மே தினம் உழைப்பாளர் தினமாம்

இன்று *மே தினம் உழைப்பாளர் தினமாம்* ஒவ்வொருவரும் வாழ்த்து கூறுகிறார்கள் .

அது வாயளவில் தான் வாழ்த்தே தவிர உள்ளத்தால் வாழ்த்து இல்லை.

ஆனால்..

இஸ்லாம் உழைப்பாளர்களுக்கு காட்டுகிற அக்கரை போல் வேறு யாருமும், எந்த சித்தாந்தமும் காட்டியதில்லை


*நபி (ஸல்) அவர்களுக்கு பணியாளராக கடமையாற்றிய அனஸ் பின் மாலிக் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்*

*“நான் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணியாளராக தொழில் புரிந்தேன் என் மனம் புண்படும் படி சீ என்றோ இதை ஏன் செய்தாய் என்றோ நீ இதை இப்படிச் செய்திருக்கக் கூடாதா? என்றோ அவர்கள் எனக்குச் சொன்னதில்லை.*

(புகாரி-6038)


*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “உங்களில் ஒருவரிடம் அவரது பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளரைத் தம்முடன் அமர வைத்துக் கொள்ளட்டும்*

*அவ்வாறு அவரை அமர வைத்துக்கொள்ளாவிடினும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும் ஏனெனில் அதனை அவர் சமைக்கும் போது அதன் வெப்பத்தையும், அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்.*

புகாரி-5640


*“அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம்.*

*அவ்வாறு நீங்கள் அவர்களை சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு உதவியாயிருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் அடிமை விடயத்தில் கூறினார்கள்.*

புகாரி-30

*வியர்வை உலரும் முன் பணியாளரின் கூலியை கொடுத்து விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

திர்மிதி-11434


*மறுமை நாளில் நான் மூன்று பேருக்கு எதிராக வாதாடுவேன். ஒருவர் சுதந்திரமான ஒருவனை அடிமையாக்கியவன். மற்றவர் வாக்குறுதி மீறியவர் மூன்றாமவர் ஒரு பணியாளரை கூலிக்கமர்த்தி, அவனிடமிருந்து வேலை வாங்கிவிட்டு அவனது கூலியை வழங்காதிருந்தவர்.*

புகாரி-2270.

இது தான் இஸ்லாம் கூறும் உழைப்பாளர் நலனை காக்கும் உழைப்பாளர் தின வாழ்த்து.

💐💐💐💐💐💐💐💐💐💐💐