சாயா அபிஷேகம் திருச்செந்தூர் - Saaya-Abhishekam

சாயா அபிஷேகம் திருச்செந்தூர் - Saaya-Abhishekam
Thiruchendur-murugan-Saaya-Abhishekam



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


கந்தசஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகப்பெருமானுக்கு எதிரே கண்ணாடி ஒன்று வைக்கப்படும். அந்த கண்ணாடிக்கே அபிஷேகம் செய்யப்படும். அதற்கு ‘சாயா அபிஷேகம்’ என்று பெயர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழ்கிறது. மேலும் கடல் அலைகள் தவழும் திருத்தலமாகவும் இது விளங்குகிறது. சூரபத்மனை முருகப்பெருமான் அழித்த திருதலம் இதுவாகும்.

இந்த ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு 9 கால பூஜைகள் செய்யப்படுகின்றன. மூலவருக்கு சாத்தப்பட்ட மாலைகள் அனைத்தும், அதன் பின்னர் சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கப்படுகிறது. திருச்செந்தூர் திருத்தலத்தில் ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன.


காயத்ரி மந்திரங்களே இங்கு 24 தீர்த்தங்களாக இருப்பதாக நம்பப்படுகிறது. கந்தசஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெறும். சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகப்பெருமானுக்கு எதிரே கண்ணாடி ஒன்று வைக்கப்படும். அந்த கண்ணாடிக்கே அபிஷேகம் செய்யப்படும். அதற்கு ‘சாயா அபிஷேகம்’ என்று பெயர்.