நடராஜர் பேரருள் கிடைக்க ஸ்லோகம்

நடராஜர் பேரருள் கிடைக்க ஸ்லோகம்
Nataraja-Slokas.

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நடராஜரின் அருள் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி நடராஜரை வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நிறைவேறும்.

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,

 குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட,
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனைப்பாட யெனைநாடியிது வேளை விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே.

- நடராஜப் பத்து

பொதுப்பொருள்: மான், மழு, மதி, புனல் மற்றும் மங்கை சிவகாமியும் ஆட, திருமால், வேதங்கள் பிரம்மன் போன்றோரோடு தேவர்கள், கணபதி, முருகன், ஞானசம்பந்தர், இந்திரனோடு பதினெட்டு சித்தர்கள், நந்தி, நாட்டியப்பெண்களோடு எம் வினைகளும் ஆடி ஓடிட உம்மைப் பணியும் வேளையிது. ஈசனே, சிவகாமி நேசனே, எமையீன்ற தில்லை வாழ் நடராஜனே சரணம்.