட்டமைக்கும் திட்டத்திலும் இந்த இரண்டையும் நீங்கள் கைக்கொள்வது மிகவும் முக்கியம்.

சேமிப்பு
அடிப்படையில், பணம் சேமிப்பு என்பது ஒரு வழக்கமான அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைப் பிற்காலத் தேவைக்காக ஒதுக்கி வைப்பது என நீங்கள் பொருள் கொள்ளலாம். நீங்கள் சம்பாதிப்பதை விடக் குறைவான பணத்தை மாதந்தோறும் செலவழித்து, மீதமுள்ள பணத்தை வங்கியிடம் சேமித்து வையுங்கள். இது உங்களுடைய மாதாந்திர வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக எப்பொழுதும் இருக்க வேண்டும்.

பணத்தைச் சேமிப்பது நிதிச் சூழல் ரீதியாக மிகவும் வெற்றிகரமான மற்றும் ஒரு முக்கியமான பகுதியாகும்.

முதலீடு என்றால் என்ன?
முதலீடு செய்வது என்பது உங்களுடைய செல்வத்தை ஒரு படி மேலே நகர்த்திச் செல்லும் ஒரு முக்கியமான செயலாகும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைச் சேமித்தவுடன், அந்தப் பணத்தை முதலீடு செய்யலாம். முதலீடு என்பது உண்மையில் உங்களுடைய பணத்தை வளர்த்து உங்களுடைய நிதிச் செல்வத்தை அதிகரிக்கும் ஒரு உன்னத வழி. நீங்கள் மாதந்தோறும் சேமித்து வைக்கும் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தால், உங்களுக்கு மிகக் குறைந்த அளவு வட்டியே கிடைக்கும். எனினும், நீங்கள் சேமித்த அதே நிதியைப் பரஸ்பர நிதிகள் அல்லது பங்குகளில் முதலீடு செய்தால், உங்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்.

ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீட்டிற்குப் பங்களித்ததைவிட உங்களுடைய முதலீடுகள் மூலம் அதிகமான வருவாய்க் கிடைத்திருக்கும். ஏனெனில் உங்களுடைய நிதியானது உண்மையில் அந்தக் கட்டத்தில் வளரத் தொடங்குகிறது. பங்குச் சந்தைக்குள் நீங்கள் செய்திருக்கும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இத்தகைய முதலீடுகள் அபாயகரமானது. எனவே இந்த வகையான முதலீடுகள் உங்களை எதிர்மறையாகப் பாதிக்கலாம்

நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
நீங்கள் உங்களுடைய செல்வத்தை உருவாக்கத் தொடங்கும் போது, நீங்கள் எதிர் கொள்ளக்கூடிய ஆபத்தைப் பல்வேறு வகைகள் மற்றும் துறைகளில் பகிர வேண்டியது மிகவும் முக்கியம். இதில் பரஸ்பர நிதிகள் என்பது உங்களுடைய ஆபத்தைப் பகிர்ந்தளிக்க உதவும் ஒரு எளிய வழியாகும்.

மியூச்சுவல் ஃபண்டு
நீங்கள் முதலீடு செய்த நிதியானது பல்வேறு பங்குகளின் மீது பரவுகிறது, எனவே ஒரு நிறுவனம் தோல்வியடைந்தாலும், நீங்கள் அனைத்தையும் இழக்க மாட்டீர்கள். நீங்கள் உங்களுடைய பணத்தை ஒன்றுக்கு மேற்பட்ட பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய வேண்டும். உங்களுடைய போர்ட் போலியோவில் இருபது அல்லது முப்பது பரஸ்பர நிதிகள் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் மூன்று அல்லது நான்கு பரஸ்பர நிதிகள் இருப்பது ஒரு நல்ல தொடக்கமாகும். உங்களுக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் எந்த விதமான தயக்கமும் இல்லையெனில் நீங்கள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வணிக வகைகளில் உங்களுடைய முதலீடுகளைப் பரவலாக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆபத்து
சில நேரங்களில் ஒரே விதமான தொழிலை மேற்கொள்ளும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்வதும் ஆபத்தாக முடியலாம். எனவே நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முன் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ரியல் எஸ்டேட்
நீங்கள் பிற விஷயங்களில் முதலீடு செய்ய விரும்பினால் உங்களுக்கு ரியல் எஸ்டேட் துறை மிகவும் ஏற்றதாகும். இந்த வகையிலான முதலீடுகள் உங்களுக்கு நல்ல வருவாயைக் தரலாம். ரியல் எஸ்டேட் மீதான முதலீடு மதிப்புக் காலப்போக்கில் அதிகரிக்கிறது. இருப்பினும் உங்கள் கையில் வைத்திருக்கும் பணத்தை மட்டுமே இந்தத் துறையில் முதலீடு செய்திடுங்கள். ரியல் எஸ்டேட் என்பது ஒரு நல்ல நிதானமான முதலீடாக இருக்கலாம், ஆனால் இதிலும் ஆபத்துகள் அதிகம்.

சொத்து மதிப்புகள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். மேலும் இதில் உங்களுக்கான பொறுப்புகளும் அதிகம். நீங்கள் உங்களுடைய சொத்தை வாடகைக்கு விடப்போகின்றீர்களா? அல்லது உங்களுடைய சொத்தை நிர்வகிக்க ஒரு சொத்து நிர்வாக நிறுவனத்தைப் பயன்படுத்துகிறீர்களா? இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தீர்கள் எனில் உங்களுடைய லாப அளவு குறையலாம்.

எப்போது முதலீட்டை தொடங்க வேண்டும்?
பெரும்பாலான நிதி ஆலோசகர்கள், நீங்கள் உங்களுடைய கடனின் பெரும் பகுதியை செலுத்திய பின்னரே முதலீடை தொடங்கப் பரிந்துரைக்கின்றார்கள். நீங்கள் உங்களுடைய வருவாயை விடக் குறைவாகச் செலவழிக்கும் போது மட்டுமே உங்களுடைய முதலீள்டானது செல்வத்தைச் சேகரிக்கும். எனவே நீங்கள் கடனிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதில் கவனம் செலுத்துங்கள்.

உங்களுடைய நிகரச் சொத்து மதிப்பு என்பது உங்களுடைய சொத்து மதிப்பிலிருந்து உங்களுடைய கடன்களைக் கழிப்பதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. நீங்கள் சேமித்து, முதலீடு செய்யும் வேகத்திற்கு இணையாக உங்களுடைய கடனும் அதிகரிக்குமெனில் உங்களுடைய பிரச்சனை ஒரு பொழுதும் தீரப்போவதில்லை. பட்ஜெட் போட்டு வாழத்தொடங்கும் பொழுது உங்களுடைய செலவு, சேமிப்பு மற்றும் முதலீடுகளை மிகவும் திறம்படக் கையாள முடியும்.

கடன் மீதான வட்டி விகிதம்
உங்களுடைய கடன்களுக்கு நீங்கள் செலுத்தும் வட்டி விகிதம் என்பது உங்களுடைய பல்வேறு முதலீடுகளின் மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருக்கும். உங்களுடைய அவசர நிதியை ஒருபொழுதும் முதலீடு செய்திடாதீர்கள். அதை மிகவும் பத்திரமாக வைத்திருப்பது அவசியம். அதை அணுகுவதற்கு மிகவும் எளிதாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அதன் மூலம் கிடைக்கும் தண்டனை மிகப் பெரியதாக இருக்கும். உங்கள் வங்கியின் சேமிப்புக் கணக்கு அவசரத் தேவைக்கான பணத்தைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த இடமாகும்.

முதலீடுகளைத் தொடங்க உங்களுக்கு யார் உதவுவார்கள்?
நீங்கள் முதலீடு செய்யத் தயாராக இருக்கின்றீர்கள் மேலும் அதை எப்படித் தொடங்குவது என்று யோசிக்கின்றீர்களா? நிதி ஆலோசகர்களால் உங்களுக்கு முன் உள்ள பல்வேறு வகையான முதலீடுகளை விளக்க முடியும். அவர்கள் உங்களுடைய முதலீடுகள் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்கள் மற்றும் அதனுடன் இணைந்து வரக்கூடிய ஆபத்துகளை விளக்குவார்கள்.

இணையதளத் தரகு தளங்கள்
உங்களுக்கு முன் உள்ள மற்றொரு சாத்தியம், ஆன்லைன் தரகு தளங்களாகும். இவற்றில் கட்டணங்கள் மிகவும் குறைவு. இந்தத் தளங்களில் நீங்கள் முதலீடுகளின் பல்வேறு வகைகளைத் தெரிந்து கொண்டு நீங்கள் விரும்பும் வகையில் பணத்தைச் சேமிக்க முடியும். எனினும் முதலீடு என்பது ஒரு நீண்ட காலப் பயணம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். மேலும் சந்தை சரியாகச் செயல்படாத நேரங்களிலும் நீங்கள் புழங்க தயாராக இருக்க வேண்டும்.

‘முதலீடு’ மற்றும் ‘சேமிப்பு’ இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

‘முதலீடு’ மற்றும் ‘சேமிப்பு’ இடையில் உள்ள வித்தியாசம் என்ன?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


நிதியியல் திட்டமீட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் 'சேமிப்பு' மற்றும் 'முதலீடு' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நாம் அடிக்கடிக் கேட்கிறோம்.

ஆனால் சேமிப்பும் முதலீடும் இரண்டு முற்றிலும் வேறுபட்ட கருத்துக்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

சம்பளம் அல்லது வருவாய்
ஒவ்வொரு மாதமும் நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு வருமானத்தை ஈட்டுகிறோம். இது சம்பளம் அல்லது வியாபார வருவாய் என்று இரண்டில் ஏதேனும் ஒரு வடிவத்தில் இருக்கும். அதன் பிறகு, மேலும் நாம், உணவு, உடை, வாடகை, மின்சார மற்றும் தொலைப்பேசிக் கட்டணங்கள் போன்ற நமது செலவுகளைக் கொண்டிருக்கிறோம்.

சேமிப்பு
ஒருமுறை நமது வருமானத்திலிருந்து செலவுகளுக்குப் பணம் செலுத்தி விட்டால், மீதமிருக்கும் தொகையைத் தான் வழக்கமாகச் சேமிப்பு என்று அழைக்கிறோம். நிச்சயமாக, நாம் எந்த அளவுக்கு அதிகமாகச் சேமிக்கிறோமோ அவ்வளவு நல்லது.

செலவு
மேலும் நாம் எப்பொழுதும் நமது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனாலும், வாடகை செலுத்தல் அல்லது கடன் தவணை போன்ற சில செலவுகளை நம்மால் எப்பொழுதும் தவிர்க்கவே முடியாது. உங்கள் நோக்கம் செல்வத்தை உருவாக்க வேண்டும் என்பதாக இருந்தால், சேமிப்பு மட்டுமே போதுமானதல்ல. நாம் நமது சேமிப்பைக் கொண்டு மேலும் அதை அதிகரிக்க ஏதாவது செய்ய வேண்டும்.

முதலீடு
இங்கே தான் முதலீடுகள் நம்முன் வருகின்றன. அவை காலப்போக்கில் நமது பணத்தை அதிகரிக்கச் செய்ய உதவும் நிதி திட்டங்கள் ஆகும்.

பணவீக்கம்
நாம் முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம், ஏனென்றால் நாம் வாழ்வதற்கான செலவுகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது தான் பணவீக்கம் என்றழைக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பணத்தின் மதிப்பு குறைந்து விடுகிறது.

மதிப்பிழக்கும் பணம்
நீங்கள் தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 சேமிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இந்த 10,000 ரூபாயை அப்படியே விட்டுவிட்டால், சில வருடங்கள் கடந்த பின்பு அதைக் கொண்டு மிக மிகக் குறைந்த அளவு பொருட்களையே நம்மால் வாங்க முடியும். இது ஏனென்றால், காலப்போக்கில் பணம் அதன் மதிப்பை இழக்கிறது. மேலும், சரக்குகள் மற்றும் சேவைகளின் விலை உயர்கிறது. அதனால் தான் உங்கள் பணமும் வளர்ச்சியடைய வேண்டியது அவசியமாகிறது.

முதலீடு ஏன் முக்கியம்
பணவீக்கத்தின் வேகத்தை விட விரைவாக வளர வேண்டும். அப்போது தான் குறைந்தபட்சம் முன்பொரு காலத்தில் நீங்கள் வாங்கிய அதே பொருட்களை வாங்கவாவது உங்களால் முடியும். இங்கே தான் நமக்கு முதலீடுகள் உதவுகின்றன.

மியூச்சுவல் ஃபண்டு
மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டிற்கான உன்னதமான உதாரணம். இதிலுள்ள தற்போதைய சலுகைகள் சமபங்கு நிதிகள் மற்றும் கடன் நிதிகளாகும். ஆனால் உங்களால் எந்தளவுக்குத் துணிந்து அபாயத்தை எடுக்க முடியும் என்று மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மிக விரைவான வேகத்தில் வளரும் முதலீடுகளும் உள்ளன. மேலும் மெதுவான வேகத்தில் வளரும் முதலீடுகளும் இருக்கின்றன. ஆனால் அவை பணவீக்கத்தை விட அதிகமான வருமானத்தைக் கொடுக்கின்றன.

பிகசட் டெபாசிட் மற்றும் பிபிஎப்
நிலையான வைப்பு நிதிகள் மற்றும் பொது வருங்காலச் சேமிப்பு நிதி போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களும் கூடச் சேமிப்பின் வடிவங்களேயாகும். அனைத்து முதலீட்டுத் திட்டங்களும் அனைவருக்கும் பொருந்தாது. நீங்கள் மிக அதிக வரிவிதிப்பு வரம்பிற்குள் இருந்தால் நிலையான வைப்பு நிதித் திட்டம் பணவீக்கத்தை மீறிய வருவாயை உங்களுக்குத் தராது.

உங்கள் பணம் ஒரு அர்த்தமுள்ள வேகத்தில் வளருவதில்லை, எனவே அது பொதுவாக ஒரு நல்ல முதலீடு உங்கள் பணப் பெட்டிக்கு அவசியம் செய்ய வேண்டியதைச் செய்வதில்லை. ஆனால் நீங்கள் மிகக் குறைந்த வரி விதிப்பு வரம்பிற்குள் இருந்து, அபாயங்களை வெறுப்பவராக இருந்தால், அப்போது நிலையான வைப்பு நிதிகள் உங்களுக்கு நன்கு வேலை செய்யும்.

சேமிப்பு கணக்கு
பணத்தை வங்கியில் சேமிப்புக் கணக்கில் வைத்தல் ‘சேமிப்பு' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுமே அன்றி ‘முதலீடு' என்று கருதப்படாது. ஏனென்றால் வங்கி சேமிப்புக் கணக்கில் உங்கள் பணம் செயலற்று இருக்கிறது. அளவுக்கதிகமான சேமித்தாலும் மிகக் குறைந்த முதலீடு செல்வத்தை உருவாக்காது.

லிக்விட் ஃபண்டுகள்
உண்மையில், லிக்விட் ஃபண்டுகள் பல்கி பெருகும் தன்மையால் உடனடி பண மீட்பு வசதியை அவர்களில் பலர் அளிக்கத் தொடங்கியுள்ளனர். உங்கள் அதிகப்படியான சேமிப்புப் பணத்தை லிக்விட் டண்டு கணக்கிற்கு மாற்றி மேலும் உங்கள் வங்கிக் கணக்கில் மிகக் குறைந்தபட்ச நிலுவைத் தொகையாவது பராமரித்தால் உங்கள் சேமிப்பும் கூட உயரும்.

ஆனால் லிக்விட் ஃபண்டுகள் பணத்தை நிறுத்தி வைக்கும் வாகனம்; ஒரு சேமிப்பு வாகனம், அவ்வளவு தான். செல்வத்தை உருவாக்குவதற்கான முதலீடுகளில், அபாயங்களை எடுக்கத் துணியும் உங்கள் பசியைப் பொறுத்து, உங்களுக்கு ஒரு கூடை நிறைய மியூச்சுவல் ஃபண்டு கடன் நிதித் திட்டங்களும் தேவைப்படும்.

குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 விஷயங்கள்

குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 விஷயங்கள்

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

அதிகத் தாமதமாவதற்கு முன் உங்கள் பிள்ளைகளுக்குப் பண விஷயங்களைப் பற்றி இப்போதே கற்றுக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் நிதிகளை நிர்வகிப்பதற்கான அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளாமல் அவர்கள் சுயமாக வாழத் தொடங்குவதற்கு எந்த ஒரு பெற்றோர்களும் விரும்பமாட்டார்கள்.

சரி பிள்ளைகளுக்குப் பணம் குறித்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வயது வரம்பு ஏதேனும் உள்ளதா..? என்றால் சத்தியமாக இல்லை, இதுவும் இன்றைய போட்டி மிகுந்த காலத்தில் இல்லவேஇல்லை. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைச் சொல்லிக்கொடுப்பது போலவே நிதி, பணம் சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்கலாம்.

அவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் பொறுப்புள்ள பிள்ளைகளாக வளர்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும் இந்த முயற்சி பெற்றோர்களுக்கு உதவும். அப்படிப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 பணம் குறித்த புரிதல் அல்லது பாடத்தையே இப்போது பார்க்கப்போகிறோம்.

பண அணுகுமுறை
நீங்கள் ஒவ்வொரு நிதி முடிவிற்கும் தகுதியைக் கருத்தில் கொள்ளும் மற்றும் மிகுந்த நிதானமாகச் சிந்தித்துச் செயல்படும் வகை நபராக இருந்தால், உங்கள் பிள்ளைகளும் உங்களது அணுகுமுறையைப் பற்றிக் கொள்ளும் சாத்தியங்கள் அதிகம்.

உங்கள் பணப் பழக்க வழக்கங்களைக் குடும்பத்தோடு அமர்ந்து சிந்தியுங்கள், எனவே நீங்கள் கல்லூரிக்கு அனுப்பிய உங்கள் பிள்ளைகளிடம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிய வரும்.

பணம் மரத்தில் காய்ப்பதில்லை
ஆரம்பத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரே பணப் பாடம் என்னவென்றால், உங்களிடம் ஏராளமான பணம் இருந்தாலும் கூட அதற்கு மாற்றுப் பயன்பாடுகள் எப்பொழுதும் இருந்து வருகின்றன.

ஒரு மாதாந்திர படித்தொகைக்கு ஒப்புக்கொண்டு அதைக் கடைப்பிடிக்கவும். புத்தகங்கள், உறுப்பினர் சந்தா, பயணம் மற்றும் இதர பெரிய டிக்கெட் பொருட்கள் போன்ற அனைத்து இதர செலவுகளைப் பற்றியும் உங்களுக்கு நல்ல யோசனை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மேலும் அவற்றிற்கு முன்கூட்டியே பணத்தை வழங்கிவிடுங்கள்.

பட்ஜெட்டை தயாரிப்பு
வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு குடும்பக் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதில் எதற்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதை உங்கள் குழந்தைகளும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கட்டாய மற்றும் விருப்பச் செலவுகள் உட்பட வாழ்க்கைச் செலவுகளை மதிப்பீடு செய்வதை ஒரு நடைமுறை பயிற்சியாக மேற்கொள்ளுங்கள். உங்கள் குழந்தை இதர சிறிய ஆடம்பரங்களுக்கு ஆசைப்பட்டால், பகுதி நேர வேலைகளை எடுத்துச் செய்யுமாறு பிள்ளைகளை ஊக்குவியுங்கள்.

நிதிப் பரிமாற்றங்களைப் பற்றி அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
எப்படி மின்னணு பணப் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டும், எப்படி வங்கிக் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், மின்னணு வாலட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும் மற்றும் ரொக்கப் பணப் பயன்பாட்டை எவ்வாறு குறைக்கலாம், அதன் மூலம் கணக்கு வைப்பு எவ்வாறு எளிதாகிறது என்பதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். கணக்கு வழக்குகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேளுங்கள்.

கண்காணிப்பு மற்றும் கவனிப்பு
அவர்களுடைய பணப் பழக்க வழக்கங்கள் அவர்களுடைய சகோதரர்கள் மற்றும் நண்பர்களால் கவனிக்கப்படுகிறது என்பதையும் மேலும் அது ஒரு குழுவில் பணப் பரிவர்த்தனைகள் எவ்வாறு நிகழும் என்பதற்கான அடித்தளத்தை அமைக்கும் என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்கு நினைவுப்படுத்துங்கள். செலவுகளைச் சமமாகப் பிரிப்பது சிறந்தது என்று அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். நண்பர்களுக்குக் கடன் கொடுப்பதென்றால் கண்டிப்பாகக் கூடவே கூடாது என்று சொல்லுங்கள்.

காலம் தவறாமல் நடந்து கொள்ளுங்கள்
ஒரு குறிப்பிட்ட தேதியை அமைத்து, அந்தத் தேதிக்குள் வாக்குறுதி அளித்தபடி பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் பணம் வரவில் வைக்கப்படும் தேதி வரை காத்திருக்கவும் அதைக் கொண்டு தங்களைச் சிறப்பாக நிர்வகித்துக் கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள். அவசர நெருக்கடி கால நிலைகளுக்காக ஒரு வரையறுக்கப்பட்ட தொகையைச் செலுத்தி அதை அவர்களுடைய வங்கிக் கணக்கிலேயே விட்டு வையுங்கள்.

பாதுகாப்பான வங்கியியல் நடைமுறைகள்
பாதுகாப்பான வங்கியியல் நடைமுறைகள், கிரெடிட் கார்டை பயன்படுத்துதல், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படை விதிமுறைகளை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். டெபிட் கார்டுகள் தொலைந்து விட்டாலோ அல்லது அவை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

வங்கிக் கணக்கு
உங்கள் பிள்ளைகளை முதல் அல்லது இரண்டாம் கணக்குதாரராகக் கொண்ட வீட்டிற்கான பின்னணியைக் கொண்ட முதலீடுகள் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் 18 வயதை அடைந்த பிறகு அந்தக் கணக்குகளை உங்களால் அணுக முடியாது. அவர்கள் வீட்டை விட்டு படிப்பிற்காகவோ வேலைக்காகவோ வெளியிடங்களுக்குச் செல்லும் முன் அத்தகைய வங்கிக் கணக்குகளைச் சிறியவர்களுக்கான வங்கிக் கணக்கிலிருந்து பெரியவர்களுக்கான வங்கிக் கணக்காக மாற்றி விடுங்கள். அவர்களுடைய கையொப்பங்கள் வங்கிகளால் உண்மையானதெனச் சான்றொப்பமிட்டு உறுதி செய்யப்பட்டுச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நிதி சுதந்திரம்
காலப்போக்கில் நீங்கள் அவர்களுடைய நிதி சார்ந்த விஷயங்களிலிருந்து விலகி நிற்பீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களுடைய சம்பளம் எவ்வளவு என்பதைத் தெரிந்துக் கொள்ளவோ அல்லது அதை மற்றவர்களுடன் ஒப்பிடுவதிலோ அதிகப்படியான ஆர்வத்துடன் இருக்காதீர்கள். அவர்கள் கடுமையாக உழைத்துப் பெற்ற நிதி சுதந்திரத்தை அவர்களை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க அனுமதியுங்கள்.

பிட்காயின் - மெய் நிகர் நாணயங்களின் எழுச்சி

பிட்காயின் - மெய் நிகர் நாணயங்களின் எழுச்சி


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


நாணயம்! இது ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு நாட்டின் அடையாளமாக விளங்குகின்றது. எனவே நாம் அனைவரும் நாணயத்தைக் கட்டிக் காக்க போராடுகின்றோம் மற்றும் கட்டுப்படுத்துகின்றோம். இது தனிமனிதனுக்கும் ஏன் ஒரு நாட்டிற்குமே பொருந்தும். எந்த ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டில் இல்லாமல் யாரும் ஒழுங்கு படுத்தாமல் நாணயம் இயங்கி வருகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா. அது தான் மெய்நிகர் நாணயம்.

மெய் நிகர் நாணயங்களின் எழுச்சி

இந்தியாவில் மெய்நிகர் நாணயங்களில் மீதான முதலீடு கடந்த சில ஆண்டுகளில் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாகச் சமீப காலங்களில் இந்த நாணயங்களின் மதிப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பிட்காயின் பயனர்கள் உள்ளனர்.

மெய்நிகர் நாணயங்களில் மீதான முதலீடு லாபகரமானதாக இருந்தாலும், அதனோடு இணைந்து சில பல பிரச்சனைகளும் உள்ளன. இந்த மெய்நிகர் நாணயங்களில் நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில மிக முக்கியமான விஷயங்கள் இங்கே உள்ளன

மெய்நிகர் நாணயங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை
பிட்காயின் மற்றும் பிற மெய்நிகர் நாணயங்கள் பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்படவில்லை. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி கூட "பிட்காயின் போன்ற அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படாத நாணயங்களின் புழக்கம் கவலையளிப்பதாக உள்ளது" என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"மெய்நிகர் நாணயங்களைக் கையாளும் எந்தவொரு பயனாளரும், வைத்திருப்பவரும், முதலீட்டாளரும் அல்லது வணிகரும் அவர்களுடைய சொந்த ஆபத்தில் அந்த நாணயங்களைக் கையாளுகின்றனர்" என்று ரிசர்வ் வங்கி இந்த ஆண்டுப் பிப்ரவரி மாதம் தனது வலைத்தளத்தில் ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயங்களைப் பற்றி, இத்தகைய நாணயங்கள் நிதியியல், சட்ட, வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு அபாயங்களுக்கு வித்திடுகின்றன எனவும் தெரிவித்துள்ளது

பிட்காயின் பரிவர்த்தனைகளைத் திரும்பப் பெற இயலாது
மெய்நிகர் நாணய சேவை வழங்குநருடன் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கும்போது, உங்களுடைய பணம் டிஜிட்டல் வாலட்டில் சேமிக்கப்பட்டு அந்தப் பணத்திற்கு ஒரு பொது மற்றும் ஒரு தனிப்பட்ட கடவுச் சொல் வழங்கப்படுகின்றது. பொதுக் கடவுச் சொல் என்பது உங்களின் மொபைல் எண் போன்றது. தனிப்பட்ட கடவுச் சொல் என்பது உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகும். நீங்கள் இந்த இரண்டு கடவுச் சொற்களையும் மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

பிட்காயின் நாணயத்தின் கடவுச்சொல்லை மீட்க முடியாது. இதை நீங்கள் நன்கு உணர வேண்டும். எனவே நீங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டால் உங்களுடைய பணம் பயனற்றதாக மாறி விடும். இதேபோல், ஒரு பிட்காயின் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மேற்கொள்ளப்படும் பரிமாற்றத்தையும் திரும்பப் பெற இயலாது. எனவே, உங்களுடைய பிட்காயின் ஹேக்கர்கள் மூலம் திருடப்பட்டால், அதைக் கண்டிப்பாக மீட்க இயலாது.

போலி மெய்நிகர் நாணயங்கள்

மெய்நிகர் நாணயங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. இதில் போலிக்கும், உண்மைக்கும் இடையேயான வேறுபாட்டைக் கண்டறிவது மிகவும் கடினம். எனவே, எந்த ஒரு மெய்நிகர் நாணயத்திலும் வர்த்தகம் செய்வதற்கு முன், உங்களுடைய அடிப்படை திட்டம், சந்தை முதலீடு மற்றும் கடந்த காலச் செயல்திறன் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் முதலீடு செய்யப்போகும் மெய்நிகர் நாணயத்தைப் பற்றி நன்கு ஆய்வு செய்து முடிவு செய்யுங்கள்.

மோசடி முகவர்கள்

வலைத்தளத்தில் நூற்றுக்கணக்கான மெய்நிகர் நாணய பரிமாற்ற முகவர்கள் உள்ளனர். அத்தகைய போலி முகவர்கள் உங்களிடம் அதிக வருமானத்தை வழங்குவதற்கான போலி வாக்குறுதியுடன், போலி நாணயங்களை விற்பனை செய்வர். எனவே, உங்களுடைய பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், www.bitcoin.org என்கிற வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர்களிடம் மட்டுமே பரிவர்த்தனைகளில் ஈடுபடுங்கள்.

நீண்ட கால முதலீடு எவ்வளவு நீண்டு இருக்க வேண்டும்?

நீண்ட கால முதலீடு எவ்வளவு நீண்டு இருக்க வேண்டும்?

செயலாற்றாமல் இருப்பது நல்லதா? கெட்டதா? இதென்ன நாயகன் பட வசனம் போல் இருக்கின்றதே என யோசிக்காதீர்கள். இன்றைய நிதிச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டுக்கு பின்னர் செயலாற்றாமல் (எவ்விதமான மாற்றமும் இல்லாமல்) இருக்கலாமா? என்கிற மிக முக்கியமான விவாதம் நடைபெற்று வருகின்றது.

வடிவேலு பட காமெடிக் காட்சி போல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என கேள்வி கேட்காதீர்கள். அதற்கு முன் இந்தக் கட்டுரையை முழுமையாக படித்து முடித்து விடுங்கள்.

2017 ம் ஆண்டு முதலீடு செய்ய ஏற்ற டாப் 10 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!

இந்தியாவில் அண்மைக்காலமாக வேகமாக வளர்ந்து வரும் ஒரு முதலீடு திட்டம் என்றால் அது மியூச்சுவல் ஃபண்டு ஆகும். ஆனால் இந்திய சந்தையில் அதிகப்படியான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களால் எதில் முதலீடு செய்வது என்பதில் மக்கள் குழம்பிவிடுகின்றனர்.

மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்த பலருக்கு இருக்கும் ஒரு கேள்வி என்றால் தான் சரியான திட்டத்தில் முதலீடு செய்துள்ளனா மற்றும் நல்ல லாபம் அளிக்குமா என்பது ஆகும்.

ஆனால் அவர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிப்பது கடினம் ஆகும். ஏன் என்றால் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வது என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.

சந்தை அபாயங்கள் என்ற உடன் பயப்பட வேண்டாம். பேருந்தில் செல்லும் போது விபத்து நேர்கின்றது என்ற காரணத்திற்காகப் பயணம் செய்யாமலா இருக்கின்றோம். இல்லை அல்லவா? அதே போன்று தான் மியூச்சிவல் ஃபண்டுகளிலும். சில திட்டங்கள் லாபம் அளிக்கும், சில நட்டம் அளிக்கும்.

எனவே இங்கு உங்களுக்காக 2017 ஆம் ஆண்டு முதலீடு செய்வதற்கு ஏற்ற 10 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.

குறிப்பு

கிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.

ஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா?

ஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா?

ஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா..? தவறா..?


               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வடகை விட்டில் இருக்கும் பலருக்கு சோஃபா, கட்டில் போன்றவற்றை வாங்குவது கூடுதல் செலவு என்பதை விட அதிகச் செலவு ஆகும். அதற்கு உதவுவதற்காகவே தற்போது ஃபனிச்சர்களை வாடகைக்கு எடுக்கும் பழக்கம் நகரத்தில் வாழும் பலருக்கு அதிகரித்துள்ளது. மொத்தமாக வாங்கிச் செலவை கூட்டிக்கொள்ளாமல், பராமரிப்பு செலவை ஏற்றிக் கொள்ளாமல் பல நன்மைகளை இது அளிக்கின்றது.

எனவே வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இது உங்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

வாங்கும் போதும், வாடகைக்கு எடுக்கும் போது என்ன செலவு ஆகும்?
ஆடம்பரமாக வாழக்கூடிய ஒரு வீட்டின் சோஃபா, தூங்கும் அறை, சமையல் அறை போன்று அனைத்து ஃபர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் மாதத்திற்கு 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை செலவு ஆகும். அதுமட்டும் இல்லாமல் வீட்டில் ஃபர்னிச்சர் பொருட்களை வைக்க, வீடு மாறும் போது மாற்றி வைக்க, சுத்தம் செய்ய மற்றும் பராமரிப்பு போன்றவற்றையும் வாடகை கட்டணத்திலேயே அடங்கும். ஒரு வீட்டின் படுக்கை அறை ஃபர்னிச்சர் பொருட்கள் அனைத்தும் வாடகைக்கு எடுக்க மாதம் 1,2000 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். இதையே நீங்கள் மொத்தமாக வாங்க வேண்டும் என்றால் 35,000 ரூபாய் வரை செலவு ஆகும்.

அதிகப் பயணச் சுமைகள்

இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டின் ஃபர்னிச்சர் பொருட்களை வீடு மாற்றும் போது எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் 20,000 ரூபாய் முதல் 30,000 வரை தேவைப்படும். இடம் மாற்றும் போது ஆகும் சேதங்கள் வேறு ஆகும்.

வாடகை சேவை அளிக்கும் நிறுவனங்கள்
ஃபுரலென்கோ, சிட்டி ஃபர்னிஷ் மற்றும் ரென்ட் மோஜோ உள்ளிட்ட நிறுவனங்கள் பூனே, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஃபர்னிச்சர் வாடகைக்கு அளிக்கும் சேவைகளை அளிக்கின்றன.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை
சில வாடகை சேவை நிறுவனங்கள் வாடகைக்கு ஃபர்னிச்சர்கள் எடுக்கும் போது சிறு சேதங்களை இலவசமாகவே பராமரிப்பு செய்துகொள்கின்றனர். ஆனால் இது அவர்கள் கொள்கைகளைப் பெருத்தது. இதுவே ஒரு முறை செலவாகப் பொருட்களை வாங்கும் போது சில ஆண்டுகள் மட்டும் பழுது பார்க்கும் அல்லது மாற்றி அளிக்கக் கூடிய வாரண்ட்டி கிடைக்கும்.

இது உங்களுக்கானதா?
நீங்கள் பார்க்கும் வேலை அடிக்கடி இடம் மாறக்கூடியது அல்லது சிறிது காலத்திற்கு வேறு இடங்களுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளீர்களா? நீங்கள் இந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்றால் தாற்காலிகமாக வாடகைக்குப் பொருட்களை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்பதே சிறந்த முடிவு ஆகும்.

வீட்டுக் கடனில்(Home Loan) 7 வகை உள்ளது.

வீட்டுக் கடனில்(Home Loan) 7 வகை உள்ளது.



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


 உங்களுக்கான கடன் திட்டம் எது..?

தனக்கென ஒரு வீடு. இது ஒவ்வொரு மனிதனின் முதல் கனவாக இருக்கின்றது. கனவு கண்டால் மட்டும் போதுமா? அதை நனவாக்கும் வழிமுறைகளைப் பற்றி அறிந்து அவற்றின் வழியே பயணிக்க தொடங்கினால் மட்டுமே நினைத்ததை அடைய முடியும்.

நடுத்தர இந்தியர்களுக்கு ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் ஒரு எழிய வழியே வீட்டுக் கடன். இந்தியாவில் உள்ள தேசிய அல்லது தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையான வீட்டுக் கடன்களை வழங்குகின்றன.

உங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, எது உங்களுக்கு மிகவும் உகர்ந்தது என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு வகையிலான வீட்டுக் கடன்களைப் பற்றிய புரிதல் மிகவும் அவசியமாகும். தற்போதைய நிலையில் இந்தியாவில் மட்டும் சுமார் 7 வகையான வீட்டுக் கடன்கள் உள்ளது.


1) நிலம் வாங்குவதற்கான கடன்
ஒரு நிலத்தை தேர்ந்தெடுத்து அதன் பிறகு உங்களுக்கு தேவையான வீட்டை கட்டத் திட்டமிடுகின்றீர்களா? இதற்கு உதவ இந்தியாவில் உள்ள வங்கிகளாலும் அல்லது பிற வங்கி சாராத நிதி நிறுவனங்களாலும் (NBFCs) வீட்டு மனை வாங்க கடன் வழங்கப்படுகின்றது. பொதுவாக வங்கிகள் மனையின் மதிப்பில் சுமார் 80 முதல் 85% வரை கடன் வழங்குகின்றன.

2) வீடு வாங்க கடன்
மனை வாங்கி வீடு கட்டுவதற்கு பதில், புதிதாக ஒரு கட்டிய வீட்டை வாங்குவதற்கு இந்தக் கடன் வழங்கப்படுகின்றது. நிதி நிறுவனங்கள் வழக்கமாக ஒரு வீட்டின் சந்தை மதிப்பீட்டில் சுமார் 80 முதல் 85% வரை இதற்காக கடன் வழங்குகின்றன. இந்த கடன்களின் மீதான வட்டி விகிதம் மூன்று வகையாக நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் நிலையானது, மாறக்கூடியது அல்லது இவை இரண்டும் கலந்த கலவை ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

3) வீடு கட்டுமான கடன்
உங்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்லது நீங்கள் பாகஸ்தராக உள்ள மனையில் வீடு கட்ட இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்கள் இந்தக் கடன் வழங்கப்படுகின்றது. இந்தக் கடன் நடைமுறையில் வீட்டுக் கடன், கடனுக்கான விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் செயல்முறை போன்றவை பொதுவாக சந்தையில் நிழவும் பிற வீட்டுக் கடன் நடைமுறைகளை விட சில அம்சங்களில் வேறுபட்டது. அதாவது:

* வீட்டு மனை ஒரு வருட காலத்திற்குள் வாங்கப்பட்டிருக்க வேண்டும்
* வீட்டை நிர்மாணிப்பதற்காக உத்தேச செலவின மதிப்பீட்டை கடன் பெற விண்ணப்பிப்பவர் தெரிவிக்க வேண்டும்.
* மனையின் மதிப்பு கடனில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவைப்படும் நிதி மட்டுமே கடனுக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

4) வீட்டை நீட்டிப்பதற்கான கடன்கள்
ஒருவர் தான் வசிக்கும் சொந்த வீட்டை விரிவாக்க அல்லது புணரமைக்க விரும்பினால், இந்தக் கடனை பெற்றுக் கொள்ளலாம். சில வங்கிகள் தற்போதைய வீட்டின் விரிவாக்கத்தின் அடிப்படையில் இந்த கடனை வேறுபடுத்துகின்றன. பெரும்பாலான வங்கிகளில் இந்த வகை கடன்கள், வீட்டு மேம்பாட்டு கடன்களின் ஒரு பகுதியாக உள்ளன.

5) வீட்டை மேம்படுத்த கடன்
ஒருவருக்கு சொந்தமான வீடு இருந்து அவர் அதை மேம்படுத்த விரும்பினால், இந்தக் கடனை பெற்றுக் கொள்ளலாம். தற்போதுள்ள வீடுகளை பழுது பார்ப்பது, சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவது, ஆழ்துணை கிணறு தோண்டுவது, நீர்-காப்பு, மின் வயரிங் போன்றவை புணரமைப்பில் அடங்கும்.

6) என்.ஆர்.ஐ.-வீட்டுக் கடன்கள்
வெளி நாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் குடியிருப்பு வசதிகளை வாங்குவதில் ஆர்வமுடன் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த வகை கடன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு கடன் கட்டமைப்பு வழக்கமான வீட்டு கடன்களைப் போலவே இருந்தாலும், இதனுடைய காகிதப்பணி சற்று கூடுதலானது

7) வீட்டை மாற்றவதற்கு கடன்
ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மற்றொரு புதிய வீட்டை வாங்க விரும்பும் பொழுது இந்தக் கடனை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் தற்பொழுது உள்ள வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு மாறிக் கொள்ளலாம்.

சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன்?

 சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன்?



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினை விட சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன் ?
International Mutual Fund

மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டார்களிடம் இருந்து பணத்தினைப் பெற்று அவர்கள் சார்பாகப் பங்குச் சந்தை போன்ற திட்டங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டி தருவதாகும்.

மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினைப் பொருத்தவரை இந்தியர்கள் இந்திய நிறுவனம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஆனால் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் இந்தியா திட்டங்களில் முதலீடு செய்வதை விட அதிக ரிஸ்க்குகள் உள்ளன.

சாதாரண மற்றும் சர்வேதேச மியூச்சுவல் ஃபண்டு வித்தியாசம் என்ன?
சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் என்பது முதலீட்டாளர்கள் அவர்கள் நாட்டை விடப் பிற நாடுகளின் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதாகும். சாதாரண மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டாளர்கள் வசிக்கும் நாடுகளில் முதலீடு செய்வதாகும்.

சாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை விடச் சர்வதேச திட்டங்களில் ரிஸ்க் அதிகம் உள்ளவையா?
நல்ல மியூச்சுவல் ஃபண்டு மேலாளர்கள் என்றால் முதலீடுகளின் மேலே உள்ள ரிஸ்க்கை குறைப்பது ஆகும். இதுவே சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு என்றால் அதிக ரிஸ்க், கரண்ஸி விலை மாற்றம், பொருளாதாரம் என அனைத்தும்பிரச்சனை தான்.

தற்போதைய சுழலில் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை விட இந்திய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் ரிஸ் குறைவு மற்றும் அளிக்கக்கூடியவை ஆகும்.

சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் எத்தனை ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்?
தேசிய மற்றும் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் 5 முதல் 7 வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது நல்ல லாபம் அளிக்கும்.

யாருக்குச் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த தேவையாக இருக்கும்?
அதிக ரிஸ்க் மற்றும் தைரியமாக முதலீடுகளைச் செய்ய விரும்புபவர்கள் தான் பெரும்பாலும் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வார்கள்.

இந்தியாவில் முதலீடு செய்ய எத்தனை சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன?
இந்தியர்கள் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 35 திட்டங்கள் உள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தத் திட்டங்களில் லாபம் சரிந்து கொண்டே வருகின்றன.

மகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி?

மகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி?



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகாசிவராத்திரி தான். அதனால்தான் மகாசிவராத்திரியன்று நாம் சிவபெருமானை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் விலகும் என்கின்றனர். மகாசிவராத்திரியன்று எவ்வாறு விரதம் இருப்பதெப்படி? விரதம் இருப்பதால் ஏற்படும் பலன் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.

• சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைப்பிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும்
அளிப்பார் என்பது ஐதீகம்.

• மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தியாகும்.

• மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்று ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விரதத்தை 24 அல்லது 12 வருடங்களாவது மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாழ்வில் அனைத்து வளமும் வந்து சேரும்.

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். இதைத்தொடர்ந்து, சிவன் கோயிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.

பூஜையின் போது சிவாய நம என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோ சக்தியை கொடுக்கும். பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச் சிறந்த பலனை தரும். அன்றைய தினம் இரவில் உறங்காமல், நான்கு வேளையும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப்பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைப்பிடிப்பது, நூறு அசுவமேதயாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதற்கு ஈடாகாது.

துளசி - மஞ்சள் மகிமை

துளசி - மஞ்சள்  மகிமை



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா?

நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான சூழ்நிலையில் இயற்கை வழிகளை நாடினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இங்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் மஞ்சள் தூள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.

தயாரிக்கும் முறை...

ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால் பானம் ரெடி

அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும்.

இந்த இயற்கை பானம் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக தடுக்கும்.

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சனையைக் குறைக்கும்.

இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும்.